Jump to content

மண் வீடு


Recommended Posts

கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். 
வீட்டின் முக்கிய அங்கங்கள் :
- அத்திவாரம்
- சுவர்
- கூரை
- தரை

முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும். சுவர் கட்டுவதற்கு முக்கியமானவை.

1 - மண்
சாதாரணமாக வயல்கள் தோட்டங்களில் கிடைக்கும் களிமண் மிகவும் சிறந்தது. மேற்பரப்பில் குப்பை கலந்திருந்தால் 2 - 3 சென்ரிமீற்றர் ஆழமான பகுதியை அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கலாம். மண்ணிலுள்ள களி (clay) 25 வீதம் அளவில் இருக்க வேண்டும். களித் தன்மை அதிகமாக இருந்தால் மணல் சேர்க்க வேண்டியிருக்கும். களி அதிகமான மண் காயும்போது வெடித்து விடும். சுவர் கட்டும் விதங்களைப் பொறுத்து களியின் அளவு சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். 

2 - வைக்கோல்
முன்னைய காலங்களில் மண் வீடுகளில் வைக்கோல் பாவிக்கப் படவில்லை. ஈரமான மண் உள்ளடக்கியிருக்கும் நீர் ஆவியாக வெளியேறும்போது மண் சுருங்குவதால் ஏற்படும் வெற்றிடம் வெடிப்பாக மாறுகிறது. இதனைத் தடுப்பதற்கக வைக்கலைத் துண்டுகளாக்கி மண்ணுடன் கலந்துவிட்டால் வெடிப்பு ஏற்படாது. வெற்றிடத்தை நோக்கி களி சுருங்கிச் செல்ல விடாது வைக்கல் துண்டுகள் பிடித்து வைத்திருக்கும். வைக்கலினால் இன்னும் ஒரு பயன்பாடு என்னவென்றால், வெப்பத்தை மண்சுவர் உறிஞ்சுவதைக் குறைக்கும். அதே போன்று குளிர் நாடுகளில் குளிர் காலங்களில் வீட்டிற்கு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியே விரயமாக்காமல் தடுக்கும். 

3 - நீர்
மண் மிகவும் உலர்ந்ததாக இருந்தால் நீர் சேர்த்துக் குழைத்துக் கொள்ளலாம். அதிக நீர் சேர்க்கக் கூடாது. வேலையும் சுலபமாக இருக்கும். 

4 - சூரிய ஒளி
சுவர்கள் சிறிது சிறிதாக உலர வைக்கப்பட வேண்டும். கொழுத்தும் வெயிலில் உலரும் சுவர் இலகுவாக இடிந்துவிடும். மதிய நேரத்தில் நேரடிச் சூரிய ஒளி படாமல் சுவரின் மேல் பகுதியில் இலைகுழைகளை வைக்கலாம்.

5 - ஆட்கள்
சுவர் கட்டுவததற்குப் பல விதமான முறைகள் உள்ளன. தொழில்நுட்பமோ அனுபவமோ தேவையில்லை. கட்டத் தொடங்கும்போதே அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளலாம். மண் தோண்டுவது, வைக்கல் - நீர் கலப்பது - கட்டுபவருக்கு மண்ணை அள்ளிக் கொடுப்பது போன்ற சாதாரண பணிகள் இருப்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பங்கு கொள்ளலாம். ஒரே நாளில் ஒரு சுவரை முடிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நேரம் கிடைக்கும் போது நிறிது சிறிதாகக் கட்டலாம்.

6 - உபகரணங்கள்
சுவர் கட்டும் முறையைப் பொறுத்து சில விசேடமான உபகரணங்கள் தேவைப்படலாம். ஆனால் சாதாரணமாகக் கிடைக்கும் மண்வெட்டி, வாளி, சாந்தகப்பை போன்றவற்றைக் கொண்டே கட்ட முடியும்.

இனி சுவர் கட்டும் முறைகளைப் பார்ப்போம்.
- தொடரும்

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

1 - களிமண் கற்கள் (Adobe)

முன்பு எமது கிராமங்களில் மரக் குச்சிகளால் வேலி போன்று அமைத்து அதனைச் சுற்றிக் களிமண்ணால் மூடிச் சுவர் கட்டும் முறையைப் பார்த்திருப்போம். இவ்வாறான சுவர்களை மிக இலகுவாகக் கட்ட முடியுமாயினும் நேர்த்தியற்றனவாக அழகற்றதாக இருக்கும்.

