Jump to content

அம்பாந்தோட்டை பதற்றநிலை ; 23 பேருக்கு விளக்கமறியல்


Recommended Posts

அம்பாந்தோட்டை பதற்றநிலை ; 23 பேருக்கு விளக்கமறியல்

 

 

அம்பாந்தோட்டை கைத்தொழில் வலைய அடிக்கல் நாட்டு விழாவின் போது பதற்ற நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களில் 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DASDA1.jpg

இதில் கைதுசெய்யப்பட்ட 21 பேரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரையும், ஏனைய இருவரையும் எதிர்வரும்  11 ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை குறித்த குற்றங்களுக்காக நேற்று 52 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

யுத்தகளமானது ஹம்பாந்தோட்டை

Heding-01-e63db3ba32ad5447ea7a8b97cf1032a65cf3bb13.jpg

 

ஹம்­பாந்­தோட்­டையிலிருந்து ஆர்.யசி
படப்பிடிப்பு: எம்.எஸ்.சலீம் 

ருகுணு பொருளாதார அபிவிருத்தி நிகழ்வை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்  : பரஸ்பரம் கல்வீச்சு

இலங்கை மற்றும் சீன அர­சாங்கம் முன்­னெ­டுத்த ருகுணு பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வலய நிகழ்­வினை எதிர்த்து பொது எதி­ர­ணி­யினர் நடத்திய பாரிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை பொலிஸார் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் தண்­ணீர்­தாரை, கண்ணீர் புகை பிர­யோகம் மூலம் கட்­டுப்­ப­டுத்­தினர். பரஸ்­பரம் இரு தரப்­பி­னரும் மேற்­கொண்ட கல்­வீச்சுத் தாக்­கு­தலில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பொது­மக்கள் என பலர் காய­ம­டைந்­தனர். இதனால் இப்பிர­தேசம் சில மணி நேரம் யுத்தகளம் போன்று காட்­சி­ய­ளித்­ தது. 

ருகுணு பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வலய ஆரம்ப நிகழ்­வுகள் நேற்று இலங்கை மற்றும் சீன அர­சாங்­கத்தின் கூட்டு முயற்­சியில் ஹம்­பாந்­தோட்டை மிரிஜ்­ஜ­வில  பிர­தே­சத்தில் நடை­பெற்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் இடம்­பெற்ற இந்த நிகழ்­வுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பொது எதி­ர­ணி­யினர் ஆர்ப்­பாட்டம் ஒன்றை மேற்­கொள்ள தீர்­மா­னித்­தி­ருந்­தனர்.  

எனினும் இந்த ஆர்ப்­பாட்­டத்தை நடத்த அனு­ம­திக்­காது அர­சாங்கம் நீதி­மன்றத் தடை உத்­த­ர­வையும் பெற்­றி­ருந்­தது. இந்­நி­லையில் நீதி­மன்ற தடை உத்­த­ர­வையும் மீறி பொது எதி­ர­ணி­யினர் நேற்று தமது எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை மேற்­கொண்­டனர். நேற்றுக் காலை 10 மணி­ய­ளவில் இவர்­க­ளது ஆர்ப்­பாட்டம் ஆரம்­ப­மா­னது. மிரிஜ்­ஜ­வி­லவில் நிகழ்வு நடை­பெறும் இடத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் பொது எதி­ர­ணியின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான டலஸ் அழ­க­பெ­ரும, உதய கம்­மன்­பில, சஷீந்­திர ராஜபக் ஷ மற்றும் பெளத்த பிக்­குகள் உள்­ளிட்ட ஆயி­ரத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் கலந்­து­கொண்­டனர். 

ஆரம்­பத்தில் எதிர்ப்பு கோஷங்­களை எழுப்­பியும், அர­சாங்­கத்தை விமர்­சிக்கும் பதா­தை­களை ஏந்­தியும் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­திய ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பின்னர் நிகழ்வு நடந்­து­கொண்­டி­ருந்த பகு­தியை நோக்கி கற்­களால் தாக்­குதல் நடத்­தினர். இந்­நி­லையில் நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் பொது எதி­ரணி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் இடையில் மோதல் நிலை­மைகள் ஏற்­பட்­டன. இரு சாராரும் கற்­களால் ஒரு­வ­ருக்­கொ­ருவர் தாக்­குதல் நடத்­திய நிலையில் உட­ன­டி­யாக பொலி­ஸாரும், அதி­ரடி படை­யி­னரும் சம்­பவ இடத்­திற்கு அழைக்­கப்­பட்­டனர் . 

நிகழ்வை குழப்­பாது ஆர்ப்­பாட்­டத்தை நிறுத்­து­மாறு பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கார்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தியும் மோதல்­களை கட்­டுப்­ப­டுத்த இய­லாத நிலை ஏற்­பட்­டது. மேலும் ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்ட பெளத்த பிக்­குகள் பொலி­ஸா­ருடன் முரண்­பட்ட நிலையில் நிலைமை மோச­ம­டைந்­தது. மீண்டும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் பொது எதி­ரணி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும் இடையில் மோதல் நிலை­மைகள் ஏற்­பட்­டன. இந்­நி­லையில், குழப்­ப­கர சூழலை கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீதும் எதிர் தரப்­பினர் மீதும் தண்ணீர் தாரை தாக்­குதல் நடத்­தினர். 

தண்ணீர் தாரை தாக்­குதல் நடத்­தியும் இரண்டு தரப்­பி­னரும் மோதிக்­கொண்­டதை யடுத்து பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை நோக்கி கண்­ணீர்ப்­புகை பிர­யோகம் மேற்­கொண்­ட­துடன் தடி­யடி தாக்­கு­த­லையும் நடத்தினர். சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் இந்த குழப்பகர சூழல் நிலவியது. பின்னர் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டக்கார்கள் நடத்திய கல்வீச்சிலும் பொலிஸாரின் தாக்குதலில் 15இற்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்தனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-01-08#page-1

Link to comment
Share on other sites

ஹம்பாந்தோட்டை விவகாரம் மேலும் 20 பேர் கைது 

 

 

ஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற பதற்றமிகு அசாதாரண சூழ்நிலை தொடர்பில் மேலும் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நேற்று இரவு முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை,  வீதியில் டயர்களை எரித்தமை மற்றும் வீதியை மறித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

http://www.virakesari.lk/article/15220

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 4 Personen, Sportler, Text und im Freien

என்னமா யோசிக்குறானுக...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.