Jump to content

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின


Recommended Posts

மன்னார் மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவன்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ரி.குருதயராஜ் அதிதிறமை சித்திகளை பெற்றுள்ளார்.

ரி.குருதயராஜ் 3 ஏ சித்தியை பெற்று வர்த்தக துறையில் மன்னார் மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் மாவட்ட மட்டத்தில் முதலாவது நிலையை பெற்று தான் கல்வி கற்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கும், மன்னார் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது எதிர்கால இலட்சியமாக பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியானாலும், சுயமான தொழில் ஒன்றையே செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/education/01/130879?ref=editorpick

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளை வளர்ச்சிக்கு கொம்பிளான் குடித்து வளர்ந்தவர்களை விட 
கஞ்சி குடித்து வளர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றது 
பல விடயங்களை உண்மைகளை சொல்லி நிட்கிறது.

யாழமாவட்ட குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் 
பின்னற்றத்தில் கைதொலைபேசி  பேஸ்புக் மற்றும் நவீன 
வாழ்கை முறை ஸ்கூட்டி கக்கூட்டி போன்றவை முக்கிய பங்கு ஏற்று இருக்கும் 
என்பதில் சந்தேகம் இல்லை. 

பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது ...........
"முந்துவோன் பிந்துவான், பிந்துவோன் முந்துவான்" என்று 
எனது கல்வி என்பதும் நாட்டுநிலமை குடும்ப நிலைமை காரணமாக 
இடை நின்று இடை நின்றே தொடர்ந்தது. அது ஒரு விதத்தில் அதிர்ஷ்ட்டமாக அமைந்தது 
இனி அமேரிக்கா அல்லது கனடாதான் ஒரே வழி என்ற நிலைமையை 
ஒரு வயதை கடந்தபோது உருவாக்கியது. அது மிகுந்த முன்னேற்றத்திட்கு வழி தந்தது. 
அதட்கு முக்கிய காரணம் தற்செயலாக ஒரு முறை பைபிளை படித்ததுதான்.
அந்த வசனம் எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்தது.

பின்தங்கியவர்கள் என்று தாழ்த்தப்பட்டு வறுமையை பழித்தவர்கள் முன்பு 
இந்த மாணவ கூட்டம் எழுந்து நிற்பது ....
எனது கண்ணில் நீரை வர செய்கிறது ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படமாட்டாய் என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட எடிசன் தான்.. அதிக கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானியாக ஆனார். முயற்சி திருவினை ஆக்கும் என்று எம் தமிழ் சொல்லித் தந்ததை கைக்கொண்டால்.. வெற்றி நிச்சயம்.

இங்கு பலருக்கும் தெரிந்திருக்குமோ தெரியல்ல... இந்த மாணவன் படித்த பாடம்.. Biotechnology அன்று அறியப்படும்.. இன்றைய உலகில் முக்கியமாகப் பேசப்படும்.. ஒரு பாடப்பரப்பு. உண்மையில் மிகவும் உபயோகமான ஒரு பாடப்பரப்பு.. குறிப்பாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கவல்ல.. ஒரு பாடப்பரப்பு.  உயிரினங்களைக் கொண்டு எப்படி.. உபயோகமான பொருட்களை தயாரிப்பது.. சந்தைப் படுத்துவது.. இலாபமீட்டுவது என்பதாக அமையும். அது மருத்துவத்தில் இருந்து... சாதாரண யோக்கட் வரை ஆதிக்கம் செய்யவல்லது.

அண்மையில்.. இங்கிலாந்துப் பிரதமர்.. கூட அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில்.. இத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கினார்.. காரணம்.. இதன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்வில் சித்தியடைந்த  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 போட்டி என்று வந்தால் எல்லோரும் வெல்ல முடியாது, ஒரு மூன்று மணித்தியால பரீட்சை ஒருவனின் தலை விதியை நிர்ணயிக்கிறது. நன்றாக படிக்கக் கூடியவர்களும், சந்தர்ப்பம் சூழ் நிலைகளால் நல்லாக  பரீட்சை எழுத முடியாமல் போகிறது.


