Jump to content

பிரபல இந்தி நடிகர் ஒம் புரி காலமானார்


Recommended Posts

பிரபல இந்தி நடிகர் ஒம் புரி காலமானார்

 
ஓம்புரி | கோப்பு படம்
ஓம்புரி | கோப்பு படம்
 
 

இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ ஒம் புரி காலமானார். அவருக்கு வயது 66

இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஒம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால காலமானார். அவருக்கு வயது 66. இவருடைய மறைவு இந்தி திரையுலக நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளத்தில் அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று பலரும் தங்களுடைய இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

ஹரியாணா மாவட்டத்தில் பிறந்தவர் ஒம் புரி. 1976ம் ஆண்டு 'காஷிராம் கோட்வால்' என்ற மராத்தி படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். அம்ரீஷ் புரி, நஷ்ரூதின் ஷா, ஷாபனா ஆஸ்மி போன்ற நடிகர்களோடு திரைக்கலை படைப்புகளில் நடித்து பிரபலமானவர்.

1980 ஆண்டு வெளியான 'ஆக்ரோஷ்' படத்தின் தனது அபாரமான நடிப்பால் பல்வேறு விருதுகளை வென்றார். 1982ம் ஆண்டு உருவான 'காந்தி' படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தவர். உலகளவில் பிரிட்டிஷ் படங்களான 'My Son the Fanatic', 'East is East', 'The Parole officer' உள்ளிட்டவற்றில் நடித்து அறியப்பட்டவர். அப்படங்களைத் தொடர்ந்து 'City of Joy', 'The Ghost and the Darkness' போன்ற ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், டாம் ஹாங்க்ஸ், ஜுலியா ரோபட்ஸ் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்துள்ளார்.

பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் ஒம் புரி, இந்தி படங்களில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அக்‌ஷய்குமார் போன்ற நடிகர்களோடு நடித்துள்ளார்.

கமல் இரங்கல்

தமிழ் திரையுலகில் கமலோடு 'ஹே ராம்' படத்தில் நடித்துள்ளார். மேலும், கமலுக்கு மிக நெருங்கிய நண்பராக வலம் வந்தவர் ஒம் புரி. அவருடைய மறைவு குறித்து கமல், "இத்தனை ஆண்டுகாலமும் ஓம் புரி எனது நண்பர் என்பதில் பெருமிதம் கொண்டிருந்தேன். அவர் மறைந்துவிட்டார் எனக் கூறும் துணிச்சல் எப்படி வந்தது. அவர் என்றும் நிலைத்திருப்பார் அவருடைய படைப்புகள் வாயிலாக" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பல்வேறு திரையுலகினரும் ஒம்புரி மறைவு குறித்து தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

http://tamil.thehindu.com/cinema/bollywood/பிரபல-இந்தி-நடிகர்-ஒம்-புரி-காலமானார்/article9462708.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகத் திறமையான நடிகர். ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பிரிரிஷ் படங்களிலும் நடித்துள்ளாரா ?

நேற்று ரேடியோவில் எதோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள் 
யாரோ இந்தியா பாலிவுட் நடிகர் இறந்துவிட்ட்தாக 

இவராகத்தான் இருக்க வேண்டும்.

அஞ்சலிகள் !

Link to comment
Share on other sites

5 hours ago, Maruthankerny said:

இவர் பிரிரிஷ் படங்களிலும் நடித்துள்ளாரா ?

நேற்று ரேடியோவில் எதோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள் 
யாரோ இந்தியா பாலிவுட் நடிகர் இறந்துவிட்ட்தாக 

இவராகத்தான் இருக்க வேண்டும்.

அஞ்சலிகள் !

 

On 6.1.2017 at 7:42 AM, நவீனன் said:

பிரபல இந்தி நடிகர் ஒம் புரி காலமானார்

 
ஓம்புரி | கோப்பு படம்
ஓம்புரி | கோப்பு படம்
 
 

இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ ஒம் புரி காலமானார். அவருக்கு வயது 66

இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஒம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால காலமானார். அவருக்கு வயது 66. இவருடைய மறைவு இந்தி திரையுலக நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளத்தில் அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று பலரும் தங்களுடைய இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

ஹரியாணா மாவட்டத்தில் பிறந்தவர் ஒம் புரி. 1976ம் ஆண்டு 'காஷிராம் கோட்வால்' என்ற மராத்தி படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். அம்ரீஷ் புரி, நஷ்ரூதின் ஷா, ஷாபனா ஆஸ்மி போன்ற நடிகர்களோடு திரைக்கலை படைப்புகளில் நடித்து பிரபலமானவர்.

