Jump to content

2016-ன் சிறந்த 10 மலையாளப்படங்கள் #Rewind2016


Recommended Posts

2016-ன் சிறந்த 10 மலையாளப்படங்கள் #Rewind2016

 

இந்த வருடம் மலையாளத்தில் நிறைய நல்ல படங்கள், நிறைய நல்ல புது இயக்குநர்கள் வருகையும் இருந்தது. அந்தப் பலவற்றிலிருந்து தவறவிடக் கூடாத சில இங்கே...

ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம்

மலையாளம்

நிஜத்தில் தன் நண்பர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தைத் தழுவி வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்த படம். கொஞ்சம் நழுவியிருந்தால் டிவி சீரியல் போல ஆகியிருக்கும் அபாயத்தை நேர்த்தியாக கையாண்டிருப்பார் வினித். குடும்பத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சரிசெய்யும் மகனின் கதை தான் படம். மிக மெதுவாக நகரும் கதை என்றாலும், தரமான ஃபேமிலி ட்ராமா, ஃபாசிட்டிவ் எண்ணம் விதைக்கும் வசனங்களால் ரசிகர்களைக் கவர்ந்தது. 100 நாளுக்கு மேல் ஓடியது படம்.

தோப்பில் ஜோப்பன்

Toppil_11416.jpg

அப்போது தான் கசபா, ஒயிட் என இரண்டு படங்கள் தோல்வியடைந்திருந்தது மம்முட்டிக்கு. ஜானி ஆண்டனி இயக்கிய தோப்பில் ஜோப்பன் மம்முட்டிக்கு மீண்டும் வெற்றியை கொடுத்தது. காதலில் ஜெயிப்பதற்காக பணம் சேர்ப்பதில் வாலிபத்தை தொலைத்த ஹீரோ, அந்த காதல் கிடைக்காமல் போக குடிக்கு அடிமையாகிறான். பிறகு என்ன நடக்கிறது என்கிற காமெடி கதை தான் படம். 

 

புலிமுருகன்

Puli_11001.jpg

100கோடி க்ளப்பில் இணைந்த முதல் மல்லுவுட் படம். புலிகளை வேட்டையாடும் நாயகன் சில மனிதர்களையும் வேட்டையாடும் கதை. பீட்டர் ஹெயினின் சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. மோகன் லாலில் நடிப்பு, சண்டை, சென்டிமெண்ட் எனப் புகுந்து விளையாடியிருந்தார். 

 

ஆனந்தம்

first-look-poster-aanandam-malayalam-mov

இன்டஸ்ட்ரியல் விசிட் செல்லும் சில கல்லூரி நண்பர்களின் பயணம். காதல், கோபம், வருத்தம், துரோகம், மகிழ்ச்சி என பல உணர்வுகள் அந்தப் பயணத்தில் வெளிப்படுவதும் அதனால் நிகழும் சம்பவங்களுமாக நகரும் கதை தான் ஆனந்தம். இப்படத்தின் மூலம் இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் தயாரிப்பாளராக, கணேஷ் ராஜ் இயக்குநராக ஒரு சேர அறிமுகமானார்.

 

அனுராக கரிக்கின் வெள்ளம்

collage-14-1465888076_11316.jpg

இதுவும் அறிமுக இயக்குநர் படம் தான். ஹாலித் ரஹ்மான் இயக்கத்தில் பிஜு மேனன், ஆசிஃப் அலி, ஆஷா சரத், ரஜிஷா விஜயன் நடித்திருந்தனர். விறைப்பும் முறைப்புமான பிஜு மேனன், காதல் மன்னனாகி மனைவி ஆஷா சரத்திடம் சரண்டராவது, அவரது மகனான ஆசிஃப் அலி தான் காதலித்த ரஜிஷாவை வெறுத்து ப்ரேக்கப் செய்ய நினைப்பது என இரண்டு ட்ராகில் பயணிக்கும் காதல் கதையை ரசிக்கும் படியான ஹூமர் கலந்து கொடுத்திருப்பார்கள்.

மகேஷின்டே பிரதிகாரம்

maheshinte-prathikaram-movie-poster-9008

தன்னை பொது வெளியில் வைத்து அடித்தவனை திருப்பி அடிக்காமல் காலில் செருப்பு அணியமாட்டேன் என்பவனின் பழிதீர்த்தல் முயற்சி தான் கதை. அதுவரை நீங்கள் பார்க்கும் கதை இந்த பகை உண்டாகும் இடத்திற்கு சற்றும் பொருந்தாததாக, அழகான காதலும் இடையிடையே காமெடியுமாய் நகர்ந்து கொண்டிருக்கும். அதன் பிறகான கதையும் கூட அப்படித்தான். சின்ன விஷயம் அதை வைத்து இயல்பான திரைக்கதை பின்னியிருப்பார் அறிமுக இயக்குநர் திலேஷ் போத்தன்.

