Jump to content

‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா?


Recommended Posts


‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா?
 
 

article_1483538029-Sampanthan-new.jpg- தெய்வீகன் 

புதிய ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் தமிழரது அரசியல் இயல்பான சோர்வுடனும் ஒருவித அயர்ச்சியுடனும் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தரப்போவதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கடந்த 31 ஆம் திகதிவரை எண்ணிக்கொண்டிருந்த பல புத்திஜீவிகளுக்குப் பலத்த ஏமாற்றம்.  

 எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டுச் சரணாகதி அரசியல் நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பி, இனி ஏதாவது நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளதா என்று இன்னும் பலருக்கு விரக்தி.   

அரசாங்கத்தைக் கூட்டமைப்பு நம்பியுள்ளதைப் போல, கூட்டமைப்பினை நிபந்தனை ஏதுமின்றி நம்பிக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு உள்ளுக்குள் பயங்கரமான வெறுமை.   

இப்படியாக 2017 ஆம் ஆண்டு சஞ்சலம் மிக்க காலப்பகுதியாக விடிந்திருக்கிறது.  அப்படியானால், தமிழர் தரப்பின் - அதாவது ஒட்டுமொத்தத் தமிழர்களின் - ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த வருட நகர்வு என்ன?   

தாம், இவ்வளவு காலமும் முன்னெடுத்து வந்த பல்வேறு அரசியல் முயற்சிகளுக்கும் 2017 இல் உரிய வெற்றி காத்திருக்கிறது என்ற சாரப்படக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் விடுத்துள்ள புதுவருட ஆசிச்செய்தி கூறுகிறது.  

 அதனடிப்படையிலும் தென்னிலங்கை அரசியலையும் வைத்து ஒப்புநோக்கும்போது, ஏதோ ஒரு தீர்வு தமிழர் தரப்பின் மீது கொண்டுவரப்படப் போகிறது என்பது மட்டும் தெரிகிறது.  அதேபோல அந்தத் தீர்வானது நிச்சயம் தமிழர்கள் எதிர்பார்த்த அரசியல் அபிலாஷைகளுக்கு விடையாக வரப்போவதில்லை என்பதும் நிச்சயம் தெரிகிறது.   

கடந்த வருட இறுதியில், தென்னிலங்கை அரசியல் தரப்புகள் அடிக்கடி பேசிய விடயங்களை வைத்துப் பார்க்கும்போது, எதுவுமே தமிழர் தரப்புக்குச் சாதகமாக நடைபெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.  

 வடக்கு, கிழக்கு இணைப்பு முதல், பௌத்த மேலதிக்கம் பெற்ற அரசமைப்பு என்பதுவரை, இடையில் ஊசலாடும் அனைத்தும் ஒப்புக்கு ஏதோ ஒரு வெற்றுத் தீர்வொன்றைத் தமிழர் தரப்பின் தலையில் கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது போலவும் அதற்குக்கூட, சிங்களக் கடும்போக்காளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும்தான், தென்னிலங்கையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.   

இந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க விளையும் ஜனாதிபதி முதல் அரசாங்கத் தரப்பின் முக்கியமானவர்கள் அனைவரும், சிங்களக் கடும்போக்காளர்களைச் சமாளிக்கும் விதமாக “அப்படியொன்றும் தமிழர்களுக்கு நாம் வழங்கிவிடப் போவதில்லை” என்ற சாரப்பட அறிக்கை விடுகிறார்கள். நாடாளுமன்றத்திலேயே கற்பூரத்தில் அடித்துச் சத்தியம் பண்ணாத குறையாக வாக்குறுதி கொடுக்கிறார்கள்.  

ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்போ, இவற்றுக்கு எதிர்ப்பேதும் காட்டாமல் நீண்ட மௌனத்தை மாத்திரம் கடைப்பிடித்து வருகிறது. மைத்திரி அரசாங்கம் சிங்களக் கடும்போக்காளர்களுக்கு வழங்கிவரும் வாக்குறுதிகளைவிட, தமக்கு தந்த வாக்குறுதிகளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயங்கரமாக நம்புகிறது.   

மைத்திரி அரசாங்கம் தம்மைக் கடைசிவரை கைவிடாது என்று ஒன்றுக்கு நூறுதரம் சம்பந்தரும் சுமந்திரனும் வாய்பாடு போல கூறுகிறார்கள். தாங்கள் நம்புவதைப்போலவே, மக்களும் அரசாங்கத்தை நம்பவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கிறார்கள்.   
எல்லா எதிர்ப்புக்களையும் சமாளித்துக்கொண்டு, விண்ணில் சீறிப்பாயும் மைத்திரி அரசாங்கம், ஏதோவொரு நன்நாளில், சுப நேரத்தில், ‘தமிழீழம் தவிர்த்து அனைத்து அபிலாஷைகளுக்கும் விடைகள் அடக்கிய தீர்வொன்றை நிச்சயம் தரும்’ என்று அபார நம்பிக்கையை இன்றுவரை பேணி வருகிறார்கள்.   