சித்தியடையாதவர்கள் மனதை தளர விடாது, இந்த தோல்வியை சவாலாக எடுத்து பல்வேறு துறைகளில் முன்னேற முடியும். விழுந்தவன் எழுந்து நின்று தன் விடா முயற்சியால் வெற்றி பெறலாம். நியூட்டனின் மூன்றாம் விதியே இதைத்தான் சொல்கிறது.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு இலங்கை A/L கணித பிரிவில் C 3S. படிக்க கூடியவர், இதை விட கூட எடுத்து இருக்கலாம். 
அவர் பரீட்சை எழுதும் போது விதி வில்லனாக  83 கலவரம், அவரது அப்பா தனவந்தர், ஒரே நாளில் தனது வியாபாரத்தை இழந்து  உயிரை கையில் பிடித்துக் கொண்டு  ஒன்றும் இல்லாமல் ஊர் வந்து சேர்ந்தார். ஒரு வாறு double maths, physics முடிந்து விட்டது. ஆனால் Chemistry ஒத்தி வைக்கப் பட்டு ரெண்டு மாதங்களின் பின்னர் நடத்தப் பட்டது. இலங்கை பல்கலை கழகம் எடுபடவில்லை, பிரைவேட் ஆக படித்து இன்று ஒரு உயரிய பதவியில் உள்ளார் 

அவரது பட்டம் BSc (Hons), Msc (Eng), CEng, MIET

இதை எழுதுவதன் காரணம், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் நாமே கோடு கீறுகிறோம். துவண்டு விடாதீர்கள் எழுந்து நில்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் பங்குபற்றிய அனைத்து மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

மூளை வளர்ச்சிக்கு கொம்பிளான் குடித்து வளர்ந்தவர்களை விட 
கஞ்சி குடித்து வளர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றது 
பல விடயங்களை உண்மைகளை சொல்லி நிட்கிறது.

யாழமாவட்ட குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் 
பின்னற்றத்தில் கைதொலைபேசி  பேஸ்புக் மற்றும் நவீன 
வாழ்கை முறை ஸ்கூட்டி கக்கூட்டி போன்றவை முக்கிய பங்கு ஏற்று இருக்கும் 
என்பதில் சந்தேகம் இல்லை. 

பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது ...........
"முந்துவோன் பிந்துவான், பிந்துவோன் முந்துவான்" என்று 
எனது கல்வி என்பதும் நாட்டுநிலமை குடும்ப நிலைமை காரணமாக 
இடை நின்று இடை நின்றே தொடர்ந்தது. அது ஒரு விதத்தில் அதிர்ஷ்ட்டமாக அமைந்தது 
இனி அமேரிக்கா அல்லது கனடாதான் ஒரே வழி என்ற நிலைமையை 
ஒரு வயதை கடந்தபோது உருவாக்கியது. அது மிகுந்த முன்னேற்றத்திட்கு வழி தந்தது. 
அதட்கு முக்கிய காரணம் தற்செயலாக ஒரு முறை பைபிளை படித்ததுதான்.
அந்த வசனம் எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்தது.

பின்தங்கியவர்கள் என்று தாழ்த்தப்பட்டு வறுமையை பழித்தவர்கள் முன்பு 
இந்த மாணவ கூட்டம் எழுந்து நிற்பது ....
எனது கண்ணில் நீரை வர செய்கிறது ! 

http://www.doenets.lk/exam/docs/comm/A.L 2015.pdf

தயவு செய்து இந்த அறிக்கையை படிக்கவும். வடக்கு மாகாணம் உச்சத்தில் அல்லவா நிற்கிறது !!!!

அதைவிட  Facebookம் கைத்தொலைபேசியும்  வட பகுதி மாணவர்களுக்கு மட்டுமா கிடைக்கிறது , தென் பகுதி சிங்கள முஸ்லீம் மாணவர்களுக்கு கிடைக்கவில்லையா?????

ஒரு அடிப்படை விடயத்தை நீங்கள் மறந்துவிட்டிர்கள. வடக்கு மாகாணம் என்பது  மிக பெரிய போர் நாடந்து வளமை நிலை திரும்பாத ஒரு பிரதேசம் , அதை கொண்டு போய் இலங்கையின் மற்றய பிரதேசங்களுடன் ஒப்பிடுவது தவறு 

இங்கே நாம் என்ன செய்கிறோம் என்றால்  உண்மையான காரணங்களை மறந்து , இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முற்படுகிறோம்.

We are barking up the wrong tree!!!!!

சிங்களவனுக்கும் அது தான் தேவை !!!!!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நடுத்தர குடும்ப மாணவர்கள் தான்  பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள் வாழ்த்துக்கள்  பாராட்டுக்கள் 


 கஸ்டத்தை உணர்ந்தவர்கள் கால போக்கில் அதை மறந்து விடுகிறார்கள் 

பணக்கார பிள்ளைகள்  கைல உள்ள காசை வச்சி டாக்டர் ஆகுதுகள்  வெளிநாட்டில் படித்து இலங்கையில் இருந்து சென்று என்ன மாதிரி இது யாராவது முழு விளக்கம் தாங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

http://www.doenets.lk/exam/docs/comm/A.L 2015.pdf

தயவு செய்து இந்த அறிக்கையை படிக்கவும். வடக்கு மாகாணம் உச்சத்தில் அல்லவா நிற்கிறது !!!!

