Jump to content

சங்கானை வாள்வெட்டில் எட்டுப் பேர் படுகாயம்!


Recommended Posts

சங்கானை வாள்வெட்டில் எட்டுப் பேர் படுகாயம்!
2017-01-06 09:53:05

ரி.விரூஷன்


21630_knife.blood_.jpgயாழ். சுழி­புரம் பகு­தியில் இடம்­பெற்ற வாள்­வெட்டு சம்­ப­வத்தில் எண்மர் காய­ம­டைந்து யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­துடன் ஏனை­ய­வர்­களைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக வட்­டுக்­கோட்டை பொலிஸார் தெரி­வித்­தனர்.


யாழ்.சுழி­புரம் காட்­டுப்­புரம் பகு­தியில்  இரு­கு­ழுக்­க­ளி­டையே இடம்­பெற்ற வாள்­வெட்டு மற்றும் தாக்­குதல் சம்­பவம் கார­ண­மா­கவே எண்மர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் சிகிச்­சை­க­ளுக்­காக யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

 

இந்தச் சம்­ப­வத்தில் 19 தொடக்கம் 57 வயது வரை­யான எண்­மரே காய­ம­டைந்­தனர். படு­கா­ய­ம­டைந்­த­வர்கள் சங்­கானை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக நேற்று முன்­தினம் இரவு 8 மணி­ய­ளவில் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

 

இது தொடர்பில் வட்­டுக்­கோட்டை பொலிஸில் முறை­யிட்­ட­தனை தொடர்ந்து பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்­நி­லை­யிலே நேற்றுக் காலை சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

 

இந்த நப­ரிடம் மேல­திக விசா­ரணை மேற்­கொண்டு ஏனை­ய­வர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் பொலிஸார் தெரிவித்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21630#sthash.h5TVWz1D.dpuf
Link to comment
Share on other sites

புத்தனை தினமும் கொல்லுபவ்ர்களுக்கு இந்த செய்தி சாதாரணம் தமிழர்களாகிய எங்களுக்கு பாரதூரமான விடயம் காசாப்புகடைகாரனிடம் சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க சொல்லி வடகிழக்கு எங்கும் விட்டுள்ளார்கள் எப்படி அவர்களால் அடக்கமுடியும் ?

Link to comment
Share on other sites

இந்த செய்தியைப் பாத்தவுடனேயே யோசிச்சன் - நாலுபேர் சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பினம் எண்டு.

எதோ தாங்கள் எல்லாம் புத்தனின் வாரிசு போல நல்லவர்கள் என்றும் கதை அளப்பார்கள் + எதோ இங்கு மட்டுமே கலாச்சாரம் சீர்கெடுகுது, கொலை, கொள்ளை எல்லாம் நடக்குது எண்டு குளறுவார்கள் என்றும் நினைச்சேன் - எனது நினைப்பில் தப்பே இல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த செய்தியைப் பாத்தவுடனேயே யோசிச்சன் - நாலுபேர் சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பினம் எண்டு.

எதோ தாங்கள் எல்லாம் புத்தனின் வாரிசு போல நல்லவர்கள் என்றும் கதை அளப்பார்கள் + எதோ இங்கு மட்டுமே கலாச்சாரம் சீர்கெடுகுது, கொலை, கொள்ளை எல்லாம் நடக்குது எண்டு குளறுவார்கள் என்றும் நினைச்சேன் - எனது நினைப்பில் தப்பே இல்லை.
 

சிறிலங்கா அரச பாதுகாப்பு பிரிவால் இவற்றை அடக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?

Link to comment
Share on other sites

6 minutes ago, MEERA said:

சிறிலங்கா அரச பாதுகாப்பு பிரிவால் இவற்றை அடக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?

பாரிஸில் இருந்து ஒஸ்லோவுக்கு வந்து வாள்வெட்டு நடத்தியவர்களை பிரான்சும் அடக்கவில்லை, நோர்வேயும் அடக்கவில்லை. நடந்த பின்னர்தான் முழித்தார்கள். அப்படித்தான் இங்கேயும். கள்ளர்கள் எங்கேயும் இருப்பார்கள், கொலைஞர்களும் அப்படித்தான் - அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கில்லை.

முன்னொரு காலத்தில் இருந்தது போல சந்தேகம் வந்தால் போஸ்டில் கட்ட முடியாது இப்போது - எத்தனை அப்பாவிகள் இறந்திருப்பார்கள். இப்போது சட்டம் ஒழுங்கு இங்கு உள்ளது. அதற்கு என்று ஒரு வழிமுறையும் இருக்கு. வெட்டினோம் கவிழ்த்தோம் என்று இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

பாரிஸில் இருந்து ஒஸ்லோவுக்கு வந்து வாள்வெட்டு நடத்தியவர்களை பிரான்சும் அடக்கவில்லை, நோர்வேயும் அடக்கவில்லை. நடந்த பின்னர்தான் முழித்தார்கள். அப்படித்தான் இங்கேயும். கள்ளர்கள் எங்கேயும் இருப்பார்கள், கொலைஞர்களும் அப்படித்தான் - அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கில்லை.

