Jump to content

தமிழக முதல்வர் பதவி சந்திக்கப்போகும் சட்டச் சிக்கல்கள்


Recommended Posts

தமிழக முதல்வர் பதவி சந்திக்கப்போகும் சட்டச் சிக்கல்கள்
 

article_1484033514-article_1480303869-ka “சின்னமாவை முதல்வராக்கு” என்பதுதான் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் முழக்கமாகத் தமிழகத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம், தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான். 

ஆனால், இதுவரை ‘சின்னம்மா முதல்வராக வேண்டும்’ என்ற கோரிக்கையை முதலமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வம் விடுக்கவில்லை. ஆனால், முதலமைச்சருக்குரிய பணிகளை மட்டும் தொடர்ந்து செய்து வரும் அவர், கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். 

சசிகலா நடராஜனை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்த தீர்மானத்தை கொண்டு போய்க் கொடுத்து, “நீங்கள் கட்சிப் பணியாற்ற வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால், ‘ஆட்சிப் பணிக்கு வாருங்கள்’ என்று, அவர் இதுவரை வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.

முதலமைச்சர்கள், பெரும்பாலும் பிரதமருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ புத்தாண்டு வாழ்த்துச் சொல்வதில்லை. குறிப்பாக தமிழகத்தில் உள்ள முதல்வர்கள் அப்படிச் சொன்னதில்லை. ஆனால், முதலமைச்சர் 
ஓ. பன்னீர்செல்வம் இந்த வழக்கத்துக்கு மாறாக இந்திய குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். 

தன்னைப் பார்க்க, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விரும்பினால் அனுமதி கொடுத்து சந்திக்கிறார். பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்கும் நேரம் ஒதுக்கிக் கொடுத்து, விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்கிறார். அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி, ஆலோசனை நடத்தியுள்ளார். ஆகவே, முதலமைச்சராகத் தொடர விரும்புகிறார் ஓ. பன்னீர்செல்வம் என்பது, அவரது நடவடிக்கைகளில் இருந்து தெரிய வருகிறது. 

அதனால்தான் “சின்னம்மா முதல்வராக வேண்டும்” என்று அமைச்சர் உதயகுமார் குரல் எழுப்புகிறார். இவர், ஓ. பன்னீர்செல்வம் இருக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர். முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கூட, “நான் சின்னம்மா போட்டியிடுவதற்காக என் பதவியை இராஜினாமாச் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று கூறுகிறார். 

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல், அ.தி.மு.கவின் நாடாளுமன்ற துணைச் சபாநாயகர் மு. தம்பித்துரை, “சின்னம்மா முதல்வராக வேண்டும்” என்று நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை வெளிவந்தவுடன் முதலில் தாக்குதலைத் தொடுத்தது தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.கவின் செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆவார். 

“துணைச் சபாநாயகர் கடிதத்தலைப்பில் இப்படியொரு அறிக்கை வெளியிட்டது வெட்கக்கேடானது” என்றும் “அமைச்சர்களே முதலமைச்சர் பன்னீர்செல்வம் விலக வேண்டும் என்று கோரிக்கை வைப்பதால், முதலமைச்சருக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என்றும் அறிக்கை கொடுத்தார். 

இந்த அறிக்கை வெளிவந்த தினத்தில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “தம்பித்துரை துணை சபாநாயகர் கடிதத் தலைப்பைப் பயன்படுத்துவதை தவிர்த்து இருக்கலாம்” என்று ஸ்டாலினின் கருத்துக்கு வலுச் சேர்த்தார். இதற்கெல்லாம் சிறப்புச் செய்தது ஆளுநர், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் செயல் தலைவர் 
மு.க. ஸ்டாலினுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொன்னதாகும்.

பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன முதலமைச்சர் பன்னீர்செல்வம், தனக்கு மத்திய அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்தியுள்ளார். 

‘சின்னம்மா முதல்வராக வேண்டும்’ என்று அறிக்கை விட்ட தம்பித்துரை மீது பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அதிருப்தி தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினுக்குப் புத்தாண்டு வாழ்த்துக் கூறிய ஆளுநர் “எனக்கும் தி.மு.கவுக்கும் பிரச்சினையில்லை. ஓ. பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தால், என் முடிவு அ.தி.மு.கவுக்கு மட்டுமே சாதகமாக இருக்காது என்பதைத் தெளிவுபடுத்தும் செய்தி போல் அமைந்திருக்கிறது. 

ஆளுநர், முதலமைச்சர், மத்திய பா.ஜ.க அமைச்சர் மற்றும் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கருத்துக்கள், பேட்டிகள் எல்லாம் ஒரே திசையில் பயணிக்க, சசிகலா நடராஜன், டாக்டர் மு. தம்பித்துரை போன்றவர்களின் கருத்து எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருக்கி்றது.

