Jump to content

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

fpn03dn5.jpg

மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் பாதுகாப்புக்காக வெளிமாநில போலீஸார் குவிக்கப்பட்டும், கடும் பதட்டமும், அச்சமும் நீடிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 28 கி.மீ., துõரத்தில் தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள பாலாறு செக் போஸ்ட்டின் ஒரு பகுதியில் கர்நாடகா போலீஸாரும், மறு பகுதியில் தமிழக போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நுழையும் தமிழக வாகனங்கள் மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், கர்நாடகாவுக்குள் பஸ்களை இயக்க வேண்டாம் என கர்நாடகா போலீஸார் தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால்,நேற்று மேட்டூரில் இருந்து பெங்களூரூ, மைசூரூ, கொள்ளேகால், மாதேஸ்வரன் மலை செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ன. மேலும், தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரூக்கு சென்ற தமிழக சுற்றுலா பயணிகளின் பஸ்களை கர்நாடகா போலீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுபோல், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல முயன்ற லாரி, வேன், ஜீப், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும், கர்நாடகா போலீஸாரால் திருப்பி அனுப்பபட்டன.

அதுபோல், கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு இயக்கப்படும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பஸ்ஸை தமிழகத்தின் எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு குடும்பத்துடன் வந்த தமிழர்கள் அனைவரும், எல்லையில் இருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடிக்கு நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை தொடர்ந்து, பாலாறு முதல் மேட்டூர் அணை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேட்டூர் அணை மற்றும் பூங்காவுக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் மேட்டூரில் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். மேலும், கர்நாடகா எல்லைப்பகுதி மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ""காவிரி தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பதட்டம் தணியும் வரை பாதுகாப்பு நீடிக்கும்,'' என மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார். இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு காரணமாக, கர்நாடகாவில் பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள், குடும்பத்துடன் தமிழத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழர்களை ஏற்றி வரும் கர்நாடகா பஸ்கள், தமிழக எல்லையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால், தமிழக எல்லைக்குள் நுழையும் தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு நடந்து வந்து பஸ் பிடித்து மேட்டூர் வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால், தமிழகத்தின் எல்லையான பாலாறு வரை தமிழக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கர்நாடகா தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்களுக்கு எங்கும் எப்பவும் நக்குத்தண்ணி வாழ்க்கையாப்பா? :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்களுக்கு எங்கும் எப்பவும் நக்குத்தண்ணி வாழ்க்கையாப்பா? :angry:

:angry: :angry:

Link to comment
Share on other sites

போர போக்கைப் பார்த்தால் ஒரு காலத்தில் தமிழீழம் கிடைத்தபின் தமிழீழத்திற்கு கர்நாடகா மற்றும் தமிழக அகதிகளின் வரவை எதிர்பார்க்க முடியுமா?

Link to comment
Share on other sites

மாப்பு

வரும் சகோதரரை வரவேற்போம் எமது சகோதரர்களின் உரிமக்காக குரல் கொடுப்போம் குரலோடு மட்டுமல்ல செய்கையாலும் நன்மை செய்யும் தமீழீழம் தன் தந்தை மண்ணுக்கு

Link to comment
Share on other sites

மாப்பு

வரும் சகோதரரை வரவேற்போம் எமது சகோதரர்களின் உரிமக்காக குரல் கொடுப்போம் குரலோடு மட்டுமல்ல செய்கையாலும் நன்மை செய்யும் தமீழீழம் தன் தந்தை மண்ணுக்கு

நன்றி ஈழவன்

Link to comment
Share on other sites

ஏற்கனவே உச்சநீதி மன்றத்தீர்ப்பை கேரழ அரசு தூக்கி எறிந்துவிட்டு அராஜகம் பண்ணுகிறது, அது சம்பந்தமாக, தமிழ்நாடு அரசினால் தீர்க்கமான எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. இப்போது காவிரி சம்பந்த்மான தீர்ப்பு, கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைதிறந்து விடுகின்றதோ என்னவோ தமிழர்களைத்துரத்திவிட்டு இருக்கிறது. அயல் திராவிட மாநிலத்தவர்களே இப்படி திராவிடக்கட்சித்தலைவர்களுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு என்று குரல் கொடுக்க ஒரு தமிழ் நாடு இந்த உலகில் இல்லையே

6 கோடி தமிழர் இருந்து என்ன 50 லட்ட்சம் தமிழராக இருந்தாலும் தனி நாடாக இருந்து எமது உறவுகளுக்காக குரல் கொடுப்பது இன்றைய தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தில் இளங்கோ சொன்ன மாதிரி தமிழ்நாட்டில் வேறு மொழிக்காரன் வந்தாலும் அவன் அந்த மொழிக்காரனாகவே இருக்கிறான் ஆனா எமது தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டும் தான்( கிராமத்தை தவிர்த்து) ஆங்கிலம் பேசி பேசி தமிழை மறக்கிறான்.

தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இல்லை உலகில் இருக்கும் அனைத்து தமிழர்களும் வடுவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்தேசியம் என்பது தனியே ஈழத்தமிழருக்கு மட்டும் சொந்தம் இல்லை உலகில் உள்ள அனைத்து தமிழரின் தாகம் அது ஈழத்தமிழனுக்கும் குரல் கொடுங்கள் உங்கள் கெளரவமான வாழ்க்கைக்கு போராடுங்கள்..

Link to comment
Share on other sites

போர போக்கைப் பார்த்தால் ஒரு காலத்தில் தமிழீழம் கிடைத்தபின் தமிழீழத்திற்கு கர்நாடகா மற்றும் தமிழக அகதிகளின் வரவை எதிர்பார்க்க முடியுமா?

நினைப்பு தான் புளைப்பை கெடுக்கும்

Link to comment
Share on other sites

நினைப்பு தான் புளைப்பை கெடுக்கும்

அட நல்ல பழமொழியாய் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம் பகுதியில் இதை இணைத்துவிடுங்கள்!

Link to comment
Share on other sites

தமிழன் எண்டால் எல்லா இடமும் இழக்காரமாய் போயிட்டுது இதுக்கு எல்லாம் முடிவு இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எண்டால் எல்லா இடமும் இழக்காரமாய் போயிட்டுது இதுக்கு எல்லாம் முடிவு இருக்குது.

அப்பிடி முழுக்கமுடிவு கட்டேலாது ஈழவா.நாங்கள் வளர்க்கிற செல்லப்பிராணிகளுக்குள்ளையே எத்தினை ஒட்டுண்ணியள் எங்களுக்கு தெரியாமல் ஒளிச்சிருந்து சேக்கஸ் காட்டுதுயள்? :)

Link to comment
Share on other sites

ஏன் தண்ணீ தர பஞ்சிப்படுறாங்கள் தன் சொந்த நாட்டிலேயே தண்ணீர் இல்லமல் ஏன் தமிழன் கஸ்டப்படவேணும் வேறு வழிகள் இல்லையா சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் மாதிரி சிங்கப்பூர் அவுஸ்திரேலியாவில பிறிஸ்பேன் போன்ற பகுதிகளில வெற்றிகரமாக செய்யபடுதே.அரசியல் வாதிகளுக்காக கொழுத்தும் பட்டாசு காசுகளை சேர்த்தால் தமிழ் நாட்டின் தண்ணீர் பஞ்சம் ஒழிந்து விடும் பிறகு எந்த நாயிட்டையும் கொஞ்ச வேண்டியதுமில்லை.தண்ணீர் தராவிட்டால் கர்நாடகத்துக்கு மின்சாரத்தை வழங்குவதில் கொஞ்சம் இறுக்கம் காட்டலாமே முள்ளை முள்ளாலதான் எடுக்கேலும்

Link to comment
Share on other sites

ஏன் தண்ணீ தர பஞ்சிப்படுறாங்கள் தன் சொந்த நாட்டிலேயே தண்ணீர் இல்லமல் ஏன் தமிழன் கஸ்டப்படவேணும் வேறு வழிகள் இல்லையா சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் மாதிரி சிங்கப்பூர் அவுஸ்திரேலியாவில பிறிஸ்பேன் போன்ற பகுதிகளில வெற்றிகரமாக செய்யபடுதே.அரசியல் வாதிகளுக்காக கொழுத்தும் பட்டாசு காசுகளை சேர்த்தால் தமிழ் நாட்டின் தண்ணீர் பஞ்சம் ஒழிந்து விடும் பிறகு எந்த நாயிட்டையும் கொஞ்ச வேண்டியதுமில்லை.தண்ணீர் தராவிட்டால் கர்நாடகத்துக்கு மின்சாரத்தை வழங்குவதில் கொஞ்சம் இறுக்கம் காட்டலாமே முள்ளை முள்ளாலதான் எடுக்கேலும்