ஆகவே சீமெந்து போலவே கற்களை அரிந்து சுவர் கட்டும் Adobe முறையை முதலில் பார்ப்போம். களிமண் வைக்கோல் துண்டுகள் அல்லது அதற்குச் சமனான நார்ப் பொருட்கள் நீர் ஆகியவற்றைச் சேர்த்துக் குழைத்துக் கற்களை அரிந்து கொள்ள வேண்டும். சாதாரண கற்களை விடப் பெரிதாக இருக்க வேண்டும். ஏனென்றால் சுவரின் அகலம் வீட்டின் உயரத்தைப் பொறுத்து 30 முதல் 40 சென்ரி மீற்றர்களாக இருக்கும். நான்கு பலகைகளை நீள்சதுரமாக அடித்து அச்சினைச் செய்துகொள்ள வேண்டும். நீரின் அளவைக் கல் அரிவதற்கு வசதிக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். கற்களை அரியும்போது நிலத்துகடன் களிமண் ஒட்டாமல் இருக்கச் சிறிதளவு மணல் தூவி விடலாம்.adobe-brique.jpg

அரியப்பட்ட கற்களை நேரடியாக வெயிலில் வைத்து உலர்த்தக் கூடாது. அப்படி உலர்த்தினால் இலகுவாக வெடித்தும் உருந்தும் போய்விடும். மரங்களுக்குக் கீழ் அல்லது ஓலைகளால் மூடி விடலாம். அவை முற்றாக உலர இரண்டு கிழமை ஆகும். 4 நாட்களின் பின்னர் கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக ஒவ்வொரு அடுக்குக்கும் இடையில் காற்றுப் போகக் கூடியவாறு அடுக்கியும் உலர விடலாம். 

காய்ந்த கற்களை சீமெந்துக் கற்களை அடுக்கிச் சுவர் கட்டுவது போலவே அடுக்கிக் கட்ட வேண்டும். கற்களை ஒட்டவைக்க சற்று அதிகம் களி அதிகமான மண் அல்லது சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவையைப் பாவிக்கலாம். கதவு அல்லது கூரையின் தீராந்தி தாங்கும் இடங்களில் கீழுள்ள படத்தில் காட்டப்பட்டது போன்று கற்களைச் சதுரமாக அடுக்கிக் கட்ட வேண்டும். நடுவில் இரும்பு தேவையில்லை. நடுவிலுள்ள இடைவெளியைக் களிமண்ணால் நிரப்பலாம்.

adobe-brique3.jpg

வீடு கட்டி முடிக்கப்பட்டதும் இச் சுவர்களின் மீது விசேடமான களிக் கலவையால் நேர்த்தியாகப் பூசி மெழுகியபின் சுண்ணாம்புப் பூச்சு அல்லது இயற்கையான வண்ணக் கலவைகளைப் பாவித்துச் சீமெந்துச் சுவர் போலவே ஆக்கலாம். ஆனால் சுண்ணாம்புப் பூச்ச்சு 100 வீதமான மண்சுவரின் பயனைத் தராது. 

இம் முறையில் ஒரு மாடி வரையில் சுவரை எழுப்பிக் கட்ட முடியும். அதற்குமேல் உறுதியாக இராது. மழைநீர் சுவரில் படாதவாறு கூரைகள் சுவரை விட வெளியே நீண்டிருக்க வேண்டும். 

வெள்ளப் பெருக்கை மட்டுமே இச் சுவர் தாக்குப் பிடிப்பது கடினம். சரியான முறையில் பராமரிக்கப்படும் சுவர்கள் 100 வருடங்களைத் தாண்டியும் அதே தன்மையுடன் இருக்கும். 

- தொடரும்

adobe-brique2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

450px-Brihadeeswara.jpg

இங்கு நான் மதத்தையோ சமயத்தையோ இழுக்கவில்லை.


10 நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தஞ்சை பெருங்கோவில் கோபுரம் இன்றும் நிலைத்து நிற்கின்றது. அன்றைய காலத்து கட்டுமான பரிமாணங்களை ஆராய்ந்து பார்த்தாலே.....
மண்ணின்....மண்வீட்டின் மகிமை தெரியும்.

Link to comment
Share on other sites

பலரும் நினைப்பது போல் மண்சுவர் அவ்வளவு எளிதில் உடைந்து விடாது. 
Adobe முறையில் அரிந்து கட்டப்பட்ட இந்த வீட்டைப் பாருங்கள். 

maison-terre.jpg
 

இதனை எப்படிக் கட்டினார்கள் என்பதை விளக்குகிறார்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...

 

Link to comment
Share on other sites

2 - அச்சுச் சுவர்
சாக்குப் பைகளில் மண்ணை நிரப்பி அடுக்கிச் சுவர்களாக்கும் இன்னொரு முறையும் உண்டு. இதுவும் அழகாக இராது.
மனிதனின் தேவைக்குள் அழகும் முக்கியத்துவம் பெறுவதால் வேறு முறைகளைக் கையாள வேண்டும். அச்சுச் சுவர் என்பது சரியான பதமோ தெரியவில்லை. இரு பக்கமும் தட்டையான பலகைகளை வைத்து நடுவில் களிமண்ணை நிரப்பி இடித்து நேர்த்தியான சுவராகக் கட்டுவதே இந்த முறையாகும். 

pise.jpg
இது பிரான்சிலும் சில வட ஆபிரிக்க நாடுகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. களியின் அளவு இன்னும் குறைவாக 15 வீதம் வரையில் இருப்பதே இந்த முறையின் சிறப்பாகும். அத்துடன் சிறிய கற்களையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். வைக்கோல் தேவையில்லை. 

