Jump to content

இணையத்தில் இருந்து தொலைந்து போவது எப்படி? #InternetSuicide


Recommended Posts

இணையத்தில் இருந்து தொலைந்து போவது எப்படி? #InternetSuicide

 

SEO-Agency-Atria-Media-e1437281378769_14

ங்களுக்கும், இணையத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி என்றேனும் யோசித்தது உண்டா? இந்த பூமியில் வாழும் பலகோடி பேரில் நீங்கள் எப்படி ஒரு பகுதியோ, அதைப் போலவே இணையம் என்ற உலகில் உங்களுக்கும் ஒரு சின்ன இடம் உண்டு.

காலை எழுவது, அலுவலகம் செல்வது, நண்பர்களுடன் பேசுவது என எப்படி உங்களுடைய ஒருநாள் என்பது, உங்கள் நிஜ வாழக்கையில் பதிவாகிறதோ அதைப் போலவே, உங்கள் புகைப்படங்கள், சோஷியல் மீடியாக்களில் நீங்கள் பதிவிட்ட செய்திகள், தகவல்கள், லைக்ஸ், உரையாடல்கள் என விர்ச்சுவல் உலகிலும் பதிவாகின்றன. நிஜத்தில் நீங்கள் இயங்குவது போலவே, உங்கள் டேட்டாக்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. நீங்கள் கொஞ்சம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மனிதர் என்றால், உங்கள் பெயரை கூகுளில் தேடிப்பாருங்கள். உங்கள் பெயரை தேடும்போது உங்களின் படங்கள், மற்ற சமூக வலைத்தள விவரங்கள் போன்றவை கிடைக்கலாம். 

எனவே நீங்கள் நிஜத்தில் வாழும் இந்த வாழ்க்கையை போலவே, இணையத்தில் வாழும் வாழ்க்கையை உங்களால் நிறுத்த முடியுமா? அதைத்தான் இணையத்தில் இருந்து மறைந்து போதல் அல்லது இன்டர்நெட் சூசைட் என்கின்றனர். அதெப்படி முடியும்? கொஞ்சம் கடினம்தான். ஆனால் முடியும். ஃபேஸ்புக் அக்கவுண்டை டி-ஆக்டிவேட் செய்வது போல, இது எளிதான விஷயமல்ல. ஆனால் சில விஷயங்கள் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம்.

யாரெல்லாம் இதை செய்கின்றனர்?

1. இணையம், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றிற்கு மிகவும் அடிக்ட் ஆனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விடுபட இதனை செய்கின்றனர். 

2. நிஜ வாழ்க்கையே அடிக்கடி போரடிக்கும்போது, இணையம் மட்டும் போரடிக்காதா என்ன? எனவே இதுவரை இணையத்தில் தேடிய, பார்த்த, அனுபவித்த விஷயங்கள் எல்லாமே, போரடித்துவிட்டது எனில், ஒரு கட்டத்தில் இணையத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் அழிப்பதற்காக இதை செய்கின்றனர்.

3. இவை எல்லாவற்றையும் விட இன்னொரு திரில்லும் இருக்கிறது. இணையத்தில் உங்களைப் பற்றிய டேட்டாக்கள் அனைத்தையுமே அழித்துவிட்டால், அங்கே நீங்கள் ஒரு புதிய நபர் அல்லவா? உங்களை யாராலும் கண்டுபிடிக்கவோ, தொடர்புகொள்ளவோ முடியாது அல்லவா? அந்த பிரைவசிக்காகவும் இதை செய்யலாம். பல பேருக்கு புத்தாண்டு சபதமாக கூட இது இருக்கும். ஆனால் இணையம் என்னும் ராட்சச சிலந்தி வலையில் இருந்து, நீங்கள் அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிட முடியாது. இதனை எப்படி செய்யலாம்?

1. சோஷியல் மீடியாதான் முதல் இலக்கு:

நமது அதிகப்படியான நேரத்தையும், டேட்டாவையும் செலவு செய்வது சமூக வலைத்தளங்களில்தான். நம்முடைய தகவல்கள் அதிகம் இருப்பதும் அங்கேதான். எனவே நாம் முதலில் அங்கிருந்துதான் துவங்க வேண்டும். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் (இந்த ஜோடியை பிரிக்கவே முடியாது போல..) போன்ற தளங்களில் உங்கள் கணக்குகளை டெலிட் செய்துவிடுங்கள். டி-ஆக்டிவேட் செய்தால், உங்களுடைய கணக்குகள் முற்றிலுமாக அழியாது.