முன்னொரு காலத்தில் இருந்தது போல சந்தேகம் வந்தால் போஸ்டில் கட்ட முடியாது இப்போது - எத்தனை அப்பாவிகள் இறந்திருப்பார்கள். இப்போது சட்டம் ஒழுங்கு இங்கு உள்ளது. அதற்கு என்று ஒரு வழிமுறையும் இருக்கு. வெட்டினோம் கவிழ்த்தோம் என்று இருக்க முடியாது.

ஒஸ்லோவிற்கு மாதாந்தம் வந்து வெட்டினார்களா? 

நீங்கள் கூறும் சட்டமும் வழிமுறைகளும் இவர்களை லஞ்சம் வாங்கி ஊக்குவிக்கிறார்கள் என்று தெரியாதா? வாள் வெட்டு கோஸ்டிகளால் அப்பாவிகளை இறக்கவில்லையா?

இங்கு போஸ்டில் கட்ட வேண்டும் என்று யாருமே எழுதாத போது நீங்கள் எழுதியதில் இருந்து தெரிகிறது உங்கள் ஆழ்மனதில் உள்ளது. 

Link to comment
Share on other sites

கள்ளர்கள் எங்கேயும் இருப்பார்கள், கொலைஞர்களும் அப்படித்தான் - அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கில்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, ஜீவன் சிவா said:

இந்த செய்தியைப் பாத்தவுடனேயே யோசிச்சன் - நாலுபேர் சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பினம் எண்டு.

எதோ தாங்கள் எல்லாம் புத்தனின் வாரிசு போல நல்லவர்கள் என்றும் கதை அளப்பார்கள் + எதோ இங்கு மட்டுமே கலாச்சாரம் சீர்கெடுகுது, கொலை, கொள்ளை எல்லாம் நடக்குது எண்டு குளறுவார்கள் என்றும் நினைச்சேன் - எனது நினைப்பில் தப்பே இல்லை.
 

திரு ஜீவன் இங்க எவரும் நீங்க சொன்ன மாதிரி துள்ளி குதிக்கவிலலையே. ஏன் இப்படி கள உறவுகள் மீது பழி போடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

Just now, tulpen said:

திரு ஜீவன் இங்க எவரும் நீங்க சொன்ன மாதிரி துள்ளி குதிக்கவிலலையே. ஏன் இப்படி கள உறவுகள் மீது பழி போடுகிறீர்கள்?

 

3 hours ago, TNT said:

புத்தனை தினமும் கொல்லுபவ்ர்களுக்கு இந்த செய்தி சாதாரணம் தமிழர்களாகிய எங்களுக்கு பாரதூரமான விடயம் காசாப்புகடைகாரனிடம் சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க சொல்லி வடகிழக்கு எங்கும் விட்டுள்ளார்கள் எப்படி அவர்களால் அடக்கமுடியும் ?

 

Link to comment
Share on other sites

3 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

ஜீவன் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்போது காவல் துறைமீது மக்களி்ன் கோபம் திரும்புவது உலகில் எந்த நாடடிலும் சாதாரணம் தானே. அதை தானே இங்கு சுடடிக்காடடினார்கள். அதற்கு ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது என்பது என்னால் புரிந்து கொள்ள் முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறை என்ன வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் என்று கத்தும் கூட்டம் தான்

இவ்வாறான வன்முறையையும்

பழையவற்றை சொல்லி வரவேற்கிறது

அல்லது எங்கு தான் குற்றம் நடக்கவில்லை என்று 

தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்கிறது

ஆனால் தமிழரின் அதங்கம் என்னவென்றால்

ஏன் எம்மினம் இவ்வாறு மாற்றாந்தாயிடம் வளரவேண்டும்

எம்மை எம்மிடமே விட்டுவிடுங்களேன் என்பது தான்

அது தாயகமாக இருந்தாலும் புலமாக இருந்தாலும்...

அவர்களுக்கு ஒன்று குறைகிறது  என்பது பெரும் இலாபம்

எமக்கு........?????

Link to comment
Share on other sites

 

2 hours ago, விசுகு said:

வன்முறை என்ன வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் என்று கத்தும் கூட்டம் தான்

இவ்வாறான வன்முறையையும்

பழையவற்றை சொல்லி வரவேற்கிறது

அல்லது எங்கு தான் குற்றம் நடக்கவில்லை என்று 

தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்கிறது

ஆனால் தமிழரின் அதங்கம் என்னவென்றால்

ஏன் எம்மினம் இவ்வாறு மாற்றாந்தாயிடம் வளரவேண்டும்

எம்மை எம்மிடமே விட்டுவிடுங்களேன் என்பது தான்

அது தாயகமாக இருந்தாலும் புலமாக இருந்தாலும்...

