Jump to content

கருகிய பரோட்டா, டீ - இதுதான் எங்கள் உணவு- பி.எஸ்.எஃப் ஜவான் குமுறலால் பரபரப்பு


Recommended Posts

கருகிய பரோட்டா, டீ - இதுதான் எங்கள் உணவு- பி.எஸ்.எஃப் ஜவான் குமுறலால் பரபரப்பு

 

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் உள்ள ஒரு எல்லை பாதுகாப்புப் படை சிப்பாயொருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரம் குறைந்து இருப்பதாக தெரிவித்து அது தொடர்பாக வெளியிட்ட காணொளிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள.

 

தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து தேஜ் பகதூர் யாதவ் வெளியிட்ட படம்

 தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து தேஜ் பகதூர் யாதவ் வெளியிட்ட படம்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் உள்ள தேஜ் பகதூர் யாதவ் என்ற சிப்பாய் தனது முகநூலில் வெளியிட்டுள்ள தகவலில், தங்களுக்கு காலை உணவாக ஒரு கோப்பை தேனீரும், கருகிய பரோட்டாவும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ‘’ எங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறைந்ததற்கு காரணம், இதனை சமைத்த சமையல்காரர் அல்ல. மேல் மட்டத்தில் நடக்கும் ஊழல்களால், படையினருக்கு தேவையான மற்றும் தரமான உணவை படைப்பதற்கு வேண்டிய மளிகை பொருட்களை அதிகாரிகளால் வாங்க இயலவில்லை’’, என்று தெரிவித்துள்ளார்.

 

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ராணுவ சிப்பாயின் முகநூல் பதிவு

 

 பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ராணுவ சிப்பாயின் முகநூல் பதிவு

இது தொடர்பாக தேஜ் பகதூர் யாதவ் நான்கு காணொளிகளை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் , ‘’ இந்த காணொளிகள் ஓவ்வொரு இந்தியனுக்கும் மன வலியைத் தரும். நாட்டின் பெருமையாக கருதப்படுபவர்கள் ராணுவ சிப்பாய்கள். சிப்பாய்களுக்கு தேவையான தரமான உணவு, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது அவர்களின் அடிப்படை உரிமை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை அமைப்பு (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பாதுகாப்புப் படை துருப்புகளின் நலனை மிகவும் முக்கியமானதாக பிஎஸ்எஃப் கருதுகிறது என்று தெரிவித்துள்ளது.

  ராஜ்நாத் சிங்

மேலும் அந்த அமைப்பு குறிப்பிடுகையில், இந்த விஷயத்தில் ஏதேனும் தனிப்பட்ட தவறுகள் நேர்ந்துள்ளதா என்று விசாரணை செய்து வருகிறோம். இது குறித்து விசாரணை செய்ய சம்பவ இடத்துக்கு ஒரு மூத்த அதிகாரி சென்றுள்ளார் என்று பிஎஸ்எஃப் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விடுத்த ட்விட்டர் செய்தியில், ''ராணுவ சிப்பாயின் அவல நிலை குறித்து விளக்கும் காணொளி ஒன்றை நான் பார்த்தேன். இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு பிஎஸ்எஃப் அமைப்புக்கு உடனடியாக உத்தரவிடவும், தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் உள்துறை அமைச்சக செயலருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/india-38566016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.