Jump to content

கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!


Recommended Posts

கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!

 

Image

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன்

மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்.

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார்.

அப்படி அனுப்பி வைத்தவர் மூன்று வாரங்களின் பிறகு மனைவியிடம் சென்று தான் செய்தவைகள் அனைத்துமே தவறு. தயவு செய்து என்னுடன் இணைந்து வாழ். நான் இனிப் பிரிவு பற்றியே கதைக்க மாட்டேன் என மனைவியை அழைத்து வந்துவிட்டார்.

மனைவி அதிர்ச்சியடைந்தாலும் அவருடன் சென்று வாழ ஆரம்பித்து இனிதே இப்போது குடும்பம் நடாத்தி வருகின்றனர் அந்த இளைஞரின் மனமாறுதலிற்கான காரணத்தை மனைவியும் ஏற்றுக் கொண்டார்.

ஆமாம் விவகாரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்யச் சென்ற இளைஞருடன் கதைத்த வழக்கறிஞர் அவருடைய மாத வருமாணம், கையிருப்புப் பணம் போன்றவற்றையெல்லாம் விசாரித்து விட்டு அந்த இளைஞரிடம்,

“நீர் விவகாரத்துப் பெறும் வரை மாதந்தம் 3,400 டொலர்கள் மனைவிக்கும் குழந்தைகளிற்கும் வீட்டு வாடகைக்கு, உணவு உடைக்கு எனக் கொடுக்க வேண்டும். விவகாரத்துப் பெற ஒன்றரை வருடங்கள் எடுக்கலாம்.”

“விவகாரத்துப் பெற்ற பிறகு பிள்ளை பராமரிப்பு பணமாக மாதாந்தம் 1,800 டொலர்கள் கொடுக்க வேண்டும். உமது முன்னைய மனைவி விவாகரத்துப் பெற்ற பிறகும் வேலைக்குச் செல்லாவிட்டால் இந்தத் தொகை அதிகரிக்கும்.”

“உமது மூன்று குழந்தைகளும் 18 வயது வரும் வரை நீர் இந்தப் பராமரிப்பு பணத்தைக் கொடுக்க வேண்டும.; நீர் இப்போது 2000 டொலர்கூட மாத வருமாணமாகப் பெறவில்லையே? விவாகரத்து வேண்டுமா என்பதை ஆழமாக யோசித்துக் கூறும்” எனக் கூறியுள்ளார்.

இளைஞரும் வீட்டின் மேல் கடன்பெற்றுத் தன்னால் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க முடியும் எனக் கூறியபோது வீட்டின் அரைப்பகுதிப் பெறுமானம் உமது மனைவிக்குரியது. அவரது அனுமதியில்லாமல் நீர் இரண்டாம் அடமாணமோ, கடனோ பெறமுடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு யோசனையுமில்லாமல் மனைவியின் வீட்டிற்குச் சென்று தான் செய்த தவறை மன்னிக்குமாறு அந்த இளைஞர் நேரடியாக மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடாத்துகின்றார்.

அந்த இளைஞர் இப்போது குடும்பம் மாத்திரம் நடாத்தவில்லை, தனது நண்பர்களிற்கு இதனைத் தனது அறிவுரையாகவும் கூறி வருகின்றார்.

DIVERS%201.jpg

http://tamilsguide.com/blog/canada-news/4495

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தானாக்கும் ,....தாலி கட்டுற நேரத்தில ..மேளத்தில அந்த விளாசல் விளாசிறது...!

நாம கேட்டாத்தானே...!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

------

ஆமாம் விவகாரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்யச் சென்ற இளைஞருடன் கதைத்த வழக்கறிஞர் அவருடைய மாத வருமாணம், கையிருப்புப் பணம் போன்றவற்றையெல்லாம் விசாரித்து விட்டு அந்த இளைஞரிடம்,

நீர் விவகாரத்துப் பெறும் வரை மாதந்தம் 3,400 டொலர்கள் மனைவிக்கும் குழந்தைகளிற்கும் வீட்டு வாடகைக்கு, உணவு உடைக்கு எனக் கொடுக்க வேண்டும். விவகாரத்துப் பெற ஒன்றரை வருடங்கள் எடுக்கலாம்.”

