Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மண் வீடு


Recommended Posts

இன்று இலங்கையில் பொருத்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவது பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மண் வீடு என்ற  இந்தத் திரியின் நோக்கம் பொருத்து வீடுகள் அமைப்பதை எதிர்ப்பதோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. மண்ணாலும் போதுமான உறுதியான அழகான வீடுகளை அமைக்க முடியும் என்பதை விளக்கவே. 

உலகில் இன்னும் 40 விதமான வீடுகள் களிமண்ணால் அமைக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோவினால்  அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் (World Heritage) 17 வீதமானவை இயற்கை மண்ணினால் கட்டப்பட்டவை. இவை பல நூற்றாண்டுகளாக இன்னும் நிலைத்திருக்கின்றன. 

மண்வீட்டை விரும்பாததற்கு (குறிப்பாக எம்மவர்கள்) முக்கியமாக 3 காரணங்கள் கூறலாம்.
- ஆடம்பரம் கௌரவம்
- மண் வீடு பற்றிய புரிதல் இல்லாமை
- இயற்கை வளங்கள் இயற்கை மாசுபடுதல் பற்றிய போதிய அறிவூட்டல் இல்லாமை

களி மண்ணால் சீமெந்து போல் அடுக்கு மாடிகள் கட்ட முடியாவிடினும் மரப் பலகையையும் சேர்த்தால் விசாலமான மாடி வீட்டினை அமைக்கலாம்.

மண் வீடுகளின் அனுகூலங்கள் சில
- 100 வீதம் இயற்கையானது
- இலவசமானது
- வீடு கட்ட வேண்டிய இடத்திலேயே தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம்
- சுகாதாரமானது
- சீமெந்தை விடச் சுலபமாகக் கையாளலாம்
- மண் சுவர் வீட்டினுள் காற்றின் ஈரப் பதனைச் சீராக்கும்
- தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவி இல்லாமல் நாமே கட்டிக் கொள்ளலாம்
- மண்சுவர் சிறந்த ஒலித் தடுப்பைக் கொண்டது
- 0 வீதமான CO2 வெளியேற்றப் படுவதால் சுற்றாடலையும் பாதுகாக்கிறது

இவை எல்லாவற்றையும் விட இயற்கையோடு இணைந்த வாழ்வு என்ற திருப்தியைத் தரும்.

பாதகங்கள் சில
- வெள்ளப்பெருக்கைத் தாக்குப் பிடிப்பது கடினம் 
- சுவர்கள் அகலமாக இருக்கும்
- கூரை சற்று அகலமானதாக இருக்க வேண்டும்
- சீமெந்து வீட்டை விடப் பராமரிப்பு அதிகமாக இருக்கும்

வாசித்து அறிந்து கொண்டவற்றையும் எனது மிகச் சிறிய அனுபவம் ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்றோ ஒரு நாள் 100 வீதம் இயற்கையான பொருட்களைக் கொண்டு நானே ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஆவலையும் இந்த அனுபவம் தந்துள்ளது.

maison.jpg

- தொடரும் - 

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

பனையோலை அல்லது தென்னோலையால் வேயப்பட்ட மண் வீட்டில் இருக்கும் சுவாத்தியம் வேறு எந்த வீட்டிலையும் கிடையாது. அனுபவத்தில் கண்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இயற்கையின் கொடையை நூறுவீதம் அனுபவித்தவன்.

மண்வீட்டை ஒரு இழக்காரமாக பார்க்கும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

ஆனால் அதன் பக்கவிளைவுகள் இல்லாத பலாபலன்களை மக்கள் சிந்திக்க மறுக்கின்றார்கள். வியாபாரிகளினால் உருவாக்கப்பட்ட போலியான பகட்டு வாழ்க்கைக்கு அடிமைப்படுதப்படுகிறார்கள்.


