Jump to content

மண் வீடு


Recommended Posts

அமுக்கப்பட்ட மண்கற்கள் மழையில் இலகுவாகக் கரைந்து விடாது.  இவற்றின் மேற்பரப்பு இறுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால் நீர் இலகுவாக உள்ளே நுளைய முடியாது. ஆபிரிக்காவில் இவற்றைக் கொண்டு வெளி மதில்கள் அமைக்கப்படுகின்றன. 

இவற்றின் திணிவு சீமெந்துக் கற்களை விட அதிகமாக இருப்பதுடன் கட்டப்படும் சுவர்கள் அதிகம் தடிப்பாகவும் இருப்பதால் சிறந்த ஒலித் தடுப்பாற்றலையும் வெப்பத் தடுப்பாற்றலையும் கொண்டுள்ளதுடன் உடைப்பதும் கடினமானதாக இருக்கும்.

சுவரை அமைக்கும்போது கீழுள்ள முறையில் கற்களை அடுக்கி தடிப்பான சுவரை அமைக்க வேண்டும். சிலர் இரண்டு கற்களாக அடுக்குவதற்குப் பதிலாக மூன்று கற்களாகவும் அடுக்குவார்கள். வெளிப்புறத்தில் வரும் மூன்றாவது அடுக்கினை இவ்வாறு அழகாக அடுக்கிக் கொள்ளலாம்.
mur5-boutisse.jpg

இக் கற்களை அரிந்து கொள்வதற்குக் கையால் இயக்கப்படும் இயந்திரத்தை ஐரோப்பிய நாடுகளில் சுமார் 800 முதல் 5000 யூரோக்களுக்கு வாங்க முடியும். விலைக்கேற்றவாறு இயந்திரங்களின் திறனும் மேறுபடும். கீழுள்ள இந்த இயந்திரத்தை 3 பேர் சேர்ந்து - ஒருவர் மண்ணை நிரப்பவும் இன்னொருவர் அமுக்கம் செய்யவும் மூன்றாமவர் கற்களை அடுக்கவும் ஒரு நாளில் 400 கற்களை உருவாக்கிக் கொள்ளலாம். 
https://www.youtube.com/watch?v=QtlFTwKnzdA
சிலர் மண்ணுடன் 5 வீதம் சீமெந்தையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

இந்தக் காணொலியில் மின்சார இயந்திரம் இலகுவாகவும் விரைவாகவும் கற்களை உருவாக்குவதைப் பார்க்கலாம். இவ்வகை இயந்திரம் ஒன்றின் விலை ஏறத்தாள 7000 முதல் 15000 யூரோக்கள் ஆகும்.
https://www.youtube.com/watch?v=mSWx21P6xZg

இக் கற்கள் வர்த்தக முறையில் தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு ஐரோப்பாவில் விற்கப்படுகின்றன. 

எனது தெரிவு 100 வீதம் இயற்கையானதும் இலவசமானதுமான Adobe கற்களே. இன்று யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் மாடி அற்ற சாதாரணமான விசாலமான வீடொன்றைக் கட்டிக்கொள்ள Adobe கற்கள் பொருத்தமானவை. 

அடுத்ததாகச் சுவருக்கு அழகையும் பாதுகாப்பையும் தரும் பூச்சுக்களைப் பார்ப்போம்.

- தொடரும்

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
On 6 février 2017 at 6:21 PM, ஜீவன் சிவா said:

பதிலுக்கு நன்றி இணையவன் 

முயற்சியில் உள்ளேன் - தேவைப்படும்போது உங்களிடமும் தொழில்நுட்ப உதவி கோருவேன்.

வெற்றிபெற்றால் பகிருவேன்.

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.
எனக்குத் தெரிந்த அளவு நிச்சயமாக உதவுகிறேன்.

வெற்றியோ இல்லையோ உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள், யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 9 months later...

நீண்ட இடைவேளைக்குப் பின் எனது சிறு அனுபவத்துடன் மீண்டும் தொடர்கிறேன். :11_blush:

தொடர்வதற்கு முன் இது இன்னொரு உதாரணம். சீனாவில் அமைக்கப்பட்ட மண் வீடு. இதில் 5 வீதம் சீமெந்து பாவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
china-house.jpg

சில வருடங்களுக்கு முன்னர் மண் கட்டுமாண முறைகளைப் பற்றி அறிய முற்பட்டபோது நானும் அதனைச் செய்து பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. புதிதான வீடு கட்டும் அளவுக்கு வசதியும் நேரமும் இல்லை. ஆகவே ஒரு சுவர் மட்டும் கட்டிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.:11_blush:

அறை ஒன்றில் ஏற்கனவே உள்ள சீமெந்துச் சுவருக்கு உட் பக்கமாக இன்னொரு சுவரை மண்ணால் கட்டுவதற்குத் தீர்மானித்தேன். ஒன்றுக்கும் பயனில்லாமல் அறைக்குள் இருக்கும் சுவருக்கு மேல் இன்னொரு சுவர் கட்டுவது பைத்தியக்காரத் தனம் என்று நீங்கள் கருதலாம். இதோ விளக்கம்.

