Jump to content

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின


Recommended Posts

மன்னார் மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவன்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ரி.குருதயராஜ் அதிதிறமை சித்திகளை பெற்றுள்ளார்.

ரி.குருதயராஜ் 3 ஏ சித்தியை பெற்று வர்த்தக துறையில் மன்னார் மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் மாவட்ட மட்டத்தில் முதலாவது நிலையை பெற்று தான் கல்வி கற்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கும், மன்னார் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது எதிர்கால இலட்சியமாக பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியானாலும், சுயமான தொழில் ஒன்றையே செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/education/01/130879?ref=editorpick

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளை வளர்ச்சிக்கு கொம்பிளான் குடித்து வளர்ந்தவர்களை விட 
கஞ்சி குடித்து வளர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றது 
பல விடயங்களை உண்மைகளை சொல்லி நிட்கிறது.

யாழமாவட்ட குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் 
பின்னற்றத்தில் கைதொலைபேசி  பேஸ்புக் மற்றும் நவீன 
வாழ்கை முறை ஸ்கூட்டி கக்கூட்டி போன்றவை முக்கிய பங்கு ஏற்று இருக்கும் 
என்பதில் சந்தேகம் இல்லை. 

பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது ...........
"முந்துவோன் பிந்துவான், பிந்துவோன் முந்துவான்" என்று 
எனது கல்வி என்பதும் நாட்டுநிலமை குடும்ப நிலைமை காரணமாக 
இடை நின்று இடை நின்றே தொடர்ந்தது. அது ஒரு விதத்தில் அதிர்ஷ்ட்டமாக அமைந்தது 
இனி அமேரிக்கா அல்லது கனடாதான் ஒரே வழி என்ற நிலைமையை 
ஒரு வயதை கடந்தபோது உருவாக்கியது. அது மிகுந்த முன்னேற்றத்திட்கு வழி தந்தது. 
அதட்கு முக்கிய காரணம் தற்செயலாக ஒரு முறை பைபிளை படித்ததுதான்.
அந்த வசனம் எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்தது.

பின்தங்கியவர்கள் என்று தாழ்த்தப்பட்டு வறுமையை பழித்தவர்கள் முன்பு 
இந்த மாணவ கூட்டம் எழுந்து நிற்பது ....
எனது கண்ணில் நீரை வர செய்கிறது ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படமாட்டாய் என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட எடிசன் தான்.. அதிக கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானியாக ஆனார். முயற்சி திருவினை ஆக்கும் என்று எம் தமிழ் சொல்லித் தந்ததை கைக்கொண்டால்.. வெற்றி நிச்சயம்.

இங்கு பலருக்கும் தெரிந்திருக்குமோ தெரியல்ல... இந்த மாணவன் படித்த பாடம்.. Biotechnology அன்று அறியப்படும்.. இன்றைய உலகில் முக்கியமாகப் பேசப்படும்.. ஒரு பாடப்பரப்பு. உண்மையில் மிகவும் உபயோகமான ஒரு பாடப்பரப்பு.. குறிப்பாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கவல்ல.. ஒரு பாடப்பரப்பு.  உயிரினங்களைக் கொண்டு எப்படி.. உபயோகமான பொருட்களை தயாரிப்பது.. சந்தைப் படுத்துவது.. இலாபமீட்டுவது என்பதாக அமையும். அது மருத்துவத்தில் இருந்து... சாதாரண யோக்கட் வரை ஆதிக்கம் செய்யவல்லது.

அண்மையில்.. இங்கிலாந்துப் பிரதமர்.. கூட அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில்.. இத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கினார்.. காரணம்.. இதன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்வில் சித்தியடைந்த  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 போட்டி என்று வந்தால் எல்லோரும் வெல்ல முடியாது, ஒரு மூன்று மணித்தியால பரீட்சை ஒருவனின் தலை விதியை நிர்ணயிக்கிறது. நன்றாக படிக்கக் கூடியவர்களும், சந்தர்ப்பம் சூழ் நிலைகளால் நல்லாக  பரீட்சை எழுத முடியாமல் போகிறது.