அதைவிட  Facebookம் கைத்தொலைபேசியும்  வட பகுதி மாணவர்களுக்கு மட்டுமா கிடைக்கிறது , தென் பகுதி சிங்கள முஸ்லீம் மாணவர்களுக்கு கிடைக்கவில்லையா?????

ஒரு அடிப்படை விடயத்தை நீங்கள் மறந்துவிட்டிர்கள. வடக்கு மாகாணம் என்பது  மிக பெரிய போர் நாடந்து வளமை நிலை திரும்பாத ஒரு பிரதேசம் , அதை கொண்டு போய் இலங்கையின் மற்றய பிரதேசங்களுடன் ஒப்பிடுவது தவறு 

இங்கே நாம் என்ன செய்கிறோம் என்றால்  உண்மையான காரணங்களை மறந்து , இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முற்படுகிறோம்.

We are barking up the wrong tree!!!!!

சிங்களவனுக்கும் அது தான் தேவை !!!!!!

 

 

நான் வட மாகாணத்தை குறிப்பிடவில்லை 
குறிப்பிட்டு யாழ் நகர பகுதி மாணவர்களைத்தான் எழுதினேன்.
அதிக பெறுபேறுகளை பெற்ற கிளிநொச்சி மாணவர்கள் 
மாலை வகுப்புகளுக்கு போக கூட வசதி இல்லாதவர்கள் ...... கஷ்ட்டப்பட்டு 
போவது என்றாலும் தரமான மாலை வகுப்புகள் அவர்கள் பிரதேசங்களில் இருப்பதில்லை.


இதுவே எமது காலத்தில் பெறுபேறுகள் வரும்போது ....
பருத்தித்துறை காட்லி கல்லூரி முதலாமிடத்தில் இருக்கும் 
தொடர்ந்து யாழ் இந்து .... சென் ஜோன்ஸ் ... மானிப்பாய் ... வேம்படி மகளிர் ....தெல்லிப்பளை மகாஜனா 
என்று பொதுவாகவே இருக்கும்.
இவர்களுக்கு அதட்கான முன் ஏற்பாடுகள் என்பனவும் மற்ற மாணவர்களை விட 
அதிகமானதுதான்.

இந்த கல்லூரியில் இப்போ பரிட்ஸை எழுதியவர்கள் பெரும்பாலும் நேரிலே புலிகளையே 
கண்டிருக்காதவர்கள் இவர்களுக்கு போர் என்பது சூரியக்கதிர் நடவடிக்கைதான் அப்போ 
இவர்கள் 3-4 வயது சிறுவர்கள் அதன்பின்பு இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் வாழ்ந்தார்களே தவிர 
விடுதலை போராட்டம் இவர்களை பெரிதாக பாதித்துருக்கவில்லை.

தவிர எனது கருத்து வட மாகாணத்தை குறை கூறுவதோ அல்லது 
அதட்குள் ஏதும் குற்றம் காண்பதோ இல்லை. சாதாரண உளவியல் வாழ்க்கை மாற்றத்தில் 
ஏற்பட கூடிய காரணம்தான்.
சிங்கள இனவாதிகளின் திட்டமிட்ட கல்வி புறக்கணிப்பு எனபதை எதிர்கொள்வது 
என்பது எல்லா தமிழ் மாணவர்களுக்கும் உரிய ஒரு சவால்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் அடிப்படையில் முக்கியமானது 
இன்று இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதியும் அதை கண்டுகொள்வதில்லை.
வேண்டுமானால் நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுடன் சென்று ஒரு போட்டோ எடுத்து 
செய்தியில் போடுவார்கள் அதோடு சரி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

நான் வட மாகாணத்தை குறிப்பிடவில்லை 
குறிப்பிட்டு யாழ் நகர பகுதி மாணவர்களைத்தான் எழுதினேன்.
அதிக பெறுபேறுகளை பெற்ற கிளிநொச்சி மாணவர்கள் 
மாலை வகுப்புகளுக்கு போக கூட வசதி இல்லாதவர்கள் ...... கஷ்ட்டப்பட்டு 
போவது என்றாலும் தரமான மாலை வகுப்புகள் அவர்கள் பிரதேசங்களில் இருப்பதில்லை.


இதுவே எமது காலத்தில் பெறுபேறுகள் வரும்போது ....
பருத்தித்துறை காட்லி கல்லூரி முதலாமிடத்தில் இருக்கும் 
தொடர்ந்து யாழ் இந்து .... சென் ஜோன்ஸ் ... மானிப்பாய் ... வேம்படி மகளிர் ....தெல்லிப்பளை மகாஜனா 
என்று பொதுவாகவே இருக்கும்.
இவர்களுக்கு அதட்கான முன் ஏற்பாடுகள் என்பனவும் மற்ற மாணவர்களை விட 
அதிகமானதுதான்.

