Jump to content

தமன்னாவும் நாடாளுமன்றமும் ஆடைகளும்


Recommended Posts

தமன்னாவும் நாடாளுமன்றமும் ஆடைகளும்
 

article_1483169136-Lakshmi-new.jpg- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இந்த ஆண்டு, பல்வேறு வழிகளில் மோசமானதாக அமைந்தது. உலகமெங்கிலும் அதிகரித்திருக்கும் வன்முறைகளும் பிரிவினைகளும், இந்த ஆண்டு எப்போது முடியுமென்ற எதிர்பார்ப்பையே, பல்வேறு தரப்பினருக்கும் ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால், விடைபெறும் நேரத்திலும், சர்ச்சைகளும் இரத்தங்களுமின்றி விடைபெறப் போவதில்லை என்ற திடசங்கற்பத்துடன், இவ்வாண்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிறது.  

பிரதானமாக இரண்டு விடயங்கள், அண்மைய சில நாட்களில் பேசுபொருட்களாகியிருக்கின்றன. ஒன்று, இலங்கையின் நாடாளுமன்றம் சம்பந்தமானது. அடுத்தது, தமிழக நடிகை தமன்னா பற்றியது.

இந்த இரண்டு விடயங்களுமே எவ்வாறு ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை என்றால், இரண்டுமே பெண்களின் ஆடைகள் பற்றியன.  
நாடாளுமன்றத்தில் பணிபுரியும் பெண்கள் அனைவரும், கைகளில்லாத ரவிக்கைகளை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தான், முதலாவது செய்தி. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள், கைகளுள்ள இரவிக்கைகளையே அணிய வேண்டுமெனவும், அவ்வாறு கைகளில்லாத இரவிக்கைகளை அணிந்த பெண் ஊழியர்கள், வரவு - செலவுத் திட்டத்தின் போது, தமது பணிகளை ஆற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், செய்தி தெரிவிக்கிறது.  
கைகளில்லாத இரவிக்கைகள், நாடாளுமன்றத்துக்குப் பொருத்தமற்றவை என்று, நாடாளுமன்ற அதிகாரிகள் கருதியதன் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாகக் கோபப்படுவதற்கு முன்னர், இது தொடர்பான செய்தியில் குறிப்பிடப்பட்ட “இது தொடர்பான அறிவித்தல், மூன்று மொழிகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது” என்ற பகுதி, “ஆகக்குறைந்தது மொழிக் கொள்கையையாவது ஒழுங்காக நடைமுறைப்படுத்தியிருக்கிறார்களே” என்ற “திருப்தியை” தந்தது. 

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், கைகளில்லாத இரவிக்கைகள், இலங்கையின் கலாசாரமாக இருந்திருக்கவில்லைத்தான். மாறாக, இரவிக்கைகள் இல்லாத சேலைகளும் அதற்கு முன்னைய காலத்தில் மேலங்கிகளே இல்லாத ஆடைகளும் (சீகிரிய குன்றில், இவ்வாறான சித்திரங்களைத் தான் இன்னமும் எமது சொத்து என்று கொண்டாடிவருகிறோம்) அதற்கு முன்னராக ஆடைகளே இல்லாத நிலைமையும் தான் இருந்தன. 

ஆகவே, கலாசாரத்தின்படி, கைகளில்லாத இரவிக்கைகள் தவறானவை என்ற உப்புச்சப்பற்ற வாதத்தைக் கருத்திற்கொள்ளத் தேவையில்லை.  

மாறாக, நிறுவன விதிப்படியான ஆடைக்கட்டுப்பாடு என்ற விடயத்தை முன்வைத்தால், எதற்காகப் பெண்களுக்கு மாத்திரம், தனியான கட்டுப்பாடு என்ற கேள்வி எழுகிறது. கைகளில்லாத இரவிக்கைகள் என்பன, தற்போது மிகவும் பொதுவானவையாக மாறிவிட்டன.

பெண்களின் உடலில் அதிக தோல் தெரிவது தான் பிரச்சினை என்றால், தற்போதைய தேசிய பாதுகாப்புச் சபை, தடை செய்வதற்குக் கருத்திற் கொண்ட முகத்தை மூடி முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளையே அணியச் செய்யலாமே?   

பெண்களின் கைகளில் தெரியும் தோல் தான், நாடாளுமன்றத்தில் கௌரவத்தையும் கலாசாரத்தையும் இல்லாது செய்துவிடும் என்றால், அச்சபையின் கௌரவமும் கலாசாரமும், நூலளவில் தான் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை, ஏற்றுக் கொள்கிறார்களா?

நாடாளுமன்றத்தில் உண்மையான கலாசாரம் தொடர்பான அக்கறை காணப்பட்டால், சபைக்குள் பெண் உறுப்பினர்கள் மீது ஆண் உறுப்பினர்களால் பாலியல் தொல்லை வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, முழுமையானதும் வெளிப்படையானதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்.