இலவசக் கலர்TV போன்ற தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும் தலைவர்களும் இது போன்ற சில்லறைத்தனங்களுக்கு விலை போகும் மக்கள் கூட்டமும் ஈழவன் சொல்வதுபோன்ற திட்டங்களைப்பற்றி யோசிக்கவே இன்னும் கனகாலம் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்க முடியாது என்று தமிழ்நாட்டால் சொல்ல முடியாது. மின்சாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகின்ற ஒரு துறை. அதில் மாநில அரசு தலையிட முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகாவில் பதற்றம்: ராணுவம் வருகை: முன் எச்சரிக்கையாக 1,000 பேர் கைது

பெங்களூர், பிப்.7-:காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை ஒட்டி, பெங்களூருக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, 1,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டுக்கு, கர்நாடக மாநிலம் 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று, அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தீர்ப்பு வெளியானவுடன், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் வசிக்கும் மாவட்டங்களில், கன்னட அமைப்புகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டன. சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனால் அங்கு பதட்டம் நீடித்து வருகிறது. போராட்டம் காரணமாக தலைநகர் பெங்களூரில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் பஸ்கள், மாநில எல்லைப்பகுதியுடன் நிறுத்தப்பட்டன. இதேபோல், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் வந்த பஸ்கள் எல்லைப்பகுதியில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் டெப்போக்களில் நிறுத்தப்பட்டன.

காவிரி பாசன பகுதிகளான மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில், நேற்று 2-வது நாளாக, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெற்றது. கொள்ளேகாலில் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு தமிழ்ச்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக, சிறைக்கைதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த 200 கைதிகள் ஆர்ப்பாட்டம் (தர்ணா) நடத்தினார்கள். பிஜப்பூரில் ரெயில் மறியலும் நடைபெற்றது.

இந்த நிலையில் 12-ந் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடைபெறும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. பெங்களூரில் முழு அடைப்பின்போது கலவரம் ஏற்படாமல் இருக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் நீலம் அச்சுதராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாதுகாப்பு பணிக்காக 12 பிளட்டூன் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் பெங்களூர் வந்துள்ளனர். மேலும் பிஜப்பூர், பெல்காம், தார்வார் போன்ற மாவட்டங்களில் இருந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினரும் வந்துள்ளனர்.

இது தவிர தமிழக எல்லையில் இருந்து ஒரு பட்டாலியன் துணை ராணுவத்தினரும், ஆந்திராவில் இருந்து 6 பட்டாலியன் துணை ராணுவத்தினரும் பெங்களூருக்கு வந்து இருக்கிறார்கள். இவர்கள் பெங்களூரில் கலவரம் ஏற்பட்டால் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

முன்எச்சரிக்கையாக பெங்களூரில் இதுவரை, 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவர்களும் அடங்குவர். இதற்கிடையே ஆங்காங்கே கலவரம் நடப்பதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். பொது மக்கள் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம். பெங்களூர் நகரம் அமைதியாக உள்ளது. பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கவில்லை.

ஆங்காங்கே சில அமைப்புகள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை.

பெங்களூரில் நாளை (இன்று) சர்வதேச விமான கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகள் பங்கேற்கின்றன. எனவே முழு அடைப்புக்காக கண்காட்சி தள்ளி வைக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கண்காட்சி நடைபெறும் பகுதியில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் மகாலட்சுமி நகரில் ஒரு கார் எரிந்துள்ளது. அது கலவரத்தில் எரிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதால் அந்த காரில் தீ பிடித்துள்ளது.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் நீலம் அச்சுதராவ் கூறினார்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

Link to comment
Share on other sites

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

எரியுற வீட்டில் நெருப்பு புடுங்கும் பழக்கம் எந்தவொரு உண்மையான தமிழனுக்கும் இல்லை..உம்மை போல் நக்கி திண்ணும் கூலிகலுக்கு தான் உள்ளது!

Link to comment
Share on other sites

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

நாங்கள் அதை சாதகமாக்கி சொந்த இரத்தத்தில் வயிரு கழுவும் இழிவானவர்கள் அல்ல எம் உறவுகள் எங்கு தாக்கப்பட்டாலும் வேதனை இருக்கும் உங்களை போல முகமூடியை கிழிக்கிறன் என காழ்புணர்சி உடையவர்கள் அல்ல சிறு வயதிலேயே இரத்தத்தை பார்த்தவர்கள் அதன் வலி என்ன என்பது எமக்கு தெரியும்.

