Jump to content

சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது


Recommended Posts

சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது:
தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது
 
 
 

அ.தி.மு.க.,வில், சசிகலாவுக்கு எதிர்ப்பும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதர வும் அதிகரித்து வருகிறது. தொண்டர்களிடம் பேசிய தீபா, 'என் அரசியல் பயணத்தை, யாராலும் தடுக்க முடியாது' என, தெரிவித்தார்.

 

Tamil_News_large_168467620170105235329_318_219.jpg

ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலாவை நியமனம் செய்து, பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அவரும் பொறுப்பேற்றார்.

அதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், 'தலைமை ஏற்க வர வேண்டும்' என, தீபாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சசிகலா தங்கியுள்ள,

சென்னை, போயஸ் கார்டன் வீடு வெறிச்சோடி கிடக்க, தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், மதுரை என, 14 மாவட்டங் களில் இருந்து, ஏராளமான தொண்டர்கள், தீபா வீட்டுக்கு வந்தனர்.

அவர்களிடம் தீபா பேசும் போது, ''என் அரசியல் பயணத்தை, யாராலும் தடுக்க முடியாது. நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். தொண்டர் கள் பொறுமையோடு இருக்க வேண்டும். விரைவில், நல்ல முடிவை அறிவிக்கிறேன். ஜெயலலிதாவின் புகழை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் பணியாற்ற, தயாராக உள்ளேன்,'' என்றார்.

அப்போது தொண்டர்கள், 'அரசியலுக்கு வர பயப்படாதீர்கள்; நாங்கள் இருக்கிறோம்' என கோஷமிட்டனர். அதற்கு பதில் அளித்த தீபா, ''எனக்கு பயம் எதுவும் இல்லை,'' என்றார்.

 

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தொண் டர்களிடம் கருத்து கேட்டு, என் கருத்தை பகிர்ந்து கொண்ட பின், முடிவை அறிவிப்பேன். தொண்டர் களுடன் கலந்து பேசியே, முடிவு செய்வேன். அ.தி. மு.க.,வை கைப்பற்றுவதா, புதிய கட்சி துவங்குவதா என, இன்னமும் முடிவு செய்யவில்லை.சசிகலா, பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது குறித்து, கருத்து கூற விரும்பவில்லை. அவர் முதல்வரா னால், அப்போது கருத்து தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பேனர்கள் கிழிப்பு


பெரம்பலுார் நகரில், சசிகலாவுக்கு ஆதரவுமற்றும் வாழ்த்து தெரிவித்து, நகரின் முக்கிய இடங்களில், அவரது ஆதரவாளர்கள், 'டிஜிட்டல்' பேனர் வைத் தனர். அவற்றில் உள்ள, சசிகலா புகைப்படங் கள் கிழிக்கப்பட்டன.

தம்பிதுரையின் சசி புராணம்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 30ம் நாள் நினைவு மவுன ஊர்வலம், கரூரில் நடந்தது. ஊர்வலம் முடி வில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். அப்போது, ஜெயலலிதா குறித்து பேசா மல், சசிகலா புராணம் பாடினார். இது, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

தை மாதம் அரசியல் பிரவேசம்


தீபா, அரசியலுக்கு வர வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவரும் வர விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும், தன் முடிவை, தை மாதம் அறிவிக்கலாம் என, அவர் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரண மாகவே, அவர் விரைவில் முடிவை அறிவிப்பேன் எனக்கூறி வருகிறார்.
 

மதுரையில் குமுறல்


மதுரை, ஜெய்ஹிந்த்புரம், 90வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் போஸ். மாநகராட்சியில் சுகாதார குழு உறுப்பினராகவும் இருந்தார். அவர், ''என் போன்ற கட்சிக்காரர்களுக்கு, சசிகலா

 

தலைமை பிடிக்கலை. இதே மனநிலையில் தான் தொண்டர்கள் உள்ளனர். தீபா தலைமையை ஏற்க தயாராக இருக்கிறோம். அவர் முடிவை பொறுத்து எங்கள் முடிவு இருக்கும். அவர் அரசியலுக்கு வராதபட்சத்தில், நாங்கள் கட்சியை விட்டு விலகி விடுவோம்,'' என்றார்.இந்நிலையில், தீபா ஆதரவாளர்கள், 7ம் தேதி, கடலுாரில் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

கிராமங்களில் தீபாவுக்கு பெருகும் ஆதரவுசென்னை செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு

திண்டுக்கல்:தமிழக கிராமங்களில் ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவிற்கு பெருகும் ஆதரவு குறித்தும், அவருக்கு ஆதரவாக சென்னை செல்லும் வாகனங்கள் குறித்தும் உளவுத்துறை யினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்குப்பின், சசிகலாவை விரும்பாத தொண்டர்களிடையே, ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, வேடசந்துார், வடமதுரை, வத்தலகுண்டு, நத்தம், கொடைக்கானல் உட்பட பல இடங்களில் அவருக்கு ஆதரவாக போஸ்டர், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. போலீசார் தடை விதித்த போதும், எதிர்ப்பை மீறி ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும் தீபா விற்கு ஆதரவு தெரிவிக்க பலர் சென்னை சென்ற வண்ணம் உள்ளனர். அதேநேரம் சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்படுவதும் நடக்கிறது.
 

