Jump to content

சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்


Recommended Posts

சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

 
 
 
சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்காத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் சில முடிவுகளை தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த அத்துமீறல்களை சுட்டிக்காட்டிய மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வின் முன்னார் விசாரணைக்கு வந்தது.

கோர்ட்டின் உத்தரவை பின்பற்றத் தவறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி இந்த அமர்வு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்று விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பிரபல சட்ட நிபுணர் ஃபாலி எஸ். நாரிமனை நியமித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/02122526/1059573/SC-removes-Anurag-Thakur-Ajay-Shirke-from-BCCI.vpf

Link to comment
Share on other sites

பிசிசிஐ சரிவு தொடங்கியது எங்கே? ஓர் அலசல்...

பிசிசிஐ

புத்தாண்டில் முதல் சிக்ஸரை அடித்துள்ளது சுப்ரீம் கோர்ட். நீதிபதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளைப் பின்பற்றாததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் பதவியில் இருந்து நீக்கியுள்ளது உச்ச நீதிமன்றம். பரிந்துரையைப் பின்பற்ற மறுக்கும் மற்ற மாநில கிரிக்கெட் சங்க  நிர்வாகிகளும் வீட்டுக்குச் செல்லலாம் என எச்சரித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் முதல் பிரேக்கிங் நியூஸ் இதுதான். சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி நடவடிக்கையால், கட்டுப்பாட்டை இழந்து நிற்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். சரிவு தொடங்கியது எங்கே? ஒரு ஃபிளாஷ்பேக்...

மே 2013, ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழல்
2013 ஐ.பி.எல். தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சர்மா, அஜித் சண்டிலா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. வீரர்கள், புக்கிகள், தரகர்கள் மட்டுமல்லாது சி.எஸ்.கே. அணியின் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பல பிரிவுகளில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

அக்டோபர் 2013, முக்தல் கமிட்டி நியமனம்
சூதாட்ட வழக்கு மற்றும் பி.சி.சி.ஐ. விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி முகுல் முக்தல் தலைமையிலான குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்.

நவம்பர் 2014, சி.எஸ்.கே. ராஜஸ்தான் ராயல்ஸ் மீது குற்றச்சாட்டு
ஐ.பி.எல். சி.ஓ.ஓ சுந்தர் ராமன், குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் சக உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் இருப்பதை உறுதி செய்தது முக்தல் கமிட்டி. இந்த விதிமீறல் குறித்து நன்கு தெரிந்து வைத்திருந்தும் அவர்கள் மீது, பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த என்.சீனிவாசன் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார் என அறிக்கை தாக்கல் செய்தது முக்தல் கமிட்டி.

ஜனவரி 2015, லோதா கமிட்டி நியமனம்
ஐ.பி.எல். ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனை விவரங்களை  உறுதி செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். அதோடு பி.சி.சி.ஐ.யில்  சீர்திருத்தங்கள் செய்வது குறித்து பரிந்துரைக்கவும் அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. 

ஜூலை 2015, சி.எஸ்.கே. ராஜஸ்தான் அணிகளுக்கு தடை
ஸ்பாட் ஃபிக்சில் தொடர்புடைய சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை  இரண்டு ஆண்டுகள், ஐ.பி.எல்.போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது லோதா கமிட்டி. அந்த அணியின் உரிமையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ஆனால், மற்ற அணிகளில் விளையாட அந்த இரு அணி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

ஜனவரி 2016, பி.சி.சி.ஐ.யில் முழு மாற்றத்துக்கு பரிந்துரை
ஒட்டுமொத்த பி.சி.சி.ஐ.,யின் அதிகாரத்தையும் மாற்றி அமைக்க பரிந்துரைத்தது லோதா கமிட்டி. ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு வயது வரம்பு, 70 வயதுக்கு மேற்பட்டவர் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் நீடிக்கத் தடை என நீண்டது அந்த புரிந்துரை. 

