Jump to content

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல்


Recommended Posts

தேர்வுக்குழு உத்தரவால் டோனி விலகினார் - பரபரப்பு தகவல்

 

தேர்வுக்குழு உத்தரவால் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியதாக வெளியான தகவலால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 
 
தேர்வுக்குழு உத்தரவால் டோனி விலகினார் - பரபரப்பு தகவல்
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான வரலாற்று சிறப்புமிக்க கேப்டன் மகேந்திரசிங் டோனி. இரண்டு உலக கோப்பையை வென்று (2007-ம் ஆண்டு 20 ஓவர், 2011-ம் ஆண்டு 50 ஓவர்) இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைக்கும் கேப்டனாக இருந்த டோனி 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். இதனால் விராட்கோலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக டோனி தொடர்ந்து பணியாற்றினார்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சிகரமான முடிவை டோனி எடுத்தார். ஒருநாள் போட்டி, 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று அறிவித்தார்.

இதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் அணியில் இடம் பெற்றார். விராட்கோலி 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டன் ஆனார்.

இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியது அவரது சொந்த முடிவு இல்லை என்றும் பதவி விலகுமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றும் பரபரப்பான தகவலை ஆங்கில பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.

இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோனி தானாக முன் வந்து கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கேட்டுக்கொண்டதன் பேரில் விலகினார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் ஜார்க்கண்ட் -குஜராத் மோதிய அரைஇறுதி ஆட்டம் கடந்த வாரம் நாக்பூரில் நடந்தது. டோனி தனது மாநில அணியை உற்சாகப்படுத்துவதற்காக வீரர்களுடன் இருந்தார்.

அப்போது தேர்வுகுழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அங்கு சென்று டோனியை சந்தித்தார். அப்போது கேப்டன் பதவி குறித்து அவரிடம் தேர்வு குழு தலைவர் விவாதித்தார்.

2019 உலக கோப்பை நடக்கும் போது டோனிக்கு 39 வயதாகிவிடும். இதனால் விராட் கோலியை கேப்டனாக்குவதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே தேர்வு குழு தீவிரம் காட்டி வந்தது.

புதிய தேர்வு குழு கடந்த செப்டம்பர் 21-ந்தேதி பதவியேற்றது. அப்போதே 2019 உலக கோப்பை பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டது. டெஸ்டில் மிகவும் சிறப்பாக செயல்படும் விராட் கோலியை ஒருநாள் போட்டிக்கும் கேப்டன் ஆக்கிவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் அவரது ஆக்ரோ‌ஷம் தேர்வு குழுவை கவர்ந்து இருந்தது.

கேப்டன் பதவியால் டோனிக்கு உள்ள நெருக்கடி பற்றியும் இந்த சந்திப்பின் போது பிரசாத் எடுத்து உரைத்தார். இதனால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று தெரிவித்தார்.

தேர்வு குழு தலைவரின் இந்த உத்தரவால் தான் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வீரர்கள் தேர்வுக்கு முன்பு பதவி விலகுமாறு அவரிடம் கேட்டு கொள்ளப்பட்டது. இதனால் அவர் 4-ந்தேதியே தனது பதவி விலகல் முடிவை அறிவித்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துவிட்டார்.

டோனி தானாக கேப்டன் பதவியை விட்டு செல்லவில்லை. கட்டாயப்படுத்தி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக வெளியான இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் வேதனையையும், ஏமாற்றத்தையும் அளித்து உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/09132139/1061059/Dhoni-quit-under-pressure-from-BCCI-joint-secretary.vpf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தோனி விட்டுச் செல்லும் தடங்கள்

 