இந்த கல்லூரியில் இப்போ பரிட்ஸை எழுதியவர்கள் பெரும்பாலும் நேரிலே புலிகளையே 
கண்டிருக்காதவர்கள் இவர்களுக்கு போர் என்பது சூரியக்கதிர் நடவடிக்கைதான் அப்போ 
இவர்கள் 3-4 வயது சிறுவர்கள் அதன்பின்பு இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் வாழ்ந்தார்களே தவிர 
விடுதலை போராட்டம் இவர்களை பெரிதாக பாதித்துருக்கவில்லை.

தவிர எனது கருத்து வட மாகாணத்தை குறை கூறுவதோ அல்லது 
அதட்குள் ஏதும் குற்றம் காண்பதோ இல்லை. சாதாரண உளவியல் வாழ்க்கை மாற்றத்தில் 
ஏற்பட கூடிய காரணம்தான்.
சிங்கள இனவாதிகளின் திட்டமிட்ட கல்வி புறக்கணிப்பு எனபதை எதிர்கொள்வது 
என்பது எல்லா தமிழ் மாணவர்களுக்கும் உரிய ஒரு சவால்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் அடிப்படையில் முக்கியமானது 
இன்று இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதியும் அதை கண்டுகொள்வதில்லை.
வேண்டுமானால் நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுடன் சென்று ஒரு போட்டோ எடுத்து 
செய்தியில் போடுவார்கள் அதோடு சரி.  

மருதர்,  2016 இல் பரீட்சை எழுதியவர்கள் 1997 இல் பிறந்தவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரிட்சையில் வெளுத்துகட்டியிருக்கும் அனைத்து மாணவ மணிகளுக்கும் பாராட்டுகள் 
தொடர்ந்து இப்படியே பல சாதனைகளை கல்வியில் படைக்க வாழ்த்துகள் ...

தவறவிட்டவர்கள் தளர்ந்து போக தேவையில்லை ..தொடர்ந்து முன்னேற பலவழிகள் உள்ளன

6 hours ago, முனிவர் ஜீ said:

கஸ்டத்தை உணர்ந்தவர்கள் கால போக்கில் அதை மறந்து விடுகிறார்கள் 

பணக்கார பிள்ளைகள்  கைல உள்ள காசை வச்சி டாக்டர் ஆகுதுகள்  வெளிநாட்டில் படித்து இலங்கையில் இருந்து சென்று என்ன மாதிரி இது யாராவது முழு விளக்கம் தாங்கோ 

உண்மை தான் முனி ஜீ 

பணக்கார பிள்ளைகள் காசை வைத்து டாக்குத்தர் ஆகினாலும் ..தற்போதைய காலத்தில் மக்களுக்கு சேவை செய்வது இந்த பிள்ளைகளே 
இங்கே அரசு செலவில் படித்தவர்கள் 5 வருடங்கள் பல்லை கடித்துக்கொண்டு வேலை செய்கிறார்கள் (அரசு சட்டம் போட்டிருப்பதால்)
அதன் பின் வெளிநாட்டிற்கு பறந்து வெள்ளைக்காரனுக்கு சேவை செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். சித்தியடையாதவர்கள் கவலைப்பட வேண்டாம்...ஏதோ ஒரு வழியில் வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவும்.

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளது ரிசல்டைக் காணவில்லை :unsure:

Link to comment
Share on other sites

காரைதீவு விபுலானந்தாவில் மூவருக்கு 3ஏ! 2 மருத்துவம், 2 பொறியியல் தெரிவாகி சாதனை!

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை வெளியான க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகளின் படி இரண்டு மாணவர்கள் மருத்துவ துறைக்கும் இரண்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.

இக்கல்லூரியில் 03 மாணவர்கள் 3ஏ பெற்று மற்றுமொரு சாதனை நிகழ்த்தியுள்ளனர் என கல்லூரி அதிபர் வித்யாராஜன் தெரிவித்தார்.

உயிரியில் பிரிவில் திலகராஜா சிந்துவர்சி, கணிதத் துறையில் லோகநாதன் பிரசந்தியா, கலைத் துறையில் தம்பிராஜா டிருக்சிகா ஆகியோர் 3ஏ சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவத் துறைக்குத் தெரிவான திலகராஜா சிந்துவர்சி 3ஏ பெற்று மாவட்டத்தில் 9 ஆவது இடத்திலுள்ளார்.

அதே துறையில் 2ஏ 1பி பெற்ற ரவீந்திரன் புவிலக்சன் மாவட்டத்தில் 18 ஆவது இடத்தில் உள்ளார்.

கடந்த 18 வருடகாலத்தின் பின்னர் இப்பாடசாலையிலிருந்து மருத்துவத்துறைக்கு ஆண் மாணவனொருவன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொறியியல் துறைக்கு லோகநாதன் பிரசந்தியா 3ஏ பெற்று மாவட்டமட்டத்தில் 06 ஆவது இடத்தில் உள்ளார். அதே துறையில் 2ஏ 1பி பெற்று நடேசானந்தம் சிந்துஜா தெரிவாகியுள்ளார்.