இணைய

எனவே டெலிட் செய்தால் மட்டுமே, உங்கள் பதிவுகள் முற்றிலும் நீக்கப்படும். ஒருவேளை இவற்றில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு முக்கியம் என நினைத்தால், அவற்றை டவுன்லோடு செய்துவிட்டு டெலிட் செய்துவிடுங்கள். எல்லா சமூக வலைத்தளங்களையும் டெலிட் செய்ய முடியும். உதாரணமாக ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை டெலிட் செய்ய லிங்க்: https://www.facebook.com/help/delete_account

fv2_14412.JPG

2. சேவை இணையதளங்கள்:

சமூக வலைத்தளங்களுக்கு அடுத்து, நமது விவரங்கள் அதிகம் இருக்கும் தளங்கள் என்றால், ஷாப்பிங், கேமிங், செய்தி போன்ற சேவைகளை தரும் இணையதளங்கள்தான். நாம் இணையம் பயன்படுத்தத் துவங்கிய காலம் முதல், எத்தனையோ தேவைகளுக்காக, பல தளங்களில் கணக்குகளை துவக்கியிருப்போம். அதற்கு நமது இ-மெயில் விவரங்கள், போன் எண்கள் போன்றவற்றை கொடுத்திருப்போம். நியூஸ்லெட்டர் உள்ளிட்டவற்றை சப்ஸ்க்ரைப் செய்திருப்போம். அவற்றை முதலில் நீக்க வேண்டும். 

உங்களது மெயிலிலேயே இவற்றை ஒவ்வொன்றாக கண்டுபிடித்து அன்சப்ஸ்கிரைப் செய்யவும், அக்கவுண்டை நீக்கவும் முடியும். ஆனால் அதிகப்படியான தளங்கள் நமக்கு தெரியாமலே நமது தகவல்களை கொண்டிருக்கும். அப்படிப்பட்ட தளங்களை கண்டறிந்து நீக்க, deseat.me என்னும் தளம் நமக்கு உதவுகிறது. உங்கள் ஜிமெயில் அக்கவுன்ட் மூலம், லாகின் செய்த தளங்களின் விவரங்களை இதன் மூலம் கண்டறிவதும், நீக்கவும் உதவுகிறது.

அதே சமயம் உங்கள் கூகுள் அக்கவுன்ட் விவரங்களை மட்டும் உடனே அழித்து விட வேண்டாம். ஏனெனில் அதை வைத்து நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் அதிகம். 

3. நீங்களே தேடி டெலிட் செய்யுங்கள்!

அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் சமூக வலைத்தளங்கள், பிளாக்குகள், இணையதளங்கள், Forums போன்றவற்றில் உங்களது படங்கள், வீடியோக்கள் அல்லது செய்திகள் ஏதேனும் இருக்கிறதா என்பதனை சர்ச் இன்ஜின்கள் உதவியுடன் தேடி தெரிந்து கொள்ளலாம். உங்கள் பெயர், உங்களின் சோஷியல் மீடியா அக்கவுன்ட் பெயர் போன்றவற்றை எல்லாம், வெவ்வேறு சர்ச் இஞ்சின்களில் தேடுங்கள். உங்களுடைய டெலிட்  கவல்கள் ஏதேனும் கிடைக்கலாம்.

அப்படி எதுவும் தென்பட்டால், அந்தந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவற்றை நீக்க முடியும்.  உங்கள் வீடியோ அல்லது ஒரு புகைப்படம் ஒரு வைரல் மெட்டீரியலாக இருந்து, அதிகம் பேர் அதனை பகிர்ந்துள்ளனர் என்றால், அதனை நீக்க அந்தந்த நிறுவனங்களின் உதவியை நாடுவதுதான் ஒரே வழி. 

fv4_14161.JPG

உங்கள் புகைப்படங்களை இணையத்தில் கண்டறிய ரிவர்ஸ் சர்ச் இன்ஜின்களை பயன்படுத்தலாம். உதாரணமாக உங்கள் புகைப்படங்கள் வேறு இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் இருக்கிறதா என்பதனை அறிய, கூகுளின் Search by image ஆப்ஷனை பயன்படுத்தலாம். கூகுளின் சேவைகளில் இருந்து உங்கள் தகவல்களை அழிக்க, https://support.google.com/legal/troubleshooter/1114905?hl=en இந்த லிங்க்கை பயன்படுத்தலாம்.