அவர்களுக்கு ஒன்று குறைகிறது  என்பது பெரும் இலாபம்

எமக்கு........?????

இதைத்தான் வளர்த்த கிடாய் மார்பிலே பாய்கிறதென்பது. வளர்த்த விதம் அப்படி - இனி குய்யோ முறையோ என்று கூப்பாடு போடாமல் இதுக்கு என்ன பண்ணலாம் என்று யோசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Surveyor said:

நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வழங்கும் முதல், அவர்களை கொலைகாரர்கள் என முடிவு செய்ய முடியாது.

நீதிமன்றமா?

சிறீலங்காவிலா?

ஒரு பாராளுமன்ற எம்பியை கொன்றவர்களையே 

அவர்களால் தண்டிக்கமுடியவில்லை.....

Link to comment
Share on other sites

2 minutes ago, விசுகு said:

எந்த ஆதாரத்தில்

எந்த நம்பிக்கையில்

சிறீலங்காவின்  எந்தவிதமான நீதித்துறை மற்றும் காவல்த்துறை சார்ந்த தீர்ப்பினூடாக 

மாற்றத்தை கண்டதினூடாக

இவ்வாறு நம்பிக்கையுடன் எழுதுகிறீர்கள்???

இவற்றை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்பதை புரிந்த உண்மையில்தான் இதனை எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இவற்றை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்பதை புரிந்த உண்மையில்தான் இதனை எழுதினேன்.

யார் தமிழர்கள் மாறணுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லை நாம்தான் மாற்றனும்

ஏதாவது ஒருவர் 

தமிழரது சுயநிர்ணய உரிமைப்போராட்டம் பற்றி பேசிவிட்டால்

உடனேயே கைது செய்யப்படுகிறார்

மாதக்கணக்கில் நீதி விசாரணையின்றி சிறையிலடைக்கப்படுகிறார்

ஏன் கொன்று தாட்டுவிட்டு காணாமல் போனவராக்கப்படுகிறார்

அந்தளவுக்கு இராணுவமும் காவல்த்துறையும் நுண்ணியமாக இயங்கும் ஒரு குடாவுக்குள்

இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன?

எந்த துணிவில் வாளை கையிலெடுக்கிறார்கள் என்பதே இங்கே பலரதும் கேள்வி.

Link to comment
Share on other sites

18 minutes ago, விசுகு said:

தமிழரது சுயநிர்ணய உரிமைப்போராட்டம் பற்றி பேசிவிட்டால்

உடனேயே கைது செய்யப்படுகிறார்

மாதக்கணக்கில் நீதி விசாரணையின்றி சிறையிலடைக்கப்படுகிறார்

ஏன் கொன்று தாட்டுவிட்டு காணாமல் போனவராக்கப்படுகிறார்

இது தப்பான கண்ணோட்டம் - நடந்த சம்பவத்தை குறிப்பிடுங்கள்.

20 minutes ago, விசுகு said:

அந்தளவுக்கு இராணுவமும் காவல்த்துறையும் நுண்ணியமாக இயங்கும் ஒரு குடாவுக்குள்

இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன?

இதுவும் தப்பான கண்ணோட்டம் 

21 minutes ago, விசுகு said:

எந்த துணிவில் வாளை கையிலெடுக்கிறார்கள் என்பதே இங்கே பலரதும் கேள்வி.

காசினால் தப்பலாம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

(இவர்கள் ஒன்றும் தமிழருக்காக போராடுபவர்கள் இல்லை. வெறுமனே பணத்துக்கான போராட்டம் மட்டுமே).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

இது தப்பான கண்ணோட்டம் - நடந்த சம்பவத்தை குறிப்பிடுங்கள்.

போன கிழடமையும் காந்திசிலையை உடைத்தவர்கள்கைது செய்யப்பட்டார்களே?

 

இதுவும் தப்பான கண்ணோட்டம் 

அப்படியாயின்இத்தனை லட்சம்இராணுவத்தினர்எதற்கு யாழ்குடாவுக்குள்??

என்ன செய்கிறார்கள்???

 

காசினால் தப்பலாம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

(இவர்கள் ஒன்றும் தமிழருக்காக போராடுபவர்கள் இல்லை. வெறுமனே பணத்துக்கான போராட்டம் மட்டுமே).