ஜேர்மனியில் இன்றும் பல இடங்களில் இயற்கையான பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகள் கம்பீரமாகத்தான் இருக்கின்றது வெளிப்பூச்சு எதுவுமின்றி வீட்டின் உண்மையான தோற்றம்..

oekohaus-in-erbach-8367733a-1fb9-492a-96a1-266600472762.jpg?width=1000

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செங்கல் வீடுகளும் சிறந்ததே. கீழே அரை மீற்றர் உயரத்துக்கு  நல்ல பூச்சு பூசினால்  வெல்ல அரிப்பையும் கூட தாங்கும்....! ஆனால் உதையெல்லாம் யார் செய்யப் போகினம்....!

நான் இருக்கும் இடத்திலும் அதிகமான வீடுகள் கு.சா. படம் போட்டா மாதிரித்தான் இருக்கின்றன. ஓடுகள் கூட பீலி ஓடுகள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோலினால் மேயப்பட்ட வீடுகளும் களி மண் போட்டு தரையை சாணத்தினால் மெழுகப்பட்ட வீடுகளுக்கு எந்த ஏசி வீடுகளும் ஈடு கொடுக்க முடியாது 

ஆனால் புதிய சந்ததி இதை ஏற்றுக்கொள்ளாது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாததுக்கு ஆசை கொள்வது மனித மனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

6 hours ago, குமாரசாமி said:

நான் இயற்கையின் கொடையை நூறுவீதம் அனுபவித்தவன்.

மண்வீட்டை ஒரு இழக்காரமாக பார்க்கும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

ஆனால் அதன் பக்கவிளைவுகள் இல்லாத பலாபலன்களை மக்கள் சிந்திக்க மறுக்கின்றார்கள். வியாபாரிகளினால் உருவாக்கப்பட்ட போலியான பகட்டு வாழ்க்கைக்கு அடிமைப்படுதப்படுகிறார்கள்.


ஜேர்மனியில் இன்றும் பல இடங்களில் இயற்கையான பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகள் கம்பீரமாகத்தான் இருக்கின்றது வெளிப்பூச்சு எதுவுமின்றி வீட்டின் உண்மையான தோற்றம்..

oekohaus-in-erbach-8367733a-1fb9-492a-96a1-266600472762.jpg?width=1000

 

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

வைக்கோலினால் மேயப்பட்ட வீடுகளும் களி மண் போட்டு தரையை சாணத்தினால் மெழுகப்பட்ட வீடுகளுக்கு எந்த ஏசி வீடுகளும் ஈடு கொடுக்க முடியாது 

ஆனால் புதிய சந்ததி இதை ஏற்றுக்கொள்ளாது  

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பகட்டு வாழ்க்கையை பாமரமக்களிடம் விதைத்து விட்டார்கள்....

விதைத்துக்கொண்டே வருகின்றார்கள்.


ஆனால் ஐரோப்பாவில் வாழும் இளயசமுதாயம் சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.


உதாரணத்திற்கு பிளாஸ்ரிக் பைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றார்கள்.பதிலாக துணியிலான அல்லது கடுதாசி பைகளை பாவிக்க ஆரம்பித்து வருகின்றனர்.
தாம் கஸ்ரப்பட்டாலும் முக்கியமாக தங்களுக்கு பின் வரும் அடுத்த சந்ததியை பற்றி அதிகம் சிந்திக்கின்றனர்.செயல்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

ஏன் தங்கச்சி! கல் வீடெண்டால் பாம்பு பூச்சி கரப்பான் நட்டுவக்காலி ஒண்டும் வராதோ? அல்லது வந்ததாய் சரித்திரமே இல்லையோ?

சுவருக்கு இடையிலை வைக்கல் கம்பு தும்புகளை வைச்சு கட்டுகிறார்கள்.... அதுவும் வைக்கோல் ஒரு இயற்கை தந்த கொடை......வெப்பத்தை தரவல்லது. நாங்கள் ஊரிலை மாம்பழம் பழுக்க வைக்க வைக்கோலை பயன்படுத்துவோமே.....