உளவுத்துறை கணக்கெடுப்பு


தீபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கிராமங்கள், கட்சியினர், நிர்வாகிகள் விபரங்களை உளவுத் துறை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவ ருக்கு ஆதரவு தெரிவிப்பவர் எத்தனை ஆண்டு களாக கட்சியில் உள்ளார், அவர் அ.தி.மு.க., விலும், உள்ளாட்சி அமைப்பிலும் பதவிகள் ஏதும் வகித்துள்ளாரா என்பது குறித்தும் தகவல்கள் திரட்டுகின்றனர்.
 

வாகனங்கள் கண்காணிப்பு


தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் அவரின் வீடு முன் ஆதரவாளர்கள் தினமும் குவிகின்றனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்களையும், யார் தலைமையில் செல் கின்றனர் என்ற விபரங்களையும் உளவுத்துறை யினர் கண்காணித்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1684676

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு வந்த காலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு......  சசிகலா  போன்ற, தமிழ்  மண்ணின் மைந்தர்களே... தேவை. 

ஜெயலலிதாவைப் போல் ... 
தீபா,  சிவப்பு.... நிறத்தில் இருந்தால்,  தமிழ் நாட்டை.. ஆள  முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் நாட்டுக்கு......  சசிகலா  போன்ற, தமிழ்  மண்ணின் மைந்தர்களே... தேவை. 

ஜெயலலிதாவைப் போல் ... 
தீபா,  சிவப்பு.... நிறத்தில் இருந்தால்,  தமிழ் நாட்டை.. ஆள  முடியாது.

எனது கருத்து இருவர்களுமே தேவையில்லை என்பதுதான். தமிழ்நாட்டில் சிறந்த சிந்தனையுடைய பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர். பணபலமின்மையால் நல்வழி அரசியல்கள் பின்னுக்கு நிற்கின்றன.
இருந்தாலும் சசிகலா எனும் கோட்டில் வரும் போது தீபா அரசியலுக்கு அருகதையற்றவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேர் இருக்க சசிகலாவும் தீபாவும் எதுக்கு??

எல்லாரும் சுரணை கெட்ட பயல்களாய் இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

எனது கருத்து இருவர்களுமே தேவையில்லை என்பதுதான். தமிழ்நாட்டில் சிறந்த சிந்தனையுடைய பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர். பணபலமின்மையால் நல்வழி அரசியல்கள் பின்னுக்கு நிற்கின்றன.
இருந்தாலும் சசிகலா எனும் கோட்டில் வரும் போது தீபா அரசியலுக்கு அருகதையற்றவர்.

இப்போது.... ஒரு, தெரிவு  தான் இருக்கின்றது.
சசிகலா நடராஜன்   -  ஸ்ராலின் கருணாநிதி. 
எனது... முதல் தெரிவு........  சசிகலா நடராஜனுக்கு  மட்டுமே. tw_heart:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

இப்போது.... ஒரு, தெரிவு  தான் இருக்கின்றது.
சசிகலா நடராஜன்   -  ஸ்ராலின் கருணாநிதி. 
எனது... முதல் தெரிவு........  சசிகலா நடராஜனுக்கு  மட்டுமே. tw_heart:

இருக்கலாம்.....
ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் பெரியதொரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தி நல்ல அரசியல் உள்ளே நுழைய முயற்சிக்கலாம். முயற்சிக்கவில்லை போல் தெரிகிறது.
மற்றவர்களை குறை குற்றம் பிடிப்பதிலேயே காலத்தை கடத்துகின்றனர்.
இவையெல்லாம் வடநாட்டு  கிந்திய ஆளுமைக்கு வழிவகுக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இருக்கலாம்.....
ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் பெரியதொரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தி நல்ல அரசியல் உள்ளே நுழைய முயற்சிக்கலாம். முயற்சிக்கவில்லை போல் தெரிகிறது.
மற்றவர்களை குறை குற்றம் பிடிப்பதிலேயே காலத்தை கடத்துகின்றனர்.
இவையெல்லாம் வடநாட்டு  கிந்திய ஆளுமைக்கு வழிவகுக்கின்றன.

குமாரசாமி அண்ணா.....  நல்ல  சிந்தனை.
அதற்கு ... காசு, இருக்க வேணும்.
மக்களுக்க... சேவை  செய்ய, முதல்..... "மணி"  முக்கி
யம். :grin:

Bildergebnis für dont worry animated gis

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.