ஃபிப்ரவரி 2016, பி.சி.சி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் கெடு
ஜனவரி 31-ம் தேதிக்குள் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பி.சி.சி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால், பி.சி.சி.ஐ. அதைப் பின்பற்றவில்லை. மாறாக, சட்ட சிக்கலைச் சீர்க்க ஒரு குழு அமைத்தது. மீண்டும் மார்ச் 3-ம் தேதி வரை டெட்லைனை நீட்டித்தது பி.சி.சி.ஐ. இதற்கும்  பி.சி.சி.ஐ. மசியவில்லை.

மார்ச் 2016, அறிக்கைக்கு எதிராக பி.சி.சி.ஐ. விளக்கம்
பி.சி.சி.ஐ. சார்பில் 55 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை மட்டுமே ஏற்க முடியும். பல பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக  பி.சி.சி.ஐ. வாதம் செய்தது.

ஏப்ரல் 2016, நிதி பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு
விதிமுறைகளை மீறி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ. நிதி ஒதுக்கீடு செய்யும் முறையை சுப்ரீம் கோர்ட் கடுமையாக விமர்சித்தது. அதோடு, ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு மட்டுமே என்ற கமிட்டியின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பி.சி.சி.ஐ.யின் கோரிக்கையை நிராகரித்தது.

மே 2016, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை
பி.சி.சி.ஐ.யின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, ஸ்திரமான நிலைப்பாடு இல்லை என விளாசிய சுப்ரீம் கோர்ட், இந்த கட்டமைப்பை மாற்றாமல் எதுவும் சரியாகாது என கொந்தளித்தது.

செப்டம்பர் 2016, வழிக்கு வரவும், இல்லையெனில்...
‛லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி பி.சி.சி.ஐ. தலைவரை நீக்க தயங்க மாட்டோம்’ என கண்டித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ‛‛தங்களுக்கென்று ஒரு சட்டம் இருப்பதாக பி.சி.சி.ஐ. கருதுகிறது. அவர்கள் தங்களை கணவான்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. வழிக்கு வரவும். இல்லையெனில் நாங்கள் வழிக்குக் கொண்டு வருவோம்’’ என எச்சரித்தார்.

அக்டோபர் 2016, பண பரிவர்த்தனைக்குத் தடை
அவசரக் கூட்டம் நடத்தி, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு 1,100 கோடி ஒதுக்குவதாக பி.சி.சி.ஐ. முடிவெடுத்தது. ஆனால், பண பரிவர்த்தனையை நிறுத்தச் சொல்லி வங்கிகளுக்கு லோதா கமிட்டி உத்தரவிட்டது. இதனால், இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டதாக பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் பேட்டியளித்தார். இதையடுத்து, அன்றாட பரிவர்த்தனைக்கு லோதா கமிட்டி அனுமதி அளித்தது.

அக்டோபர் 2016, தாக்கூருக்கு கோர்ட் உத்தரவு
லோதா கமிட்டி பரிந்துரை விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து கடிதம் கோரினார் அனுராக். இதற்கு விளக்கம் அளிக்குமாறு, அனுராக் தாக்கூருக்கு  கோர்ட் சம்மன் அனுப்பியது. 
இதற்கிடையே, சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், கமிட்டியின் சில பரிந்துரைகளை ஏற்பதாக பி.சி.சி.ஐ. முடிவெடுத்தது. இருப்பினும் வயது வரம்பு, ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு போன்ற விஷயங்களில் சீர்திருத்தம் செய்ய முடியாது என பிடிவாதமாக இருந்தது.