Adobe முறையில் கட்டச் சாத்தியப்படாத இடங்களில் இம் முறையைத் தெரிவு செய்யலாம். ஆனால் கொஞ்சம் தொழில்நுட்பம் தேவைப்படும். அச்சுப் பலகையை உருவாக்கவும் நேர்த்தியாகக் கையாளவும் சற்று அனுபவம் வேண்டும். 

சுவர்களின் தடிப்பம் Adobe முறையை விட அதிகமாக இருக்கும். 60 - 70 சென்ரி மீற்றர் அகலமாக இருக்க வேண்டும். வெளிச் சுவர்கள் நாளடைவில் மழையில் கரைந்து போகும். இவ்வாறான சுவர்கள் தடிப்பம் அதிகமாக இருப்பதால் 4 - 5 வருடங்களுக்கு ஒரு தடவை களிமண்ணால் பூசி மெழுகி விடுவார்கள். பிரான்சில் சில வீடுகளின் சுவர் 2 மீற்றர் தடிப்பமாகவும் உள்ளன. இச் சுவர்கள் 20 - 30 ஆண்டுகள் மழையைத் தாக்குப் பிடிப்பதுடன் குளிரையும் நன்றாகத் தாங்கும்.

இந்த முறையில் சுவர்களை மிக வேகமாகக் கட்ட முடியும் என்பதால் தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டுப் புதுமைகள் புகுத்தப்பட்டால் களி குறைந்த மணல் பிரதேசங்களிலும் மண் வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் விடச் சற்றுத் தொழில்நுட்பம் கூடியதும் உறுதியானதும் செலவு குறைந்ததும் வேகமாகக் கட்டக் கூடியதும் மண்ணைச் சிக்கனமாகப் பாவிக்கக் கூடியதும்  அழகானதுமான இன்னுமொரு முறை உள்ளது.

- தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎/‎01‎/‎2017 at 1:46 PM, இணையவன் said:

இன்னுமொரு அழகான வீடு.

maison-terre2.JPGmaison-terre3.jpgmaison-terre4.jpg

அப்படியே எனக்கும் இப்படி ஒரு சின்ன,அழகான வீடு கட்டித் தாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பயனுள்ள ஒரு பதிவுதான் இது. ஆனால் இங்கு இப்படியான கற்கள் கடைகளில் விற்பதில்லை.

மேலே உள்ள படத்தில் உள்ளது சுடாத கற்கள் போலவும் கீழே உள்ள வீட்டின் கற்கள் சுட்ட கற்கள் போலவும் உள்ளனவே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தேடலும் பதிவும்...

மண்வீடுகள் சிறிதாக இருந்தாலும் மனதிற்கு ஒருவித மகிழ்வை கொடுப்பன ஒரு சில நாட்கள் மண்வீடுகளில் தங்கியிருந்திருக்கிறேன். என் சின்ன வயது கனவுகளில் இந்த மண்வீடுகள் பிரதானமானவை மட்டுமல்ல விருப்புக்குரியவையாகவும் வலம் வந்திருக்கின்றன. முதுமையில் காலத்தனிமையில் ஆசிரமம் போன்ற குடிலில் வாழ பெருவிருப்பம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 24 janvier 2017 at 7:35 PM, விசுகு said:

தொடருங்கள்...

 

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

 

On 25 janvier 2017 at 9:45 PM, ரதி said:

அப்படியே எனக்கும் இப்படி ஒரு சின்ன,அழகான வீடு கட்டித் தாங்கோ

முதல்ல நான் ஒரு சின்ன வீட்டுக்கு முயற்சி செய்து பார்க்க வேணும். சரிவந்தால் உங்களுக்கு மாளிகையே கட்டித் தாறன். :11_blush:

அதென்ன எல்லோரும் மண் வீடு என்றவுடன் சின்ன வீடு குடிசை என்ற வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறீர்கள் ? 
இதுவும் மண் வீடுதான். 
maison-ex6.jpg

 

On 25 janvier 2017 at 10:28 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் பயனுள்ள ஒரு பதிவுதான் இது. ஆனால் இங்கு இப்படியான கற்கள் கடைகளில் விற்பதில்லை.

மேலே உள்ள படத்தில் உள்ளது சுடாத கற்கள் போலவும் கீழே உள்ள வீட்டின் கற்கள் சுட்ட கற்கள் போலவும் உள்ளனவே ?

