Jump to content

மருதனாமடம் ஆஞ்சநேயர் சிலை உடைக்க வாருங்கள் தமிழ்த் தேசியர்களே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DSCF4007.JPG
 
முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தச் சிலை அமைக்கப்பட்டு வந்தது. 
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிர தமிழ்த் தேசியர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், தமது சமூக வலைத்தளங்களில் சிலை உடைப்பை ஆதரித்து கருத்திட்டனர். அதில் அவர்கள் "காந்தி சிலை இந்திய மேலாதிக்கத்தின் குறியீடாக இருந்ததாலேயே உடைக்கப் பட்டதாக நியாயப் படுத்தினார்கள். மேலும், இந்திய தூதரகம் வடக்கு, கிழக்கில் நூறு காந்தி சிலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்களே தெரிவித்தனர்.
 
முல்லைத்தீவில் காந்தி சிலை உடைத்தவர்களுக்கும், அதை ஆதரித்தவர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்! மருதனாமடம் சந்தியில் உள்ள இந்த ஆஞ்சநேயர் சிலையை எப்போது உடைக்கப் போகிறீர்கள்? காந்தி சிலை இந்திய பிராந்திய மேலாதிக்கத்தின் குறியீடு என்றால், ஆஞ்சநேயர் சிலை மட்டும் என்னவாம்?
 
சைவ சமயிகளான ஈழத் தமிழர் மத்தியில், வரலாற்றில் என்றைக்குமே ஆஞ்சநேயர் வழிபாடு இருந்ததில்லை. ஈழத்தமிழருக்கு புத்தர் சிலையும், அனுமார் சிலையும் ஆக்கிரமிப்புச் சின்னங்கள் தான். இலங்கையை உள்ளடக்கிய அகண்ட இந்தியாவுக்கு உரிமை கோரும் இந்துத்துவா வாதிகள் தான் அதை ஆரம்பித்தார்கள். அதுவும் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தான் பிரமாண்டமான அனுமார் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.
 
இராமாயணத்தில் இராமருடன் ஒத்துழைத்த "இனத்துரோகி" அனுமான், இலங்கை மீது படையெடுக்க உதவிய "குரங்குப் படை" என்ற ஒட்டுக்குழுவின் தலைவனாக இருந்தான். அதற்கான நன்றிக் கடனாகத் தான், ஆக்கிரமிப்பாளன் இராமன் அனுமானை வழிபாட்டுக்கு உரியவன் ஆக்கினான்.
 
சிங்கள- பௌத்த பேரினவாதிகள், இலங்கை முழுவதும் புத்தர் சிலை வைப்பதைப் போல, ஹிந்தி- இந்து பேரினவாதிகள் இந்தியா முழுவதும் இராமர் சிலை வைத்தார்கள். ஆனால், அதே ஹிந்து - இந்து பேரினவாதிகள், தமிழ்நாட்டிலும் இலங்கையிலும், இராமன் சிலைக்கு பதிலாக அனுமான் சிலை வைக்கும் நோக்கம் என்ன?
 
இது "இராமாயண கால மனப்பான்மை" இல்லாமல் வேறென்ன? அதாவது, தமிழர்களை "குரங்குகளாக" சித்தரிப்பதும், இனத்துரோகி அனுமானை வழிபட வைப்பதும், எந்தளவு மோசமான கலாச்சார வன்முறை? காந்தியை விட மிகவும் மோசமான, இந்திய மேலாதிக்கக் குறியீடு தான் ஆஞ்சநேயர். அந்த சிலையை உடைப்பதற்கு ஏன் இன்னும் தயக்கம்?
 
இலங்கையில் முதன்முதலாக மலையகத்தில் ரம்பொடை எனும் ஊரில் தான் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப் பட்டது. ரம்பொடை என்ற பெயர் கூட "ராம் படை" என்பது மருவி வந்திருக்கலாம் என்று காரணம் சொல்கிறார்கள்.
 
அதாவது, இலங்கையில் இராமனின் ஆக்கிரமிப்பு இராணுவம் இருந்த இடத்தை நினைவுகூர்வதற்காக, அந்த இடத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்திருக்கிறார்கள்! அப்படியானால் எதற்காக வடக்கே மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்தார்கள்?
 
"நவீன இராமன்" ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய இராணுவம், முகாமிட்டிருந்த இடத்தை நினைவுகூர்வதற்காகவா மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் சிலை வைக்கப் பட்டது? புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்ட காலத்தில், மருதனாமடம் பகுதியில் ஓர் அதிகாரி உட்பட ஏராளமான இந்தியப் படையினர் கொல்லப் பட்டனர். 
 