மண்ணானது வெப்பத்தை உறிஞ்சி மெதுமெதுவாக வெளிவிடும் ஆற்றல் உள்ளதாகப் பார்த்தோம். inertie thermique என்று பிரெஞ்சு மொழியில் சொல்வார்கள். குளிர்காலத்தில் இந்த உட்சுவரை மெதுவாகச் சூடாக்கினால் அதன் வெப்பம் இந்த அறையை வெப்பமாக வைத்திருக்கும். வீட்டைச் சூடாக்கும் ரேடியேற்றர்கள் பிரதானமாக இரண்டு விதமாக இயங்கும். 

1 - Convection - றேடியேற்றர் சூடாகி அதன் அருகிலுள்ள வளியைச் சூடாக்க, சூடான காற்று மேல் எழ, குளிரான காற்று றேடியேற்றரை நோக்கி நகரும். இது சுழற்சியாக நடக்கும்.

2 - Radiation - றேடியேற்றரின் வெப்பமான மேற்பகுதியிலிருந்து வெப்பக் கதிர்வீச்சு தெறித்து அக் கதிர் தொடும் பொருளைச் சூடாக்கும். 

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி இசைக்கலைஞன் 

 

Convection மூலம் சூடாக்குவதற்கு ரேடியேற்றரை அதிக வெப்பமாகச் சூடாக்க வேண்டும். வெப்பத்தைக் குறைக்க வேண்டுமானால் றேடியேற்றரின் அளவைப் பெரிதாக்க வேண்டும். இப்படியே றேடியேற்றரின் அளவைப் பெரிதாக்கியபடி வெப்பத்தைக் குறைத்துக் கொண்டு சென்றால் ஒரு கட்டத்தில் றேடியேற்றர் காற்றை வெப்பமாக்கும் திறனை இழந்துவிடும். கதிர்வீச்சு மூலம் மட்டும்தான் வெப்பமாக்கும். அறையின் ஒரு சுவர் அளவில் ஒரு றேடியேற்றர் உள்ளதாகக் கற்பனை செய்து பாருங்கள். அதனை சுமார் 25 - 28 °C ற்குச் சூடாக்கினால் போதுமானது.

Convection மூலம் அறை ஒன்றின் வெப்பநிலையை ஏறத்தாள 19°C யில் வைத்துக் கொள்வோம். கதிர்வீச்சு மூலம் அதே அறையை 15 °C யில் வைத்திருந்தால் போதுமானது. ஏனென்றால் அறைக்குள் இருப்பவர் மீது வெப்பக் கதிர் படும்போது வெப்பத்தை உணர்ந்து கொள்வார்.

அடுத்து, செய்முறையைப் பார்ப்போம்.

- தொடரும்

Link to comment
Share on other sites

இதுதான் திட்டம்.
ஏற்கனவே இருந்த வெப்பத் தடுப்பை மேலும் இன்னொரு வெப்பத் தடுப்பை அமைப்பதன் மூலம் வெப்பம் விரயமாதலைத் தடுத்தல். அதன்மேல் அலுமினியத் தாள்களால் ஆன தடுப்பொன்றை அமைத்தல். இந்தத் தாள்கள் பளபளப்பாக இருப்பதால் மண்சுவரிலிருந்து வெளியாகும் வெப்பக் கதிர்களைத் தெறிக்க வைத்து மீண்டும் அறைப் பக்கமே திருப்பிவிடும். அதன்மேல் நீர்க் குழாய் ஒன்றை வளைவுகளாகப் பதித்து மண்ணினால் மூடுவது.

 

mur-detail.png

அறை வீட்டின் கூரைப் பகுதியில் இருந்ததால் சுவரின் ஒரு பகுதி சரிவாக உள்ளது. அடுத்து சூடாக்கப்பட வேண்டிய சுவர், ஜன்னலைப் பார்க்கும் படி இருக்கக் கூடாது. ஜன்னல் கண்ணாடியூடாக வெப்பக் கதிர்வீச்சு வெளியேறும் என்பதால் ஜன்னல் இருக்கும் சுவரையே தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. அத்துடன் மாடியில் அமைந்திருந்ததால் சுவரைத் தாங்கும் பலம் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும். இந்த அறையின் தரைப்பகுதியானது இச் சுவருக்குக் குறுக்காக தீராந்திகள் அடுக்கப்பட்டு சீமெந்தினால் கட்டப்பட்டதால் பிரச்சனை இல்லை. சுவரின் நிறையான சுமார் 1400 kg இனைத் தாங்கும். தரையின் தீராந்திகள் சுவரின் நீளப்பாட்டுக்கு வத்துக் கட்டப்பட்டிருந்தான் தாங்குவது கடினம்.

chauffage_mur_01.jpg

இதோ துளைகள் போடப்பட்டிருக்கும் இந்தச் சுவர்தான், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள விடங்கள் இதுவைக்கும் இந்த திரியை நான் கவனிக்கவில்லை ....... நன்றிகள் இணையவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரில் உள்ள கணிமண் கால போக்கில் 
மழை நீரில் கரைவதுண்டு ...
எப்படி கரையாமல் தடுப்பது ? 