நன்றி. 
அந்தப் படத்தில் உள்ளது சுடாத கற்களைக் கொண்டு கட்டிய வீடு. ஒரே இடத்தில் எடுக்கப்படும் மண்ணிலும் பல வகையான நிறங்கள் காணப்படும். இந்த நிற வித்தியாசங்கள் சுட்ட மண்போல் தோன்றும்.
எனது அடுத்த பதிவில் இன்னொரு முறையில் கள்களை உருவாக்குவது பற்றி எழுதுகிறேன். அக் கற்கள் பிரான்சில் சில கடைகளில் விற்பனைக்கு உண்டு. ஆனால் விலை சுட்ட கற்களை விட அதிகம்.

 

 

On 26 janvier 2017 at 0:38 AM, வல்வை சகாறா said:

நல்லதொரு தேடலும் பதிவும்...

மண்வீடுகள் சிறிதாக இருந்தாலும் மனதிற்கு ஒருவித மகிழ்வை கொடுப்பன ஒரு சில நாட்கள் மண்வீடுகளில் தங்கியிருந்திருக்கிறேன். என் சின்ன வயது கனவுகளில் இந்த மண்வீடுகள் பிரதானமானவை மட்டுமல்ல விருப்புக்குரியவையாகவும் வலம் வந்திருக்கின்றன. முதுமையில் காலத்தனிமையில் ஆசிரமம் போன்ற குடிலில் வாழ பெருவிருப்பம்.

நன்றி சகாறா.
மண் வீடுகள் சுவாசிப்பதாகக் கூறுவார்கள். இயற்கை அன்னையின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்வது உடலுக்கும் மனதுக்கும் நன்மையையே உண்டாக்கும்.

Link to comment
Share on other sites

35 minutes ago, இணையவன் said:

முதல்ல நான் ஒரு சின்ன வீட்டுக்கு முயற்சி செய்து பார்க்க வேணும். சரிவந்தால் உங்களுக்கு மாளிகையே கட்டித் தாறன். :11_blush:

அது உங்கள் சொந்த முயற்சி :grin::grin:

 

பதிவுக்கு நன்றி இணையவன்

என்னிடம் மூன்று கேள்விகள் 
(எனக்கும் விடை தெரியாது - சண்டைக்கு வரவேண்டாம்)

சீமெந்து கற்களைவிட செங்கற்கள் நல்லம்தானே?
அதை ஏன் வடபகுதி மக்கள் விரும்புவதில்லை?
மண்வீடுகளை எமது சூழலில் எப்படி அமைக்கலாம்?

எனக்கும் ஒரு ஐடியா இருக்கு - ஒரு மண் வீடு கட்டி வாழ (சின்ன வீடில்லை :grin:)

நானும் எங்கள் வீட்டிலும் ஒருகாலத்தில் அம்மம்மாவுக்கென்று மண்ணிலேயே கட்டிலையும் செய்துள்ளேன். ரொம்ப விரும்பி அதில் படுப்பார் + நானும்தான் அவருடன்.
 

Link to comment
Share on other sites

3 - அமுக்கத்துக்குள்ளாக்கப்பட்ட மண் கற்கள்


நவீன முறையில் தயாரிக்கப்படும் இக் கற்கள் ஏறத்தாள சுட்ட செங்கற்கள் போல் காட்சியளிக்கும். இக் கற்களை உருவாக்க 15 முதல் 20 வீதமான களியை உள்ளடக்கிய மண் போதுமானது. நீர் அதிகம் தேவையில்லை. வைக்கோலும் தேவையில்லை. ஆனால் குருணிக் கற்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது. சிலர் 5 வீதம் சுண்ணாம்பும் சேர்த்துக் கொள்வார்கள். 

 

தயாரான மண்ணை அச்சு ஒன்றில் இட்டு அதனை சில வினாடிகள் அமுக்கத்துக்கு உட்படுத்த வேண்டும். இங்குதான் கொஞ்சம் தொழில்நுட்பம் தேவைப்படும். கீழுள்ள படத்தில் இருப்பது போன்று கையால் அமுக்கும் கருவியை உள்ளூரிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். 

machine.jpg

 

அமுக்கும் திறன் 25 kg/cm2 (2.5 MPa) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது 30 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் உடைய கல்லில் 15 தொன் அமுக்கத்தைப் பிரயோகிக்க வேண்டும். 

 

ஆபிரிக்க நாடுகளில் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களும் பாவிக்கப்படுகின்றன. இவற்றினால் பெரும் தொகையான கற்களை விரைவாக உருவாக்க முடியும். அமுக்கும் திறனும் அதிகமாக இருக்கும். இவ்வகையான இயந்திரங்கள் 2 கன மீற்றர் அளவான் மண்ணை 1 கன மீற்றர் அளவுக்குச் சுருக்கும் திறன் உடையன. அமுக்கம் அதிகமாக கல்லின் உறுதியும் அதிகரிக்கும். கல்லின் நிறையும் மிக அதிகமாக இருக்கும்.

machine2.jpg

 

கற்களை உருவாக்கியபின் அவற்றை இடைவெளி உள்ளவாறு அடுக்கி, படங்கினால் மூடி 3 - 4 கிழமைக்கு விட வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு தடவை கற்களின் மேல் நீர் தெளித்து ஈரப்படுத்த வேண்டும். 4 கிழமைகளுக்குப் பின்னர் படங்கினை நீக்கிவிட்டு நிழலில் 3 மாதங்கள் உலர விட வேண்டும்.

