Jump to content

2016-ன் மிஸ் பண்ணக்கூடாத தெலுங்குப் படங்கள்! #2016Rewind


Recommended Posts

2016-ன் மிஸ் பண்ணக்கூடாத தெலுங்குப் படங்கள்! #2016Rewind

 

வழக்கம் போலவே தெலுங்கு படங்களில் இந்த வருடமும் நிறைய மசாலா படங்கள் வந்தது. ஆச்சர்யமாக சில புது முயற்சிகளும் வந்தது. அவற்றில் எந்தெந்தப் படம் எப்படி? அந்த ஆச்சர்ய வரவுகள் என்ன என்ற லிஸ்ட் இதோ....

12.கல்யாண வைபோகமே:

படங்கள்

சௌரியாவுக்கு அமெரிக்காவில் வேலைக்கு சேர விருப்பம், திவ்யாவுக்கு டாக்டாராக இன்னும் ஏதோ சாதிக்க விருப்பம். இருவருக்கும் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது மட்டும் பொதுவான ஒற்றுமை. இருவரும் ஒருவரை ஒருவர் வேண்டாம் என்று சொல்லியும் குடும்பத்தில் வரன் பார்ப்பது மட்டும் முடியவில்லை. இதைப் பார்க்கும் இருவரும், முதலில் திருமணம் செய்து கொள்ளலாம் பிறகு எங்களுக்குள் ஒத்துப் போகவில்லை என விவாகரத்து செய்துவிடலாம் எனத் திட்டமிட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணமான பின் இவர்களின் திட்டம் என்ன ஆகிறது என்பது கதை. அலா மொதலாய்ந்தி (தமிழில் 'என்னமோ ஏதோ'), ஜபர்தாஸ்த் ('பேண்ட் பஜா பாரத்'ன் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக்) படங்கள் இயக்கிய நந்தினி ரெட்டி வழக்கம் போல் தன் காமெடி மேக்கிங்கில் ஆடியன்ஸை கவர்ந்தார். க்யூட் ரொமான்ஸ் என வரவேற்பையும் பெற்றது படம்.

11.ஊப்பிரி:

maxresdefault_20265.jpg

கழுத்திற்கு கீழ் உடல் செயழிலந்த பணக்காரர், அவரின் கேர்டேக்கராக வரும் முன்னாள் ஜெயில் கைதி இவர்களுக்குள்ளான ஒரு நட்பு அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்கிற லைனில் பயணித்த கதை பலருக்கும் பிடித்துப் போனது. கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா என தமிழை விட தெலுங்கிற்கு மிகக் கச்சிதமான கதாப்பாத்திரத் தேர்வுகளே படத்தின் கவர்ச்சியை அதிகப்படுத்தியிருந்தது. 'த இன்டச்சபிள்ஸ்' என்கிற ஃப்ரென்ச் படத்தின் ரீமேக்காக இயக்கியிருந்தார் வம்சி. முழுமையான ரீமேக்கா என்ற கேள்விகளுக்குள் செல்லாமல் வெறுமனே பார்க்கும் பார்வையாளர்களுக்கு நிச்சயமான பொழுதுபோக்கை எந்தக் குறையும் இன்றி வழங்கியது படம். 

10.துருவா:

dhruva-posters-1_20442.jpg

பொதுவாக ரீமேக் படங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் ஒரிஜினல் அளவுக்கு இல்லை என்பது. நேரம் படத்தின் ரீமேக்கான ரன், பிரேமம் ரீமேக், விக்கி டோனர் ரீமேக்கான 'நருடா டோனருடா' என இந்த வருடம் மற்ற மொழியிலிருந்து தெலுங்கில் ரீமேக்கான படங்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்தது, துருவாவுக்கும் இருந்தது. சில பிரச்சனைகள் இருந்தாலும், கதாப்பாத்திரத் தேர்வு, மேக்கிங், 'தனி ஒருவன்' கொடுத்த த்ரில்லை ரீமேக்கிலும் கொண்டு வந்திருந்தது என நல்ல ரீமேக்கராக ஜெயித்தார் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி. 