இந்த நம்பிக்கைக்கு, 2017 ஆம் ஆண்டு வழங்கப்போகும் பதில் என்ன என்பதுதான் தமிழர்களது எதிர்பார்ப்பு. 2009 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், கிளிநொச்சி நகரம் படையினரின் கைகளில் வீழ்ந்த பின்னரும், விடுதலைப்புலிகளின் பாரிய எதிர்தாக்குதல் ஒன்று பெருவெற்றியை ஈட்டித்தரப்போவதாகத் தமிழர் தரப்பு, எப்படி நம்பிக்கை கொண்டிருந்ததோ, அதேபோல சரியாக, எட்டு வருடங்களுக்குப் பின்னர், அரசியல் ரீதியாகப் பெரும் நம்பிக்கையொன்றுடன் தமிழர் தரப்பு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிறது.   

சிறிலங்காவின் அரசியல், தற்போது எட்டியிருக்கும் வித்தியாசமான களம், எப்படியான ஒரு பாதையில், தமிழர் தரப்பை 2017 இல் வழிநடத்தப்போகிறது என்று பார்த்தால், அது உள்ளுர் நம்பிக்கைகளையும் அரசியல் தரப்புக்களின் சத்தியங்களின் மீதும் அல்ல. அது முற்றுமுழுதாக வெளிச்சக்திகளில் இறுக்கமான பிடிக்குள் வழமாக வந்துவிட்டது என்பதுதான் யதார்த்தம்.   

சுருக்கமாகச் சொல்லப்போனால், இனி மைத்திரியே தமிழீழம் தருவதாக அறிவித்தால்கூட, அதனை நடைமுறையில் தமிழர் தரப்பு பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் சிறிலங்காவின் அரசியல் சிறிலங்காவுக்குள் இல்லை. போர்முடிவடைந்த இந்த எட்டுவருட காலப் பயணம் அவ்வாறான ஒரு தளத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டது.   

ஒரு காலத்தில், மைத்திரி அரசாங்கம் தமது நிபந்தனைகளுக்கு இணங்காவிட்டால் அரசைக் கவிழ்ப்போம் என்று மிரட்டி அடியபணிய வைக்கும் பலத்துடனிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இன்று அதே அறிவிப்பை வெளியிடக்கூடிய நிலையில் இருந்தாலும், அந்த அறிவிப்பு கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாக மட்டுமே பார்க்கக்கூடிய வகையில், தென்னிலங்கை அரசியலானது புதிய வடிவத்துக்குள் வனைந்தெடுக்கப்பட்டுள்ளது.   

தமிழ் தரப்பு என்ன காரணத்துக்காக அரசை விட்டு வெளியேறுவது என்று அறிவித்தாலும்கூட, அந்தக் காரணத்துக்காக அரசைக் காப்பாற்றி, அதன் வழியாகத் தன்னை அரசாங்கத்துக்குள் நுழைத்துக்கொள்ளக்கூடிய சக்தியாக மஹிந்த பரிவாரத்தையும் இந்த நல்லாட்சி காலம் வளர்த்தெடுத்திருக்கிறது.  

எல்லாச் சிங்கள அரசுகளும் புலிகளுடன் யுத்தம் செய்தார்கள். ஆனால், தன்னுடைய அரசாங்கம்தான், புலிகளை அழித்தொழித்தது என்றும் சிறிலங்காவில் இதுவரை காலமும் ஆண்ட, சகல ஜனாதிபதிகளிலும் பார்க்கத் தானே ஆளுமை மிக்க தலைவர் என்பதையும் மஹிந்த இன்னமும் நம்புகிறார்.   

அந்த இறுமாப்புடன், தோற்ற பின்னரும் இன்றுவரை அரசாங்கத்தை எதிர்த்த வண்ணம்தான் உள்ளார். மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்குச் சகல வியூகங்களையும் வகுத்தபடி இருக்கிறார். அதனைப் பகிரங்கமாக அறிவித்தபடியும் உள்ளார்.  

 அரசாங்கம் தமிழ்க் கூட்டமைப்பும் அரசியல்த் தீர்வைப் பெற்றுக்கொள்ளப் போவதாக 2017 ஆம் ஆண்டுக்குரிய தங்களது பணிகளைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்க, தனது இலக்கு இந்த ஆண்டில் மைத்திரி அரசாங்கத்தைக் கவிழ்த்து தனது ஆட்சியை கொண்டுவருவதே என்று துணிச்சலுடன் சொல்கிறார் மஹிந்த.  