Link to comment
Share on other sites

On 16 décembre 2017 at 7:35 AM, Maruthankerny said:

எமது ஊரில் உள்ள கணிமண் கால போக்கில் 
மழை நீரில் கரைவதுண்டு ...
எப்படி கரையாமல் தடுப்பது ? 

சுவரில் நேரடியாக மழைநீர் படாமல் கூரையை வடிவமைக்க வேண்டும். அல்லது நீர் படும் இடங்களில் மட்டும் களிமண்ணுடன் நீமெந்தையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். சிலர் இயற்கையில் கிடைக்கும் கற்களையும் சேர்த்துக் கட்டுவார்கள்.

சீனப் பெருஞ்சுவரின் பெரும் பகுதி ஆரம்பத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்டது. சில வருடங்களின் பின்னர்தான் செங்கல் பாவிக்க ஆரம்பித்தார்கள்.

Link to comment
Share on other sites

வெப்பத் தடுப்பைத் தாண்டி சீமெந்துச் சுவரில் துளையிட்டு புரியுள்ள நீளக் கம்பிகள் பொருத்தப்பட்டன. 

chauffage_mur_04.jpg

ஏற்கனவே என்னிடம் மேலதிகமான வெப்பத் தடுப்புகள் இருந்ததால் அவற்றைப் பாவித்துள்ளேன். 

chauffage_mur_06.jpg

அதன்மேல் அலுமினியத் தாள்களால் மூடப்பட்டது. மிகக் குறைந்த விலையுள்ள தாள்களைப் பயன்படுத்தலாம். 1 சதுர மீற்றர் 2.5 யூரோவிற்குக் கிடைக்கும். சுமார் 10 சதுர மீற்றர்கள் தேவைப்பட்டன.  

chauffage_mur_07.jpg

இதன்மேல் சுவரில் பொருத்திய கம்பிகளை இணைத்து உலோகப் பட்டைகள் பொருத்தப்பட்டன.  இது அவசியமற்றது. என்னிடம் இது இருந்ததால் பாவித்தேன். இல்லையேல் கட்டடங்களில் பாவிக்கப்படும் சாதாரண இரும்புக் கம்பி வலை அல்லது சிறிய பலகைகளைப் பொருத்தலாம். 

chauffage_mur_10.jpg

சுண்ணாம்புத் தகடுகளும் என்னிடம் இருந்தபடியால அவற்றை உலோகப் பட்டைகளில் வைத்துச் சிறிய ஆணிகளால் பொருத்தப்பட்டது. இதுவும் தேவையில்லாதது.

chauffage_mur_12.jpg

சுண்ணாம்புத் தகட்டின் மேல் சுடுநீர்க் குழாய் வளைவாகப் பொருத்தப்பட்டது. இக் குழாய்களின் உட்புறமும் வெளிப்புறமும் பிளாஸ்டிக்கால் ஆனது. இடையில் அனுமினியம் உள்ளது. ஆகவே குளாயை இலகுவாக வளைக்கலாம். வளைத்தபின் குழாய் நேராகாமல் அப்படியே வளைவுடன் இருக்கும். 16 மில்லிமீற்றர் விட்டமுள்ள 50 மீற்றர் நீளமான குழாய் 40 யூரோக்களுக்கு வாங்கலாம். இதனைச் சுவற்றுடன் இணைக்கும் சிறு தகடுகளும் ஆணியும் 4 யூரோக்கள். சுண்ணாம்புத் தகடு பதிக்காவிட்டால் நேரடியாகக் கம்பி வலையில் அல்லது பலகையில் வைத்துக் கம்பியால் அல்லது நூலினால் கட்டலாம்.

chauffage_mur_14.jpg

chauffage_mur_15.jpg

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுக்கு சுண்ணாம்பு பூச்சு பூசினால் நீண்ட காலத்துக்கு பாதிப்பு வராது....!

Image associée

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2017 at 2:13 PM, இணையவன் said:

எனது மிகச் சிறிய அனுபவம் ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்றோ ஒரு நாள் 100 வீதம் இயற்கையான பொருட்களைக் கொண்டு நானே ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஆவலையும் இந்த அனுபவம் தந்துள்ளது.

சார் கட்டத்தொடங்கின வீடு கட்டி முடிஞ்சுதா?
பால் காய்ச்சியாச்சா? 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.