நவம்பர் 2016, தலைவரை நீக்க குழு பரிந்துரை
பிசிசிஐ சொன்ன பேச்சு கேட்காமல் அடம்பிடித்ததை அடுத்து, பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரையும் உடனடியாக நீக்குமாறு லோதா கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து பி.சி.சி.ஐ. நகர்வுகளை கண்காணிக்க முன்னாள் உள்துறை செயலர் கோபால் கிருஷண பிள்ளையை நியமித்தது உச்ச நீதிமன்றம்

டிசம்பர் 2016, பி.சி.சி.ஐ. மீண்டும் அடம்
‛எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை’ என, லோதா கமிட்டியை சந்தித்த பின் சொன்னார் பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே. ஹைதராபாத், விதர்பா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் மட்டுமே கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க சம்மதித்தது.

டிசம்பர் 2016, தாக்கூருக்கு மீண்டும் எச்சரிக்கை
இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட வேண்டும் என அனுராக் கோரியதற்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு ‛நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும்’ என தாக்கூரை எச்சரித்து, அடுத்த விசாரணையை 2017, ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

ஜனவரி 2, 2017,  தலைவர் அனுராக், செயலர் ஷிர்கே நீக்கம்
லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க மறுத்ததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் பொறுப்பில் இருந்து நீக்கியது உச்ச நீதிமன்றம். ‛‛இது கிரிக்கெட்டின் வெற்றி. நிர்வாகிகள் வருவார்கள், போவார்கள். தனிநபர்களை விட கிரிக்கெட்தான் முக்கியம்’ என நீதிமன்றம் தெரிவித்தது. அதோடு, லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் விவகாரத்தில், பின்னடைவு ஏற்படுத்த ஐ.சி.சி.யிடம் இருந்து கடிதம் பெற முயற்சித்ததற்காகவும், அந்த கடித விவகாரத்தை மறைத்ததற்காகவும், அனுராக் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாய்ந்தது. 

http://www.vikatan.com/news/sports/76608-the-falldown-of-bcci-a-detailed-report.art

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீதிமன்றங்கள் ஆடக்கூடாத விளையாட்டு

சேகர் குப்தா

 

 
 
 
koli_3116643f.jpg
 
 
 

கடந்த வாரம் மிகுந்த தயக்கத்துடன் விமான நிலையம் சென்றேன். ஏற்கெனவே 2 மணி நேரம் தாமதமாகிவிட்ட அந்த பெங்களூரு விமானம் ரத்து செய்யப்படக்கூடாதா என்றுகூட நினைத்தேன். கிரிக்கெட் பற்றிய சிந்தனையாலோ, உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா குழு கிரிக்கெட் வாரியத்தின் மீது நடத்திய துல்லியத் தாக்குதல் பற்றிய நினைப்பாலோ அப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகவில்லை. அப்போது மல் யுத்தம் பற்றியே சிந்தித்தேன். 46 விநாடிகளுக்குள் சோபியா மாட்சனிடம், பபிதா போகாட் தோற்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்திய ரசிகர்களில் சிலர் சோபியாவைக்கூட ஆதரித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்! பிறகு நிர்மலா தேவி, கரோலினா கேஸ்டிலோ இடால்கோவை புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். அப்போது அரங்கில் தோன்றியவர் முகம் பரிச்சயமாக இருந்தது. அவர் அசர்பைஜானின் டொக்ருல் அஸ்கரோவ். உலகின் மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவர். அவரை எதிர்த்துக் களத்தில் நின்றவர் அதிகம் நாம் பார்த்திராத இந்தியர் விகாஸ் குமார். முதல் சுற்றில் பின்தங்கியவர், இரண்டாவது சுற்றில் ஆவேசம் வந்தவரைப்போல தாக்கி வெற்றி பெற்றார்.

இந்தியாவில் மல்யுத்தப் போட்டிகளில் நிறையப் பணம் கொட்டுகிறது. என்சிஆர் பஞ்சாப் ராயல்ஸ் அணிக்காக, மும்பை மகாரதி அணிக்கு எதிராகப் போட்டியில் கலந்து கொண்டார் அஸ்கரோவ். உலகத் தரமுள்ள வீரர்களை வெல்லவும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் இந்தியாவிலும் மல்யுத்த வீரர்கள் தயாராகிவிட்டனர்.