கலைத் துறையில் தம்பிராஜா டிருக்சிகா 3ஏ பெற்று மாவட்டத்தில் 06வது நிலையிலுள்ளார். தொழில்நுட்ப பொறியியல் துறையில் நாகேஸ்வரன் லுதர்சன் 3சி பெற்று மாவட்டத்தில் 13 ஆவது நிலையிலுள்ளார்.

இதேவேளை காரைதீவைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி சிவானந்தம் டிவானிகா(கல்முனை பற்றிமா தேசியகல்லூரி) உயிரியல்துறையில் 2ஏ1பி பெற்று மாவட்டத்தில் 28 ஆவது நிலையிலுள்ளார். இவர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/education/01/130931?ref=home

கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் மாவட்ட மட்டத்தில் சாதனை

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையிலே பத்மகைலைநாதன் டிலூஜன் என்ற மாணவன் கடந்த வருடம் இடம் பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ தரச் சித்திகளைப் பெற்று தனது பாடசாலையின் வரலாற்றிலே சாதனை படைத்துள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த மாணவனின் தந்தையார் பத்மகைலைநாதன் முன்னாள் ஆசிரியரும் ஊடகத்துறை, கலை, கலாச்சாரம் போன்ற விடயங்களிலும் துறைபோனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதுவரை கிடைக்கப் பெற்ற முடிவுகளின்படி 5 மருத்துவத் துறையிலும் 4 பொறியியல் துறையிலும் தமது மாணவர்கள் பெற்றுள்ளார்கள் என பற்றிமா அதிபர் வண.பிதா.பிறெய்ன்செல்லர் தெரிவித்தார்.

இது போன்று ஏனைய கலை, வர்த்தகம், கணிதம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் இம்முறை 3 ஏ தரச் சித்திகளைப் பெற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளதுடன் அனைத்து பிரிவுகளிலும் அதி கூடிய மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/education/01/130929?ref=home

படுவான்கரைக்கு புகழ் சேர்த்துள்ள 4 மாணவர்கள்

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேச மாணவர்கள் பலர் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் பேரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் 40 ஆம் கிராமத்தைச் சேர்ந்த ப.ஹாந்தரூபன் A 2,B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 4 வது இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 161 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

மற்றும் இளைஞர் விவசாயாயத்திட்டம் எனும் கிராமத்தைச் சேர்ந்த க.மதிகரன் 3B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 5 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 184 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதுபோல் களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த பே.யசோகாந் B 2, 1 C சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 24 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 998 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதுபோல் பா.பாரிதாஸன் 2 B,C சித்திகளைப் பெற்று மாட்ட மட்டத்தில் 11 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 459 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

இந்த நான்கு மாணவர்களும் படுவான்கரையிலுள்ள பாடசாலைகயில் கல்விப் பொதுத்தர சாதாரணதரம் கற்று எழுவான்கரைப் பகுதியான மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரத்தில் கற்று நான்கு பேரும் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார்கள்.

இந்த நான்கு மாணவர்களும் மிகவும் வறிய குடும்பத்தில் இருந்து கஸ்ட்டத்தின் மத்தியில் கற்று உயர் கல்வி கற்பதற்குத் தெரிவாகியுள்ளனர்.

இம்மாணவர்களின் உயர் படிப்புக்கு உரிய உதவிகளையும், அவர்கள் இவ்வேளையில் வேண்டி நிற்கின்றனர்.

யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்போரதீவுப்பற்றுப் பிரதேசம் தற்போது மெல்ல மெல்ல கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/special/01/130966?ref=home

சித்தாண்டி விளையாட்டு வீரன் பொறியில்துறையில் மாவட்டத்தில் 3ஆம் இடத்தில் சாதனை!

கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையில் தொழிநுட்ப பொறியல் துறையில் சித்தாண்டியைச் சேர்ந்த விளையாட்டு வீரனான யோகேஸ்வரன் லோஜிதன் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் இம்முறை 3ஆம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

விளையாட்டு வீரனும் பொறியல்துறை மாணவனுமான யோகேஸ்வரன் லோஜிதன் லங்காசிறி சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எனது குடும்பத்தில் நான் உட்பட இரண்டு தம்பி, ஒரு தங்கை, அப்பா மேசன் தொழிலாளி என்பதுடன் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரனும்கூட, நான் பாடசாலைக் காலத்தில் அதிகளவில் விளையாட்டில் ஈடுபடுவதுண்டு.

பல இடங்களில் விளையாட்டில் ஈடுபட்டு நினைவுப் பதக்கங்களும் பெற்றுள்ளேன்.