 

ஆக்‌ஷன் ஹீரோ பிஜு

action-hero-biju-box-office-collection_1

படத்தில் பிரத்யேகமாக சொல்ல கதை என்ற ஒன்றும் இருக்காது. பன்ச் வசனம் பேசாத, ஹீரோயிசம் காட்டாத எஸ்.ஐ பிஜுவின் போலீஸ் ஸ்டேஷன் நிகழ்வுகள் தான் படம். வாக்கி டாக்கியைத் தொலைக்கும் கான்ஸ்டெபிள், நடுரேட்டில் குடித்துவிட்டு நிர்வாணமாய் ரகளை செய்யும் ஒருவனை அடக்க திணறும் வேளை என சர்வமும் சாதாரண நிகழ்வுகளாய் இருக்கும் படம். படத்தை தயாரித்ததோடு, நிவின் பாலி அவ்வளவு அழகாக பிஜு வேடத்துக்குப் பொருந்திப் போயிருப்பார், இயல்பான மேக்கிங்கால் அசத்தியிருப்பார் இயக்குநர் அப்ரிட் ஷைன்.

லீலா

Leela_11166.jpg

பிரபல எழுத்தாளர் உண்ணி ஆர் எழுதி, மாத்ரு பூமியில் வெளிவந்த சிறுகதை 'லீலா'வை இயக்குநர் ரஞ்சித் திரைப்படமாக்க ஆராவாரமாக தயாரானார். காரணம் இந்தக் கதையை எந்த களத்துக்குள்ளும் அடைக்க முடியாததாய் இருந்தது. மக்களின் ஆழமற்ற ரசனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஒருவரியில் கதை சொன்னால் தவறான படமோ என நீங்கள் நினைக்கும் அபாயம் இருப்பதால், 'யானை ஒன்றையும், பெண் ஒருத்தியையும் ஒரு காரணத்துக்காக தேடுபவனின் பயணம்' என்பதை கதையாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களைப் படம் பார்க்க தூண்டுமேயானால் குட்டியப்பனாக நடித்திருக்கும் பிஜு மேனன் உங்களை அசத்தக் காத்திருக்கிறார் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

 

கம்மட்டிபாடம்

Kamma_11295.jpg

இது ராஜீவ் ரவியின் வெறித்தனமான படம் என்றே சொல்லலாம். தங்களைக் கொண்டே தங்களின், வாழ்வாதாரத்தையும் வசிப்பிடத்தையும் பறிக்கும் கைகளை ஒடிக்கும் எளியவனின் கதை. கதையை ஒரு நகரத்தின் வளங்களை அழித்து கட்டடங்களால் நிரப்பப்படும் காலத்தின் பின்னணியில் சொல்லியிருந்தார். இயக்குநர், ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரும் கூட என்பதால் உணர்வுப் பூர்வமாக பதிவு செய்திருந்தார் ராஜீவ் ரவி. துல்கர் சல்மான், விநாயகன், மணிகண்டன் என மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

 

ஒழிவுதிவசத்தே களி

ODK_11420.jpg

சென்ற ஆண்டே பலதிரைவிழாக்களில் வெளியாகி கொண்டாடப்பட்டு, சிறந்த படம் என கேரள மாநில விருதையும் வென்ற படம் ஒழிவிதிவசதே களி. இதுவும் உண்ணி ஆர் எழுதிய சிறுகதை தான். அதை முழுமையான கதையாக மாற்றியிருப்பார் இயக்குநர் சனல் குமார் சசிதரண். ஒரு தேர்தலுக்கான விடுமுறை நாளில் வாக்களிக்க செல்லாமல் ஐந்து நண்பர்கள் ஒரு பங்களாவில் சந்தித்துக் கொள்கின்றனர். குடி குடி குடி... என்றிருக்கும் அவர்களுக்கு போதை உச்சத்துக்கு செல்கிறது. மெல்ல மெல்ல அவர்களுக்குள் இருக்கும் உண்மை மிருகங்கள் பேச்சின் வழியே தலை துக்குகிறது. கடைசியில் நம்மை பதறவைக்கும் அந்த முடிவு.... அதிர்ச்சியில் உறையவும் வைக்கும்.

http://www.vikatan.com/news/cinema/76127-top-malayalam-movies-in-2016.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.