 

மண்ணின் தன்மையையும் அமுக்கத்தின் அளவையும் பொறுத்து இக் கற்கள் 4 முதல் 10 MPa அளவான அமுக்கத்தைத் தாங்கவல்லவை. அதாவது 1 MPa என்பது 1 சதுர மீற்றர் பரப்பளவில் ஏறத்தாள 100 தொன் பாரத்தை வைப்பதற்குச் சமன். 

 

இக் கற்களைப் பயன்படுத்தி உறுதியான பாரமான கூரையைத் தாங்கக் கூடியதான மாடி வீட்டினைக் கட்டிக் கொள்ளலாம். Adobe கற்களைப் போலவே களிமண்ணால் இவற்றை ஒட்டிச் சுவர் அமைக்கலாம். கல்லை ஒட்டுவதற்கு முன்னர் ஒட்ட வேண்டிய பகுதியை நீரில் நனைத்து ஒட்டினால் உறுதியாக இருக்கும். சீமெந்துக் கற்களை விட இவை பாரமாக இருப்பதால் ஒரே தடவையில் ருவரைக் கட்டி எழுப்புவது நல்லதல்ல. 1 மீற்றர் உயரமாகக் கட்டியபின் உலர விட்டு அடுத்தநாள் தொடரலாம். 

brique_btc.jpg

 

இக் கற்களின் மேற்பரப்பு நேர்த்தியாக இருப்பதால் வெளிப் பரப்பில் எதுவும் பூசாது கற்களுக்கு இடையில் ஒட்டுவதற்காக பயன்படுத்திய களிமண்ணை மட்டும் மட்டமாகச் சுரண்டி விட்டால் அழகாக இருக்கும். 

 

பிரான்சில் ஒரு நிறுவனம் வித்தியாசமான முறையில் கற்களை வடிவமைத்துள்ளது. இவற்றை ஒட்ட வேண்டியதில்லை. ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் போதுமானது. 

 

வெளிப் பூச்சை விரும்புபவர்கள் தமக்குப் பிடித்தமான வகையில் பூசி பெயின்ற் அடித்து விட்டால் மண் சுவர் என்றே சொல்ல முடியாது. இயற்கையான பூட்டுக்களும் உள்ளன. அவற்றில் ஒன்றையும் பார்க்கலாம்.

 

- தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

 

முதல்ல நான் ஒரு சின்ன வீட்டுக்கு முயற்சி செய்து பார்க்க வேணும். சரிவந்தால் உங்களுக்கு மாளிகையே கட்டித் தாறன். :11_blush:

அதென்ன எல்லோரும் மண் வீடு என்றவுடன் சின்ன வீடு குடிசை என்ற வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறீர்கள் ? 
இதுவும் மண் வீடுதான். 

maison-ex6.jpg

இன்னும் அப்படி ஒரு வரட்டு கௌரவத்துடனான / போலியான சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16425728_1598481213514267_75380269757992இதற்க்குள்ளும் வாழ்ந்திட ஏங்குது மனது 

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

அது உங்கள் சொந்த முயற்சி :grin::grin:

 

பதிவுக்கு நன்றி இணையவன்

என்னிடம் மூன்று கேள்விகள் 
(எனக்கும் விடை தெரியாது - சண்டைக்கு வரவேண்டாம்)

சீமெந்து கற்களைவிட செங்கற்கள் நல்லம்தானே?
அதை ஏன் வடபகுதி மக்கள் விரும்புவதில்லை?
மண்வீடுகளை எமது சூழலில் எப்படி அமைக்கலாம்?

எனக்கும் ஒரு ஐடியா இருக்கு - ஒரு மண் வீடு கட்டி வாழ (சின்ன வீடில்லை :grin:)

நானும் எங்கள் வீட்டிலும் ஒருகாலத்தில் அம்மம்மாவுக்கென்று மண்ணிலேயே கட்டிலையும் செய்துள்ளேன். ரொம்ப விரும்பி அதில் படுப்பார் + நானும்தான் அவருடன்.
 

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி ஜீவன்.