நான் பொறியில் தொழில் நுட்பம் வீ, தொழில் நுட்பத்திற்கான விஞ்ஞானம் வீ, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வீ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்த்தில் 3வது இடம் பெற்றுள்ளேன்.

அத்துடன் எனது உயர்தரப் படிப்புடன் கூடியதான விளையாட்டுடன்தான் இறுதியாக முடிந்தது.

ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாடுவதற்கு விடுவதில்லை, விளையாட்டையும் படிப்பபையும் சேர்த்து விரும்பியதால் தான் இந்த நிலையில் ஆரோக்கியமாக முன்னேற முடிந்துள்ளது என நம்புகின்றேன்.

உயர்தரத்தில் என்னை விஞ்ஞானப் பிரிவுக்கு மாறுமாறு திணித்தனர். ஆனால் அசையவில்லை எனக்கு பிடித்த துறை பொறியியல் துறை என்பதால் என்னுடைய விருப்பத்தின்பேரில் படித்து இன்றைய நிலையில் மாட்டத்தில் 3ஆவது இடத்தினைப் பெற்றுள்ளமைக்கு அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் உயர் கல்வியை முடித்த பின்னர் எனது கிராமம் சார்ந்த தங்களின் குடும்ப நிலை சூழ் நிலை காரணமாக கல்வியைத் தொடரமுடியாத மாணவர்களை இனம் கண்டு அவர்களின் கல்விக்குரிய ஒத்துழைப்பை வழங்குவதுடன் அதிகமான பொறியல்துறை மாணவர்களை உருவாக்குவதும் எனது இலக்காகவுள்ளது.

எனது குடும்பத்தின் நிலையினை உணர்ந்து, அப்பா மேசன் தொழிலாளி குடும்பத்தில் 4 பேர் பாடசாலை கல்வியை தொடர்கின்றார்கள், எனது உயர்கல்வியை தொடர்வதற்க்குரிய கல்விக்கான உதவிகளைச் நல்ல உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன், அத்துடன் லங்காசிறி செய்திச் சேவைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இதேவேளை தொழில் நுட்பத்துறையில் 6,16,18 இடங்கள் கிடைத்துள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த வருடத்தில் மாவட்டத்தில் பல முதன்மை இடங்களைப் பெற்று தொழில் நுட்பத்துறையில் பல்வேறு பிரிவுகளில் அதிகமான மாணவர்கள் பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/special/01/130976?ref=home

Link to comment
Share on other sites

80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்..! 6 அதிபர்களை பணி நீக்க நடவடிக்கை..

கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு கோட்டா முறையில் பல்கலைக்கழகத்துக்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய பகுதி மாணவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதுவதாக தெரியவந்துள்ளது.

எனவே, கல்வி அமைச்சினால் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஆறு அதிபர்களை பணி நீக்கம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/statements/01/130979?ref=home

Link to comment
Share on other sites

செங்கலடி மத்திய கல்லூரியில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் 65 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன், 21 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தெரிவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இக்கல்லூரியில் கணித பிரிவில் இரண்டு மாணவர்களும், உயிரியல் விஞ்ஞான துறைக்கு இரண்டு மாணவர்களும், சட்டத்துறைக்கு இரண்டு மாணவர்களும், கலைத்துறைக்கு பதினைந்து மாணவர்களும் தெரிவாகியுள்ளதாக கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தெரிவித்தார்.

சட்டத்துறைக்கு தெரிவாகியுள்ள செல்வி வடிவேல் வசந்தலா மூன்று பாடங்களிலும் ஏ சித்திபெற்று மாவட்டத்தில் ஐந்தாம் இடத்தையும், செல்வன் அருளானந்தம் சிலுக்சன் முன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மட்டத்தில் எட்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இணைந்த கணிதம், வணிகக்கல்வி, கிறிஸ்தவம், நடனம், நாடகமும் அரங்கியலும், புவியியல் ஆகிய பாடங்ளில் மாணவர்கள் நூறு சதவீதம் சித்திபெற்றுள்ளனர்.

கடந்த முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் வர்த்தகப் பிரிவில் மூன்று மாணவர்களும், கலைத்துறையில் 12 மாணவர்களுமாகச் சேர்த்து மொத்தமாக 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற நிலையில், இம்முறை 21 மாணவர்கள் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/community/01/131110?ref=home

Link to comment
Share on other sites

அது என்ன உயிரியல் தொழில்நுட்பம் என்று ஒரு புதியபிரிவு உள்ளது? இந்தப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் எத்துறையில் கற்பார்கள்? இவர்கள் மருத்துவர்களாக வரமுடியுமா?

Link to comment
Share on other sites

1 hour ago, கலைஞன் said:

அது என்ன உயிரியல் தொழில்நுட்பம் என்று ஒரு புதியபிரிவு உள்ளது? இந்தப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் எத்துறையில் கற்பார்கள்? இவர்கள் மருத்துவர்களாக வரமுடியுமா?