அது வீடு திருத்தும் போது எடுத்தபடம்......வெளிப்பூச்சு பூசியபின் அழகாக தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

Bildergebnis für denkmal hause in deutschland

Bildergebnis für denkmal schutz hause in deutschland

ரதி... இப்படியான வீடுகள், ஜேர்மனில்  உள்ள எல்லா ஊர்களிலும் சில  காணப்படும்.
இரண்டு உலகப் போர்களில்.... தப்பிப் பிழைத்த வீடுகள் என்பதால்,
அதன் வெளித் தோற்றத்தை மாற்ற, அந்த வீட்டு  எவ்வளவு தலைகீழாக நின்றாலும்,    அனுமதி கிடைக்காது.

இருந்த மாதிரியே....  திருத்த வேலைகளை செய்ய வேண்டும்.
வீட்டிற்குள்... என்ன நவீன பொருட்களையும்  பொருத்துவதற்கு, அனுமதிப்பார்கள்.
வெளியில்.... கைவைக்க, நகர சபையின் ஒப்புதல் வேண்டும். :)

ஜேர்மனியில்.... பாம்பு, பூச்சி எல்லாம் மிருகக் காட் சி  சாலையில் தான் இருக்கும். 
வீ ட்டுக்குள்... நாய், பூனை  மட்டுமே வரும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பகட்டு வாழ்க்கையை பாமரமக்களிடம் விதைத்து விட்டார்கள்....

விதைத்துக்கொண்டே வருகின்றார்கள்.


ஆனால் ஐரோப்பாவில் வாழும் இளயசமுதாயம் சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.


உதாரணத்திற்கு பிளாஸ்ரிக் பைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றார்கள்.பதிலாக துணியிலான அல்லது கடுதாசி பைகளை பாவிக்க ஆரம்பித்து வருகின்றனர்.
தாம் கஸ்ரப்பட்டாலும் முக்கியமாக தங்களுக்கு பின் வரும் அடுத்த சந்ததியை பற்றி அதிகம் சிந்திக்கின்றனர்.செயல்படுகின்றனர்.

உன்மைதான் குமாரசாமி அண்ணை  அந்த நிலை தற்போது இலங்கையில் 3 மாடி வீடுகள் வசிக்க ஆள் இல்லை  எல்லாம்  அடுத்தவனை பார்த்து பார்த்து .........................

இந்த பிளாஸ்டிக் பைகளை பாவிப்பதை குறைத்து கொண்டுதான் வருகிறோம் ஒரு சின்ன அறீவூட்டலின் மூலமாக ஆனால் அது கொஞ்சம் சிரமாக இருக்கிறது   சீலை ப்பைகளையும் சாக்கு பைகளையும் , பனையோலையினால் செய்த பைகளையும் அறி முகப்ப்டுத்தியுள்ளார்கள் தற்போது மட்டக்கலப்பில் ஆனால்   செயற்பட வைப்பது என்பது முளங்காலால் மலையேறி போக வேண்டிய நிலமைபோக் இருக்கிறது  அப்படி பிளாஸ்ரிக்கு அடிமையாகிட்டோம்

13 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

குடிசை வீட்டில பாம்பு  பல்லி ஓணான் தவளை மோக்கான் நட்டுவகாலி , அறணை எல்லாம் அழையா விருந்தாளிகள் அப்பப்போ வருவார்கள் போவார்கள் அதற்கும் குடிசை வீட்டில் மருந்து இருக்கிறது அதற்கு. மூலிகை செடி இருக்கிறது நட்டால் அந்த பக்கம் ஒருவர் கூட தலை வைத்து படுக்க மாட்டார்கள்

Link to comment
Share on other sites

21 hours ago, நந்தன் said:

ஆனா அடிக்கடி புழுதி கிளம்பும், சாணி போட்டு மெழுகணும்

மண் வீடு என்றவுடன் ஓலைக் குடிசைதான் எல்லோருக்கும் நினைவில் வரும். பழமைக்குள் புதுமையைப் புகுத்தி காலத்திற்கேற்றவாறு மெருகேற்ற வேண்டும். மாற்றம் இல்லாத எதுவும் காலப்போக்கில் காணாமல் போய்விடும். வீட்டின் பயன்பாடு 100 வருடங்களுக்கு முன்னர் இருந்ததுபோல் இன்று இல்லை.  