சித்தியடையாதவர்கள் மனதை தளர விடாது, இந்த தோல்வியை சவாலாக எடுத்து பல்வேறு துறைகளில் முன்னேற முடியும். விழுந்தவன் எழுந்து நின்று தன் விடா முயற்சியால் வெற்றி பெறலாம். நியூட்டனின் மூன்றாம் விதியே இதைத்தான் சொல்கிறது.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு இலங்கை A/L கணித பிரிவில் C 3S. படிக்க கூடியவர், இதை விட கூட எடுத்து இருக்கலாம். 
அவர் பரீட்சை எழுதும் போது விதி வில்லனாக  83 கலவரம், அவரது அப்பா தனவந்தர், ஒரே நாளில் தனது வியாபாரத்தை இழந்து  உயிரை கையில் பிடித்துக் கொண்டு  ஒன்றும் இல்லாமல் ஊர் வந்து சேர்ந்தார். ஒரு வாறு double maths, physics முடிந்து விட்டது. ஆனால் Chemistry ஒத்தி வைக்கப் பட்டு ரெண்டு மாதங்களின் பின்னர் நடத்தப் பட்டது. இலங்கை பல்கலை கழகம் எடுபடவில்லை, பிரைவேட் ஆக படித்து இன்று ஒரு உயரிய பதவியில் உள்ளார் 

அவரது பட்டம் BSc (Hons), Msc (Eng), CEng, MIET

இதை எழுதுவதன் காரணம், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் நாமே கோடு கீறுகிறோம். துவண்டு விடாதீர்கள் எழுந்து நில்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் பங்குபற்றிய அனைத்து மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

மூளை வளர்ச்சிக்கு கொம்பிளான் குடித்து வளர்ந்தவர்களை விட 
கஞ்சி குடித்து வளர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றது 
பல விடயங்களை உண்மைகளை சொல்லி நிட்கிறது.

யாழமாவட்ட குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் 
பின்னற்றத்தில் கைதொலைபேசி  பேஸ்புக் மற்றும் நவீன 
வாழ்கை முறை ஸ்கூட்டி கக்கூட்டி போன்றவை முக்கிய பங்கு ஏற்று இருக்கும் 
என்பதில் சந்தேகம் இல்லை. 

பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது ...........
"முந்துவோன் பிந்துவான், பிந்துவோன் முந்துவான்" என்று 
எனது கல்வி என்பதும் நாட்டுநிலமை குடும்ப நிலைமை காரணமாக 
இடை நின்று இடை நின்றே தொடர்ந்தது. அது ஒரு விதத்தில் அதிர்ஷ்ட்டமாக அமைந்தது 
இனி அமேரிக்கா அல்லது கனடாதான் ஒரே வழி என்ற நிலைமையை 
ஒரு வயதை கடந்தபோது உருவாக்கியது. அது மிகுந்த முன்னேற்றத்திட்கு வழி தந்தது. 
அதட்கு முக்கிய காரணம் தற்செயலாக ஒரு முறை பைபிளை படித்ததுதான்.
அந்த வசனம் எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்தது.

பின்தங்கியவர்கள் என்று தாழ்த்தப்பட்டு வறுமையை பழித்தவர்கள் முன்பு 
இந்த மாணவ கூட்டம் எழுந்து நிற்பது ....
எனது கண்ணில் நீரை வர செய்கிறது ! 

http://www.doenets.lk/exam/docs/comm/A.L 2015.pdf

தயவு செய்து இந்த அறிக்கையை படிக்கவும். வடக்கு மாகாணம் உச்சத்தில் அல்லவா நிற்கிறது !!!!

அதைவிட  Facebookம் கைத்தொலைபேசியும்  வட பகுதி மாணவர்களுக்கு மட்டுமா கிடைக்கிறது , தென் பகுதி சிங்கள முஸ்லீம் மாணவர்களுக்கு கிடைக்கவில்லையா?????

ஒரு அடிப்படை விடயத்தை நீங்கள் மறந்துவிட்டிர்கள. வடக்கு மாகாணம் என்பது  மிக பெரிய போர் நாடந்து வளமை நிலை திரும்பாத ஒரு பிரதேசம் , அதை கொண்டு போய் இலங்கையின் மற்றய பிரதேசங்களுடன் ஒப்பிடுவது தவறு 

இங்கே நாம் என்ன செய்கிறோம் என்றால்  உண்மையான காரணங்களை மறந்து , இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முற்படுகிறோம்.

We are barking up the wrong tree!!!!!

சிங்களவனுக்கும் அது தான் தேவை !!!!!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நடுத்தர குடும்ப மாணவர்கள் தான்  பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள் வாழ்த்துக்கள்  பாராட்டுக்கள் 


 கஸ்டத்தை உணர்ந்தவர்கள் கால போக்கில் அதை மறந்து விடுகிறார்கள் 

பணக்கார பிள்ளைகள்  கைல உள்ள காசை வச்சி டாக்டர் ஆகுதுகள்  வெளிநாட்டில் படித்து இலங்கையில் இருந்து சென்று என்ன மாதிரி இது யாராவது முழு விளக்கம் தாங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

http://www.doenets.lk/exam/docs/comm/A.L 2015.pdf

தயவு செய்து இந்த அறிக்கையை படிக்கவும். வடக்கு மாகாணம் உச்சத்தில் அல்லவா நிற்கிறது !!!!