DSCF4013.JPG
 
ரம்பொடையில் மட்டுமல்லாது, மருதனாமடத்தில் வைக்கப் பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலைகள், முழுக்க முழுக்க இந்திய அரசின் நிதியுதவியுடன் தான் கட்டப் பட்டன. இது ஒன்றும் இரகசியம் இல்லை. மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் சிலைக்கு அருகில் புதிதாக கோயிலும் கட்டப் பட்டுள்ளது. அங்கே ஆஞ்சநேயர் வழிபாடு நடக்கிறது. கோயில் கட்டிய நிதி இந்தியாவுடையது.
 
இந்திய மேலாதிக்கத்தின் குறியீடான ஆஞ்சநேயர் சிலை உடைக்கப் படப் போகும் நன்னாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். காந்தி சிலையுடைத்த ஈழத் தமிழ் தேசிய உணர்வாளர்கள், ஆஞ்சநேயர் சிலை உடைப்பையும் ஆதரிப்பார்கள் என்று நம்புவோம்.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதியவர் சிலை உடைப்பு விட்டு இராவணனின் கன்னியாவை காப்பாற்ற முயற்சி செய்யலாமே

Link to comment
Share on other sites

27 minutes ago, MEERA said:

இதை எழுதியவர் சிலை உடைப்பு விட்டு இராவணனின் கன்னியாவை காப்பாற்ற முயற்சி செய்யலாமே

உங்கள் கேள்விக்கு பதில் இந்த திரியில் எழுதியிருக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதியது தனது எஜ்மான விசுவாசத்தை நல்லபடி காட்டுது. இராமயனம் காந்தி இவைகள் இந்தியாவில் சூடு பறக்கும் விடையங்கள், தேசபிதா காந்தி எங்கூறும் இந்திய அரசியல்வாதிகளே காந்திபடம் அச்சடித்த நோட்டுக்களை கள்ளநோட்டாகப் பதுக்கியவர்கள், இந்திய அரசியல் அமைப்புச் சாதனத்தின்படி சத்தியப்பிரமானம் எடுத்த அரசியல்வாதிகளிலிருந்து ஐ ஏ எஸ் அதிகாரிவரை காந்திநோட்டைப்பதுக்கியவர்கள், இந்தியா முதலில் இந்த நாற்றமெடுக்கும் அசுத்தங்களை எல்லாம் தனது நாட்டுக்குள் கூட்டிக்கழுவிவிட்டு எல்லைதாண்டி வரவேணும் 

தமிழர் விரோத தேசமாம் இந்தியா ஆரம்பத்தில் டெல்கியின் தெற்குமடத்திலிருந்து ஈழத்தமிழர்க்கெதிரான இனவழிப்பை முன்னெடுத்து, தொடர்ந்து ஏவல் இராணுவத்தை ஏவிவிட்டு அழிப்புச்செய்தது, இப்போது தங்கள் ஏவல் நாய்களை ஊருக்குள்ளேயே உருவாக்கி இந்தியத் துணைத்தூதரகம் எனும் கட்டளைப்பீடத்தை குடாநாட்டில் உருவாக்கி இப்போகு இனவழிப்புக்கான வழிவகைகளைச்செய்கிறது.

கறுத்தக்கொழும்பான் மாம்பழம் நாவுக்குச் சுவைதான், ஆனால் கொழும்பானின் இந்த வெட்டி ஒட்டுகை ரசிக்கும்படியாக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Elugnajiru said:

கறுத்தக்கொழும்பான் மாம்பழம் நாவுக்குச் சுவைதான், ஆனால் கொழும்பானின் இந்த வெட்டி ஒட்டுகை ரசிக்கும்படியாக இல்லை.

கொழும்பான் கொண்டு வரும் செய்தி கொஞ்சாம் சூடுதான்  tw_confused:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
09-1397024272-9-hanuman.jpg
அனுமான் குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் ஒரு அவதாரமாகும். ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிந்திடவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார்.

 

இப்ப சந்தோசமா? அனுமானும் நம்ம ஆளு tw_tounge_wink:

piritualaffairs.blogspot.com.au/2014/04/19-avatars-of-lord-shiva.htm

 

புலம்பெயர் பக்தர்கள் அனுமானை வழிபடலாம் என்றால் ஏன் தாயக மக்கள்  வழிபட முடியாது......:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருந்தாலும் நல்லது நடந்தால் சரி . ஈழத்தமிழன் ஈழத்தமிழனாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் .

Link to comment
Share on other sites

குரங்குச் சிலைகளும்  உடைக்கப்பட வேண்டிய சிலைகள் தான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.