Jump to content

ஈடுகள்


Recommended Posts

ஈடுகள்

 

 
indhira_soundhirarajan_story

ஐநூறு ரூபாய்க்குப் பக்கமான தொகையை அவர் நீட்டினார். அவன் வாங்கி கொண்டான். ஒரு பரம்பரைச் சொத்தின் மிச்சம் அது! எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய போது அவனைப் பெற்றவள் புதியவாடகை வீட்டின் மோட்டு வளையில் பார்வையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். 
ஒரு வகை பயம் கலந்த மௌனத்துடன் ஐநூற்றுச் சொச்சத்தை அவன் அவள் முன்னால் வைத்தான்.
அவள் அதைத் தொடவேயில்லை. மாறாக விழிகளில் கண்ணீர் கொப்பளிப்புடன் அவனைப் பார்த்தாள்.
"தயவு செஞ்சு அப்படிப் பார்க்காதம்மா... நான் இப்ப முன்ன மாதிரி இல்ல. மாறினவன்..."
- அதைக் கேட்ட அவள் வாய் விட்டுச் சிரிக்க விரும்பி பின் தோற்று மெலிய சிரித்து ஆழ ஒரு பெருமூச்சை விட்டாள்.
மனோ உக்ரம் தாளாமல் கட்டிலின் மேல் போய் விழுந்தான். கண்ணில் கண்ணீர் பெருகி விட்டது.
'உண்மையிலேயே தான் திருந்தி நல்ல மனிதனாக வாழத் துடிப்பதை எப்படிப் பெற்றவளுக்குப் புரிய வைப்பது?" - அவனது அந்தக் கண்ணீரினூடே  பிறந்த கேள்வி விசுவரூபம் எடுத்தது.
வெறும் வார்த்தைகளில் திருந்தி விட்டேன், திருந்தி விட்டேன் என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றி வந்த பொய்களுக்கு முற்றுப்புள்ளியிட்ட நிலையில்- செய்து விட்ட தவறுகளுக்கு ஒரு வகை ஈடு காண்பதன் மூலம் தான் தனது திருந்திய நிலையைப் புரிய வைக்க முடியும் எனும் நிஜம் அவனுள் மெலிய படர்ந்தது. 
அவனது தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தாகி விட்டது. ஆயிற்று; இன்னும் ஒரு வாரத்தில் அவளுக்குத் திருமணம். திருமணச் செலவிற்காக அவனது தகப்பனார் படாத பாடுபட்டு அதை விற்று, இதை விற்று  ஐயாயிரத்தைச் சேர்த்திருந்தார்.
அவ்வளவும் பூட்டப்படாத பெட்டியில் பாந்தமாய் வைக்கப்பட்டிருந்தது. எதேச்சையாக பெட்டியைத் திறந்த அவனைப் பார்த்து அந்த 'ஐயாயிரம்' சிரித்தது.
சில வினாடி தடுமாறிப் பின் எடுத்துக் கொண்டான் அதை! பத்து நாள் கழித்து பெங்களூர் உல்லாசத்தில் கொஞ்சத்தையும், சென்னை கிண்டியில் மிச்சத்தையும் கரைத்து விட்டு வீடு திரும்பினான்.
அவனது தகப்பனார் இடிந்த நிலையில் கட்டிலில் சயனித்திருந்தார். எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாய் நின்று கொண்டு அவனை வார்த்தைகளால் குத்திக் கிழித்தார்கள். அவர் மட்டும் எதுவும் பேசவில்லை. இறுதியில் " கடைசி நேரத்தில் காசுக்காக என்னைக் கண்டவா வீடு வீடா ஏறிப் போய் பிச்சை எடுக்கும் படி செய்திட்டியேடா பாவி, உனக்கு நான் என்ன குறை வைத்தேன்?" - என்று மட்டும் கேட்டார். 
அப்பொழுது தான் அவனுக்கு தான் எதிர்பார்த்திருந்தபடி எப்படியோ கல்யாணம் நடந்து முடிந்து விட்டது தெரிய வந்தது. ஒரு வாரம் வரைக்கும் மௌனமாய் எதுவும் பேசாமல் யாராவது ஏதாவது பேசினாலும் பதில் பேசாமல் அசமந்தனாய் இருந்தான் அவன். மனசு மட்டும் அடுத்த அல்ப உல்லாசங்களை அனுபவிப்பதற்குண்டானவற்றிற்கு அடி போட்டுக் கொண்டிருந்தது. 
நாள் முழுக்க நாயாக அலைந்து திரிந்து பிச்சையெடுத்த காசுகளை எண்ணத் தொடங்கினான் அவன்!
ஆறு ரூபாய்க்குப் பக்கமாய் சேர்ந்திருந்தது.
திருப்தியோடு வீடு திரும்ப ஆரம்பித்தான். அடிமனதில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்த, "என்னை இப்படி வீடு வீடா, ஏறி பிச்சை எடுக்கும் படி செய்திட்டியேடா பாவி!" என்னும் குரலின் ஒளி மெல்லக் குறைந்து போன நிஜம் அவனுக்கு உறைத்தது.
வீட்டுக்குள் நுழைந்தவன் செயற்கைத் தனமாய் அழுக்காக்கிக் கட்டிக் கொண்டிருந்த வேஷ்டியை கழற்றி எறிந்து விட்டு நல்ல வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். லேசாகக் குறைந்து போயிருந்த மனோபாரத்தோடு கட்டிலின் மேல் போய் விழுந்தான். அடி மனசில் இன்னொரு குரலில் அரும்பல்!
"கோபுரமாய் ஒசந்திருந்த குடும்பத்தை இப்படிக்கு குலைச்சுட்டியேடா படுபாவி... உனக்கு விமோசனமே கிடையாதுடா..."
சுழன்று சுழன்று வந்த அந்தக் குரல் ஒலியால் அவன் கண்களில் உப்பு நீர் துளிர்த்தது. சில நிமிடங்கள் வரை விழிநீர் துளிர்ப்போடு மனசுக்குள் புழுங்கியவன் மெல்ல எழுந்தான்.