அதைவிட  Facebookம் கைத்தொலைபேசியும்  வட பகுதி மாணவர்களுக்கு மட்டுமா கிடைக்கிறது , தென் பகுதி சிங்கள முஸ்லீம் மாணவர்களுக்கு கிடைக்கவில்லையா?????

ஒரு அடிப்படை விடயத்தை நீங்கள் மறந்துவிட்டிர்கள. வடக்கு மாகாணம் என்பது  மிக பெரிய போர் நாடந்து வளமை நிலை திரும்பாத ஒரு பிரதேசம் , அதை கொண்டு போய் இலங்கையின் மற்றய பிரதேசங்களுடன் ஒப்பிடுவது தவறு 

இங்கே நாம் என்ன செய்கிறோம் என்றால்  உண்மையான காரணங்களை மறந்து , இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முற்படுகிறோம்.

We are barking up the wrong tree!!!!!

சிங்களவனுக்கும் அது தான் தேவை !!!!!!

 

 

நான் வட மாகாணத்தை குறிப்பிடவில்லை 
குறிப்பிட்டு யாழ் நகர பகுதி மாணவர்களைத்தான் எழுதினேன்.
அதிக பெறுபேறுகளை பெற்ற கிளிநொச்சி மாணவர்கள் 
மாலை வகுப்புகளுக்கு போக கூட வசதி இல்லாதவர்கள் ...... கஷ்ட்டப்பட்டு 
போவது என்றாலும் தரமான மாலை வகுப்புகள் அவர்கள் பிரதேசங்களில் இருப்பதில்லை.


இதுவே எமது காலத்தில் பெறுபேறுகள் வரும்போது ....
பருத்தித்துறை காட்லி கல்லூரி முதலாமிடத்தில் இருக்கும் 
தொடர்ந்து யாழ் இந்து .... சென் ஜோன்ஸ் ... மானிப்பாய் ... வேம்படி மகளிர் ....தெல்லிப்பளை மகாஜனா 
என்று பொதுவாகவே இருக்கும்.
இவர்களுக்கு அதட்கான முன் ஏற்பாடுகள் என்பனவும் மற்ற மாணவர்களை விட 
அதிகமானதுதான்.

இந்த கல்லூரியில் இப்போ பரிட்ஸை எழுதியவர்கள் பெரும்பாலும் நேரிலே புலிகளையே 
கண்டிருக்காதவர்கள் இவர்களுக்கு போர் என்பது சூரியக்கதிர் நடவடிக்கைதான் அப்போ 
இவர்கள் 3-4 வயது சிறுவர்கள் அதன்பின்பு இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் வாழ்ந்தார்களே தவிர 
விடுதலை போராட்டம் இவர்களை பெரிதாக பாதித்துருக்கவில்லை.

தவிர எனது கருத்து வட மாகாணத்தை குறை கூறுவதோ அல்லது 
அதட்குள் ஏதும் குற்றம் காண்பதோ இல்லை. சாதாரண உளவியல் வாழ்க்கை மாற்றத்தில் 
ஏற்பட கூடிய காரணம்தான்.
சிங்கள இனவாதிகளின் திட்டமிட்ட கல்வி புறக்கணிப்பு எனபதை எதிர்கொள்வது 
என்பது எல்லா தமிழ் மாணவர்களுக்கும் உரிய ஒரு சவால்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் அடிப்படையில் முக்கியமானது 
இன்று இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதியும் அதை கண்டுகொள்வதில்லை.
வேண்டுமானால் நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுடன் சென்று ஒரு போட்டோ எடுத்து 
செய்தியில் போடுவார்கள் அதோடு சரி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

நான் வட மாகாணத்தை குறிப்பிடவில்லை 
குறிப்பிட்டு யாழ் நகர பகுதி மாணவர்களைத்தான் எழுதினேன்.
அதிக பெறுபேறுகளை பெற்ற கிளிநொச்சி மாணவர்கள் 
மாலை வகுப்புகளுக்கு போக கூட வசதி இல்லாதவர்கள் ...... கஷ்ட்டப்பட்டு 
போவது என்றாலும் தரமான மாலை வகுப்புகள் அவர்கள் பிரதேசங்களில் இருப்பதில்லை.


இதுவே எமது காலத்தில் பெறுபேறுகள் வரும்போது ....
பருத்தித்துறை காட்லி கல்லூரி முதலாமிடத்தில் இருக்கும் 
தொடர்ந்து யாழ் இந்து .... சென் ஜோன்ஸ் ... மானிப்பாய் ... வேம்படி மகளிர் ....தெல்லிப்பளை மகாஜனா 
என்று பொதுவாகவே இருக்கும்.
இவர்களுக்கு அதட்கான முன் ஏற்பாடுகள் என்பனவும் மற்ற மாணவர்களை விட 
அதிகமானதுதான்.