தமிழன் எங்கு தாக்கப்பட்டாலும் வேதனைபடுவான் ஒவ்வொரு தமிழனும் அவன் ஈழத்தவனாக இருக்கட்டும் உலகத்தமிழனாக இருக்கட்டும்

அதாவது சுத்த தமிழன் உம்மை போல நாய்கும் பூனைக்கும் பிறந்திட்டு குரங்கு புத்தியை வச்சிருக்கும் அரைவேக்காடுக்கு அந்த உணர்ச்சி புரியாது :angry:

Link to comment
Share on other sites

rmsachitha,

நீர் நல்ல இந்தியனுமில்லை, மானமுள்ள தமிழீழ மைந்தனுமில்லை.

மொத்தத்தில் நீர் உண்மையான தமிழ்ப் பெற்றோருக்கு பிள்ளையுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் இரத்ததின் இரத்தங்களே தமிழன் ஓடுறான் ஓடிக்கொண்டே இருக்கிறான் வாழ்வில் தமிழ்நாட்டின் விளிம்புவரை.. கூப்பிடுங்கள் பெரியாரை போடுங்கள் பகுத்தறிவு முழக்கம் கர்நாடகத்தில். கர்நாடகம் பெற்றுத்தந்த பகுத்தறிவுச் சிங்கம் கர்நாடகத்துக்கு பகுத்தறிவு புகட்டாமல் உறங்கியதாலா தமிழனுக்கு தண்ணிக்கும் பஞ்சம். பாபா காலில் விழுந்தும் தண்ணீர் இல்லையா..??! காவேரியை திறக்க பெரியார் வழியில் கர்நாடகத்துக்கு பகுத்தறிவு புகட்டுவதே சரியான தீர்வு. காட்டுமிராண்டித் தமிழன் ஏன் இன்னும் அதைத் தொடங்கவில்லை..! :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

பேறுந்து ஓடாததால்தான் இவர்கள் நடந்து வருகிறார்கள்.

(rmsachitha @ Feb 7 2007, 11:28 PM)

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

மைசூர்சென்னை சதாப்தி ரயிலை வழிமறித்து

பயணிகள் மீது கன்னட விவசாயிகள் தாக்குதல்

பிப்ரவரி 08, 2007

சென்னை: மைசூலிருந்து சென்னை வந்த சதாப்தி ரயிலை 3 இடங்களில் வழி மறித்த கர்நாடக விவசாயிகள், ரயில் பயணிகள் மீதும், ரயில் என்ஜினின் டிரைவர் மற்றும் ஊழியர்களை தாக்கினர்.

காவி> நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து மைசூர், மாண்டியா உள்ளிட்ட காவிரிப் பாசனப் பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் நேற்று பிற்பகல் மைசூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மாண்டியா மாவட்டத்தில் 3 இடங்களில் கர்நாடக விவசாயிகள் மறித்தனர்.

பின்னர் ரயில் டிரைவர், ஊழியர்கள் மற்றும் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீஸார் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை கலைந்து போகச் செய்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/02/08/train.html

காவிரிபோராட்டத்தில் குதிக்கும் கன்னட

திரையுலகம்: தலைமைசரோஜா தேவி!

பெங்களூரு: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைக் கண்டித்து பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தலைமையில் பெங்களூரில் பேரணி நடத்த கன்னட திரையுலகம் முடிவு செய்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கன்னட சங்கங்கள் அறிவித்துள்ள பந்த்துக்கு கன்னட திரையுலகம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் பல படங்களில் எம்ஜிஆரோடு ஜோடி போட்டு தமிழ் சினிமாவை 'ஆண்ட' சரோஜா தேவி தலைமையில் பெங்களூரில் பேரணி நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் பேரணியில் மறைந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக இன்று கூடி ஆலோசிக்கின்றனர்.

அம்பரீஷ் மிரட்டல்:

இதற்கிடையே, காவிரி பாசனப் பகுதி மாவட்டமான மாண்டியா தொகுதியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பியும், நடிகரும், நடிகர் ரஜினிகாந்த்தின் மிக நெருங்கிய நண்பருமான அம்பரீஷ், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.

இவர் தற்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக உள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு இல்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

மாண்டியா விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக எனது பதவியைத் தூக்கி எறியத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/02/08/cauvery.html

ஆக நடித்து சம்பாதிக்கும் வரையும் தமிழன் தண்ணி எண்டு வந்தால் தமிழனுக்கே தண்ணி காட்டப்படுது இப்படிபட்ட நட்சத்திரங்களால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

அட உம்மட கழிவுப்புத்திக்கு இதைவிட ஆழமாய் சிந்திக்க வக்கில்லயோ?

நீர் இந்தியன் என்று சொன்னால் நாம் நம்பிவிடுவோமாக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.