Jump to content

கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!


Recommended Posts

கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!

 

Image

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன்

மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்.

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார்.

அப்படி அனுப்பி வைத்தவர் மூன்று வாரங்களின் பிறகு மனைவியிடம் சென்று தான் செய்தவைகள் அனைத்துமே தவறு. தயவு செய்து என்னுடன் இணைந்து வாழ். நான் இனிப் பிரிவு பற்றியே கதைக்க மாட்டேன் என மனைவியை அழைத்து வந்துவிட்டார்.

மனைவி அதிர்ச்சியடைந்தாலும் அவருடன் சென்று வாழ ஆரம்பித்து இனிதே இப்போது குடும்பம் நடாத்தி வருகின்றனர் அந்த இளைஞரின் மனமாறுதலிற்கான காரணத்தை மனைவியும் ஏற்றுக் கொண்டார்.

ஆமாம் விவகாரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்யச் சென்ற இளைஞருடன் கதைத்த வழக்கறிஞர் அவருடைய மாத வருமாணம், கையிருப்புப் பணம் போன்றவற்றையெல்லாம் விசாரித்து விட்டு அந்த இளைஞரிடம்,

“நீர் விவகாரத்துப் பெறும் வரை மாதந்தம் 3,400 டொலர்கள் மனைவிக்கும் குழந்தைகளிற்கும் வீட்டு வாடகைக்கு, உணவு உடைக்கு எனக் கொடுக்க வேண்டும். விவகாரத்துப் பெற ஒன்றரை வருடங்கள் எடுக்கலாம்.”

“விவகாரத்துப் பெற்ற பிறகு பிள்ளை பராமரிப்பு பணமாக மாதாந்தம் 1,800 டொலர்கள் கொடுக்க வேண்டும். உமது முன்னைய மனைவி விவாகரத்துப் பெற்ற பிறகும் வேலைக்குச் செல்லாவிட்டால் இந்தத் தொகை அதிகரிக்கும்.”

“உமது மூன்று குழந்தைகளும் 18 வயது வரும் வரை நீர் இந்தப் பராமரிப்பு பணத்தைக் கொடுக்க வேண்டும.; நீர் இப்போது 2000 டொலர்கூட மாத வருமாணமாகப் பெறவில்லையே? விவாகரத்து வேண்டுமா என்பதை ஆழமாக யோசித்துக் கூறும்” எனக் கூறியுள்ளார்.

இளைஞரும் வீட்டின் மேல் கடன்பெற்றுத் தன்னால் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க முடியும் எனக் கூறியபோது வீட்டின் அரைப்பகுதிப் பெறுமானம் உமது மனைவிக்குரியது. அவரது அனுமதியில்லாமல் நீர் இரண்டாம் அடமாணமோ, கடனோ பெறமுடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு யோசனையுமில்லாமல் மனைவியின் வீட்டிற்குச் சென்று தான் செய்த தவறை மன்னிக்குமாறு அந்த இளைஞர் நேரடியாக மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடாத்துகின்றார்.

அந்த இளைஞர் இப்போது குடும்பம் மாத்திரம் நடாத்தவில்லை, தனது நண்பர்களிற்கு இதனைத் தனது அறிவுரையாகவும் கூறி வருகின்றார்.

DIVERS%201.jpg

http://tamilsguide.com/blog/canada-news/4495

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தானாக்கும் ,....தாலி கட்டுற நேரத்தில ..மேளத்தில அந்த விளாசல் விளாசிறது...!

நாம கேட்டாத்தானே...!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

------

ஆமாம் விவகாரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்யச் சென்ற இளைஞருடன் கதைத்த வழக்கறிஞர் அவருடைய மாத வருமாணம், கையிருப்புப் பணம் போன்றவற்றையெல்லாம் விசாரித்து விட்டு அந்த இளைஞரிடம்,

நீர் விவகாரத்துப் பெறும் வரை மாதந்தம் 3,400 டொலர்கள் மனைவிக்கும் குழந்தைகளிற்கும் வீட்டு வாடகைக்கு, உணவு உடைக்கு எனக் கொடுக்க வேண்டும். விவகாரத்துப் பெற ஒன்றரை வருடங்கள் எடுக்கலாம்.”