வெறுமனே சாட்டுக்கு நடத்தப்படும் விசாரணைகள், இங்கு சேர்க்கப்படாது. வன்முறைகள், கொலை, கொள்ளை, ஊழல், வன்புணர்வுகள் போன்ற குற்றச்சாட்டுகளுடன், நாடாளுமன்றத்துக்குள் இன்னமும் இருக்கும் உறுப்பினர்கள், மீண்டுமொருமுறை சபைக்குத் தெரிவாவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும்.  

அரசியல் கட்சிகளின் பிரசார நிதி தொடர்பாக, தெற்காசியப் பிராந்தியமே மிகவும் தளர்வான சட்டங்களைக் கொண்டுள்ள நிலையில், இலங்கையில் அந்நிலைமை இன்னமும் மோசமாகக் காணப்படுகிறது. கட்சிகள், தமது பிரசார நிதிச் செலவீனங்கள் குறித்து, அறிக்கையிடத் தேவையில்லை.

தமது வருமானங்கள் தொடர்பில் அறிக்கையிடத் தேவையில்லை. ஆண்டுதோறும் வழங்கும் அறிக்கைகளே போதுமானவை. தனி வேட்பாளர்களாக இருந்தால், எந்தத் தடைகளும் இல்லை. எந்த அறிக்கைகளும் கிடையாது.

இவ்வாறான ஓட்டைகளை அடைத்து, சட்டத்துக்குப் புறம்பாக உழைக்கப்பட்ட பணத்தின் உதவியுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைபவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  

நாடாளுமன்றத்துக்குள் நடக்கும் அடி தடி தொடர்பாகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களில் 95 சதவீதமானோர், இன்னமும் பாலியல் தொல்லைகளைச் சந்திக்கிறார்கள் எனவும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களில் வெறுமனே 3 சதவீதமானோர் மாத்திரமே சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகுகிறார்கள் எனவும் காணப்படும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலைமைகளை மாற்றுவதற்கான முயற்சிகளில், இச்சபை ஈடுபட வேண்டும்.  

அதைவிடுத்து, பெண்கள் அணியும் இரவிக்கை தான் அச்சபையில் காணப்படும் பிரதான பிரச்சினை போன்று செயற்படுவது, முட்டாள்தனத்தின் உச்சக்கட்டமாகும்.  

ஏற்கெனவே, கொழும்பின் பிரபல தனியார் பாடசாலொன்று, தமது பாடசாலை மாணவர்களின் தாய்மாருக்கு, இவ்வாறான ஆடைக்கட்டுப்பாட்டை முன்வைத்து, கடும் விமர்சனங்களைச் சந்தித்திருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பெண்களின் ஆடைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டு, கடுமையான விமர்சனங்களைச் சந்தித்திருந்தார். இந்நிலையில் தான், நாட்டின் உயரிய சபையும், அதே பாதையில் பயணித்திருக்கிறது.  

இது இவ்வாறிருக்க, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரொருவரும், பெண்களின் ஆடைகள் தொடர்பான சர்ச்சைக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.

மூவேந்தர், குங்குமப் பொட்டுக் கவுண்டர், படிக்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சுராஜ், தனது அண்மைய வெளியீடான கத்தி சண்டை திரைப்படம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, நடிகைகளை இழிவுபடுத்தும் விதமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். (இதில் சுவாரசியமாக, படத்தின் தலைப்பே வித்தியாசமானது. கத்தியைக் கொண்டு சண்டை போடுதல் என்ற அர்த்தத்தில் ‘கத்திச் சண்டை’ எனத் தலைப்பிட நினைத்து, இலக்கணத் தவறால் ‘கத்தி சண்டை’ எனப் பெயரிடப்பட்டதா, இல்லையெனில், திரைப்படம் முழுவதும் சத்தமிட்டுக் கொண்டு சண்டை போடுகின்றனர் என்ற அர்த்தத்தில் ‘கத்தி சண்டை’ என்று பெயரிடப்பட்டதா தெரியவில்லை)  

“நாமெல்லாம் ‘லோ கிளாஸ் ஓடியன்ஸ்’” என்று தொடங்கும் அவரது அக்கருத்தில், பிரதான நடிகரென்றால் அடிதடியில் ஈடுபட வேண்டுமெனவும் நடிகையென்றால் கவர்ச்சியாக நடிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்படுகிறது. நடிகைகள், சேலையணிந்து வருவதைப் பார்ப்பதற்கு, பணம் கொடுத்துத் திரையரங்குக்குச் செல்லும் எவரும் விரும்புவதில்லை எனத் தெரிவிக்கும் அவர், தனது படங்களிலுள்ள ஆடை வடிவமைப்பாளர், நடிகையின் முழங்காலுக்குக் கீழ் ஆடைகள் இருக்குமாறு வடிவமைத்தால், அதை மாற்றுமாறு உத்தரவிடுவதாகவும் பெருமையுடன் சொல்லியிருந்தார்.  