9.க்ரிஷ்ணகாடி வீர ப்ரேம கதா:

krishna-gadi-veera-prema-gadha_20039.jpg

க்ருஷ்ணா (நானி) மகாலக்‌ஷ்மி (மெஹீர்) இருவருக்கும் காதல். மகாலக்‌ஷ்மி ஊரில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண். இருவரும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள். மகாலக்‌ஷ்மியின் குடும்பத்துக்கு எதிரிகளால் சில பிரச்சனைகள் வருகிறது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு நானியிடம் வருகிறது. கொஞ்சமும் அலுப்பூட்டாமல் நகரும் காமெடி+ரொமாண்டிக் கதை செம கலாட்டாவாக இருக்கும். 

8.எக்கடிக்கி போத்தாவு சின்னவாடா:

13321609_1724391851111556_44719144281310

ஹாரர் வகையரா படத்தில் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான முயற்சி எக்கடிக்கி போத்தாவு சின்னவாடா. காதல் தோல்வியாகி நான்கு வருடங்கலுக்குப் பிறகு, அர்ஜுன் (நிகில்) கிராஃபிக் டிசைனராக வேலை செய்கிறார். உடன் வேலை செய்யும் நண்பனுக்கு தன் உடலில் ஆவி புகுந்து விட்டது என சந்தேகம் வர கேரளாவில் உள்ள மஹிசாசுர மர்தினி ஆலயத்துக்கு அழைத்துச் செல்கிறார் அர்ஜுன். அங்கு அமலாவை (ஹெபா படேல்) சந்திக்க அவருடன் காதல். திடீரென்று ஒரு நாள் அமலா அங்கிருந்து ஹைதிராபாத் கிளம்பிவிட அவரைத் தேடிச் செல்லும் அர்ஜுனுக்கு அதிர்ச்சி. அமலா சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. அமலாவின் சாயலிலேயே ஒரு பெண்ணை சந்திக்கிறார் ஆனால் அவரின் பெயர் வேறு, அதே தினத்தில் அமலாவிடமிருந்து போனில் அழைப்பு வருகிறது. யார் இந்த அமலா? ஏன் இப்படி நடக்கிறது என்பது கதை. தமிழில் அப்புச்சி கிராமம் படம் இயக்கிய வி.ஐ.ஆனந்த் தான் இப்படத்தை இயக்கியிருந்தார். சின்னச் சின்ன சொதப்பல்கள் இருந்தாலும் என்கேஜிங்கான கதை சொல்லலால் கவனிக்கப்பட்டது படம். 

7.நேனு ஷைலஜா:

Ram-Keerthi-Suresh-Nenu-Sailaja-First-Lo

ஹரி (ராம்), காதலை சொல்லும் எல்லா பெண்களும் மறுக்க காதலே வேண்டாம் என்கிற முடிவுக்கு வருகிறார். ஷைலஜாவைப் (கீர்த்தி சுரேஷ்) பார்த்ததும்  முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் காதலிக்கத் துவங்குகிறார். இந்தக் காதல் இணைகிறதா என்ற இன்னொரு ரொமாண்டிக் காமெடி படம் தான் நேனு ஷைலஜா. வழக்கமான அதே பழைய கதை தான் இருந்தாலும் புது காட்சிகள், காமெடிகள் என சுவாரஸ்யமாக்கியிருந்தார் இயக்குநர் கிஷோர் திருமலா.

6.அ ஆ:

a..aa-movie-stills_20557.jpg

இது த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஸ்பெஷல்! சுலோசனா ரானி எழுதிய மீனா நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு 1973ல் கிருஷ்ணா, விஜய நிர்மலா நடிப்பில் உருவான படம் மீனா. அதே நாவலைத் தழுவி கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு 'அ ஆ'வாக இயக்கினார் த்ரிவிக்ரம். அனுஷ்யா ராமலிங்கம் (சமந்தா), ஆனந்த் விஹாரி (நிதின்) இருவரின் காதல் தான் பிரதான களம். சமந்தாவுக்கு, அம்மா நதியாவின் கரார்தனம் பிரச்சனை, நிதினுக்கு குடும்ப சுமை, கடன் பிரச்சனை. இருவரின் குடும்பத்துக்கும் இடையில் உள்ள சில பிரச்சனைகள் இவை எல்லாம் தாண்டி எப்படி இருவரும் இணைந்தார்கள் என்ற ரொமாண்டிக் காமெடி தான் படம். ஃபேமிலி செண்டிமென்ட், காமெடி, ரசனையான வசனங்கள் என தனது ட்ரேட் மார்க் களத்தில் வழக்கமான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் படம். 