1980 ஆண்டு வெளியான 'ஆக்ரோஷ்' படத்தின் தனது அபாரமான நடிப்பால் பல்வேறு விருதுகளை வென்றார். 1982ம் ஆண்டு உருவான 'காந்தி' படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தவர். உலகளவில் பிரிட்டிஷ் படங்களான 'My Son the Fanatic', 'East is East', 'The Parole officer' உள்ளிட்டவற்றில் நடித்து அறியப்பட்டவர். அப்படங்களைத் தொடர்ந்து 'City of Joy', 'The Ghost and the Darkness' போன்ற ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், டாம் ஹாங்க்ஸ், ஜுலியா ரோபட்ஸ் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்துள்ளார்.

பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் ஒம் புரி, இந்தி படங்களில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அக்‌ஷய்குமார் போன்ற நடிகர்களோடு நடித்துள்ளார்.

கமல் இரங்கல்

தமிழ் திரையுலகில் கமலோடு 'ஹே ராம்' படத்தில் நடித்துள்ளார். மேலும், கமலுக்கு மிக நெருங்கிய நண்பராக வலம் வந்தவர் ஒம் புரி. அவருடைய மறைவு குறித்து கமல், "இத்தனை ஆண்டுகாலமும் ஓம் புரி எனது நண்பர் என்பதில் பெருமிதம் கொண்டிருந்தேன். அவர் மறைந்துவிட்டார் எனக் கூறும் துணிச்சல் எப்படி வந்தது. அவர் என்றும் நிலைத்திருப்பார் அவருடைய படைப்புகள் வாயிலாக" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பல்வேறு திரையுலகினரும் ஒம்புரி மறைவு குறித்து தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

http://tamil.thehindu.com/cinema/bollywood/பிரபல-இந்தி-நடிகர்-ஒம்-புரி-காலமானார்/article9462708.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

ஓம்பூரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை! #RIPOmpuri

ஓம் பூரி மறைந்தார்

முதுமை வந்தாலே மரணமும் கைகோர்த்துவிடுவது இயற்கை.  இந்திய சினிமாவிற்கு சொந்தமான கலைஞரும், நடிப்பில் உச்சம் தொட்டவருமான நடிகர் ஓம்பூரி இன்று மரணித்திருப்பது நிச்சயம் உணர்வுகளின் வலி. நேற்று வரை படப்பிடிப்பில் இருந்தவர், இன்று நம்முடன் இல்லை. சினிமாவின் மீது தீராக் காதல் கொண்ட ஓம்பூரியை மாரடைப்பு அமைதியாக்கியிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தி திரையுலகில் ஜாம்பவனாக இருந்த இவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே கண்ணீரில் அஞ்சலியை சமர்ப்பித்துவருகிறது.

தமிழுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாவிட்டாலும் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய நடிகர்களில் ஒருவர். ஓம் பிரகாஷ் பூரி என்னும் கலைஞர் பாலிவுட், மராத்தி, இந்திய பிறமொழிகள், பிரிட்டன் மற்றும் ஹாலிவுட் படங்கள் வரையிலும் பரிச்சயமானவர். இந்திய திரையுலகில் வைரங்களாக மிளிரும் சிறந்த நடிகர்களில் மிகமுக்கியமானவர். கலை, பாரம்பரியம், கலாச்சாரம் சார்ந்த படங்களில் உச்ச  நடிப்பில் மிரளவைக்கும் வகையில் கலையின் மீது அர்பணிப்பு கொண்டவர். 

அக்டோபர் 18ல் 1950-ல் ஹரியானா மாநிலத்தில் அம்பாலா என்னும் இடத்தில் பிறந்தவர் ஓம் பிரகாஷ் பூரி. சாதனையாளர்களின் கடந்த காலங்கள் நிச்சயம் வலியால் நிறைந்திருக்கும் என்பதற்கு இவரும் ஒரு சான்று. வீட்டில் ஏழ்மை. ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லாமல் உணவுகளை பரிமாறும் தாபாவில் வேலை செய்யவேண்டிய கட்டாயம். பெரும்பாலும் ரயில் பாதைகளில் கொட்டிக்கிடக்கும் நிலக்கரிகளை அள்ளிச்சென்று வீட்டில் கிடக்கும் ஏழ்மையை சரிபடுத்தியவர். தட்டுத்தடுமாறி பள்ளிப்படிப்பையும் முடித்து, ‘பிலிம் & டெலிவிஷன் இன்ஸ்டிடியூட்டில்’ பட்டப்படிப்பையும் முடித்தார்.

22வது வயதில் மராத்தி மொழியில் தன்னுடைய முதல்  படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். மராத்திய எழுத்தாளர் விஜய் டெண்டுல்கர் கதையை மையமாக வைத்து வெளியான Ghashiram Kotwal என்ற படம் தான் ஓம் பூரியின் முதல் சினிமா விலாசம். 