 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் ஆகியவற்றுக்கான அணிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியிருக்கிறார். மட்டைவீச்சில் மட்டுமின்றி, தலைமைப் பொறுப்பிலும் அலாதியான திறமைகள் கொண்ட விராட் கோலியிடம் தலைமைப் பொறுப்பு போய்ச் சேர்ந்திருப்பதால், தோனியின் விலகலால் அதிர்ச்சியோ கவலையோ ஏற்படவில்லை. எனினும், தோனி ஏற்படுத்தும் வெற்றிடம் அவ்வளவு எளிதில் நிரப்ப முடியாதது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20 ஓவர் போட்டி, சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று சர்வதேசப் போட்டிகளிலும் கோப்பையை வென்ற அணியின் தலைவர் தோனி. இந்த வெற்றிகளில் ஆட்டக்காரர் என்னும் முறையிலும் தலைவன் என்ற முறையிலும் அவரது பங்களிப்பு கணிசமானது. ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் அவருடைய உள்ளுணர்வு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, வெற்றிகளைத் தேடித் தந்திருக்கிறது.

நெருக்கடியின்போது தோனி ஆழ்ந்து யோசித்துச் செயல்படுவார். தான் மட்டும் அமைதியாக இல்லாமல் அணியையும் அதே மனநிலையில் வைத்திருப்பார். ஆட்டத்தின் முடிவுக்கு நான்தான் பொறுப்பு என்பதால், கவலையின்றி விளையாடுங்கள் என்று ஊக்குவிப்பார். பொறுப்பின் சுமையைத் தான் எடுத்துக்கொண்டு, சுதந்திரமான ஆட்டம் என்னும் சலுகையை மற்றவர்களுக்கு வழங்குவது தோனியின் பண்பு.

தோனியைத் தலைவர் பதவியிலிருந்து விலக்குவதோ, விலகும்படி கேட்பதோ கிரிக்கெட் வாரியத்துக்கு மிகுந்த தர்மசங்கடமான நிலைமையாகும். இதைப் புரிந்துகொண்டு தானாகவே விலகியிருக்கிறார் தோனி. இந்திய கிரிக்கெட் இப்போதுள்ள நிலையில் தன்னலம் கருதாது, துணிச்சலாக இந்தத் தெளிவான முடிவை எடுத்திருக்கிறார்.

கோலியின் தலைமையில் அணி டெஸ்ட் பந்தயங்களில் வெற்றிகளைக் குவித்துவருகிறது. ஒருநாள் போட்டிகளிலும் அணியைக் கரைசேர்க்கும் பொறுப்பைக் கோலி செவ்வனே செய்துவருகிறார். அவருடைய தலைமைப் பாணி தோனியிடமிருந்து வேறானது. இந்நிலையில் டெஸ்ட் அணிக்கும் இதர போட்டிகளுக்கான அணிகளுக்கும் வெவ்வேறு தலைவர்கள் இருப்பது அணியின் ஒட்டுமொத்த அணுகுமுறையில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தியச் சூழலில் இரட்டைத் தலைமை என்பது சரிப்பட்டு வராது என தோனி கூறியிருப்பதிலிருந்து அவர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பவர் என்பது தெளிவாகிறது.

இந்த ஜூலையில், 36 வயதை எட்டும் தோனியின் இன்னிங்ஸ் ஆட்டக்காரர் என்னும் முறையிலும் ஓரிரு ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிடலாம். எனினும், தலைவன் என்ற முறையிலும் ஆட்டக்காரர் என்ற முறையிலும் களத்தில் அவர் விட்டுச் சென்ற தடங்கள் அழியாது. நெருக்கடியில் அசராமல் நிற்பது, வெற்றி- தோல்விகளில் தடுமாறாமல் இருப்பது, சிக்கல் வரும்போது முன்னணியில் நின்று போராடுவது, தோல்விக்குப் பொறுப்பேற்பது, ஆட்டக்காரர்களின் ஆகச் சிறந்த திறமையை வெளிப்படுத்த உதவுவது ஆகியவை தோனியின் தனிப்பெரும் குணங்கள். இவை இந்திய கிரிக்கெட்டுக்கு அளப்பரிய பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இந்தப் பங்களிப்புக்காக தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

http://tamil.thehindu.com/opinion/editorial/தோனி-விட்டுச்-செல்லும்-தடங்கள்/article9491720.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.