5.நானாக்கு ப்ரேமதோ | ஜனதா கேரேஜ்

collage1_11238.jpg

மெனக்கெடல் ஏதும் இல்லாமல் ஒரு மாஸ் ரிவென்ஞ் கதை பண்ணுவது இயக்குநர் சுகுமாருக்கு அலுப்பான விஷயம். முந்தைய படமான 'நேனொக்கடினே'வில் கூட ரிவென்ஞ் கதையை த்ரில்லரில் கொடுக்க முயற்சி செய்திருப்பார். நானாக்கு ப்ரேமதோவும் வித்தியாசமான முயற்சியே. தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தி தலைமறைவு வாழ்க்கை வாழச் செய்த வில்லனைப் பழிவாங்கும் மகன் இது தான் ஒன்லைன். இந்த சாதாரண கதையில் 'பட்டர்ஃப்ளை தியரி' ஹீரோ, 'மைண்ட் கேம்' வில்லன் என சில புதுவிஷயங்களைக் கொடுத்து அசத்தியிருப்பார். இது ஓடாமல் போகக் கூட வாய்ப்புண்டு என்கிற அபாயம் இருந்தும் தனது 25வது படமாக இதைத் தேர்வு செய்த ஜுனியர் என்.டி.ஆரின் தைரியம் வரவேற்கப்பட வேண்டியது.

சென்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்து மசாலா படம் கொடுப்பதில் கொரட்டல சிவா கில்லி. இயற்கையை நேசிக்கும் இளைஞர் ஜுனியர் என்.டி.ஆர், மனிதர்களை நேசிப்பவர் மோகன் லால். மோகன் லாலின் தம்பி மகன் தான் ஜூனியர் என்.டி.ஆர். இதை எந்த ட்விஸ்ட்டாகவும் வைக்காமல் முன் கூட்டிய சொல்லியிருப்பார். அதன் பின் வழக்கமாக, அநியாயத்தை தட்டிக் கேட்கவே பிறப்பெடுத்த ஹீரோ என்கிற பாணியில் படம் சென்றாலும் கொஞ்சம் நாகரீகமான மசாலா படமாக இருந்தது. நல்ல வசூலும் பெற்றது. 

4.சோகாடே சின்னி நாயினா:

Soggade_Chinni_Nayana_Movie_New_Posters2

மகன் நடித்துக் கொண்டிருக்கும் சமகாலத்திலேயே ஸ்கோர் செய்யும் தந்தை நடிகர் லிஸ்டில் நாகர்ஜுனாவுக்கு எப்போதும் ஸ்பெஷல் இடம் உண்டு. சூப்பர் நேச்சுரல் வகைப் படங்கள் பாதிக்கும் மேல் பயமுறுத்துவதற்கான ஏற்பாடாக இருக்கும். ஆனால் இதில் ஆவியை வைத்து கல்யாண் கிருஷ்ண குரசாலா ஆடியிருக்கும் ஆட்டம் வேறு வகை. இறக்கும் வரை ப்ளே பாயாக வாழ்ந்த பங்கராஜுவின் மகன் ராமூவுக்கு (இரண்டுமே நாகர்ஜுனா தான்), பெண்கள் மேல் ஆர்வமே இல்லாமல். சமத்துப் பையன் என நினைத்து சீதாவுக்கு (லாவண்யா திரிபாதி) திருமணம் செய்து வைக்கிறார் தாய் சத்யபாமா (ரம்யாகிருஷ்ணன்). மனைவியிடம் கூட நெருங்க தெரியாதபடி வளர்ந்திருக்கிறான் மகன் என அப்போது தான் தெரிகிறது. இதனால் நாகர்ஜுனாவை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருகிறார் லாவண்யா. இவர்கள் பிரிவை விரும்பாத ரம்யாகிருஷ்ணன், இறந்த கணவர் நாகர்ஜுனாவின் புகைப்படம் முன் புலம்ப ஆவியாக வருகிறார் நாகர்ஜுனா. மகன் நாகர்ஜுனாவின் பிரச்சனையை, அப்பா நாகர்ஜுனா எப்படி தீர்க்கிறார் என்பது கதை. மகன் ரோலைவிட, ப்ளே பாய் அப்பாவாக அசத்தியிருப்பார் நாகு. கூடவே நாகர்ஜுனா, ரம்யாகிருஷ்ணன் ரொமான்ஸும் செம!

