Jump to content

80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்


Recommended Posts

80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் 

 

கஷ்டப் பிரதேசங்களில் இருந்து  கடந்தாண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 வெளிமாவட்ட மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

750d1edb81e3b6125efa2cf8d690732e_XL.jpg

பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயத்தரம் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிகள், கஷ்டப்பிரதேச கோட்டா அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கஷ்டப் பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதியதாக தெரியவந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில்  கல்வி அமைச்சினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு இவ் விவகாரம் குறித்து ஆறு அதிபர்களை பணிநீக்கம் செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.virakesari.lk/article/15221

Link to comment
Share on other sites

தேர்வில் சிறப்பான சித்தியடைந்த மாணவர்களில் அதிகமானவர்கள் தமிழ் மாணவர்கள். இதனைச் சிங்களம் பொறுத்துக்கொள்ளாது. ஏதாவது செய்யும். :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Paanch said:

தேர்வில் சிறப்பான சித்தியடைந்த மாணவர்களில் அதிகமானவர்கள் தமிழ் மாணவர்கள். இதனைச் சிங்களம் பொறுத்துக்கொள்ளாது. ஏதாவது செய்யும். :unsure::unsure:

 
 

A/L Best Results (2016):

Biology

1.    R.A. Nisal Punsara (Sinhala medium) - Rahula College, Matara
2.   M. Roshane Akthar (Tamil medium) - Kinniya Madya Maha Vidyalaya, Kinniya
3.    G. Klerin Dilujan (Tamil medium) - Carmel Fatima College, Kalmunai

Physical Science

1.    K.D.M. Amaya Darmasiri (English medium) - Maliyadeva Girls’ College, Kurunegala
2.    U.G. Chathura Jayasanka (Sinhala medium) – Richmond College, Galle
3.    M.B. Sawindu Dimal Thanuka (Sinhala medium) – Royal College, Colombo

Commerce

1.    M.M.A. Muditha Akalanka Rajapaksa (Sinhala medium) - Ananda College, Colombo
2.    T.F. Onil Vindula Perera (English medium) – St. Joseph’s College, Colombo
3.    G.G.A. Nipuni Dhananjanee Rupasinghe (Sinhala medium) – Ananda Balika Vidyalaya, Hingurakgoda

Arts

1.    R. Indeevari Gawarammana(English medium)- Girls’ High School, Kandy
2.    Padmanathan  Kurupareshan (Tamil) – Hindu College, Manipai
3.    U.W. Amanda Paramee Kalpashyaka (Sinhala medium) - Viharamahadevi Balika Vidyalaya, Kiribathgoda

Engineering Technology

1.    Kanakasundaram Jathursajan (Tamil medium) - Skandavarodaya College, Chunnakam
2.    K.W. Nisal Kobbekaduwa (Sinhala medium) – Government Science College, Matale
3.    R. A. Sandeepa Anjalee Ranatunga (Sinhala medium) – Ratnawali Balika Vidyalaya, Gampaha

Bio Systems Technology

1.    K. Malithi Shashikala Dilrangi (Sinhala medium) -  Swarnajayanthi Maha Vidyalaya, Kegalle
2.    T. Mayumi Thathsarani (Sinhala medium) – Devi Balika Vidyalaya, Colombo
3.    Ilyas Fathima Arosha (Tamil medium) - Fathima Balika Maha Vidyalaya, Oddamavadi

Other

1.    Thilara  Ekanayake (English) - Musaeus College, Colombo
2.   M.G. Dhananjaya Vimukthi Karunaratne (Sinhala medium) – private candidate, Pelpola Thummodara
3.   K.G.S.G. Lahiru Sasanka (Sinhala medium) – private candidate, Galle

- See more at: http://www.dailymirror.lk/article/A-L-best-results-in-the-Island-121835.html#sthash.yNTH2tyS.dpuf

Link to comment
Share on other sites


92 பேருக்கு ஆப்பு
 
09-01-2017 09:37 AM
Comments - 0       Views - 54

article_1483934908-Exam02.jpgகடந்த  ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்த நிலையில், 92 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்தார்.  

இதில், 12 பரீட்சார்த்திகள், விடைத்தாள்களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், அவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏனைய 80 பரீட்சார்த்திகளும், பின்தங்கிய பிரதேசங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்றியவர்கள் என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.  

பின்தங்கிய மாகாணங்களின் கோட்டாவின் ஊடாக, பல்கலைக்கழகங்களுக்கான தகுதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், வசதி வாய்ப்புகளை கொண்ட பிரதேசங்களிலிருந்து பின்தங்கிய பிரதேசங்களுக்குச் சென்று பரீட்சைகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் பெறுபேறுகளே, இவ்வாறு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

  2016ஆம் ஆண்டு உயர்த்தரப் பரீட்சை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, இந்த விடயம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வியமைச்சு ஆகியன இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தது.  

அவ்வாறு, வெளிமாவட்ட மாணவர்களைப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பமளித்ததாகக் கூறப்படும் அதிபர்கள் இருவர், கடமைகளிலிருந்து விலக்கப்பட்டனர் என்றும் கல்வியமைச்சு அறிவித்திருந்தது. 

எனினும், இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட 12 அதிபர்களுக்கு எதிராக இதுவரையிலும் சட்டரீதியிலான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் உள்ள பல பாடசாலைகளிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 80 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளே இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர், முறைகேடானமுறையில் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

- See more at: http://www.tamilmirror.lk/189456/-ப-ர-க-க-ஆப-ப-#sthash.Hh2vGEVe.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.