இந்த கல்லூரியில் இப்போ பரிட்ஸை எழுதியவர்கள் பெரும்பாலும் நேரிலே புலிகளையே 
கண்டிருக்காதவர்கள் இவர்களுக்கு போர் என்பது சூரியக்கதிர் நடவடிக்கைதான் அப்போ 
இவர்கள் 3-4 வயது சிறுவர்கள் அதன்பின்பு இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் வாழ்ந்தார்களே தவிர 
விடுதலை போராட்டம் இவர்களை பெரிதாக பாதித்துருக்கவில்லை.

தவிர எனது கருத்து வட மாகாணத்தை குறை கூறுவதோ அல்லது 
அதட்குள் ஏதும் குற்றம் காண்பதோ இல்லை. சாதாரண உளவியல் வாழ்க்கை மாற்றத்தில் 
ஏற்பட கூடிய காரணம்தான்.
சிங்கள இனவாதிகளின் திட்டமிட்ட கல்வி புறக்கணிப்பு எனபதை எதிர்கொள்வது 
என்பது எல்லா தமிழ் மாணவர்களுக்கும் உரிய ஒரு சவால்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் அடிப்படையில் முக்கியமானது 
இன்று இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதியும் அதை கண்டுகொள்வதில்லை.
வேண்டுமானால் நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுடன் சென்று ஒரு போட்டோ எடுத்து 
செய்தியில் போடுவார்கள் அதோடு சரி.  

மருதர்,  2016 இல் பரீட்சை எழுதியவர்கள் 1997 இல் பிறந்தவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரிட்சையில் வெளுத்துகட்டியிருக்கும் அனைத்து மாணவ மணிகளுக்கும் பாராட்டுகள் 
தொடர்ந்து இப்படியே பல சாதனைகளை கல்வியில் படைக்க வாழ்த்துகள் ...

தவறவிட்டவர்கள் தளர்ந்து போக தேவையில்லை ..தொடர்ந்து முன்னேற பலவழிகள் உள்ளன

6 hours ago, முனிவர் ஜீ said:

கஸ்டத்தை உணர்ந்தவர்கள் கால போக்கில் அதை மறந்து விடுகிறார்கள் 

பணக்கார பிள்ளைகள்  கைல உள்ள காசை வச்சி டாக்டர் ஆகுதுகள்  வெளிநாட்டில் படித்து இலங்கையில் இருந்து சென்று என்ன மாதிரி இது யாராவது முழு விளக்கம் தாங்கோ 

உண்மை தான் முனி ஜீ 

பணக்கார பிள்ளைகள் காசை வைத்து டாக்குத்தர் ஆகினாலும் ..தற்போதைய காலத்தில் மக்களுக்கு சேவை செய்வது இந்த பிள்ளைகளே 
இங்கே அரசு செலவில் படித்தவர்கள் 5 வருடங்கள் பல்லை கடித்துக்கொண்டு வேலை செய்கிறார்கள் (அரசு சட்டம் போட்டிருப்பதால்)
அதன் பின் வெளிநாட்டிற்கு பறந்து வெள்ளைக்காரனுக்கு சேவை செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். சித்தியடையாதவர்கள் கவலைப்பட வேண்டாம்...ஏதோ ஒரு வழியில் வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவும்.

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளது ரிசல்டைக் காணவில்லை :unsure:

Link to comment
Share on other sites

காரைதீவு விபுலானந்தாவில் மூவருக்கு 3ஏ! 2 மருத்துவம், 2 பொறியியல் தெரிவாகி சாதனை!

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை வெளியான க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகளின் படி இரண்டு மாணவர்கள் மருத்துவ துறைக்கும் இரண்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.

இக்கல்லூரியில் 03 மாணவர்கள் 3ஏ பெற்று மற்றுமொரு சாதனை நிகழ்த்தியுள்ளனர் என கல்லூரி அதிபர் வித்யாராஜன் தெரிவித்தார்.

உயிரியில் பிரிவில் திலகராஜா சிந்துவர்சி, கணிதத் துறையில் லோகநாதன் பிரசந்தியா, கலைத் துறையில் தம்பிராஜா டிருக்சிகா ஆகியோர் 3ஏ சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவத் துறைக்குத் தெரிவான திலகராஜா சிந்துவர்சி 3ஏ பெற்று மாவட்டத்தில் 9 ஆவது இடத்திலுள்ளார்.

அதே துறையில் 2ஏ 1பி பெற்ற ரவீந்திரன் புவிலக்சன் மாவட்டத்தில் 18 ஆவது இடத்தில் உள்ளார்.

கடந்த 18 வருடகாலத்தின் பின்னர் இப்பாடசாலையிலிருந்து மருத்துவத்துறைக்கு ஆண் மாணவனொருவன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொறியியல் துறைக்கு லோகநாதன் பிரசந்தியா 3ஏ பெற்று மாவட்டமட்டத்தில் 06 ஆவது இடத்தில் உள்ளார். அதே துறையில் 2ஏ 1பி பெற்று நடேசானந்தம் சிந்துஜா தெரிவாகியுள்ளார்.