இன்னொரு விளையாட்டு சேனலில் பேட்மிண்டன் (பூப்பந்து) போட்டிகள் காட்டப்பட்டன. பிரீமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) என்ற அந்தப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி காந்த், டென்மார்க்கைச் சேர்ந்தவரும் உலகின் இரண்டாமிட ஆட்டக்காரருமான ஜேன் ஆஸ்டர்கார்ட் ஜோர்கன்சனை வென்றார்.  காந்த் உலக அளவில் 15-வது இடத்தில்தான் இருக்கிறார். காந்த் ‘அவர் வாரியர்ஸ்’ அணிக்காகவும் ஜோர்கன்சன் ‘டெல்லி ஏசர்ஸ்’ அணிக்காகவும் விளையாடினர்.

இந்திய பேட்மிண்டன் விளையாட்டுக்குப் புரவலராக இருப்பவர் இந்திய பேட்மிண்டன் சங்கத் தலைவரான அகிலேஷ் தாஸ். இவர் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் பனாரசி தாஸின் மகன். பேட்மிண்டன் போட்டிகளில் தேசத்துக்காக ஆடியவர் இல்லை அவர். ஆனால் மிகச் சிறந்த நிர்வாகி.

இந்திய மல்யுத்த சம்மேளனம் என்ற அமைப்பு, உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவைச் சேர்ந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் என்பவரின் உடமையைப் போல உள்ளது. 16 வயதிலேயே குற்ற வழக்குக்கு உள்ளானவர், பாபர் மசூதி இடிப்பு இயக்கத்தில் சேர்ந்ததற்காகக் கைது செய்யப்பட்டவர், தடா சட்டப்படி சிறைவாசம் அனுபவித்தவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைப் போல (பி.சி.சி.ஐ.) மல்யுத்த, பூப்பந்து சங்கங்களையும் உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உள்படுத்தினால் அகிலேஷ், பிரிஜ் பூஷண் சரண் நிர்வாகிகளாக இருக்க முடியாது.

அபய் சவுடாலா தலைவராக இருந்த 2007 முதல் 2012 வரையில் குத்துச் சண்டைப் போட்டிகள் பிரபலமடைந்தன. அவர் நீக்கப்பட்ட பிறகு குத்துச் சண்டைக்கே ஆதரவு குறைந்தது. பிறகு ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தலைமையில் குத்துச் சண்டை சம்மேளனம் திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. உலக கபாடி சம்மேளனத் தலைவராக ஜனார்த்தன் சிங் கெலோட் பதவி வகிக்கிறார். இவரும் தீவிர அரசியல்வாதி. இந்திய கபாடி சங்கத்துக்கு இவருடைய மனைவி மிருதுள் படவ்ரியா தலைவராக இருக்கிறார்.

விளையாட்டு சங்க நிர்வாகிகளாகப் பதவி வகிக்க லோதா குழு நியமித்துள்ள வயது, தொழில், பதவிக்கால வரம்பு ஆகிய நியதிகளை இவர்களுக்குக் கட்டாயமாக்கியிருந்தால் இவர்களுடைய பங்களிப்பில் வளர்ந்த விளையாட்டுகள் எதுவுமே இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்காது.

அதலடிக்ஸ் சம்மேளனத் தலைவராக முன்னணி அதலடிக் வீரர் ஆதில் சுமாரிவாலா பதவி வகிக்கிறார். மிக வேகமாக ஓடுவதில் வல்லவர். அவர் ஒரு அதலட் என்பதுடன், பதவி வகிப்பதற்கான வயது வரம்பிலும் இருக்கிறார்.