சீமெந்தை விடச் செங்கல் உறுதியானது நீண்ட காலம் நிலைக்கக் கூடியது. ஆனால் விலை அதிகம் வேலையும் அதிகம். வெளிநாடுகளில் செங்கல் வீடுகள் கட்டும்போது வெளிச் சுவரில் செங்கல் தெரியும்படியாகக் கட்டுவார்கள். அதுவும் ஒரு அழகு. சீமெந்துச் சுவர்களிலும் சிலர் செங்கல்லை அழகுக்காக ஒட்டி விடுவார்கள். எமது ஊரில் வித விதமான வண்ணப் பூச்சுகள் பூசப்படுவதால் வெளித் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதாக நினைக்கிறேன். வேறு காரணங்கள் தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அவர்களே தங்கள் வீடுகளை அமைக்க அரசாங்கம் உதவிப் பணம் வழங்கியது. இதில் செங்கல் பாவித்து வீடுகளை அமைக்க அதிகமான உதவிப்பணம் வழங்கப்பட்டது. ஆனால் செங்கல் வீடுகளை நான் காணவில்லை.

மண் வீடுகளை எமது ஊர்களில் எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். வீட்டின் இடத்தைத் தெரிவு செய்யும்போது வெள்ளம் ஏற்படாத இடமாகத் தெரிவு செய்ய வேண்டும். கரையோரப் பகுதிகளில் நேரடியான காற்றுவீச்சைத் தவிர்க்கும் இடமாகத் தெரிவு செய்ய வேண்டும். அது தவிர எமது சமுதாயத்தில் மண் வீட்டுக்குண்டான கௌரவம் பிரச்சனையாக இருக்கிறது. கல் வீடுகள் சூழ்ந்துள்ள இடத்தின் நடுவே மண் வீடு கட்டவே தயக்கமாக இருக்கும்.  நமது பாரம்பரிய முறையுடன் கூடிய கம்பீரமான அழகான நவீனமான ஒரு வீட்டை உதாரணமாகக் கட்டிக் காட்ட வேண்டும். பணமில்லாதவர்கள்தான் மண்ணால் வீடு கட்டுவதாக நினைப்பார்கள். இதன் நோக்கம் சுகாதாரமும் பண்பாடும் இயற்கையைப் பேணுவதுமே என்ற கருத்து முக்கியத்துவம் பெற வேண்டும். ஒருவேளை வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் மண்ணால் வீடு கட்டினால் இக் கருத்து எடுபடலாம் :unsure:.

இங்கு 60 - 70 ஆம் ஆண்டுகளில் சீமெந்தால் கட்டப்பட்ட பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டுப் புதிய கட்டடங்கள் கட்டப் படுகின்றன. தற்போது கட்டப்படும் கட்டடங்களுக்கும் கால எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இயற்கைக் கற்களை அறுத்துக் கட்டப்பட்ட கட்டடங்களே பெரும்பாலும் நூற்றாண்டுகள் நிலைத்துள்ளன. சீமெந்து வீடுகளும் நிரந்தரமானவை அல்ல. அவை வலுவிளந்து போவதற்கான முக்கிய காரணங்கள் சரியான பராமரிப்பின்மையும் நிலத்தின் அசைவும் ஆகும். சீமெந்து அத்திவாரம் நில அசைவை ஓரளவு தாங்கும். மண் வீடுகளின் சுவர்கள் அகலம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு ஏற்படாது. அத்துடன் வெடிப்பு ஏற்பட்டால் இலகுவாகச் சரிசெய்யலாம்.

Link to comment
Share on other sites

பதிலுக்கு நன்றி இணையவன் 

32 minutes ago, இணையவன் said:

நமது பாரம்பரிய முறையுடன் கூடிய கம்பீரமான அழகான நவீனமான ஒரு வீட்டை உதாரணமாகக் கட்டிக் காட்ட வேண்டும். பணமில்லாதவர்கள்தான் மண்ணால் வீடு கட்டுவதாக நினைப்பார்கள். இதன் நோக்கம் சுகாதாரமும் பண்பாடும் இயற்கையைப் பேணுவதுமே என்ற கருத்து முக்கியத்துவம் பெற வேண்டும்.

முயற்சியில் உள்ளேன் - தேவைப்படும்போது உங்களிடமும் தொழில்நுட்ப உதவி கோருவேன்.

வெற்றிபெற்றால் பகிருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

 

முதல்ல நான் ஒரு சின்ன வீட்டுக்கு முயற்சி செய்து பார்க்க வேணும். சரிவந்தால் உங்களுக்கு மாளிகையே கட்டித் தாறன். :11_blush:

அதென்ன எல்லோரும் மண் வீடு என்றவுடன் சின்ன வீடு குடிசை என்ற வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறீர்கள் ? 
இதுவும் மண் வீடுதான். 
 

எனக்கு நான் மட்டும் இருக்க ஒரு சின்னக் குடிசையே போதும்...அதையும் உங்கள் செலவில் நீங்களே கட்டித் தாறேன் எனறு சொன்னது மிக்க மகிழ்ச்சி:unsure:

Link to comment
Share on other sites

17 hours ago, ஜீவன் சிவா said:

சின்ன வீடில்லை :grin: - 
 

கவனம் அண்ணை, பெரிய வீட்டுக்கு தெரிஞ்சால் சிக்கலாகும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 06/02/2017 at 4:09 PM, முனிவர் ஜீ said:

16425728_1598481213514267_75380269757992இதற்க்குள்ளும் வாழ்ந்திட ஏங்குது மனது 

உங்கே இருந்துகொண்டே ஏன் ஏங்க வேண்டும். வீட்டுக்குப் பக்கத்திலேயே இப்படி ஒன்றைக் கட்டுவது தானே முனிவர் ?