“விவகாரத்துப் பெற்ற பிறகு பிள்ளை பராமரிப்பு பணமாக மாதாந்தம் 1,800 டொலர்கள் கொடுக்க வேண்டும். உமது முன்னைய மனைவி விவாகரத்துப் பெற்ற பிறகும் வேலைக்குச் செல்லாவிட்டால் இந்தத் தொகை அதிகரிக்கும்.”

“உமது மூன்று குழந்தைகளும் 18 வயது வரும் வரை நீர் இந்தப் பராமரிப்பு பணத்தைக் கொடுக்க வேண்டும.; நீர் இப்போது 2000 டொலர்கூட மாத வருமாணமாகப் பெறவில்லையே? விவாகரத்து வேண்டுமா என்பதை ஆழமாக யோசித்துக் கூறும்” எனக் கூறியுள்ளார்.

இளைஞரும் வீட்டின் மேல் கடன்பெற்றுத் தன்னால் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க முடியும் எனக் கூறியபோது வீட்டின் அரைப்பகுதிப் பெறுமானம் உமது மனைவிக்குரியது. அவரது அனுமதியில்லாமல் நீர் இரண்டாம் அடமாணமோ, கடனோ பெறமுடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு யோசனையுமில்லாமல் மனைவியின் வீட்டிற்குச் சென்று தான் செய்த தவறை மன்னிக்குமாறு அந்த இளைஞர் நேரடியாக மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடாத்துகின்றார்.

இங்கும்... இந்தப் பயத்தில் தான்,  பல ஜேர்மன்காரர்  விவாக ரத்து எடுக்காமல் இருக்கிறார்கள்.
அப்படி  ஏண்டாப்புக்கு.... விவாகரத்து   எடுத்த ஆண்களின் வாழ்க்கை,  பாழாய்ப்  போனதை, நேரில் கண்டு இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வக்கீல்..பணம் புடுங்கும் நோக்கமில்லாது பணியாற்றுகிறார் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேய்ங்கப்பா, லிவிங் ரூகெதரில் முடியப் போகுது எதிர்காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!

 

Image

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன்

மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்.

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார்.

.....

http://tamilsguide.com/blog/canada-news/4495

சும்மா வருவாளா சுகுமாரி..?

கல்யாணம் கட்டமுன் ஆயிரம் முறை யோசிக்கவேண்டும்..!

கல்யாணமும் கட்டி, இல்லற வாழ்வை அனுபவித்துவிட்டு எந்தவித பொறுப்புமின்றி ஒரு பாலரை தண்டிக்கும்விதமாக டாட்டா காட்டிச்செல்பவர்களுக்கு(ஆணானாலும், பெண்ணானாலும்) இன்னமும் அதிக தண்டனை கொடுக்க சட்டத்தில் வழிவகை செய்ய வேன்டும்..!!

Link to comment
Share on other sites

கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்ததன் பயன் பிள்ளைகள்.இது தொடக்கநிலை.பிள்ளைகள் பிறந்ததன் பயன் கணவனும்மனைவியும்  சேர்ந்தே வாழ வேண்டி இருப்பது. இது இறுதி நிலை. என்னே விதியின் விளையாட்டு. மேலும் கனடா நாட்டில் பிரிந்து வாழ முயற்சித்தால் பெண்களுக்கு சலுகைகள் அதிகம்.கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைதான் கணவனுக்கு.இதனால்தான் வெள்ளைகள் கட்டுறதே இல்லை "அவளைத் தொடுவானேன் .கவலைப் படுவானேன்".

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்து, பெரும் விவகாரமா போய்விட்டது.

சும்மா just like that என்று கழற்றி விட்டு புது பொம்பிளை தேடிய பெரும் செல்வந்தர்கள் அண்மைய தீர்ப்புகளில் அரண்டு போய் இருக்கிறார்கள்.