சாணி போட்டு மெழுகுதல் என்பது ஒரு தெரிவு மட்டுமே.

Link to comment
Share on other sites

21 hours ago, குமாரசாமி said:

நான் இயற்கையின் கொடையை நூறுவீதம் அனுபவித்தவன்.

மண்வீட்டை ஒரு இழக்காரமாக பார்க்கும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

ஆனால் அதன் பக்கவிளைவுகள் இல்லாத பலாபலன்களை மக்கள் சிந்திக்க மறுக்கின்றார்கள். வியாபாரிகளினால் உருவாக்கப்பட்ட போலியான பகட்டு வாழ்க்கைக்கு அடிமைப்படுதப்படுகிறார்கள்.


ஜேர்மனியில் இன்றும் பல இடங்களில் இயற்கையான பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகள் கம்பீரமாகத்தான் இருக்கின்றது வெளிப்பூச்சு எதுவுமின்றி வீட்டின் உண்மையான தோற்றம்..
 

 

உண்மை குமாரசாமி.

ஐரோப்பாவில் நவீன கட்டடங்களை அமைத்து பெரும்பாலானோர் வாழ்ந்தாலும் சிலர் இயகையை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். உணவு முதல் அனைத்துத் தேவைகளிலும் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர். 

பிரபஞ்சத்தில் சாதாரண துகள்களாக இருந்த மனிதன் இன்று தன்னைச் சுற்றி இருந்து ஆட்சி செய்யும் இயற்கையின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் அளவு முன்னேறி வெற்றிவாகை சூடினான். 

இயற்கையை மனிதன் ஆதிக்கம் செலுத்த முயன்றதன் பலனை உலகம் உணரத் தொடங்கியுள்ளது. இயற்கையோடு ஒன்றிய வாழ்வின் அவசியம் உணரப்படுகிறது. நாங்களும் எல்லாவற்றையும் கோட்டை விட்டு இறுதியில் ஏங்குவதை விட இப்போதே முயற்சி செய்ய வேண்டும்.

இயற்பியலாளர் Stephen Hawking எமக்கு 1000 வருட அவகாசம் தருகிறார் நாம் இந்தப் பூமியை விட்டு வெளியேறி வேறு எங்காவது குடியேறுவதற்கு. தற்போதுள்ள வேகத்தில் சுற்றாடல் அழிக்கப்படுமானால் 1000 வருடங்களுக்கு முன்னரே பூமி வாழ்வதற்கு ஏற்புரையதற்றதாகி விடும்.

21 hours ago, suvy said:

செங்கல் வீடுகளும் சிறந்ததே. கீழே அரை மீற்றர் உயரத்துக்கு  நல்ல பூச்சு பூசினால்  வெல்ல அரிப்பையும் கூட தாங்கும்....! ஆனால் உதையெல்லாம் யார் செய்யப் போகினம்....!

நான் இருக்கும் இடத்திலும் அதிகமான வீடுகள் கு.சா. படம் போட்டா மாதிரித்தான் இருக்கின்றன. ஓடுகள் கூட பீலி ஓடுகள்...!

செங்கல் நல்ல உறுதியானது. ஆனால் விலை அதிகம். அதனை ஒட்டுவதற்குச் சீமெந்து வேண்டும். அத்துடன் கற்களை எரிப்பதால் வெளியேற்றப்படும் காபனீர் ஒட்சைட்டினால் அது 100 வீதம் இயற்கையப் பாதுகாக்காது.

Link to comment
Share on other sites

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இல்லாததுக்கு ஆசை கொள்வது மனித மனம்.