இலங்கையில் இப்படியான வீடு கட்டுவதற்கான வளங்கள் இருக்கின்றனவா ??

அதாவது களிமண் கொண்டு கல் அரிவதற்கான இயந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/01/2017 at 9:36 PM, இணையவன் said:

2 - அச்சுச் சுவர்
சாக்குப் பைகளில் மண்ணை நிரப்பி அடுக்கிச் சுவர்களாக்கும் இன்னொரு முறையும் உண்டு. இதுவும் அழகாக இராது.
மனிதனின் தேவைக்குள் அழகும் முக்கியத்துவம் பெறுவதால் வேறு முறைகளைக் கையாள வேண்டும். அச்சுச் சுவர் என்பது சரியான பதமோ தெரியவில்லை. இரு பக்கமும் தட்டையான பலகைகளை வைத்து நடுவில் களிமண்ணை நிரப்பி இடித்து நேர்த்தியான சுவராகக் கட்டுவதே இந்த முறையாகும். 

pise.jpg
இது பிரான்சிலும் சில வட ஆபிரிக்க நாடுகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. களியின் அளவு இன்னும் குறைவாக 15 வீதம் வரையில் இருப்பதே இந்த முறையின் சிறப்பாகும். அத்துடன் சிறிய கற்களையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். வைக்கோல் தேவையில்லை. 

Adobe முறையில் கட்டச் சாத்தியப்படாத இடங்களில் இம் முறையைத் தெரிவு செய்யலாம். ஆனால் கொஞ்சம் தொழில்நுட்பம் தேவைப்படும். அச்சுப் பலகையை உருவாக்கவும் நேர்த்தியாகக் கையாளவும் சற்று அனுபவம் வேண்டும். 

சுவர்களின் தடிப்பம் Adobe முறையை விட அதிகமாக இருக்கும். 60 - 70 சென்ரி மீற்றர் அகலமாக இருக்க வேண்டும். வெளிச் சுவர்கள் நாளடைவில் மழையில் கரைந்து போகும். இவ்வாறான சுவர்கள் தடிப்பம் அதிகமாக இருப்பதால் 4 - 5 வருடங்களுக்கு ஒரு தடவை களிமண்ணால் பூசி மெழுகி விடுவார்கள். பிரான்சில் சில வீடுகளின் சுவர் 2 மீற்றர் தடிப்பமாகவும் உள்ளன. இச் சுவர்கள் 20 - 30 ஆண்டுகள் மழையைத் தாக்குப் பிடிப்பதுடன் குளிரையும் நன்றாகத் தாங்கும்.

இந்த முறையில் சுவர்களை மிக வேகமாகக் கட்ட முடியும் என்பதால் தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டுப் புதுமைகள் புகுத்தப்பட்டால் களி குறைந்த மணல் பிரதேசங்களிலும் மண் வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் விடச் சற்றுத் தொழில்நுட்பம் கூடியதும் உறுதியானதும் செலவு குறைந்ததும் வேகமாகக் கட்டக் கூடியதும் மண்ணைச் சிக்கனமாகப் பாவிக்கக் கூடியதும்  அழகானதுமான இன்னுமொரு முறை உள்ளது.

- தொடரும்

இரண்டு மீட்டர் என்று சரியாகத்தான் எழுதியுள்ளீர்களா இணையவன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கே இருந்துகொண்டே ஏன் ஏங்க வேண்டும். வீட்டுக்குப் பக்கத்திலேயே இப்படி ஒன்றைக் கட்டுவது தானே முனிவர் ?

இலங்கையில் இப்படியான வீடு கட்டுவதற்கான வளங்கள் இருக்கின்றனவா ??

அதாவது களிமண் கொண்டு கல் அரிவதற்கான இயந்திரம்.