4. கடைசி இலக்கு:

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையுமே முடித்துவிட்டால், நீங்கள் கடைசியாக செய்ய வேண்டியது உங்கள் இ-மெயிலை கைவிடுவது. ஜிமெயில் அக்கவுன்ட் என்றால், நீங்கள் உங்களின் கூகுள் அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வேண்டும். இதனை டெலிட் செய்துவிட்டால், கூகுளின் மற்ற சேவைகளான மேப்ஸ், யூ-டியூப், மெயில் உள்ளிட்ட எந்த சேவைகளையும் நீங்கள் பெற முடியாது. அதே சமயம், நீங்கள் உங்கள் அக்கவுன்ட்டை டெலிட் செய்த சில நாட்களுக்குள், அதனைத் திரும்ப பெற வேண்டுமானால், Recovery ஆப்ஷனும் இருக்கிறது. அக்கவுன்ட்டை டெலிட் செய்து விட்டால், உங்களின் கூகுள் தொடர்பான தகவல்கள் அனைத்தும், இணையத்தில் இருந்து நீங்கிவிடும். அவற்றை வேறு யாரும் பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாது. அதே சமயம், உங்கள் தகவல்களை வேறு இணையதளங்கள் அல்லது நபர்கள் எடுத்து பயன்படுத்தியிருந்தால் ஏற்கனவே சொல்லியது போல, கூகுளிடம் முறையிட்டுதான் நீக்க முடியும்.

fv5_14366.JPG

5. தனியார் சேவைகள்:

இப்படி நீங்கள் ஒவ்வொரு விஷயமாக செய்பவற்றை ஒட்டுமொத்தமாக செய்துதர, தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன. அவர்கள் உதவியுடனும், நீங்கள் இதனை செய்யலாம். ஆனால், அது செலவு பிடிக்கக் கூடிய விஷயம் என்பதால், அதனைத் தவிர்க்கலாம்.
நிச்சயமாக இவையனைத்தும் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கக் கூடிய வேலை அல்ல. உங்களது தகவல்களை பொறுத்து, சில நாட்கள் கூட எடுத்துக் கொள்ளலாம். இறுதியாக எல்லாமே பண்ணியாச்சு என்றால், தற்போது உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இருக்காது. ஃபேஸ்புக் ஐ.டி இருக்காது, மற்ற சமூக வலைத்தள அக்கவுன்ட் இருக்காது. இணையத்துடன் நீங்கள் கொண்டிருந்த பந்தம் முடிந்துவிட்டது எனலாம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் இன்னும் மிச்சமிருக்கும். அது இதுவரை நீங்கள் இணையத்திற்கு கொட்டிக்கொடுத்த உங்கள் டேட்டா. 

இணையத்தில் ஒரு சேவையை பயன்படுத்த துவங்கும்போதே, அந்த நிறுவனத்திற்கு உங்கள் தகவல்களை கையாளும் அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் கொடுத்து விடுகிறீர்கள். எனவே நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் எல்லா விஷயங்களில் இருந்தும் உங்களை விடுவித்துக் கொண்டாலும், இதுவரை நீங்கள் இணையத்தில் பயன்படுத்திய தரவுகள் அந்தந்த இணையதளங்களின் சேமிப்பில், உலகின் ஏதேனும் சில சர்வர்களில், இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே இணையத்தில் உங்களைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறதே தவிர, நீங்கள் இன்னும் முழுமையாக மறைந்துபோகவில்லை எனலாம். இங்குதான் இணையத்திற்கும், இன்டர்நெட் சூசைடிற்கும் இடையே முரண்பாடுகள் எழுகின்றன.

http://www.vikatan.com/news/miscellaneous/76160-how-to-completely-delete-yourself-from-the-internet.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.