இந்தப் பரபரப்பான பேட்டிகள் வெளிவந்த கையோடு, அ.தி.மு.க நிர்வாகிகளை மாவட்ட ரீதியாகச் சந்தித்து வருகிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன். கட்சி நிர்வாகிகளின் ‘பல்ஸ்’ பார்ப்பதற்கு இந்தச் சந்திப்பு உதவும் என்று அவர் கருதியிருக்கக் கூடும். ஆகவே, அ.தி.மு.கவுக்குள் அடுத்து, சசிகலா நடராஜன்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்பதில் இன்னும், அனைத்து மட்டத்திலும் தெளிவு பிறக்கவில்லை. 

இப்போதைக்கு, ‘மதில் மேல் பூனை’யாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இருக்கிறார். ஆனால், அவருக்கு பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம் முழு ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறது என்ற நிகழ்வுகள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

கட்சிக்குள் முதல்வர் பதவி குறித்து இன்னும் தெளிவு பிறக்கவில்லை. என்றாலும், முதல்வரை நியமிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 164 இல் உள்ள ஆளுநர் அதிகாரம், விருப்ப அதிகாரம் என்பதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. 

பொதுவாக, பெரும்பான்மை உள்ளவரையே முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பார். ஆனால், இன்றைக்கு நாடு முழுவதும் பேசப்படும் ஊழல் பிரச்சினையின் உச்சத்தில், ஊழல் வழக்கில் கூட்டுப் பிழையால் விடுவிக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, இந்த அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாநில ஆளுநர் புதிய வழிமுறையைக் கையாள முயற்சி செய்யலாம். 

அதுமட்டுமின்றி, 2001 இல் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லாத ஜெயலலிதாவை முதல்வராகத் தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி நியமித்தார். அந்த நியமனத்தை எதிர்த்து கபூர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஜெயலலிதாவை முதலமைச்சராக நியமித்தது செல்லாது என்று, உச்சநீதிமன்றம் இரத்து செய்தது. அந்தத் தீர்ப்பில், மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் என்ற காரணத்துக்காக அரசியல் சட்டத்தை மீறி, ஒருவரை ஆளுநர் நியமிக்க முடியாது என்று கூறப்பட்டது. 

ஆகவே, கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பின் வாசகங்களை ஆளுநர் படித்துப் பார்க்கக் கூடும். இது போன்ற நுணுக்கமான விவகாரங்களைக் கவனித்து, ஆளுநர் ஏதாவது ஒரு முடிவு எடுத்தால், ஆளுநரின்  ‘விருப்ப அதிகாரத்தின்படி எடுக்கும் நடவடிக்கையில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். 

ஆகவே, முதல்வர் நியமனம் என்பது விருப்ப அதிகாரம் என்பதால், இப்போது முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு, சசிகலா நடராஜனை நியமித்தால், அரசின் ஸ்திரத்தன்மை எப்படியிருக்கும் என்பது பற்றி ஆலோசிக்கும் அதிகாரம், இந்த விருப்ப அதிகாரத்தின் கீழ் ஆளுநருக்கு  இல்லை என்று கூறிவிட முடியாது. 

குற்றவழக்குகள் இருந்தாலே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று போடப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்தின், ‘அரசியல் சாசன பெஞ்ச்’ விசாரிக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதுபோன்று ஊழல் வழக்கில் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் விவகாரத்தில் எப்படி முடிவு செய்ய வேண்டும் என்பது முழுக்க முழுக்க ஆளுநரின் அதிகார வரம்புக்குள்  இருக்கலாம். 

இந்த அடிப்படையில் கவனித்தால், ஓ. பன்னீர்செல்வம் விலகினால் மட்டுமே சசிகலா நடராஜன் முதலமைச்சராகி விடுவாரா அல்லது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஊழல் வழக்கும் தலைக்கு மேல் கத்தியாக தொங்குமா என்ற கேள்வி எழுகிறது. முதல் கேள்விக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவும் இரண்டாவது கேள்விக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பும் விடை கொடுக்கும் என்று தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், வருகின்ற மே மாதம் ஓய்வு பெறுகிறார். ஆகவே, இந்த வழக்கில் எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளிவரலாம். 

ஜெயலலிதாவின் மரணம், வழக்கில் அவரது பகுதியை இரத்து செய்து விட்டது. ஜெயலலிதா மரணம் குறித்த தகவல் உச்சநீதிமன்றத்துக்கு சொல்லப்பட்டு, மற்றவர்களுக்கு மீண்டும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க வாய்ப்பு வழங்கப்படுமா என்பதையும் உச்சநீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும். இப்படி பல்வேறு சட்டச் சிக்கல்களையும் இப்போது இருக்கின்ற முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மாற்றினால் அ.தி.மு.க சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆகவே, முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் தொடரும் வரை அ.தி.மு.க ஆட்சிக்கு ஆபத்து ஏதும் இல்லை. ஆனால், அந்த நிலை மாறினால், அதன் பிறகு, ஏற்படும் சூழல்கள் உச்சநீதிமன்றம், மத்திய அரசு மற்றும் ஆளுநர் கையில்தான் இருக்கிறது என்பதுதான் இன்றைய தமிழக அரசியல் நிலவரம்.

- See more at: http://www.tamilmirror.lk/189562/-தம-ழக-ம-தல-வர-பதவ-சந-த-க-கப-ப-க-ம-சட-டச-ச-க-கல-கள-#sthash.ZhogakXT.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.