இப்பொழுது நகரமயமாக்கலில் காரணமாக இப்படியான இடங்களை  காண முடியாதுள்ளது அப்படி போக வேண்டும் என்றால்பல கிலோமீற்றர் தூரம் போனால் இதே போல் கன இடங்களை காணலாம் உதாரணமாக அம்பாறையில் கொலனி என்ற பக்கம் இதே போல் வாய்க்கால் ஓரம் வீடு குளிரான காற்று பச்சை பசேல் என இருக்கும் இடம்  

நான் நண்பர்களுடன் விடுமுறையில் சென்று வருவதுண்டு இப்படியான இடங்களூக்கு  சிங்கள மக்கள் , தமிழ் மக்கள் , முஸ்ஸிம் மக்கள் என மூவின மக்களும் வாழும் இடம்  

களிமண்ணால் அரியும் கற்கள் இருக்கின்றன இப்பவும் செங்கல் சூளைகள்  இயந்திரம் இங்கே வரவில்லை  கைகளினால் தான் இதுவ்ரைக்கும் அரிகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை. என் கணவர் வன்னியில் தான் வளர்ந்தவர். நான் இதைக் காட்டியபோது வன்னியில் தாமும் களிமண் கொண்டு கல் அறுத்துத் தமது வீட்டைக் கட்டி மேலுக்கு சீமெந்து பூசியதாகவும், வன்னியில் பலர் அப்போது அப்படியான வீடுகளையே கட்டியதாகவும் கூறனார்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 13 février 2017 at 10:21 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இரண்டு மீட்டர் என்று சரியாகத்தான் எழுதியுள்ளீர்களா இணையவன்? 

ஆம் 2 மீற்றர்தான். சுவரின் தடிப்பம் அதிகமாக அதன் வெப்பத் தடுப்பும் அதிகமாகும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இருக்கும் சூடு வெளியேறுவது குறையும். அத்துடன் வீட்டின் உயரத்தையும் அதிகரிக்கலாம். 

On 14 février 2017 at 11:49 AM, முனிவர் ஜீ said:

இப்பொழுது நகரமயமாக்கலில் காரணமாக இப்படியான இடங்களை  காண முடியாதுள்ளது அப்படி போக வேண்டும் என்றால்பல கிலோமீற்றர் தூரம் போனால் இதே போல் கன இடங்களை காணலாம் உதாரணமாக அம்பாறையில் கொலனி என்ற பக்கம் இதே போல் வாய்க்கால் ஓரம் வீடு குளிரான காற்று பச்சை பசேல் என இருக்கும் இடம்  

நான் நண்பர்களுடன் விடுமுறையில் சென்று வருவதுண்டு இப்படியான இடங்களூக்கு  சிங்கள மக்கள் , தமிழ் மக்கள் , முஸ்ஸிம் மக்கள் என மூவின மக்களும் வாழும் இடம்  

களிமண்ணால் அரியும் கற்கள் இருக்கின்றன இப்பவும் செங்கல் சூளைகள்  இயந்திரம் இங்கே வரவில்லை  கைகளினால் தான் இதுவ்ரைக்கும் அரிகிறார்கள் 

களிமண் கற்கள் இலங்கையில் அரியப்படுவது பற்றிக் கேள்விப்படவில்லை. மேலதிக விபரம் தெரிந்தால் எழுதுங்கள்.

On 15 février 2017 at 11:12 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை. என் கணவர் வன்னியில் தான் வளர்ந்தவர். நான் இதைக் காட்டியபோது வன்னியில் தாமும் களிமண் கொண்டு கல் அறுத்துத் தமது வீட்டைக் கட்டி மேலுக்கு சீமெந்து பூசியதாகவும், வன்னியில் பலர் அப்போது அப்படியான வீடுகளையே கட்டியதாகவும் கூறனார்.

எனக்கும் தெரியாது. :unsure:

அந்த வீடுகள் இப்போது எப்படி உள்ளன என்று தெரியுமா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இணையவன் said:

ஆம் 2 மீற்றர்தான். சுவரின் தடிப்பம் அதிகமாக அதன் வெப்பத் தடுப்பும் அதிகமாகும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இருக்கும் சூடு வெளியேறுவது குறையும். அத்துடன் வீட்டின் உயரத்தையும் அதிகரிக்கலாம். 

களிமண் கற்கள் இலங்கையில் அரியப்படுவது பற்றிக் கேள்விப்படவில்லை. மேலதிக விபரம் தெரிந்தால் எழுதுங்கள்.

கிழக்கில் அம்பாறை சிங்கள மக்களால் அரியப்படும் கற்கள் கொஞ்சம் பெரிது  விலையும் கூட  அடுத்து தமிழர்கள் அதிகம் இருந்த திராய்க்கேணி என்ற இடல் செங்கல் உற்பத்திக்கு பெயர் போன இடம் தற்போது அந்த இடங்களை மூஸ்லீம்கள் வாங்கி கொண்டு வருவதால் அந்த தொழில் இல்லாமை போய் விட்டது அடுத்தது நைனா காடு என்று என்று சொல்லப்படும் இடத்தில்தான்  கல் அரிகிறார்கள் அம்பாறையில் அது முஸ்லீம் மக்கள் கிழக்கில் கல் வெட்டுவது என்று சொல்வார்கள் அரிவது என்று சொல்வதில்லை  அதிக களைகளை எடுத்து பள்ளம் ஆகியதால் சில இடங்களை தற்போது தவிர்த்து விட்டார்கள் களி மண் அகல

நாளை வேண்டுமானால் படங்களை எடுத்து இணைக்கிறேன் இணையவன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.