Jump to content

பிளாக்பெர்ரியில் ஆண்ட்ராய்டு... சூப்பர்ல.!


Recommended Posts

பிளாக்பெர்ரியில் ஆண்ட்ராய்டு... சூப்பர்ல.!

  பிளாக்பெர்ரி 

மொபைல் போன்களின் பயன்பாடு ஆரம்பித்த காலகட்டத்தில் மொபைல் உலகின் ஜாம்பவான் என்ற பெருமையுடன் கம்பீர நடைபோட்டது பிளாக்பெர்ரி நிறுவனம். இதன் முக்கிய அம்சமே அவ்வளவு எளிதில் பிளாக்பெர்ரி போனை ஹேக் செய்துவிடமுடியாது என்பதுதான். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்குப்பின், விற்பனைச் சந்தையில் தன் இடத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் சமீபத்தில் தன் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இந்த முடிவு, உலக அளவில் பிளாக்பெர்ரி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது பிளாக்கபெர்ரியின் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.

அதற்கு காரணம், கடந்த புதன் கிழமை லாஸ் வேகாஸ் நகரத்தில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் CES 2017 என வெளியிடப்பட்ட புதிதாக விற்பனைக்கு வரவுள்ள பிளாக்பெர்ரியின் ஸ்மார்ட் போன் பற்றிய அறிவிப்புதான். இதுவரை ப்ளாக்பெர்ரி நிறுவனத்திற்காக மொபைல் போன்களை தயாரித்து வந்த டி.சி.எல் கம்யூனிகேசன்ஸ் டெக்னாலஜி (TCL Communications Technology) என்ற நிறுவனம் பிளாக்பெர்ரியின் அனுமதியோடு இனி பிளாக்பெர்ரி மொபைல் போன்களை தன்னிச்சையாக தயாரிக்க உள்ளது.

2100_%281%29_16556.jpg

இந்த புதிய பிளாக்பெர்ரி மொபைல் போனின் அதிகாரப்பூர்வமான பெயர் வெளியிடப்படவில்லைஎன்றாலும், டெக் உலகில் இந்த மொபைல் போனின் அறிமுகத்தை Blackberry Mercury என்றே அழைக்கின்றனர். இந்த புது பிளாக்பெர்ரி மொபைலின் பிரதான சிறப்பம்சம் பிளாக்பெர்ரி இயங்குதளம்தான். ஆனால், இது வழக்கமாக இயங்கும் பிளாக்பெர்ரியின் பிரத்யேக இயங்குதளத்தில் இயங்காமல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிளாக்பெர்ரி பயன்பாட்டாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் மென்பொருள்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் பிப்ரவரி மாதம் பார்ஸிலோனாவில் நடவிருக்கும் Mobile World Congress நிகழ்ச்சியில் அதிகார பூர்வமாக வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மொபைல் 4.6-இன்ச் முழுஅகல திரை மற்றும் குவர்ட்டி கீபோர்டுடன் வரவுள்ளது. இந்த கீபோர்ட், பட்டன்களை கொண்டிருந்தாலும் இதன் மீது ஸ்வைப் (swipe) செய்யும் பொழுது திரையின் செயலை கட்டுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கீபோர்டில் உள்ள ஸ்பேஸ்பார் (Spacebar) பட்டனில் கைரேகை வசதிகொண்ட(Finger Print) ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.

1111111_16334.jpg

அலுமினியம் கேசிங் செய்யப்பட்டுள்ள இந்த மொபைல், ஸ்னாப்டிராகன் 625 ப்ராசசர் மற்றும் 4GB ரேமுடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்பக்கத்தில் 18 மெகாபிக்சல் கேமராவும் முன்பக்கம் 8மெகாபிக்சல் கேமராவும் இடம்பெற இருக்கின்றன. இது 3400 mAh சக்தி கொண்ட பேட்டரி மூலம் இயங்கவுள்ளது. "எங்கள் நிறுவனம் ஒரு மாபெரும் தொழில்நுட்ப புரட்சியின் மத்தியில் உள்ளது, மக்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்து அதிகப்படியான செயல்திறனை எதிர்பார்க்கின்றனர். அதனை நாங்கள் பூர்த்தி செய்வோம்" என்று டி.சி.எல் கம்யூனிகேசன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர், ஸ்டீவ் சிஸ்டுள்ளி தெரிவித்துள்ளார். ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்குவது என்ற முடிவு விவேகமானது என்று டெக் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் வரும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகே புதிய பிளாக்பெர்ரியின் வெற்றி என்பது தீர்மானிக்கப்படும். பிளாக்பெர்ரி தான் இழந்த இடத்தை புதிய வெளீயீட்டின் மூலம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

http://www.vikatan.com/news/information-technology/77098-android-in-blackberry-phones.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.