 இந்த அரசியல் போர்ப் பிரகடனங்கள் முற்று முழுதாக மொக்குத்தனமான சுவரில் மண்டையை மோதுகின்ற, எதிர்ப்பாக இல்லாமல், சாணக்கியத்துடன் கூடிய எதிர்ப்பாக, மைத்திரியின் கீழ், தான் பிரதமராகப் பணியாற்றத் தயார் என்ற மாதிரியான அறிவிப்புக்களாக உள்ளன.

மொத்தத்தில் மைத்திரி - ரணில் கூட்டணி அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே நேரத்தில் எல்லா அழுத்தங்களையும் ஏற்படுத்தக்கூடிய சகல நடவடிக்கைகளையும் ஓயாது, முன்னெடுத்த வண்ணமுள்ளார் மஹிந்த.  

இம்மாதிரியான ஒரு நிலையில், இந்த 2017 ஆம் ஆண்டெனப்படுவது மைத்திரி அரசாங்கத்துக்குத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும், காப்பரணமைக்கும் காலமாகக் கழியப்போகிறதா அல்லது இந்த ஆபத்தையெல்லாம் மீறி, அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று தமிழர் தரப்புக்கு எதிர்பார்த்த தீர்வை அறிவிக்கும் காலமாக மலரப்போகிறதா என்ற சிக்கலுக்குள் ஆழமாக சிக்கிப்போயிருக்கிறது.  

“இப்படியான சில்லெடுப்புக்களையெல்லாம் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். எமக்கு, எமது மக்களின் அபிலாஷைகள்தான் முக்கியம். உங்களுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்துவிட்டது. கேட்டதைத் தர முடியுமா? முடியாதா” என்ற கேள்வியைத் தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்தை நோக்கிக் கேட்கவேண்டும் என்பதுதான் தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பும் நியாயமும்கூட.   
சம்பந்தர் அப்படியான கடும்போக்கை கடைப்பிடிப்பவராகத் தெரியவில்லை.

அப்படியே அவர் மைத்திரியின் ‘கொலரில்’ பிடித்து தீர்வைக் கேட்டாலும், அந்தக் கேள்விக்கு, மைத்திரியின் சார்பில் மேற்குலகமும் இந்த ஆட்சியை கொண்டுவந்த சாணக்கியர்களும்தான் சம்பந்தனுக்கு பதில் கொடுப்பார்கள். அவர்களை மீறி சம்பந்தன் எங்கும் அசைய முடியாது. அப்படியான அதி தீவிர அரசியலை சம்பந்தர் என்றைக்கும் செய்ததும் இல்லை. இனியும் செய்யப்போவதுமில்லை.   

சீனாவையே முற்றாக வெளியேற்றவிடாமல், அந்தத் தரப்பினைப் பொருளாதார விடயத்தில் மாத்திரம் கைக்குள் வைத்துக்கொண்டு, காரியங்களை முன்னகர்த்துமாறு, மிகச்சாணக்கியமாகக் கொழும்பை பின்னுக்கிருந்து இயக்கிவரும் மேற்குலகத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இயக்குவது மிகவும் இலகு.  

அப்படியான கட்டளைகளுக்கு வளைந்து கொடுப்பதை விடுத்துத் திமிறிக்கொண்டு போர் புரிவதற்கு கூட்டமைப்புக்கும் பாரிய செயற்பாட்டுத்தளம் எதுவும் இல்லை என்பது அடுத்த விடயம்.  

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாகத் தமிழ் கூட்டமைப்பு கூண்டோடு கூச்சல்போட்டாலும் மஹிந்த தரப்பை அரசாங்கத்துக்குள் இறக்கி, கபடி ஆடுவதற்கு, மேற்குலகம் எப்போதும் மஹிந்த தரப்பினைச் சமாந்தரமாக கையாண்டு கொண்டுதானிருக்கிறது.   

மஹிந்தவை முற்றாகப் புறக்கணிக்காமல், அவரது பரிவாரங்களின் மீது போர்க்குற்ற விசாரணைகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவரைத் தூக்குக்கயிற்றில் மேய விட்டிருப்பது போன்ற ஓர் அதிகார எல்லைக்குள் மேற்குலகம் தனது காய்களைச் சரியாக நகர்த்தி வைத்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், மஹிந்தவை ஓர் அழகான எதிரியாகக் கையாண்டு வருகிறது.   

இப்படியான ஒரு வியூகத்துக்குள்ளிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு வெளியேறப்போகிறது? மக்கள் ஆணையைச் சரியான பேரம்பேசும் சக்தியாக இன்னும் உருமாற்றம் செய்யாததுபோல காணப்படும் மர்மமான நிகழ்ச்சிநிரல்களை எப்போது மக்களிடம் கூறப்போகிறது?  

சம்பந்தர் கிளிநொச்சியிலிருந்து தமிழர்களை மீட்பாரா?  

- See more at: http://www.tamilmirror.lk/189171/-க-ள-ந-ச-ச-ய-சம-பந-தர-ம-ட-ப-ர-#sthash.JoLoPwAn.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.