இதில் இரண்டு விடயங்கள்: தனது திரைப்படங்களைப் பார்க்கும் இரசிகர்கள் அனைவருமே, வெறும் தசைத்துண்டங்களைப் பார்ப்பதற்காகத் தான் வருகிறார்கள் என்ற அவரது அனுமானம், அதில் முதலாவது. வெறும் களிப்புக்காகத் திரைப்படங்களைப் பார்ப்போர் கூட, நடிகைகளின் கவர்ச்சியைப் பார்ப்பதற்காக மாத்திரம் திரையரங்குக்காகச் செல்கிறார்கள் என்பது, எவ்வளவு தூரம் உண்மையானது எனத் தெரியவில்லை. 

ஏனெனில், வெறுமனே கவர்ச்சி அல்லது பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் விடயங்கள் தேவையெனில், இணையம் முழுக்க, அவை காணப்படுகின்றன. எதற்காகப் பணம் கொடுத்துத் திரையரங்குக்குச் செல்ல வேண்டும். இது, இரசிகர்களை மட்டந்தட்டும் ஒரு கருத்தாகும்.  

ஹிந்தி சினிமாவின் மாபெரும் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், கலந்துரையாடலொன்றில் அண்மையில் தெரிவித்த, “பார்வையாளர்கள் எங்களைச் சிறந்த திரைப்படங்களை உருவாக்க வைக்கிறார்கள். ‘இந்த விடயங்களை நாங்கள் ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.

திரும்பத் திரும்பச் செய்து, எங்களுக்கு அலுப்பூட்டாதீர்கள்’ என அவர்கள் சொல்கிறார்கள். இது, சினிமாவுக்கு உதவுகிறது” என்ற கருத்தோடு ஒப்பிடும் போது, சுராஜின் கருத்து, தனது துறை மீது எந்தளவுக்குப் புரிதலுடன் அவர் இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்புகிறது. அவரது கடைசி 2 திரைப்படங்களும் தோல்வியடைந்தன என்பதோடு, கத்தி சண்டை திரைப்படத்துக்கும் சிறப்பான விமர்சனங்கள் காணப்படவில்லை என்பன, அக்கேள்விக்கான விடைகளாகவும் உள்ளன.

இரண்டாவது விடயம் தான், இங்கு பிரதானமானது. நடிகைகளை, வெறுமனே ஊறுகாயாகப் பயன்படுத்தும் தமிழ் சினிமாவின் போக்கைத் தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது, சுராஜோடு தொடங்கியதும் இல்லை, அவரோடு முடியப் போவதும் இல்லை. ஆனால், இவ்வளவு வெளிப்படையாக இவ்விடயத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கிடையாது. தமிழ் சினிமாவில் காணப்படும் மாபெரும் (தொற்று)நோய், தனக்கிருப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுவும், அது தொடர்பில் பெருமையுடன்.  

இதில் குறிப்பிடத்தக்கதாக, இயக்குநர்களை மாத்திரம், இவ்விடயத்தில் தவறு கூற முடியாது. அதிகப்படியான கவர்ச்சிக்கு ஒரு நடிகை இல்லையென்று கூறினால், இன்னொருவரைக் களமிறக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே, இவ்வாறான கேவலமான கருத்தியல்களைக் கொண்டவர்களின் திரைப்படங்களுக்கு, இன்னமும் நடிகைகளை ஒப்பந்தம் செய்யக்கூடியதாக அமைந்திருக்கிறது.

ஆண்களால் ஆதிக்கம் செய்யப்படும் திரையுலகத்தில், ஆண்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சினை தொடர்பாக, நடிகைகளும் தங்களது பங்கை ஆற்ற வேண்டிய தேவையிருக்கிறது. அதில், சுராஜின் கருத்துக்கு உடனடியாகவே கண்டனம் வெளியிட்டு, அவரை மன்னிப்புக் கோரச் செய்திருக்கும் தமன்னாவையும் நயன்தாராவையும், இதில் பாராட்டித் தான் ஆக வேண்டும்.  

இவ்வாறு, தமன்னாவாக இருக்கலாம், இலங்கை நாடாளுமன்றத்தில் பணிபுரியும் பெண்ணாக இருக்கலாம். ஆளுமைகளையும் திறமைகளையும் செயற்பாடுகளையும் தாண்டி, பெண்களது ஆடைகள் தான், அவர்களைக் கணிப்பிடும் பிரதான கருவியாக இன்னமும் காணப்படுகின்றன.

ஒன்றில், பெண்களின் ஆடைகள் போதாது என்கிறார்கள், இல்லையெனில் ஆடைகள் அதிகமாகிவிட்டன என்கிறார்கள். இந்நிலைமை, நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டிய ஒன்று.  இதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது, எம்மனைவரினதும் பொறுப்பாகும்.  

- See more at: http://www.tamilmirror.lk/188964/தமன-ன-வ-ம-ந-ட-ள-மன-றம-ம-ஆட-கள-ம-#sthash.WcWZ2mR7.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.