கலைத் துறையில் தம்பிராஜா டிருக்சிகா 3ஏ பெற்று மாவட்டத்தில் 06வது நிலையிலுள்ளார். தொழில்நுட்ப பொறியியல் துறையில் நாகேஸ்வரன் லுதர்சன் 3சி பெற்று மாவட்டத்தில் 13 ஆவது நிலையிலுள்ளார்.

இதேவேளை காரைதீவைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி சிவானந்தம் டிவானிகா(கல்முனை பற்றிமா தேசியகல்லூரி) உயிரியல்துறையில் 2ஏ1பி பெற்று மாவட்டத்தில் 28 ஆவது நிலையிலுள்ளார். இவர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/education/01/130931?ref=home

கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் மாவட்ட மட்டத்தில் சாதனை

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையிலே பத்மகைலைநாதன் டிலூஜன் என்ற மாணவன் கடந்த வருடம் இடம் பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ தரச் சித்திகளைப் பெற்று தனது பாடசாலையின் வரலாற்றிலே சாதனை படைத்துள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த மாணவனின் தந்தையார் பத்மகைலைநாதன் முன்னாள் ஆசிரியரும் ஊடகத்துறை, கலை, கலாச்சாரம் போன்ற விடயங்களிலும் துறைபோனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதுவரை கிடைக்கப் பெற்ற முடிவுகளின்படி 5 மருத்துவத் துறையிலும் 4 பொறியியல் துறையிலும் தமது மாணவர்கள் பெற்றுள்ளார்கள் என பற்றிமா அதிபர் வண.பிதா.பிறெய்ன்செல்லர் தெரிவித்தார்.

இது போன்று ஏனைய கலை, வர்த்தகம், கணிதம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் இம்முறை 3 ஏ தரச் சித்திகளைப் பெற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளதுடன் அனைத்து பிரிவுகளிலும் அதி கூடிய மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/education/01/130929?ref=home

படுவான்கரைக்கு புகழ் சேர்த்துள்ள 4 மாணவர்கள்

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேச மாணவர்கள் பலர் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் பேரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் 40 ஆம் கிராமத்தைச் சேர்ந்த ப.ஹாந்தரூபன் A 2,B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 4 வது இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 161 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

மற்றும் இளைஞர் விவசாயாயத்திட்டம் எனும் கிராமத்தைச் சேர்ந்த க.மதிகரன் 3B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 5 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 184 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதுபோல் களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த பே.யசோகாந் B 2, 1 C சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 24 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 998 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதுபோல் பா.பாரிதாஸன் 2 B,C சித்திகளைப் பெற்று மாட்ட மட்டத்தில் 11 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 459 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

இந்த நான்கு மாணவர்களும் படுவான்கரையிலுள்ள பாடசாலைகயில் கல்விப் பொதுத்தர சாதாரணதரம் கற்று எழுவான்கரைப் பகுதியான மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரத்தில் கற்று நான்கு பேரும் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார்கள்.

இந்த நான்கு மாணவர்களும் மிகவும் வறிய குடும்பத்தில் இருந்து கஸ்ட்டத்தின் மத்தியில் கற்று உயர் கல்வி கற்பதற்குத் தெரிவாகியுள்ளனர்.

இம்மாணவர்களின் உயர் படிப்புக்கு உரிய உதவிகளையும், அவர்கள் இவ்வேளையில் வேண்டி நிற்கின்றனர்.

யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்போரதீவுப்பற்றுப் பிரதேசம் தற்போது மெல்ல மெல்ல கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/special/01/130966?ref=home

சித்தாண்டி விளையாட்டு வீரன் பொறியில்துறையில் மாவட்டத்தில் 3ஆம் இடத்தில் சாதனை!

கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையில் தொழிநுட்ப பொறியல் துறையில் சித்தாண்டியைச் சேர்ந்த விளையாட்டு வீரனான யோகேஸ்வரன் லோஜிதன் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் இம்முறை 3ஆம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

விளையாட்டு வீரனும் பொறியல்துறை மாணவனுமான யோகேஸ்வரன் லோஜிதன் லங்காசிறி சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எனது குடும்பத்தில் நான் உட்பட இரண்டு தம்பி, ஒரு தங்கை, அப்பா மேசன் தொழிலாளி என்பதுடன் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரனும்கூட, நான் பாடசாலைக் காலத்தில் அதிகளவில் விளையாட்டில் ஈடுபடுவதுண்டு.

பல இடங்களில் விளையாட்டில் ஈடுபட்டு நினைவுப் பதக்கங்களும் பெற்றுள்ளேன்.