எளிய பூஜை அறைக்குள் பிச்சையெடுத்த ஆறு ரூபாயோடு நுழைந்தான்.
வயதான ஒரு ஆண் மகனின் படத்திற்கு முன்பாக அணைந்து விட்டிருந்த  அகல் விளக்குக்குப் பக்கத்தில் உண்டியலைப் போன்ற ஒரு பித்தளை பாத்திரம். அதைக் கையிலெடுத்தான். அதன் வாயைத் திறந்து அதற்குள் பிச்சைக் காசுகளைக் கொட்டினான்.

 

புகைப்படத்துக்குள் உறைந்து  கிடக்கும் ஆணின் முகத்தைப் பார்க்க விழிகள் கூசின. திரும்பவும் கட்டிலில் போய் விழுந்தான். "உனக்காக கண்ணீர் விட்டது போதாதா? என்னோட ரத்தத்தையே சிந்தும் படி வெச்சுட்டியேடா... உன்னைப் பெத்தத்திற்கு இது போறாது. இன்னமும் வேணும்."
என்றோ அவனது தந்தை உதிர்த்திருந்த ஆக்ரோஷமான அவலக் குரலின் உலா அவன் மனசுக்குள் அரபுப் புரவியின் வேகத்துடன்,  நடந்து கொண்டிருந்தது.
கஷ்டப்பட்டுக் கொண்டு  கண்களை மூடினான்.
குரலுக்கு காரணமான பின்னணி கண் முன்னால் வந்து நின்றது.
'அகண்ட அவ்வீதியில் அவிழ்ந்து போன வேட்டியை அள்ளிச் சுருட்டிக் கொண்டு ஓடி வருகிறான். அவன் பின்னால் ஒரு பட்டாளமே அவனைத் துரத்தி வருகிறது.
வீட்டையடைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டு அரக்கப் பரக்க அவன் மூச்சு விட்ட போது, அவனது தகப்பனார் ஏதோ முக்கியமான வேலையாக இருந்தார். மகனைப் பார்த்து பதட்டப்பட்டு தாழிடப்பட்டிருக்கும் கதவைத் திறந்த போது, வெளியே காத்திருந்த அந்தக் கும்பல் வெறித்தனமாய் உள்ளே நுழைந்தது.
இடையே புகுந்த அவரையும் அந்தக் கும்பலின் வெறி பதம் பார்த்தது.ரத்தம் சொட்ட அவர் நிலத்தில் விழுந்த பிறகே அவ்வளவிற்கு காரணங்கள் அவிழ்ந்தன.  
"கள்ளச் சாராயம் குடிச்சுட்டு வந்து கன்னிப் பொண்ணையா கெடுக்கப் பார்க்கிறே? கிழிச்சுப் புடுவோம் கிழிச்சு!"
கும்பலில் ஒருவர் கருவிக் கொண்டே அகன்றார். நிலத்தில் விழுந்து கிடக்கும் அவரது செவியிலும் அந்தக் குரல் இறங்காமல் போகவில்லை.
அவனது தாய் அவரை அள்ளி மடியில் போட்டுக் கொண்டு எரிமலையாய் அவனைப் பார்த்து வெடித்து ஓய்ந்த போது அவர் மெல்லப் பேசினார்.
"உனக்காகக் கண்ணீர் விட்டது போதாதா? என்னோட ரத்தத்தையே சிந்தும் படி வச்சுட்டியேடா பாவி! உன்னைப் பெத்ததற்கு எனக்கு இது போறாது. இன்னமும் வேணும்..."
அதுவே அவர் பேசிய கடைசிப் பேச்சு. அதன் பின்பு அவர் அப்படியே முடிந்து போனார்.
- அன்று அவர் பேசிய பேச்சும் சொச்சமும் அவனது திருந்திய மனோ நிலையில் ரணமாய் எரிந்து அவிந்து முடிந்த போது ஒரு புது முடிவோடு அவன் உறங்கிப் போயிருந்தான். 
எப்படியோ உறங்கிப் போய் திரும்பவும் கண்களை மலர்த்திய போது காலை மணி ஏழு.
அவனது தாய் சோர்வுடன் வார்த்துப் போட்ட கடலை மாவு தோசைகளை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். அடுத்து ஜெனரல் ஆஸ்பத்திரியில் ஸ்டாப் நர்ஸ் கொடுத்த பிரெட்டும், போர்ன்விட்டாவும் தான் உள் இறங்கின. 