இப்போது மீண்டும் கவனிப்பையும் வெற்றிகளையும் பெற்றுவரும் விளையாட்டு ஹாக்கி. ஆனால் இந்திய ஹாக்கி சம்மேளனம் நன்றாக நிர்வகிக்கப்படுகிறதா, இல்லையா என்று கேட்டால் உறுதியாகக் கூற முடிய வில்லை. சம்மேளனத்தின் தலைவர் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி கே.பி.எஸ். கில். தேசிய அணியில் இடம் பெறுவதற்கு வீரர்களிடம் சம்மேளனத்தின் நிர்வாகிகள் சிலர் லஞ்சம் வாங்கியது ரகசிய கேமராவால் படம் பிடிக்கப்பட்டு அம்பலமானது. ஹாக்கி இந்தியா என்ற அமைப்பை மத்திய விளையாட்டு அமைச்சகமும் சுரேஷ் கல்மாடி தலைமையிலான இந்திய ஒலிம்பிக் சங்கமும் சேர்ந்து உருவாக்கின. சுரேஷ் கல்மாடி ஊழல் புகாருக்கு ஆளாகி விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்திய ஹாக்கி சங்கத் தலைவராக நரீந்தர் பாத்ரா பதவி வகிக்கிறார். இவர் டெல்லியில் பிரபலமான பாத்ரா மருத்துவமனையின் நிறுவனர். இவர் சர்வதேச ஹாக்கி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதால் இந்திய ஹாக்கி சங்கத் தலைவர் பதவியை தேசிய ஹாக்கி வீராங்கனையான மரியம்மா கோஷிக்கு அளித்திருக்கிறார் பாத்ரா.

இப்படி குழப்பம் தரும் தகவல்களிலிருந்து நாம் எந்த முடிவுக்காவது வர முடியுமா? வயது, அரசியல் தொடர்பு, பணக்காரப் பின்புலம், சொந்தமான விளையாட்டுச் சாதனைகள் ஆகியவை இரு்பபதாலோ, இல்லாமல் இருப்பதாலோ ஒரு விளையாட்டு சங்கத்தை வெற்றிகரமாக நிர்வகித்துவிட முடியாது. அப்படியென்றால் என்னதான் அடிப்படைத் தகுதிகள், அதுவும் கிரிக்கெட்டுக்கு. இந்தியாவின் ராஜ விளையாட்டு கிரிக்கெட் என்றால் மிகையில்லை.

இந்திய கிரிக்கெட் வாரியம் பகிரங்கமாக அல்லாமல் திரைமறைவில்தான் செயல்படுகிறது, அதில் ஊழல்கள் அதிகம். உச்ச நீதிமன்றமும் அது நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழுவும் கிரிக்கெட் வாரியத்தை எப்படிச் சீர்படுத்த முடியும்?

நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்காமல் அலட்சியப்படுத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை வாரியம் செய்துவிட்டது. லோதா குழுவின் பரிந்துரையை அமல் செய்துதான் தீர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை கோபத்தில் இடப்பட்ட ஆணையாகவே கருத வேண்டியிருக்கிறது. நீதிமன்றமோ அது நியமித்த குழுவோ வாரியத்தைச் சீர்திருத்தும் வேலையில் நேரடியாக இறங்கியிருக்கக்கூடாது. லோதா குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்திருக்க வேண்டும்; அந்த அறிக்கை மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று நீதிமன்றம் கேட்டிருக்க வேண்டும்.

நவீன காலத்தில் விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. பணத்தைப் போட்டு பெருக்கும் தொழில்முனைவோர்கள் இதில் ஈடுபடும்போது இது வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் கேளிக்கை, விற்பனை, லாபம் என்று பல இலக்குகளுடன் நடத்தப்படுகிறது. கிரிக்கெட் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட பெரிய வியாபாரம். இதை மனதில் கொள்வது அவசியம்.

 

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணைத் தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

http://tamil.thehindu.com/opinion/columns/நீதிமன்றங்கள்-ஆடக்கூடாத-விளையாட்டு/article9474429.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.