Jump to content

என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் – டிஎம் சுவாமிநாதன்


Recommended Posts

என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் – டிஎம் சுவாமிநாதன்

IMG_0167-1.jpg
என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்   என மீள்குடியேற்றம், புனா்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சா் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்

இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்  கடந்த  செம்ரெம்பா் மாதம்  கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு    நட்ட ஈட்டினை வழங்கி விட்டு   உரையாற்றும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் வீட்டுத்திட்டத்தின் பொழுது இப்பொழுது பல பிரச்சனைகள் காணப்படுகின்றன.  மண்  இல்லை ,வேலைகளைச்  செய்வதற்கான மேசன்மார்கள் இல்லை  போன்ற  பல  பிரச்சனைகள் காணப்படுகின்றன.

இதனால் நான் பிரதமருடன்  பேசி முன் அமைக்கப்பட்ட ஒரு தொகை   வீடுகளை நிர்மாணிப்பதற்கான முன்வந்திருக்கின்றேன். அந்த வீட்டுத்திட்டத்தின்  மூலம் ஒரு வீட்டை  நான் சுன்னாகத்திலே  கட்டி இருக்கின்றேன்.  இந்த வீட்டை  எத்தனையோ பேர்  சென்று பார்வையிட்டு இருக்கின்றனர்.

ஆனாலும்  இவற்றுக்கு  எதிர்ப்பை  காண்பதற்கு பலர் இருக்கின்றனர்  அதனைப்பற்றி  இச்சந்தர்ப்பத்தில் பேச விரும்பவில்லை எனினும்  இத்திட்டம்  முற்றுமுழுதாக மக்கள் நலம்  சார்ந்ததே ஆகவே  இத்திட்டம் விரைவில் அமுல்ப்படுத்தப்படும் எனவும்  தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து  நிகழ்வின்  முடிவில் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மக்களுக்கு மாற்றுத்திட்டம் ஏதும் இருக்கிறதா  என ஊடகவியலாளர்களினால்  தொடுக்கப்பட்ட  கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல்  சென்றமை குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/archives/11987

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா! அதுதானே! திட்டத்தை விட்டா தரகுப்பணத்தை யாராம் தாறது........ நீங்கள் விடாதையுங்கோ ஐயா! உங்கட பாட்டனோ பூட்டனோ காட்டிய சிங்கள விசுவாசத்தைக் காப்பாற்றுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறைப்படுத்துங்கோ, அப்பத்தான் வாய்ச்சண்டியர்கள் சம் சும் மின் வாய்க்கொழுப்பு அடங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் ஏன் இப்படி அடம் பிடிக்குது.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

இந்தாள் ஏன் இப்படி அடம் பிடிக்குது.:rolleyes:

வேறென்ன ....பெட்டி வாங்கியிருப்பார் 

Link to comment
Share on other sites

பாராளுமன்றத்தில் ரனில் இவருக்கு ( டிஎம் சுவாமிநாதன் ( டிஎம் சுவாமிநாதன் )முன் சம்பந்தருக்கும், மாவைக்கும் ஏதோ உறுதி அளித்தாரே அதற்கு என்ன நடந்தது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் கொட்டில் தான் மிஞ்ச போகிறது tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரேன் பொருத்துவீட்டோட கட்டிக்கொண்டு அழுகிறார். பொருத்து வீட்டால இவரின் பொக்கட் நிறையும் என்றா.:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.