“விவகாரத்துப் பெற்ற பிறகு பிள்ளை பராமரிப்பு பணமாக மாதாந்தம் 1,800 டொலர்கள் கொடுக்க வேண்டும். உமது முன்னைய மனைவி விவாகரத்துப் பெற்ற பிறகும் வேலைக்குச் செல்லாவிட்டால் இந்தத் தொகை அதிகரிக்கும்.”

“உமது மூன்று குழந்தைகளும் 18 வயது வரும் வரை நீர் இந்தப் பராமரிப்பு பணத்தைக் கொடுக்க வேண்டும.; நீர் இப்போது 2000 டொலர்கூட மாத வருமாணமாகப் பெறவில்லையே? விவாகரத்து வேண்டுமா என்பதை ஆழமாக யோசித்துக் கூறும்” எனக் கூறியுள்ளார்.

இளைஞரும் வீட்டின் மேல் கடன்பெற்றுத் தன்னால் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க முடியும் எனக் கூறியபோது வீட்டின் அரைப்பகுதிப் பெறுமானம் உமது மனைவிக்குரியது. அவரது அனுமதியில்லாமல் நீர் இரண்டாம் அடமாணமோ, கடனோ பெறமுடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு யோசனையுமில்லாமல் மனைவியின் வீட்டிற்குச் சென்று தான் செய்த தவறை மன்னிக்குமாறு அந்த இளைஞர் நேரடியாக மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடாத்துகின்றார்.

இங்கும்... இந்தப் பயத்தில் தான்,  பல ஜேர்மன்காரர்  விவாக ரத்து எடுக்காமல் இருக்கிறார்கள்.
அப்படி  ஏண்டாப்புக்கு.... விவாகரத்து   எடுத்த ஆண்களின் வாழ்க்கை,  பாழாய்ப்  போனதை, நேரில் கண்டு இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வக்கீல்..பணம் புடுங்கும் நோக்கமில்லாது பணியாற்றுகிறார் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேய்ங்கப்பா, லிவிங் ரூகெதரில் முடியப் போகுது எதிர்காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!

 

Image

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன்

மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்.

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார்.

.....

http://tamilsguide.com/blog/canada-news/4495

சும்மா வருவாளா சுகுமாரி..?

கல்யாணம் கட்டமுன் ஆயிரம் முறை யோசிக்கவேண்டும்..!

கல்யாணமும் கட்டி, இல்லற வாழ்வை அனுபவித்துவிட்டு எந்தவித பொறுப்புமின்றி ஒரு பாலரை தண்டிக்கும்விதமாக டாட்டா காட்டிச்செல்பவர்களுக்கு(ஆணானாலும், பெண்ணானாலும்) இன்னமும் அதிக தண்டனை கொடுக்க சட்டத்தில் வழிவகை செய்ய வேன்டும்..!!

Link to comment
Share on other sites

கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்ததன் பயன் பிள்ளைகள்.இது தொடக்கநிலை.பிள்ளைகள் பிறந்ததன் பயன் கணவனும்மனைவியும்  சேர்ந்தே வாழ வேண்டி இருப்பது. இது இறுதி நிலை. என்னே விதியின் விளையாட்டு. மேலும் கனடா நாட்டில் பிரிந்து வாழ முயற்சித்தால் பெண்களுக்கு சலுகைகள் அதிகம்.கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைதான் கணவனுக்கு.இதனால்தான் வெள்ளைகள் கட்டுறதே இல்லை "அவளைத் தொடுவானேன் .கவலைப் படுவானேன்".

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்து, பெரும் விவகாரமா போய்விட்டது.

சும்மா just like that என்று கழற்றி விட்டு புது பொம்பிளை தேடிய பெரும் செல்வந்தர்கள் அண்மைய தீர்ப்புகளில் அரண்டு போய் இருக்கிறார்கள்.