3.ஜோ அச்யுதாநந்தா:

Nara-Rohit-Jo-Achyutananda-Movie-Posters

இயக்குநர் ஸ்ரீனிவாஸ் அவசரலா கொஞ்சம் தனிரகம். சாதாரணமான படத்தையே கொஞ்சம் விஷேசமான மேக்கிங்கில் தருபவர். அண்ணன், தம்பி இருவரும் ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள். அந்தப் பெண் வேறு ஒருவனைக் காதலிக்கிறாள். சில வருடங்களுக்குப் பிறகு இருவருக்கும் திருமணம் ஆகியிருக்கிறது. மீண்டும் அந்தப் பெண்ணைச் சந்திக்க நேர்கிறது. இதனிடையில் பல மாற்றங்கள், நெருங்கிய நண்பர்களாக இருந்த சகோதரர்களுக்கு இடையில் சின்ன இடைவெளியும் கொஞ்சம் பகையும் உண்டாகியிருக்கிறது. இடைவெளி குறைந்து பகை மீண்டும் பாசமாகிறது. எப்படி என்பது ஸ்ரீனிவாஸின் காமெடி கலந்த ட்ரீட்மெண்ட்!

2.ஷணம்:

IndianClicks_Kshanam_Movie_650x400_02162

அமெரிக்காவில் பொறுப்பான வேலை ஒன்றில் இருக்கும் ரிஷிக்கு தன் முன்னாள் காதலியிடமிருந்து போனில் அழைப்பு வருகிறது. அவசர அவசரமாக இந்தியா வந்து அவளை சந்திக்கிறான். அவளுக்கு திருமணமாகியிருக்கிறது, குழந்தை கூட இருக்கிறது என சொல்கிறாள். அந்த குழந்தையைத் தான் இப்போது காணவில்லை. குழந்தையைக் கண்டுபிடிக்கச் சொல்லி ரிஷியிடம் உதவி கேட்கிறாள். ஆனால், குழந்தை கடத்தப்பட்டதற்கான அடையாளம் இல்லை, கடைசியாக குழந்தை எங்கு இருந்தது என்ற தடையமும் இல்லை, மொத்தத்தில் குழந்தை இருந்ததற்கான அடையாளமே இல்லை. இருப்பது குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று தான். ஆனாலும் அவன் காதலி மேல் இருக்கும் நம்பிக்கையில் குழந்தையைத் தேடிச் செல்லும் த்ரில்லரே கதை. புதுமுக இயக்குநர் ரவிகாந்த் நல்ல வரவு.

1.பெல்லி சூப்புலு:

Pelli-Choopulu-Movie-10th-Week-Posters_t


தெலுங்கு சினிமாவிலும் புது அலை இயக்குநர்களின் வருகை ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி தான் முன்னால் சொன்ன ஜோ அச்யுதானந்தா, ஷனம் போன்ற படங்கள். அதில் ஃபைன் குவாலிட்டி பெல்லி சூப்புலு. இயக்குநர் தருணின் நண்பருக்கு நிஜமாகவே நடந்த சம்பவம் தான் படத்தின் ஆரம்பப்புள்ளி. பெண்பார்க்க செல்லும் பிரசாந்தும் (விஜய் தேவரகொண்டா), மணமகள் சித்ராவும் (ரித்து வர்மா) ஒரே அறைக்குள் மாட்டிக் கொள்ளும் படி ஆகிறது. இருவரும் தங்களைப் பற்றி விவரங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது திடீரென மாப்பிள்ளை வீட்டாரால் கதவு திறக்கப்படுகிறது. "நாம போகவேண்டிய வீடு பக்கத்து தெருல இருக்கு, கிளம்புடா" என விஜயை அழைத்துச் செல்கிறார்கள். அதன் பின் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகள் இன்னும் அழகு. இயல்பாக ஒரு படம் பார்த்த ரசிகர்களுக்கு ஏக குஷி. 'எ ஜெம் ஆஃப் எ பிலிம்' என விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. 

http://www.vikatan.com/cinema/south-indian-news/76135-dont-miss-this-telugu-films-of-2016.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.