Jump to content

மைத்திரியின் ஆட்சியில் தீர்க்கப்படாவிட்டால் எக்காலத்திலும் இனப்பிரச்னையை தீர்க்கமுடியாது


Recommended Posts

மைத்திரியின் ஆட்சியில் தீர்க்கப்படாவிட்டால் எக்காலத்திலும் இனப்பிரச்னையை தீர்க்கமுடியாது

15589642_724964291015767_129244052043212

இனப்பிரச்னைக்கான  தீர்வு இந்த ஜனாதிபதியின் ஆட்சிகாலத்துக்குள்  சாத்தியப்படாவிட்டால் இனி எந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலும் சாத்தியப்படாது என கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று  இரண்டு வருடப் பூர்த்தியை  முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  கிழக்கு மாகாண முதலமைச்சர்  இதனைக் கூறினார்,

சிறுபான்மையினரின்  அபிலாஷைகளை  நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலேயே   முஸ்லிம் தமிழ் மக்கள் நல்லாட்சியை இந்த  நாட்டில் உருவாக்கியுள்ளார்கள், அதன் அடிப்டையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அவர்கள் கிழக்கு மற்றும் வடக்கின்  அபிவருத்தி  குறித்து கரிசனை செலுத்தி பல வேலைத்திட்டங்களை  நடைமுறைப்படுத்தி வருவது  வரவேற்கத்தக்கது.

சிறுபான்மை   மக்கள் இந்த மண்ணில் நிரந்தரமாக நிம்மதியாக வாழ்வதற்கான  தீர்வொன்றையும் ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன  வழங்குவார் என்ற  நம்பிக்கை  இன்னும் எமக்கு இருக்கின்றது என்பதை கூறியாகவேண்டும் எனத் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி  அதிகாரப்  பகிர்வின்  மூலம்  மாத்திரமே  இனப்பிரச்சினைக்கான  தீர்வு  முழுமைப் பெறும் என்பதை  மறுக்க முடியாது என்பதுடன்  அதிகாரப்  பகிர்வை   அரசியல்  தீர்வினூடாக வழங்கி  யுத்த்த்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இன்னும்  பல்வேறு இன்னல்களை  எதிர்நோக்கி வரும் மக்களின் வாழ்வை  துரிதமாக கட்டியெழுப்ப  ஜனாதிபதி  தமது பங்களிப்பை  வழங்குவார் என்று  நாம்  முழுமையாக நம்புகின்றோம்.

அத்துடன்  இனவாதம்  இந்த  நாட்டில்  மீண்டும் தலைதூக்கி தலைவிரித்தாட  ஆரம்பித்துள்ளது  இதன்  மூலம்  சிறுபான்மை  மக்கள்  அரசின் மீது  அதிருப்தியுறும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பதுடன் கௌரவ ஜனாதிபதியவர்கள்  இதனைக் கருத்திற் கொண்டு  இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது சிறுபான்மை மக்களின்  பாதுகாப்பையும் அவர்கள் நிம்மதியாக வாழ்வ்வதற்கான சூழலையும் ஏற்படுத்தவேண்டும்  என கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கில்  தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை  மற்றும்  வறுமை  ஆகியவற்றுக்கும்  ஜனாதிபதி கால்பதித்திருக்கும் தமது  மூன்றாவது  ஆட்சிக்காலத்தில் தீர்வு வழங்க்ப்படும் என நம்புவதாகவும்  கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர்  அஹமட் குறிப்பிட்டார்,

http://globaltamilnews.net/archives/13043

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இனப்பிரச்னைக்கான  தீர்வு இந்த ஜனாதிபதியின் ஆட்சிகாலத்துக்குள்  சாத்தியப்படாவிட்டால் இனி எந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலும் சாத்தியப்படாது என கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

 

நாணல் புல்லு மாதிரி இருக்கிற இவங்களுக்கு என்ன பிரச்சனையெண்டு எனக்கு விளங்கேல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாணல் புல்லு மாதிரி இருக்கிற இவங்களுக்கு என்ன பிரச்சனையெண்டு எனக்கு விளங்கேல்லை...

வேறென்ன தமிழனுக்கு பாவமென்று ஏதாவது கிடைத்தால் .....பங்குபோடுவதற்கு  தான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நாணல் புல்லு மாதிரி இருக்கிற இவங்களுக்கு என்ன பிரச்சனையெண்டு எனக்கு விளங்கேல்லை...

சில குடும்பங்களில் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைதான் !
எந்த காலத்திலும் எவராலும் தீர்க்க முடியாத பிரச்சனை அதுதான் 
பிரச்சனை ஒன்று இருந்தால் .... அதட்கு தீர்வு காணலாம்.
பிரச்சினை இல்லாத .... பிரச்சனைதான் தீர்க்க முடியாதது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.