உடம்பை விட்டுக் குருதி வெளியேறிய களைப்பு லேசாய் அவனுள் நெளிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து ஸ்டாப் நர்ஸ் ஒரு கையெழுத்தை வாங்கி கொண்டு, ஒரு தொகையை அவனிடம் கொடுத்தாள்.
போலியான புன்னகையோடு வாங்கி கொண்டு திரும்பினான்.
"உனக்காகக் கண்ணீர் விட்டது போதாதா? என்னோட ரத்தத்தையே சிந்தும் படி..."
- அடி மனதில் அடிக்கடி எம்பிக் குதித்த குரல் இப்பொழுது செத்துப் போயிருந்தது!
வீடு திரும்பியவன் ரத்தத்தை விற்றுப் பெற்ற தொகையையும் பித்தளை பாத்திர உண்டியலில் போட்டான். போட்ட கையோடு பாத்திரத்தைத் தலை கீழாக கவிழ்த்து மொத்தத்தையும் எண்ணினான்.
ஆறு நூறைத் தாண்டியிருந்தது தொகை! அதை மறுபடியும் பாத்திரத்திற்குள் அள்ளிப் போட்டு அந்தப் பாத்திரத்தோடு வெளியே வந்த போது வானம் மோடம் போட்டுக் கொண்டிருந்தது. அதனூடே அவனது பார்வைக்கு அந்த ஊரின் எழிலான உயர்ந்த கோபுரங்கள் தெரிகின்றன. தொலைவில் பல கோபுரங்களுக்கு அப்பால் ஊரின் நுழைவாயிலில் ஒரே ஒரு கோபுரம் மட்டும் சிதிலப்பட்டு உடைந்து சிதைந்து...
திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்தான்.
அவனைப் பெற்றவள் வழக்கம் போல் விரக்தியும், வெறுப்புமாய், மோட்டு வளையில் பதிந்த பார்வையுமாய், இந்த உலகத் தொடர்பு என்று அறுபடும் என்னும் கேள்வியுமாய் ஒரு சிலை போல் அமர்ந்து கொண்டிருந்தாள்.
"அம்மா" - அழைக்கிறான்.
மெல்லப் பார்வையால் அவனை வர்ஷித்தாள் அவள். 
"கடனில் மூழ்கிப் போன நம்ம சொந்த வீட்டோட சொச்சப் பணமும், நான் பிச்சையெடுத்தும், ரத்தத்தை வித்தும் சேர்த்த பணமும் இதுல இருக்கு. இதை நம்ம ஊர் ராஜகோபுர வளர்ச்சிக்கு நன்கொடையா கொடுத்துடலாம்னு..."
- அவள் நிதானிக்கும் அவனை முதன் முறையாக கம்பீரத்துடன் ஏறிட்டாள்.
"அப்பத்தான் என் தெளிஞ்ச மனசுல ஒட்டியிருக்கிற 'கோபுரமா ஒசந்திருந்த குடும்பத்தைக் கொலைச்சுட்டியே பாவி!' - ங்கிற வார்த்தை அழியும். அது அழிஞ்சாத்தான் திரும்பவும் இந்தக் குடும்பத்தை ஒரு கோபுரமே உயர்த்த என்னால் முடியும்! அது மட்டுமல்ல; நான் திருந்தி உன் மன்னிப்புக்காகக் காத்திருப்பதும் உனக்குப் புரியும்...! அதனாலதான்..."
-அவன் பேசி முடித்தான்.
அவள் அவனை நெகிழ்ச்சியோடு பார்த்தாள்.
அவளது பார்வையில் விரக்தி விலகியிருந்தது.
பரவசம் பரவியிருந்தது.  

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பு செய்தல் இயல்பு , அதையே தொடர்ந்து செய்வதுதான் தவறு.....!

தெரிந்தே கெடுப்பது பகையாகும். தெரியாமல் கெடுப்பது உறவாகும்....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.