நான் பொறியில் தொழில் நுட்பம் வீ, தொழில் நுட்பத்திற்கான விஞ்ஞானம் வீ, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வீ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்த்தில் 3வது இடம் பெற்றுள்ளேன்.

அத்துடன் எனது உயர்தரப் படிப்புடன் கூடியதான விளையாட்டுடன்தான் இறுதியாக முடிந்தது.

ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாடுவதற்கு விடுவதில்லை, விளையாட்டையும் படிப்பபையும் சேர்த்து விரும்பியதால் தான் இந்த நிலையில் ஆரோக்கியமாக முன்னேற முடிந்துள்ளது என நம்புகின்றேன்.

உயர்தரத்தில் என்னை விஞ்ஞானப் பிரிவுக்கு மாறுமாறு திணித்தனர். ஆனால் அசையவில்லை எனக்கு பிடித்த துறை பொறியியல் துறை என்பதால் என்னுடைய விருப்பத்தின்பேரில் படித்து இன்றைய நிலையில் மாட்டத்தில் 3ஆவது இடத்தினைப் பெற்றுள்ளமைக்கு அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் உயர் கல்வியை முடித்த பின்னர் எனது கிராமம் சார்ந்த தங்களின் குடும்ப நிலை சூழ் நிலை காரணமாக கல்வியைத் தொடரமுடியாத மாணவர்களை இனம் கண்டு அவர்களின் கல்விக்குரிய ஒத்துழைப்பை வழங்குவதுடன் அதிகமான பொறியல்துறை மாணவர்களை உருவாக்குவதும் எனது இலக்காகவுள்ளது.

எனது குடும்பத்தின் நிலையினை உணர்ந்து, அப்பா மேசன் தொழிலாளி குடும்பத்தில் 4 பேர் பாடசாலை கல்வியை தொடர்கின்றார்கள், எனது உயர்கல்வியை தொடர்வதற்க்குரிய கல்விக்கான உதவிகளைச் நல்ல உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன், அத்துடன் லங்காசிறி செய்திச் சேவைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இதேவேளை தொழில் நுட்பத்துறையில் 6,16,18 இடங்கள் கிடைத்துள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த வருடத்தில் மாவட்டத்தில் பல முதன்மை இடங்களைப் பெற்று தொழில் நுட்பத்துறையில் பல்வேறு பிரிவுகளில் அதிகமான மாணவர்கள் பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/special/01/130976?ref=home

Link to comment
Share on other sites

80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்..! 6 அதிபர்களை பணி நீக்க நடவடிக்கை..

கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு கோட்டா முறையில் பல்கலைக்கழகத்துக்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய பகுதி மாணவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதுவதாக தெரியவந்துள்ளது.

எனவே, கல்வி அமைச்சினால் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஆறு அதிபர்களை பணி நீக்கம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/statements/01/130979?ref=home

Link to comment
Share on other sites

செங்கலடி மத்திய கல்லூரியில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் 65 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன், 21 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தெரிவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இக்கல்லூரியில் கணித பிரிவில் இரண்டு மாணவர்களும், உயிரியல் விஞ்ஞான துறைக்கு இரண்டு மாணவர்களும், சட்டத்துறைக்கு இரண்டு மாணவர்களும், கலைத்துறைக்கு பதினைந்து மாணவர்களும் தெரிவாகியுள்ளதாக கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தெரிவித்தார்.

சட்டத்துறைக்கு தெரிவாகியுள்ள செல்வி வடிவேல் வசந்தலா மூன்று பாடங்களிலும் ஏ சித்திபெற்று மாவட்டத்தில் ஐந்தாம் இடத்தையும், செல்வன் அருளானந்தம் சிலுக்சன் முன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மட்டத்தில் எட்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இணைந்த கணிதம், வணிகக்கல்வி, கிறிஸ்தவம், நடனம், நாடகமும் அரங்கியலும், புவியியல் ஆகிய பாடங்ளில் மாணவர்கள் நூறு சதவீதம் சித்திபெற்றுள்ளனர்.

கடந்த முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் வர்த்தகப் பிரிவில் மூன்று மாணவர்களும், கலைத்துறையில் 12 மாணவர்களுமாகச் சேர்த்து மொத்தமாக 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற நிலையில், இம்முறை 21 மாணவர்கள் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/community/01/131110?ref=home

Link to comment
Share on other sites

அது என்ன உயிரியல் தொழில்நுட்பம் என்று ஒரு புதியபிரிவு உள்ளது? இந்தப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் எத்துறையில் கற்பார்கள்? இவர்கள் மருத்துவர்களாக வரமுடியுமா?

Link to comment
Share on other sites

1 hour ago, கலைஞன் said:

அது என்ன உயிரியல் தொழில்நுட்பம் என்று ஒரு புதியபிரிவு உள்ளது? இந்தப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் எத்துறையில் கற்பார்கள்? இவர்கள் மருத்துவர்களாக வரமுடியுமா?