காசினால்தப்பலாம்என்றால்

அரசு

அரச நிர்வாகம் சரியில்லை என்று தானே அர்த்தம்

 

Link to comment
Share on other sites

19 minutes ago, ஜீவன் சிவா said:
44 minutes ago, விசுகு said:

தமிழரது சுயநிர்ணய உரிமைப்போராட்டம் பற்றி பேசிவிட்டால்

உடனேயே கைது செய்யப்படுகிறார்

மாதக்கணக்கில் நீதி விசாரணையின்றி சிறையிலடைக்கப்படுகிறார்

ஏன் கொன்று தாட்டுவிட்டு காணாமல் போனவராக்கப்படுகிறார்

இது தப்பான கண்ணோட்டம் - நடந்த சம்பவத்தை குறிப்பிடுங்கள்.

 

3 minutes ago, விசுகு said:

போன கிழடமையும் காந்திசிலையை உடைத்தவர்கள்கைது செய்யப்பட்டார்களே?

இவர்கள் தமிழரது சுயநிர்ணய போராட்டத்துக்காகவே காந்தி சிலையை உடைத்தார்கள்.

 

50 minutes ago, விசுகு said:

அந்தளவுக்கு இராணுவமும் காவல்த்துறையும் நுண்ணியமாக இயங்கும் ஒரு குடாவுக்குள்

இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன?

5 minutes ago, விசுகு said:

இதுவும் தப்பான கண்ணோட்டம் 

அப்படியாயின்இத்தனை லட்சம்இராணுவத்தினர்எதற்கு யாழ்குடாவுக்குள்??

என்ன செய்கிறார்கள்???

இது நியாயமான கேள்வி - ஆனால் முன்னர் போல் அவர்கள் வீதிகளில் இல்லை இப்போது. வெறுமனே வெட்டிப் பயலுகளுக்கு வக்காலத்து வாங்குவதை விட அவர்களையும் அகற்ற எதையாவது பண்ணலாமே என்பது எனது ஆசை. 

10 minutes ago, விசுகு said:

காசினால் தப்பலாம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

(இவர்கள் ஒன்றும் தமிழருக்காக போராடுபவர்கள் இல்லை. வெறுமனே பணத்துக்கான போராட்டம் மட்டுமே).

காசினால்தப்பலாம்என்றால்

அரசு

அரச நிர்வாகம் சரியில்லை என்று தானே அர்த்தம்

இதுவும் உண்மை

ஆனால்
பாரிஸில் நடைபெற்ற கொலைகள் எத்தனைக்கு தண்டனை வழங்கப் பட்டிருக்கு - அது போலவே இதுவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

இவர்கள் தமிழரது சுயநிர்ணய போராட்டத்துக்காகவே காந்தி சிலையை உடைத்தார்கள்.

தேவையென்றால் 

உடனே இயங்குகிறார்கள்இல்லையா?

இது நியாயமான கேள்வி - ஆனால் முன்னர் போல் அவர்கள் வீதிகளில் இல்லை இப்போது. வெறுமனே வெட்டிப் பயலுகளுக்கு வக்காலத்து வாங்குவதை விட அவர்களையும் அகற்ற எதையாவது பண்ணலாமே என்பது எனது ஆசை. 

இதுவும் உண்மை

ஆனால்
பாரிஸில் நடைபெற்ற கொலைகள் எத்தனைக்கு தண்டனை வழங்கப் பட்டிருக்கு - அது போலவே இதுவும்.

அதைத்தான்  நானும்சொல்கின்றேன்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்நடாத்தப்படுகின்றோம்என.

 

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:

தேவையென்றால் 

உடனே இயங்குகிறார்கள்இல்லையா?

யாருடைய தேவைக்கு?

2 minutes ago, விசுகு said:

அதைத்தான்  நானும்சொல்கின்றேன்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்நடாத்தப்படுகின்றோம்என.

இல்லை என்று சொல்லவில்லை
ஆனாலும் மாற்றம் என்பது உடனே நடந்து விடாது

தொலைத்த சந்ததிகள் போதுமே அடுத்த சந்ததியாவது குறைந்தது நின்மதியாய் இருக்கட்டும்.

- அம்புட்டுத்தான் - 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

 

இதைத்தான் வளர்த்த கிடாய் மார்பிலே பாய்கிறதென்பது. வளர்த்த விதம் அப்படி - இனி குய்யோ முறையோ என்று கூப்பாடு போடாமல் இதுக்கு என்ன பண்ணலாம் என்று யோசியுங்கள்.

ஐயா எதை வளர்த்த விதம் அப்படி என்று சொல்லுகின்றீர்கள்?பொலிஸ் அதிகாரிகள் இதை அடக்க வேண்டும் என்று சொல்லுகின்றோம்.....அது தமிழ் பொலிஸ் அதிகாரிகள் என்றால் இன்னும் நல்லம் ஐக்கிய இலங்கை வேண்டுமென்றால் நல்ல தமிழ் அதிகாரிகளை உள்வாங்க வேண்டும் ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.