வீடு கட்டப் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் தான் வித்தியாசப்படுமே தவிர கட்டி முடித்தபின் தோற்றத்தில் பெரிய மாற்றம் இராது. உள் சிவர்களுக்கு வேண்டுமானால் பிளாஸ்ரிக் பெயின்ற் அடித்துக் கொள்ளலாம் :unsure:. ஆனால் 100 வீதம் இயற்கை ஆகாது. இயற்கையான வண்ணப் பூச்சுக்களும் உள்ளன. நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

brique2.jpg

15 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

மண் வீடு என்றால் குடிசை வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீமெந்து வீடு போலவே பூச்சி வராமல் கட்டலாம். குளிர் மட்டுமல்ல வெப்பத்தையும் தடுக்குமாறு கட்ட முடியும். களிமண்ணானது சீமெந்தை விட அதிக திணிவு கொண்டது. வெப்பத்தைப் பிடித்து வைத்துச் சிறிது சிறிதாகக் கதிர்வீச்சு மூலம் வெளியேற்றும் ஆற்றல் அதிகம் கொண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

அவுஸ்ரேலியா , புளோரிடா பக்கமெல்லாம் முதலை வந்து  வீட்டுமணி அடிக்கிற விசயமெல்லாம் தங்கச்சிக்கு தெரியாது போலை கிடக்கு..:grin:

HT_Alligator_Door1_MEM_160503_16x9_992.jpg

 

croc-in-fam-home-asutralia__oPt.jpg

அவையள் என்ன குடில் , கொட்டில்லையே இருக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎01‎/‎2017 at 1:35 PM, இணையவன் said:

வீடு கட்டப் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் தான் வித்தியாசப்படுமே தவிர கட்டி முடித்தபின் தோற்றத்தில் பெரிய மாற்றம் இராது. உள் சிவர்களுக்கு வேண்டுமானால் பிளாஸ்ரிக் பெயின்ற் அடித்துக் கொள்ளலாம் :unsure:. ஆனால் 100 வீதம் இயற்கை ஆகாது. இயற்கையான வண்ணப் பூச்சுக்களும் உள்ளன. நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

brique2.jpg

மண் வீடு என்றால் குடிசை வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீமெந்து வீடு போலவே பூச்சி வராமல் கட்டலாம். குளிர் மட்டுமல்ல வெப்பத்தையும் தடுக்குமாறு கட்ட முடியும். களிமண்ணானது சீமெந்தை விட அதிக திணிவு கொண்டது. வெப்பத்தைப் பிடித்து வைத்துச் சிறிது சிறிதாகக் கதிர்வீச்சு மூலம் வெளியேற்றும் ஆற்றல் அதிகம் கொண்டது.

அதெப்படி இப்படியான வீடுகள் என்டால் குடிசை வீடுகளாத் தானே இருக்கும்.கூரைக்கு கல் வைத்துக் கட்டினால் அது கல் வீடு இல்லையா?...அடுத்தது இப்படியான் வீடுகள் குளிர்மையாய் இருக்கும் அல்லவா? வெயிலுக்கு ஓகே ஆனால் குளிருக்கு எப்படி தாக்குப் பிடிப்பது?

On ‎11‎/‎01‎/‎2017 at 2:16 PM, குமாரசாமி said:

அவுஸ்ரேலியா , புளோரிடா பக்கமெல்லாம் முதலை வந்து  வீட்டுமணி அடிக்கிற விசயமெல்லாம் தங்கச்சிக்கு தெரியாது போலை கிடக்கு..:grin:

HT_Alligator_Door1_MEM_160503_16x9_992.jpg

 

croc-in-fam-home-asutralia__oPt.jpg

அவையள் என்ன குடில் , கொட்டில்லையே இருக்கினம்

தெரியும் அண்ணா...அவுசில் போய் குடியேற வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை...ஒரு,சில காரணங்களுக்காய் போகவில்லை.1}பணம் இல்லை 2}படிப்பில்லை வேலை எடுக்கேலாது. 3} பாம்புப் பயம்tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 13 வயது வரை மண் வீட்டிலேயே வாழ்ந்தேன்.பின்னர் கல் வீடு.நன்மை தீமை தெரியவில்லை.இப்போ மட்பாண்டங்களே பாவிக்காத போது மண் வீட்டைப் பற்றி யார் யோசிக்கிறார்கள்.