மனைவிக்கு எவ்வளவு மாதம், 5 தானே, பத்தே தருகிறேன், பிள்ளைகளுக்கு இன்னெரு 10, ச, சா, 20 மாதம் 30 தருகிறேன், கொடு விவாகரத்து என்று போய் நின்றவர்கள் அதிரும் வகையில்.... உனது பிள்ளைகளையும், வீட்டையும் இது நாள் வரை பொறுப்பாக மனைவி கவனித்து உன்னை யாபாரத்தை கவனிக்க விட்டதாலே பணம் குடும்பத்துக்கு வந்தது. உனக்கு அல்ல.

மறுதலையாக, நீர் வீட்டையும், பிள்ளைகளையும் பார்த்து, மனைவியை யாபாரத்தை பார்க்க விட்டிருந்தால் அதேயளவு பணத்தை உழைத்திருக்க முடியும் என்பது உண்மை.

ஆகவே, குடும்பமாக தீர்மானித்து, அதன்படி வந்த பணம் குடும்பத்துக்கானது. தனியே கணவருக்குரியதல்ல. எனவே பணம், சொத்து இருபங்காக பிரிகிறது என்ற தீர்ப்பில் பெரிய இடத்து ஆட்கள் அக்ரிமென்ட் போட்டு இனைகிறார்கள்.

ஆனால் அக்கிரிமெண்ட் போட, திருமண சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி , மனைவி விவாகரத்து கேட்டால் என்ன சொல்வார்கள்.....! :unsure:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலியாணம்  கட்டாம      முசுப்பாத்திக்கு இருந்துட்டுப் போனா என்ன தப்பாம் கனடாவில  tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அதுசரி , மனைவி விவாகரத்து கேட்டால் என்ன சொல்வார்கள்.....! :unsure:  tw_blush:

யாரு கேட்ட்டாலும், கதை கந்தல் தான். காசு, கலியாணத்துக்கு பின் வந்திருந்தால், யாரிடம் உள்ளதோ, அவையள் பாதி இழக்க நேரிடும்.

இப்ப போடுற அக்ரீமெண்ட், கலியாணத்துக்கு முன்னம் என்னிடம் இருந்தது இமளவு. அதுக்கும் உனக்கும் தொடர்பு இருக்காது எண்டு.

ஆனால், உள்ளதை சொல்ல வெளிக்கிடடால், முதலுக்கே மோசம். ஆளை, கெட்டித்தனமா முடித்தால், அது ஆட்டோமெட்டிக்கா வந்து சேரும்.

தவிர, விவாகரத்தானாலும் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டியதை அக்ரீமெண்ட் தடுக்காது.

Link to comment
Share on other sites

என் தமிழ்  நண்பர்கள் இருவர் அண்மையில் (ஒருவர் 2015 இல், மற்றவர் 2016) விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டு உள்ளது போன்று மோசமாக சொத்து / பணம் தொடர்பாக  நடக்கவில்லை. இருவரும் Mutual consent  ஆக பிரிந்தமையால் போலும். இதில் ஒரு நண்பன்  அடுத்த பெண்ணையும் ஊரில் பார்த்து கலியாணத்துக்கு  தயாராகி விட்டார் 

பொதுவாக இணைந்து இருக்கும் போது சேர்த்த சொத்து ரெண்டாக பங்கிடப்படுவது நடைமுறை. மனைவியின் / கணவனின் பெயர் போடாமல் வீடு வாங்கி இருப்பினும்  கூட மனைவிக்கு 50 விகித பங்கு இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்  உண்மையான பாசத்தினால் மனைவியோடு சேர்ந்து இருக்கவில்லை.எல்லாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வழக்கறிஞர் கூறிய கணக்கு சரியா என்பது தெரியவில்லை. சரியாக இருந்தாலும், விருப்பமில்லாத இருவரை ஒன்றாக இருக்கச்செய்துளார்.
இதைவிட பிரிந்திருப்பது பரவாயில்லை.

கனடாவில் கணவன் மனைவி பிரிந்தால் ஒருவர் மற்றவருக்கு அண்ணளவாக எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதை கீளுள்ள லிங்கில் பார்க்கலாம்.
உங்கள் உண்மையான பெயர் கொடுக்கத்தேவையில்லை.

https://www.mcgurk.ca/spousal-support-calculator/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.