மருத்துவர்களாக வரமுடியாது! உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அல்லது உயிரியல் விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் பல்கலைக்கல்வியை தொடரலாம்.
 
அதுபோல தகவல் தொழில்நுட்ப பிரிவும் உள்ளது. இவர்கள் பாரம்பரிய பொறியியலாளர்களாக வரமுடியாது. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அல்லது பௌதிக விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் பல்கலைக்கல்வியை தொடரலாம்.

 

Link to comment
Share on other sites

மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி

கடந்த வருடம் இடம் பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் மாணவியான தயானந்தன் நேகாசினி மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் கணிதப் பிரிவில் பரிட்சைக்குத் தோற்றி 1A, 2B சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாவது நிலையை பெற்று தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அந்த மாணவி தனது சாதனைக்கு இறை பத்தியும் பெற்றோரின் ஆசிர்வாதமும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் விடா முயற்சியும் காரணமாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/education/01/130924

 

வவுனியாவில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள்

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் பி.கமலேஸ்வரி தெரிவித்தார்.

இதனடிப்படையில் கா.துசாந்தினி 3 ஏ, அ.அபிராமி 3 ஏ, வி.டிலக்சனா 3 ஏ, யோ.ரட்சனா 2 ஏ - பி மற்றும் த.டிலக்சனா 2 ஏ - பி ஆகிய மாணவிகள் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர்.

உயிரியல் தொழில்நுட்ப துறைக்கு மாவட்ட மட்டத்தில் ச.திருஸ்ரிகா 4 ஆம் இடத்தினையும் சு.பிரியதர்சினி 6 ஆம் இடத்தினையும் சு.விபீசா 10 ஆம் இடத்தினையும் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.

கலைத்துறையில் செ.பிருந்தா 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் வர்த்தக துறையில் கீர்த்திகா பொன்ராசா 3 ஏ, ஜர்சனா ஜெயமோகன் 3 ஏ, துசாந்தி கனகலிங்கம் 3 ஏ மற்றும் திவ்வியா மோகனராஜா 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ள நிலையில் வர்த்தக பிரிவில் தோற்றிய அனைத்து மாணவிகளும் 100 வீத சித்தியையும் பெற்றுள்ளனர்.

இதே வேளை இப்பாடசாலையில் இருந்து விஞ்ஞானதுறையில் 55 மாணவிகளும் கலைத்துறைக்கு 52 மாணவிகளும் வர்த்தகதுறையில் 46 மாணவிகளும் உயிரியல் தொழில் நுட்பதுறையில் 48 மாணவிகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/education/01/131159?ref=home

நுவரெலியா மாவட்டத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவி!

வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் தமிழ் மாணவி, கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஜெபமாலை செலஸ்டினா என்ற மாணவியே 3A என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.

மேலும் அகில இலங்கை ரீதியில் 114ஆம் இடத்தினை பெற்றுள்ளார். இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

ஜெபமாலை, சரோஜா தேவி தம்பதியரின் புதல்வியான இவரை, அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/special/01/130974

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயம் உயர்தர பரீட்சையில் வரலாற்றுச் சாதனை

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகாவித்தியாலயம் 2016 க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.

குறித்த மாணவர்களில் 3மாணவிகள் மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கல்லூரியில் 106 வருட வரலாற்றில் இவ்வருடமே 03 மாணவர்கள் மருத்துவத்துறைக்கு உள்வாங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, செல்வி.சிவரஞ்சன் சிவாஞ்சலி (மாவட்டநிலை 03), செல்வி.மயில்வாகனம் பிரியங்கரி (மாவட்டநிலை 09), இராஜபாரதிசஞ்சிதா (மாவட்டநிலை 28) அதில் சிவாஞ்சலி அதிவிசேட சிறப்பாகத் தெரிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விட பௌதிக, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 09மாணவிகளும் ,வர்த்தகப்பிரிவில் 06 மாணவிகளும் கலைப்பிரிவில் 13மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்ல உள்ளனர் என கூறப்படுகின்றது.

மேலும், மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் திலகவதி ஹரிதாஸ் ,பிரதிஅதிபர்களும், ஆசிரியர்களும், பாடசாலைஅபிவிருத்திக் குழுவினரும் ,பழையமாணவர் மன்றத்தினரும், நலன்விரும்பிகளும், பிரதேச மக்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/131122?ref=youmaylike2

Link to comment
Share on other sites

தோட்டம் செய்து பாடசாலைக்கு நடந்து சென்று உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவன்

வெளியாகிய கல்விப் பொது உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் உயிர்முறைகள் தொழில்நுட்பபிரிவில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மணிவேல் தர்மசீலன் என்ற மாணவனே உயிர்முறைகள் தொழில் நுட்பப்பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.

வடமாகாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இது குறித்து அந்த மாணவன் கருத்து தெரிவிக்கையில்,

எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டு தான் படித்தேன். ஆனால் இப்படி வருவேன் என எதிர்பார்க்கவில்லை. எனது அம்மா, அப்பா தோட்டம் செய்து தான் என்னை படிக்க வைத்தார்கள்.

நானும் அவர்களுடன் இணைந்து விடுமுறை நாட்களிலும், மாலை வேளைகளிலும் தோட்டம் செய்து தான் படித்தேன்.

எனது கிராமம் செட்டிகுளம், நித்திக்குளம் மிகவும் பின் தங்கியது. இக்கிராமத்தில் இருந்து எனது பாடசாலை 9 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.

அதில் இரண்டு கிலோமீற்றர் தூரம் வாகனப் போக்குவரத்து இல்லை. நடந்து சென்று பிரதான வீதிக்கு போனதும் பேருந்தில் ஏறியே பாடசாலை சென்று படித்தேன்.

சில நாட்களில் முதலாம் பாடம் முடிந்த பின் கூட நான் பாடசாலை போன சம்பவம் உள்ளது.

பிரத்தியேக வகுப்புக்கு இரண்டு பாடத்திற்கு சென்றிருந்தேன். அதற்கு 15 கிலோமீற்றர் பேருந்தில் சென்றே படித்தேன்.

இப்படியான ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து ஒரு விவசாயி மகன் வடமாகணத்தில் முதலிடம் பெற உழைத்தவர்களை என்னால் மறக்க முடியாது.

எனது பாடசாலை அதிபர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், நான் நடந்து செல்லும் போது சில சந்தர்ப்பங்களில் என்னை ஏற்றி பேருந்து வரும் பாதையில் இறக்கிவிட்ட இந்த ஊர் மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தமது வியர்வை சிந்தி என்னை படிக்க வைத்த அம்மா, அப்பா எல்லோருக்கும் எனது நன்றிகள்.

எதிர்காலத்தில் பரீட்சை எழுதவுள்ள எனது தம்பி, தங்கையர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒரு விவசாயி மகனான என்னால் நடந்து சென்று இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் சாதிக்க முடிந்திருக்கின்றது என்றால் ஏன் உங்களால் முடியாது.

நிச்சயமாக ஒவ்வொரு மணித்துளிகளையும் பயனுள்ளதாக பன்படுத்துங்கள். வெற்றி பெறுவீர்கள் எனத் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/education/01/131092

 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மாணவர்களின் சாதனை - முதல் 10 இடங்களில் யாழ்!

2016ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவு ரீதியாக அகில இலங்கையில் முதல் 10 இடங்களைப் பெற்ற பாடசாலைகள் தொடர்பிலான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

2016ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இந்த விபரங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிணங்க முதல் பத்து பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரு பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அகில இலங்கை ரீதியில் விஞ்ஞான பிரிவில் முதல் 10 இடங்களில் யாழ் பாடசாலைகள் இரண்டும் இணைந்துள்ளன.

விஞ்ஞானப் பிரிவில் முதல் பத்து இடங்களை பிடித்த பாடசாலைகளின் விபரங்கள் கீழ்வருமாறு...

  1. விசாகா வித்தியாலயம் - கொழும்பு
  2. தேவி பாலிகா வித்தியாலயம் - கொழும்பு
  3. மெதடிஸ்ட் கல்லூரி கொழும்பு
  4. சென்.தோமஸ் கல்லூரி - கல்கிஸ்ஸ
  5. மியூசியஸ் கல்லூரி - கொழும்பு
  6. வேம்படி பெண்கள் வித்தியாலயம் - யாழ்ப்பாணம்
  7. ரோயல் கல்லூரி - கொழும்பு
  8. ஆனந்த வித்தியாலயம் - கொழும்பு
  9. சாஹிரா வித்தியாலயம் - திருகோணமலை
  10. ஹாட்லி வித்தியாலயம் - பருத்தித்துறை

கடந்த வருடம், மொத்தமாக உயர்தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களுள் 30 ஆயிரம் பேர் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

http://www.tamilwin.com/education/01/132949?ref=youmaylike2

Link to comment
Share on other sites

பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருப்பவரா நீங்கள்..? இதோ உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2016ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள், பல்கலைக்கழக அனுமதிக்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி உரிய தகுதிகளைப் பெற்றுக்கொண்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பம் செய்வதற்கான விண்ணப்பக் கையேடுகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியன நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கையேட்டை தெளிவாக வாசித்து ஒன்லைன் ஊடாக இணையத்தில் கற்கைநெறி மற்றும் பீடங்களுக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/education/01/133023?ref=home

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.