ஓம் பூரி

ஒரு பக்கம் படங்களில் நடித்து வந்தாலும், இதற்கு நடுவே தேசிய நாடகப்பள்ளியில் சேர்ந்து நடிப்பை முழுமையாக கற்றுத்தேர்ந்தார். அந்த நேரத்தில் இவருக்கும் நஸ்ருதீன் ஷாவுக்குமான நட்பும் தொடங்கியது. நடிகர் அனு கபூரின் சகோதரியான சீமா கபூரை 1991ல் திருமணம் செய்துகொண்டார். அந்த இல்வாழ்க்கை எட்டு மாதங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. அதன்பிறகு 1993ல் நந்திதாவை திருமணம் செய்துகொண்டார். அவருடனும் 2013ல் விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது. அவை எதுவும் சினிமாவை எந்த அளவிலும் பாதிக்கவில்லை.

இவர் நாயகனாக, குணச்சித்திர வேடங்கள் என்று தொட்ட இடமெல்லாம் நடிப்பில் வெற்றியை மட்டுமே பரிசாக பெற்றார். 1982ல் இவர் நடித்த ஆரோகன் (Arohan) படத்திற்காக, சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து அடுத்த வருடமும் Ardh Satya படத்திற்காக இரண்டாவது தேசிய விருதை சொந்தமாக்கினார்.  மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் என்று இவர் நடித்த படங்களில் லிஸ்ட் எகிறும்.

ஆக்ரோஷ் ( Aakrosh) ஆர்த்சத்யா ( Ardh Satya) தமஸ் (Tamas) அஸ்தா ( Aastha), மிர்ச் மசாலா ( Mirch Masala) உள்ளிட்ட படங்களில் இவரின் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக பெரிதும் பேசப்பட்டார். விமர்சனரீதியிலும் பெரும் பாராட்டுகளையும் பல விருதுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி சாச்சி 420 (Chachi 420), ஹிரபெத்ரி ( Hera Pheri), மலமால் வீக்லி ( Malamaal Weekly) உள்ளிட்ட படங்களில் காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குணச்சித்த கதாபாத்திரமோ, காமெடியோ எந்த ரோலுக்கும் கச்சிதமாக பொருந்துவார். அதுமட்டுமின்றி வயதிற்கு ஏற்ற ரோல்களை தேர்ந்தெடுத்து நடிப்பது இவரின் ஸ்பெஷல். 

1982ல் வெளியான காந்தி பயோபிக் படத்தில் இவரின் கேமியோ, பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை இவரை பிரபலப்படுத்தியது. அதற்கடுத்து பல ஹாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் படங்களிலும் தோன்ற ஆரம்பித்தார்.சிட்டி ஆஃப் ஜாய் (1992), வுல்ஃப் (1994), தி கோஸ்ட் அண்ட் தி டார்க்னஸ் (1996) என்று இவர் நடித்த படங்கள் அனைத்துமே சக்ஸஸ் பார்முளா தான். 

ஓம் பூரி

நல்ல நடிகன் மட்டுமில்லாமல் மனதில் பட்டதைப் பேசி அவ்வப்பொழுது சர்ச்சையிலும் சிக்கிக்கொள்வார். ஆனால் இவரின் கேள்விகளும் பதிலும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், மக்கள் சர்ச்சையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். எடுத்துக்காட்டாக, யூரி தாக்குதல் நேரத்தில் நடந்த டிவி விவாத நிகழ்ச்சியில், “வீரர்களை யார் ராணுவத்தில் சேரச் சொன்னது, ஆயுதங்களை அவர் கையில் யார் கொடுத்தது?” என்று கேட்க மக்களும் கொந்தளித்தனர். அதுபோல அன்னா ஹசாரே உண்ணாவர போராட்ட சமயத்தில், “அரசியல் தலைவர் என்ற ஒரே காரணத்திற்காக ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் சல்யூட் செய்வது வெட்கக்கேடு” என்று பொரிந்து தள்ளியவர். இதுபோல எந்தப் பிரச்னையென்றாலும் முதல் குரல் இவரிடமிருந்து நிச்சயம் ஒலிக்கும். 

தற்பொழுது இரண்டு கன்னடப்படங்கள், ஒரு பாகிஸ்தானி படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் இவரது மரணம் நிச்சயம் மிகப்பெரிய அதிர்ச்சி. 66 வயதிலேயே நம்மை விட்டு பிரிந்தாலும், நமக்கான நிறைய பொக்கிஷங்களையும் படிப்பினைகளையும் ஆரோக்கியமான நடிப்பினையும் விட்டுச்சென்றிருக்கிறார்.  “ஓம்பூரி மறையவில்லை... அவரது நடிப்பினால் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்” என்ற கமல்ஹாசனின் ட்விட்டர் வரிகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/77123-one-of-indias-most-celebrated-actor-ompuri-passed-away.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.