மருத்துவர்களாக வரமுடியாது! உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அல்லது உயிரியல் விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் பல்கலைக்கல்வியை தொடரலாம்.
 
அதுபோல தகவல் தொழில்நுட்ப பிரிவும் உள்ளது. இவர்கள் பாரம்பரிய பொறியியலாளர்களாக வரமுடியாது. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அல்லது பௌதிக விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் பல்கலைக்கல்வியை தொடரலாம்.

 

Link to comment
Share on other sites

மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி

கடந்த வருடம் இடம் பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் மாணவியான தயானந்தன் நேகாசினி மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் கணிதப் பிரிவில் பரிட்சைக்குத் தோற்றி 1A, 2B சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாவது நிலையை பெற்று தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அந்த மாணவி தனது சாதனைக்கு இறை பத்தியும் பெற்றோரின் ஆசிர்வாதமும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் விடா முயற்சியும் காரணமாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/education/01/130924

 

வவுனியாவில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள்

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் பி.கமலேஸ்வரி தெரிவித்தார்.

இதனடிப்படையில் கா.துசாந்தினி 3 ஏ, அ.அபிராமி 3 ஏ, வி.டிலக்சனா 3 ஏ, யோ.ரட்சனா 2 ஏ - பி மற்றும் த.டிலக்சனா 2 ஏ - பி ஆகிய மாணவிகள் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர்.

உயிரியல் தொழில்நுட்ப துறைக்கு மாவட்ட மட்டத்தில் ச.திருஸ்ரிகா 4 ஆம் இடத்தினையும் சு.பிரியதர்சினி 6 ஆம் இடத்தினையும் சு.விபீசா 10 ஆம் இடத்தினையும் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.

கலைத்துறையில் செ.பிருந்தா 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் வர்த்தக துறையில் கீர்த்திகா பொன்ராசா 3 ஏ, ஜர்சனா ஜெயமோகன் 3 ஏ, துசாந்தி கனகலிங்கம் 3 ஏ மற்றும் திவ்வியா மோகனராஜா 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ள நிலையில் வர்த்தக பிரிவில் தோற்றிய அனைத்து மாணவிகளும் 100 வீத சித்தியையும் பெற்றுள்ளனர்.

இதே வேளை இப்பாடசாலையில் இருந்து விஞ்ஞானதுறையில் 55 மாணவிகளும் கலைத்துறைக்கு 52 மாணவிகளும் வர்த்தகதுறையில் 46 மாணவிகளும் உயிரியல் தொழில் நுட்பதுறையில் 48 மாணவிகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/education/01/131159?ref=home

நுவரெலியா மாவட்டத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவி!

வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் தமிழ் மாணவி, கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஜெபமாலை செலஸ்டினா என்ற மாணவியே 3A என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.

மேலும் அகில இலங்கை ரீதியில் 114ஆம் இடத்தினை பெற்றுள்ளார். இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

ஜெபமாலை, சரோஜா தேவி தம்பதியரின் புதல்வியான இவரை, அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/special/01/130974

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயம் உயர்தர பரீட்சையில் வரலாற்றுச் சாதனை

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகாவித்தியாலயம் 2016 க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.

குறித்த மாணவர்களில் 3மாணவிகள் மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கல்லூரியில் 106 வருட வரலாற்றில் இவ்வருடமே 03 மாணவர்கள் மருத்துவத்துறைக்கு உள்வாங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, செல்வி.சிவரஞ்சன் சிவாஞ்சலி (மாவட்டநிலை 03), செல்வி.மயில்வாகனம் பிரியங்கரி (மாவட்டநிலை 09), இராஜபாரதிசஞ்சிதா (மாவட்டநிலை 28) அதில் சிவாஞ்சலி அதிவிசேட சிறப்பாகத் தெரிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விட பௌதிக, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 09மாணவிகளும் ,வர்த்தகப்பிரிவில் 06 மாணவிகளும் கலைப்பிரிவில் 13மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்ல உள்ளனர் என கூறப்படுகின்றது.

மேலும், மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் திலகவதி ஹரிதாஸ் ,பிரதிஅதிபர்களும், ஆசிரியர்களும், பாடசாலைஅபிவிருத்திக் குழுவினரும் ,பழையமாணவர் மன்றத்தினரும், நலன்விரும்பிகளும், பிரதேச மக்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/131122?ref=youmaylike2

Link to comment
Share on other sites

தோட்டம் செய்து பாடசாலைக்கு நடந்து சென்று உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவன்

வெளியாகிய கல்விப் பொது உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் உயிர்முறைகள் தொழில்நுட்பபிரிவில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மணிவேல் தர்மசீலன் என்ற மாணவனே உயிர்முறைகள் தொழில் நுட்பப்பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.

வடமாகாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இது குறித்து அந்த மாணவன் கருத்து தெரிவிக்கையில்,

எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டு தான் படித்தேன். ஆனால் இப்படி வருவேன் என எதிர்பார்க்கவில்லை. எனது அம்மா, அப்பா தோட்டம் செய்து தான் என்னை படிக்க வைத்தார்கள்.

நானும் அவர்களுடன் இணைந்து விடுமுறை நாட்களிலும், மாலை வேளைகளிலும் தோட்டம் செய்து தான் படித்தேன்.

எனது கிராமம் செட்டிகுளம், நித்திக்குளம் மிகவும் பின் தங்கியது. இக்கிராமத்தில் இருந்து எனது பாடசாலை 9 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.

அதில் இரண்டு கிலோமீற்றர் தூரம் வாகனப் போக்குவரத்து இல்லை. நடந்து சென்று பிரதான வீதிக்கு போனதும் பேருந்தில் ஏறியே பாடசாலை சென்று படித்தேன்.

சில நாட்களில் முதலாம் பாடம் முடிந்த பின் கூட நான் பாடசாலை போன சம்பவம் உள்ளது.

பிரத்தியேக வகுப்புக்கு இரண்டு பாடத்திற்கு சென்றிருந்தேன். அதற்கு 15 கிலோமீற்றர் பேருந்தில் சென்றே படித்தேன்.

இப்படியான ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து ஒரு விவசாயி மகன் வடமாகணத்தில் முதலிடம் பெற உழைத்தவர்களை என்னால் மறக்க முடியாது.

எனது பாடசாலை அதிபர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், நான் நடந்து செல்லும் போது சில சந்தர்ப்பங்களில் என்னை ஏற்றி பேருந்து வரும் பாதையில் இறக்கிவிட்ட இந்த ஊர் மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தமது வியர்வை சிந்தி என்னை படிக்க வைத்த அம்மா, அப்பா எல்லோருக்கும் எனது நன்றிகள்.

எதிர்காலத்தில் பரீட்சை எழுதவுள்ள எனது தம்பி, தங்கையர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒரு விவசாயி மகனான என்னால் நடந்து சென்று இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் சாதிக்க முடிந்திருக்கின்றது என்றால் ஏன் உங்களால் முடியாது.

நிச்சயமாக ஒவ்வொரு மணித்துளிகளையும் பயனுள்ளதாக பன்படுத்துங்கள். வெற்றி பெறுவீர்கள் எனத் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/education/01/131092

 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மாணவர்களின் சாதனை - முதல் 10 இடங்களில் யாழ்!

2016ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவு ரீதியாக அகில இலங்கையில் முதல் 10 இடங்களைப் பெற்ற பாடசாலைகள் தொடர்பிலான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

2016ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இந்த விபரங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிணங்க முதல் பத்து பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரு பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அகில இலங்கை ரீதியில் விஞ்ஞான பிரிவில் முதல் 10 இடங்களில் யாழ் பாடசாலைகள் இரண்டும் இணைந்துள்ளன.

விஞ்ஞானப் பிரிவில் முதல் பத்து இடங்களை பிடித்த பாடசாலைகளின் விபரங்கள் கீழ்வருமாறு...

  1. விசாகா வித்தியாலயம் - கொழும்பு
  2. தேவி பாலிகா வித்தியாலயம் - கொழும்பு
  3. மெதடிஸ்ட் கல்லூரி கொழும்பு
  4. சென்.தோமஸ் கல்லூரி - கல்கிஸ்ஸ
  5. மியூசியஸ் கல்லூரி - கொழும்பு
  6. வேம்படி பெண்கள் வித்தியாலயம் - யாழ்ப்பாணம்
  7. ரோயல் கல்லூரி - கொழும்பு
  8. ஆனந்த வித்தியாலயம் - கொழும்பு
  9. சாஹிரா வித்தியாலயம் - திருகோணமலை
  10. ஹாட்லி வித்தியாலயம் - பருத்தித்துறை

கடந்த வருடம், மொத்தமாக உயர்தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களுள் 30 ஆயிரம் பேர் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

http://www.tamilwin.com/education/01/132949?ref=youmaylike2

Link to comment
Share on other sites

பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருப்பவரா நீங்கள்..? இதோ உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2016ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள், பல்கலைக்கழக அனுமதிக்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி உரிய தகுதிகளைப் பெற்றுக்கொண்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பம் செய்வதற்கான விண்ணப்பக் கையேடுகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியன நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கையேட்டை தெளிவாக வாசித்து ஒன்லைன் ஊடாக இணையத்தில் கற்கைநெறி மற்றும் பீடங்களுக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/education/01/133023?ref=home

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.