Jump to content

2016-ன் சிறந்த 10 மலையாளப்படங்கள் #Rewind2016


Recommended Posts

2016-ன் சிறந்த 10 மலையாளப்படங்கள் #Rewind2016

 

இந்த வருடம் மலையாளத்தில் நிறைய நல்ல படங்கள், நிறைய நல்ல புது இயக்குநர்கள் வருகையும் இருந்தது. அந்தப் பலவற்றிலிருந்து தவறவிடக் கூடாத சில இங்கே...

ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம்

மலையாளம்

நிஜத்தில் தன் நண்பர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தைத் தழுவி வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்த படம். கொஞ்சம் நழுவியிருந்தால் டிவி சீரியல் போல ஆகியிருக்கும் அபாயத்தை நேர்த்தியாக கையாண்டிருப்பார் வினித். குடும்பத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சரிசெய்யும் மகனின் கதை தான் படம். மிக மெதுவாக நகரும் கதை என்றாலும், தரமான ஃபேமிலி ட்ராமா, ஃபாசிட்டிவ் எண்ணம் விதைக்கும் வசனங்களால் ரசிகர்களைக் கவர்ந்தது. 100 நாளுக்கு மேல் ஓடியது படம்.

தோப்பில் ஜோப்பன்

Toppil_11416.jpg

அப்போது தான் கசபா, ஒயிட் என இரண்டு படங்கள் தோல்வியடைந்திருந்தது மம்முட்டிக்கு. ஜானி ஆண்டனி இயக்கிய தோப்பில் ஜோப்பன் மம்முட்டிக்கு மீண்டும் வெற்றியை கொடுத்தது. காதலில் ஜெயிப்பதற்காக பணம் சேர்ப்பதில் வாலிபத்தை தொலைத்த ஹீரோ, அந்த காதல் கிடைக்காமல் போக குடிக்கு அடிமையாகிறான். பிறகு என்ன நடக்கிறது என்கிற காமெடி கதை தான் படம். 

 

புலிமுருகன்

Puli_11001.jpg

100கோடி க்ளப்பில் இணைந்த முதல் மல்லுவுட் படம். புலிகளை வேட்டையாடும் நாயகன் சில மனிதர்களையும் வேட்டையாடும் கதை. பீட்டர் ஹெயினின் சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. மோகன் லாலில் நடிப்பு, சண்டை, சென்டிமெண்ட் எனப் புகுந்து விளையாடியிருந்தார். 

 

ஆனந்தம்

first-look-poster-aanandam-malayalam-mov

இன்டஸ்ட்ரியல் விசிட் செல்லும் சில கல்லூரி நண்பர்களின் பயணம். காதல், கோபம், வருத்தம், துரோகம், மகிழ்ச்சி என பல உணர்வுகள் அந்தப் பயணத்தில் வெளிப்படுவதும் அதனால் நிகழும் சம்பவங்களுமாக நகரும் கதை தான் ஆனந்தம். இப்படத்தின் மூலம் இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் தயாரிப்பாளராக, கணேஷ் ராஜ் இயக்குநராக ஒரு சேர அறிமுகமானார்.

 

அனுராக கரிக்கின் வெள்ளம்

collage-14-1465888076_11316.jpg

இதுவும் அறிமுக இயக்குநர் படம் தான். ஹாலித் ரஹ்மான் இயக்கத்தில் பிஜு மேனன், ஆசிஃப் அலி, ஆஷா சரத், ரஜிஷா விஜயன் நடித்திருந்தனர். விறைப்பும் முறைப்புமான பிஜு மேனன், காதல் மன்னனாகி மனைவி ஆஷா சரத்திடம் சரண்டராவது, அவரது மகனான ஆசிஃப் அலி தான் காதலித்த ரஜிஷாவை வெறுத்து ப்ரேக்கப் செய்ய நினைப்பது என இரண்டு ட்ராகில் பயணிக்கும் காதல் கதையை ரசிக்கும் படியான ஹூமர் கலந்து கொடுத்திருப்பார்கள்.

மகேஷின்டே பிரதிகாரம்

maheshinte-prathikaram-movie-poster-9008

தன்னை பொது வெளியில் வைத்து அடித்தவனை திருப்பி அடிக்காமல் காலில் செருப்பு அணியமாட்டேன் என்பவனின் பழிதீர்த்தல் முயற்சி தான் கதை. அதுவரை நீங்கள் பார்க்கும் கதை இந்த பகை உண்டாகும் இடத்திற்கு சற்றும் பொருந்தாததாக, அழகான காதலும் இடையிடையே காமெடியுமாய் நகர்ந்து கொண்டிருக்கும். அதன் பிறகான கதையும் கூட அப்படித்தான். சின்ன விஷயம் அதை வைத்து இயல்பான திரைக்கதை பின்னியிருப்பார் அறிமுக இயக்குநர் திலேஷ் போத்தன்.