மனைவிக்கு எவ்வளவு மாதம், 5 தானே, பத்தே தருகிறேன், பிள்ளைகளுக்கு இன்னெரு 10, ச, சா, 20 மாதம் 30 தருகிறேன், கொடு விவாகரத்து என்று போய் நின்றவர்கள் அதிரும் வகையில்.... உனது பிள்ளைகளையும், வீட்டையும் இது நாள் வரை பொறுப்பாக மனைவி கவனித்து உன்னை யாபாரத்தை கவனிக்க விட்டதாலே பணம் குடும்பத்துக்கு வந்தது. உனக்கு அல்ல.

மறுதலையாக, நீர் வீட்டையும், பிள்ளைகளையும் பார்த்து, மனைவியை யாபாரத்தை பார்க்க விட்டிருந்தால் அதேயளவு பணத்தை உழைத்திருக்க முடியும் என்பது உண்மை.

ஆகவே, குடும்பமாக தீர்மானித்து, அதன்படி வந்த பணம் குடும்பத்துக்கானது. தனியே கணவருக்குரியதல்ல. எனவே பணம், சொத்து இருபங்காக பிரிகிறது என்ற தீர்ப்பில் பெரிய இடத்து ஆட்கள் அக்ரிமென்ட் போட்டு இனைகிறார்கள்.

ஆனால் அக்கிரிமெண்ட் போட, திருமண சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி , மனைவி விவாகரத்து கேட்டால் என்ன சொல்வார்கள்.....! :unsure:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலியாணம்  கட்டாம      முசுப்பாத்திக்கு இருந்துட்டுப் போனா என்ன தப்பாம் கனடாவில  tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அதுசரி , மனைவி விவாகரத்து கேட்டால் என்ன சொல்வார்கள்.....! :unsure:  tw_blush:

யாரு கேட்ட்டாலும், கதை கந்தல் தான். காசு, கலியாணத்துக்கு பின் வந்திருந்தால், யாரிடம் உள்ளதோ, அவையள் பாதி இழக்க நேரிடும்.

இப்ப போடுற அக்ரீமெண்ட், கலியாணத்துக்கு முன்னம் என்னிடம் இருந்தது இமளவு. அதுக்கும் உனக்கும் தொடர்பு இருக்காது எண்டு.

ஆனால், உள்ளதை சொல்ல வெளிக்கிடடால், முதலுக்கே மோசம். ஆளை, கெட்டித்தனமா முடித்தால், அது ஆட்டோமெட்டிக்கா வந்து சேரும்.

தவிர, விவாகரத்தானாலும் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டியதை அக்ரீமெண்ட் தடுக்காது.

Link to comment
Share on other sites

என் தமிழ்  நண்பர்கள் இருவர் அண்மையில் (ஒருவர் 2015 இல், மற்றவர் 2016) விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டு உள்ளது போன்று மோசமாக சொத்து / பணம் தொடர்பாக  நடக்கவில்லை. இருவரும் Mutual consent  ஆக பிரிந்தமையால் போலும். இதில் ஒரு நண்பன்  அடுத்த பெண்ணையும் ஊரில் பார்த்து கலியாணத்துக்கு  தயாராகி விட்டார் 

பொதுவாக இணைந்து இருக்கும் போது சேர்த்த சொத்து ரெண்டாக பங்கிடப்படுவது நடைமுறை. மனைவியின் / கணவனின் பெயர் போடாமல் வீடு வாங்கி இருப்பினும்  கூட மனைவிக்கு 50 விகித பங்கு இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்  உண்மையான பாசத்தினால் மனைவியோடு சேர்ந்து இருக்கவில்லை.எல்லாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வழக்கறிஞர் கூறிய கணக்கு சரியா என்பது தெரியவில்லை. சரியாக இருந்தாலும், விருப்பமில்லாத இருவரை ஒன்றாக இருக்கச்செய்துளார்.
இதைவிட பிரிந்திருப்பது பரவாயில்லை.

கனடாவில் கணவன் மனைவி பிரிந்தால் ஒருவர் மற்றவருக்கு அண்ணளவாக எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதை கீளுள்ள லிங்கில் பார்க்கலாம்.
உங்கள் உண்மையான பெயர் கொடுக்கத்தேவையில்லை.

https://www.mcgurk.ca/spousal-support-calculator/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.