Jump to content

திரை விமர்சனம்: அச்சமின்றி


Recommended Posts

திரை விமர்சனம்: அச்சமின்றி

 

 
achchamindri_3111515f.jpg
 
 
 

கல்வித் துறையில் நடக்கும் மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேர்மையான அதிகாரி ஒருவர் கொல்லப்படுகிறார். தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவனும் அவனுடைய அக்காவும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். கொலை களை ஆராயும் காவல் துறை அதிகாரி சமுத்திரக்கனிக்குக் காவல் துறையிலிருந்தே ஆபத்து வருகிறது. ஒரு தாதாவிடமிருந்து தற்செயலாக மணிபர்ஸைத் திருடும் விஜய் வசந்த், அதிலிருக்கும் பொருள் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார். தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணு டைய மகளின் கல்விக்கு உதவப்போய் சிருஷ்டி டாங்கே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.

சங்கிலித் தொடர்போல நீளும் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம் என்ன? இதில் கல்வித் துறைக்கும் அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் என்ன பங்கு? சமுத்திரக்கனியும் விஜய் வசந்தும் சேர்ந்து எடுக்கும் முயற்சிகளால் இந்தக் கும்பலைக் கட்டுப்படுத்த முடிந்ததா?

கல்வித் துறையில் நடக்கும் மோசடிகளையும் அவலங்களையும் மையமாகக் கொண்டு ‘அச்சமின்றி’ என்னும் படத்தை உருவாக்கியிருக் கிறார் இயக்குநர் ப.ராஜபாண்டி. தனியார் பள்ளிகளின் லாப வெறி, அரசுப் பள்ளிகளிடம் காட்டப்படும் அலட்சியம் ஆகியவற்றைத் துணிச் சலாகப் பேசுகிறார். பல்வேறு பாத்திரங்கள், கிளைக் கதைகள், திருப்பங்கள் ஆகியவற்றுடன் சுவா ரஸ்யமாகப் படமாக்கியிருக்கிறார்.

கல்வித் துறை அதிகாரியின் கொலையின் மூலம் எடுத்த எடுப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குநர், கல்வி அமைச்சர் தொடர்பான காட்சிகள் மூலம் அந்த எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார். ஆனால், விஜய் வசந்த் தொடர்பான ஆரம்பக் காட்சிகள் நகைச்சுவை என்னும் பெயரால் பொறுமையைச் சோதித்துப் படத்தின் ஓட்டத்துக்குக் கட்டை போடுகின்றன.

ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்த கொலைகள், துரத்தல்கள், கல்வித் துறைப் பிரச்சினைகள் என்று படம் வேகமெடுக்கிறது. கொலைகளுக்கான பின்னணி குறித்த சஸ்பென்ஸ் காப்பாற்றப் பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன் வைக்கப்படும் வாதங்கள் கல்வித் துறை சார்ந்த பிரச்சினைகளின் பல் வேறு கோணங்களை எடுத்துரைக் கின்றன.

நாயகனுக்கான அறிமுகப் பாடல் கள், கதையின் ஓட்டத்தை நிறுத்தக் கூடிய டூயட் பாடல்கள் ஆகியவை படத்தை பலவீனப்படுத்துகின்றன. அப்பாவி அம்மாவாகவே திரையில் தோன்றிவரும் சரண்யாவை மிடுக் கான பள்ளி முதல்வராகவும் ஈவிரக்கமற்ற பண முதலையாகவும் சித்தரித்திருக்கும் வித்தியாசம் கவனம் ஈர்க்கிறது. கல்வி அமைச்சரின் பாத்திரத்தின் மீது படம் முழுவதும் சந்தேகத்தின் நிழலைப் படியவிடுவது சுவாரஸ்யம் கூட்ட உதவினாலும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

தனியார் பள்ளிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் அரசு அதிகாரி களுக்கும் காவல் துறைக்கும் இடையே கூட்டு இருப்பதாகக் காட்டப்படுகிறது. தனியார் பள்ளிகளின் போக்கும் பயங்கரமானதாகச் சித்தரிக் கப்படுகிறது. ஆனால், படத்தில் அது நம்பகத்தன்மை கொண்ட பக்குவமான சித்தரிப்பாக வெளிப்படவில்லை. வில்லன் கோஷ்டியைப் படுபயங்கர மாகக் காட்டும் மசாலாப் படங்களின் அணுகுமுறைதான் தெரிகிறது.

சரண்யாவின் நடிப்பு பாத்திரத்துக்கு மெருகேற்றுகிறது. வன்மத்தை மறைத் துக்கொண்டு இன்முகம் காட்டுவது, தேவைப்படும்போது சீறி எழுவது, நீதிமன்றத்தில் பதற்றப்படாமல் தன் தரப்பை முன்வைப்பது என்று சரண்யா வித்தியாசமான முத்திரை பதிக்கிறார்.

ராதாரவியின் முதிர்ச்சியான நடிப்பும் அனுபவமும் அவர் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்கின்றன. விறைப்பான காவல் துறை அதிகாரி என்பது சமுத்திரக்கனிக்குப் பழக்கமான வேடம் தான். அந்த விறைப்பைக் காதலில் சற்றே நெகிழவைத்து வித்தியாசம் காட்டுகிறார் இயக்குநர்.

நகைச்சுவை, சண்டை, காதல் எல்லாம் இருந்தாலும் விஜய் வசந்தின் பாத்திரம் ஓரளவு இயல்பானதுதான். எதிலும் மிகையாகச் செய் யாமல் அடக்கி வாசித்துப் பார்வை யாளர்கள் மனதில் நிற்கிறார். வழக்கமான லூஸுப் பெண்ணாக வந்து, பிறகு சற்றே தீவிர முகம் காட்டும் வேடத்தில் சிருஷ்டி டாங்கே கவனிக்கவைக்கிறார்.

பிரேம்ஜி அமரனின் பின்னணி இசை காதுகளைப் பதம்பார்க்கிறது. ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் துரத்தல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் நன்கு படமாக்கப் பட்டுள்ளன.

நடப்பிலுள்ள முக்கியமானதொரு பிரச்சினையை அழுத்தமாகப் பேசு வதுடன் அதைச் சுவையான கதை யாகவும் சொல்லியிருக்கிறார் இயக்கு நர். கதையின் மையத்துக்குத் தேவை யற்ற காட்சிகளைத் தயக்கமின்றி நறுக்கியிருந்தால் படத்தின் வலிமை கூடியிருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-அச்சமின்றி/article9453432.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.