 

ஆக்‌ஷன் ஹீரோ பிஜு

action-hero-biju-box-office-collection_1

படத்தில் பிரத்யேகமாக சொல்ல கதை என்ற ஒன்றும் இருக்காது. பன்ச் வசனம் பேசாத, ஹீரோயிசம் காட்டாத எஸ்.ஐ பிஜுவின் போலீஸ் ஸ்டேஷன் நிகழ்வுகள் தான் படம். வாக்கி டாக்கியைத் தொலைக்கும் கான்ஸ்டெபிள், நடுரேட்டில் குடித்துவிட்டு நிர்வாணமாய் ரகளை செய்யும் ஒருவனை அடக்க திணறும் வேளை என சர்வமும் சாதாரண நிகழ்வுகளாய் இருக்கும் படம். படத்தை தயாரித்ததோடு, நிவின் பாலி அவ்வளவு அழகாக பிஜு வேடத்துக்குப் பொருந்திப் போயிருப்பார், இயல்பான மேக்கிங்கால் அசத்தியிருப்பார் இயக்குநர் அப்ரிட் ஷைன்.

லீலா

Leela_11166.jpg

பிரபல எழுத்தாளர் உண்ணி ஆர் எழுதி, மாத்ரு பூமியில் வெளிவந்த சிறுகதை 'லீலா'வை இயக்குநர் ரஞ்சித் திரைப்படமாக்க ஆராவாரமாக தயாரானார். காரணம் இந்தக் கதையை எந்த களத்துக்குள்ளும் அடைக்க முடியாததாய் இருந்தது. மக்களின் ஆழமற்ற ரசனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஒருவரியில் கதை சொன்னால் தவறான படமோ என நீங்கள் நினைக்கும் அபாயம் இருப்பதால், 'யானை ஒன்றையும், பெண் ஒருத்தியையும் ஒரு காரணத்துக்காக தேடுபவனின் பயணம்' என்பதை கதையாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களைப் படம் பார்க்க தூண்டுமேயானால் குட்டியப்பனாக நடித்திருக்கும் பிஜு மேனன் உங்களை அசத்தக் காத்திருக்கிறார் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

 

கம்மட்டிபாடம்

Kamma_11295.jpg

இது ராஜீவ் ரவியின் வெறித்தனமான படம் என்றே சொல்லலாம். தங்களைக் கொண்டே தங்களின், வாழ்வாதாரத்தையும் வசிப்பிடத்தையும் பறிக்கும் கைகளை ஒடிக்கும் எளியவனின் கதை. கதையை ஒரு நகரத்தின் வளங்களை அழித்து கட்டடங்களால் நிரப்பப்படும் காலத்தின் பின்னணியில் சொல்லியிருந்தார். இயக்குநர், ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரும் கூட என்பதால் உணர்வுப் பூர்வமாக பதிவு செய்திருந்தார் ராஜீவ் ரவி. துல்கர் சல்மான், விநாயகன், மணிகண்டன் என மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

 

ஒழிவுதிவசத்தே களி

ODK_11420.jpg

சென்ற ஆண்டே பலதிரைவிழாக்களில் வெளியாகி கொண்டாடப்பட்டு, சிறந்த படம் என கேரள மாநில விருதையும் வென்ற படம் ஒழிவிதிவசதே களி. இதுவும் உண்ணி ஆர் எழுதிய சிறுகதை தான். அதை முழுமையான கதையாக மாற்றியிருப்பார் இயக்குநர் சனல் குமார் சசிதரண். ஒரு தேர்தலுக்கான விடுமுறை நாளில் வாக்களிக்க செல்லாமல் ஐந்து நண்பர்கள் ஒரு பங்களாவில் சந்தித்துக் கொள்கின்றனர். குடி குடி குடி... என்றிருக்கும் அவர்களுக்கு போதை உச்சத்துக்கு செல்கிறது. மெல்ல மெல்ல அவர்களுக்குள் இருக்கும் உண்மை மிருகங்கள் பேச்சின் வழியே தலை துக்குகிறது. கடைசியில் நம்மை பதறவைக்கும் அந்த முடிவு.... அதிர்ச்சியில் உறையவும் வைக்கும்.

http://www.vikatan.com/news/cinema/76127-top-malayalam-movies-in-2016.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.