34 minutes ago, ரதி said:

அதெப்படி இப்படியான வீடுகள் என்டால் குடிசை வீடுகளாத் தானே இருக்கும்.கூரைக்கு கல் வைத்துக் கட்டினால் அது கல் வீடு இல்லையா?...அடுத்தது இப்படியான் வீடுகள் குளிர்மையாய் இருக்கும் அல்லவா? வெயிலுக்கு ஓகே ஆனால் குளிருக்கு எப்படி தாக்குப் பிடிப்பது?

தெரியும் அண்ணா...அவுசில் போய் குடியேற வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை...ஒரு,சில காரணங்களுக்காய் போகவில்லை.1}பணம் இல்லை 2}படிப்பில்லை வேலை எடுக்கேலாது. 3} பாம்புப் பயம்tw_cry:

காசு பணம் இல்லாட்டி என்ன அன்புக்கு பஞ்சம் இல்லை என்றால் நீங்க அவுசில் வாழலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் 13 வயது வரை மண் வீட்டிலேயே வாழ்ந்தேன்.பின்னர் கல் வீடு.நன்மை தீமை தெரியவில்லை.இப்போ மட்பாண்டங்களே பாவிக்காத போது மண் வீட்டைப் பற்றி யார் யோசிக்கிறார்கள்.

காசு பணம் இல்லாட்டி என்ன அன்புக்கு பஞ்சம் இல்லை என்றால் நீங்க அவுசில் வாழலாம்.

இந்தக் காலத்தில காசு இல்லாட்டில் வீட்டில வளர்க்கிற நாய் கூட சீண்டாது:cool:...நானும் சின்ன வயசில கொஞ்சக் காலம் மண் வீட்டில வாழ்ந்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

இந்தக் காலத்தில காசு இல்லாட்டில் வீட்டில வளர்க்கிற நாய் கூட சீண்டாது:cool:...நானும் சின்ன வயசில கொஞ்சக் காலம் மண் வீட்டில வாழ்ந்திருக்கிறேன்

நாங்களும் தான் ரதி பழையதை மறக்க முடியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/01/2017 at 0:21 PM, முனிவர் ஜீ said:

உன்மைதான் குமாரசாமி அண்ணை  அந்த நிலை தற்போது இலங்கையில் 3 மாடி வீடுகள் வசிக்க ஆள் இல்லை  எல்லாம்  அடுத்தவனை பார்த்து பார்த்து .........................

இந்த பிளாஸ்டிக் பைகளை பாவிப்பதை குறைத்து கொண்டுதான் வருகிறோம் ஒரு சின்ன அறீவூட்டலின் மூலமாக ஆனால் அது கொஞ்சம் சிரமாக இருக்கிறது   சீலை ப்பைகளையும் சாக்கு பைகளையும் , பனையோலையினால் செய்த பைகளையும் அறி முகப்ப்டுத்தியுள்ளார்கள் தற்போது மட்டக்கலப்பில் ஆனால்   செயற்பட வைப்பது என்பது முளங்காலால் மலையேறி போக வேண்டிய நிலமைபோக் இருக்கிறது  அப்படி பிளாஸ்ரிக்கு அடிமையாகிட்டோம்

குடிசை வீட்டில பாம்பு  பல்லி ஓணான் தவளை மோக்கான் நட்டுவகாலி , அறணை எல்லாம் அழையா விருந்தாளிகள் அப்பப்போ வருவார்கள் போவார்கள் அதற்கும் குடிசை வீட்டில் மருந்து இருக்கிறது அதற்கு. மூலிகை செடி இருக்கிறது நட்டால் அந்த பக்கம் ஒருவர் கூட தலை வைத்து படுக்க மாட்டார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

 

சில முன்னோர்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறேன்  சில மூலிகை செடிகளை நட்டால் சில ஊர்வன வராது என்று அதான் சொன்னது  தற்போது இன்சுலின் என்று அழைக்கப்படும் அதாவது உடம்பில் சீனி அதிகமாக இருந்தால் சப்பி சாப்பிடும் இலை மிக கசப்பானது வாயில் வைக்க முடியாது அந்த செடியை நட்டால்  பாம்பு வராது என்று சொல்வார்கள் ,

தென்னை வண்டுகளுக்கு தலைமுடியை  பெண்கள் தலையில் இருந்து உதிரும் முடிகளை தென்னை வட்டினுள்  வைத்து விடுவார்கள் ஏன் என்று கேட்ட்டால் தென்னம் வண்டு உள்ளே செல்ல முடியாது  என்ற்ய் சொலவ்வார்கள் உன்மையும் தான் அந்த வண்டு அதில் விழுந்து சிக்கி கொள்ளும் சில வேளைகளில்  அதே போல் இன்னும் வேற மூலிகை செடி இருக்கலாம் 

Link to comment
Share on other sites

ஏன் கனக்க ரெண்டு நல்ல வேட்டை நாய் வளர்த்தால் போச்சு மழைகாலங்களில்தினமும்  விடிகாலையில் பாம்பு பிஞ்சு முத்தத்தில் கிடக்கும் அடுத்து நாய் குரைப்புக்கு விஷ ஊர்வன வீட்டு பக்கம் கூடுதலா வராது வந்தால் பாக பிரிவினைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/01/2017 at 1:35 PM, இணையவன் said:

வீடு கட்டப் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் தான் வித்தியாசப்படுமே தவிர கட்டி முடித்தபின் தோற்றத்தில் பெரிய மாற்றம் இராது. உள் சிவர்களுக்கு வேண்டுமானால் பிளாஸ்ரிக் பெயின்ற் அடித்துக் கொள்ளலாம் :unsure:. ஆனால் 100 வீதம் இயற்கை ஆகாது. இயற்கையான வண்ணப் பூச்சுக்களும் உள்ளன. நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

brique2.jpg

மண் வீடு என்றால் குடிசை வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீமெந்து வீடு போலவே பூச்சி வராமல் கட்டலாம். குளிர் மட்டுமல்ல வெப்பத்தையும் தடுக்குமாறு கட்ட முடியும். களிமண்ணானது சீமெந்தை விட அதிக திணிவு கொண்டது. வெப்பத்தைப் பிடித்து வைத்துச் சிறிது சிறிதாகக் கதிர்வீச்சு மூலம் வெளியேற்றும் ஆற்றல் அதிகம் கொண்டது.

சுடாத களிமண் கொண்ட கற்களா நீங்கள் கூறுவது?அவை நீண்ட காலம் நிலைத்திருக்குமா ?

Link to comment
Share on other sites

On 12 janvier 2017 at 6:35 PM, ரதி said:

அதெப்படி இப்படியான வீடுகள் என்டால் குடிசை வீடுகளாத் தானே இருக்கும்.கூரைக்கு கல் வைத்துக் கட்டினால் அது கல் வீடு இல்லையா?...அடுத்தது இப்படியான் வீடுகள் குளிர்மையாய் இருக்கும் அல்லவா? வெயிலுக்கு ஓகே ஆனால் குளிருக்கு எப்படி தாக்குப் பிடிப்பது?

சீமெந்து, பலகை, இரும்பு போன்று ஒரு மூலப் பொருளாகதான் களிமண் பாவிக்கப்படுகிறதே அன்றி குடிசை வீடுதான் கட்ட வேண்டும் என்பதல்ல. மண்சுவர் வெயிலை விடக் குளிருக்கே உகந்தது.

.

On 15 janvier 2017 at 0:52 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுடாத களிமண் கொண்ட கற்களா நீங்கள் கூறுவது?அவை நீண்ட காலம் நிலைத்திருக்குமா ?

சுட்ட மண் உறுதியாயினும் சுடாத மண்சுவர்களும் நூற்றாண்டுகள் நிலைத்துள்ளன. இது தவிர சீமெந்துச் சுவர்கள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதைக் கட்டட வல்லுனர்கள் இருந்தால் கூறுங்கள்.<_<
மேலுள்ள படத்தில் காட்டப்படுவது சுடாத மண் கல் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.