Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 5/29/2018 at 11:33 PM, Ahasthiyan said:

ஆயிரம் கண்ணழகி அமரவும் வைப்பாள், சொகுசாக  தூங்கவும் வைப்பாள் , அவள் யார்?

 

On 5/30/2018 at 12:46 AM, புங்கையூரன் said:

பிரப்பம் கதிரை....ஈச்சார்!

இந்த... ஈச்சார், 
எனக்கு... மிகப் பழைய,  நினைவுகளை கொண்டு வந்து விட்டது.
அதில்.. சோகமும், சந்தோசமும்  அடங்கும்.
நேரம்... கிடைத்ததால்... உங்களுடன் பகிர்கின்றேன்.

அதில்... காலை ஆட்டிக் கொண்டு,  பத்திரிகை செய்திகளை வாசிப்பது ஒரு இன்பம்.
ஒரு, துக்க செய்தி.. வரும் போது .... அங்கு  இருப்பவர்களின், முகத்தின் அழகை பார்க்க முடியாது.
இப்படித்தான்... ஒரு நாள்...

 

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

 

இந்த... ஈச்சார், 
எனக்கு... மிகப் பழைய,  நினைவுகளை கொண்டு வந்து விட்டது.
அதில்.. சோகமும், சந்தோசமும்  அடங்கும்.
நேரம்... கிடைத்ததால்... உங்களுடன் பகிர்கின்றேன்.

அதில்... காலை ஆட்டிக் கொண்டு,  பத்திரிகை செய்திகளை வாசிப்பது ஒரு இன்பம்.
ஒரு, துக்க செய்தி.. வரும் போது .... அங்கு  இருப்பவர்களின், முகத்தின் அழகை பார்க்க முடியாது.
இப்படித்தான்... ஒரு நாள்...

 

காலை நன்றாக நீட்டிப் படுத்திருக்கும் போது.....முதுகுப் பக்கத்தில...காத்துப் படும் போது.....வருகின்ற சுகம் இருக்கே......!

அதை எழுத்தில் வடிக்க இயலாது!

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....தமிழ் சிறி.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

காலை நன்றாக நீட்டிப் படுத்திருக்கும் போது.....முதுகுப் பக்கத்தில...காத்துப் படும் போது.....வருகின்ற சுகம் இருக்கே......!

அதை எழுத்தில் வடிக்க இயலாது!

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....தமிழ் சிறி.!

ஊக்கப் படுத்தியமைக்கு  நன்றி, புங்கை.?
வயது, வட்டுக்குள் போற நேரம்... "பிளாஷ்---- பக்" அடிக்க, யோசனையாக  உள்ளது. ?
அத்துடன்....  பொறுமையாக, இருந்து... ஒரு நல்ல  தலைப்பையும் ஆரம்பிக்க, பயமாக உள்ளது ஐயா.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

 

இந்த... ஈச்சார், 
எனக்கு... மிகப் பழைய,  நினைவுகளை கொண்டு வந்து விட்டது.
அதில்.. சோகமும், சந்தோசமும்  அடங்கும்.
நேரம்... கிடைத்ததால்... உங்களுடன் பகிர்கின்றேன்.

அதில்... காலை ஆட்டிக் கொண்டு,  பத்திரிகை செய்திகளை வாசிப்பது ஒரு இன்பம்.
ஒரு, துக்க செய்தி.. வரும் போது .... அங்கு  இருப்பவர்களின், முகத்தின் அழகை பார்க்க முடியாது.
இப்படித்தான்... ஒரு நாள்...

 

உங்களின் அனுபவங்களை எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கின்றோம்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில்: யானை 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

20 hours ago, தமிழ் சிறி said:

 

இந்த... ஈச்சார், 
எனக்கு... மிகப் பழைய,  நினைவுகளை கொண்டு வந்து விட்டது.
அதில்.. சோகமும், சந்தோசமும்  அடங்கும்.
நேரம்... கிடைத்ததால்... உங்களுடன் பகிர்கின்றேன்.

அதில்... காலை ஆட்டிக் கொண்டு,  பத்திரிகை செய்திகளை வாசிப்பது ஒரு இன்பம்.
ஒரு, துக்க செய்தி.. வரும் போது .... அங்கு  இருப்பவர்களின், முகத்தின் அழகை பார்க்க முடியாது.
இப்படித்தான்... ஒரு நாள்...

 

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....தமிழ் சிறி.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கடிக்க தெரியாதவனுக்கு பற்கள் பல, அது என்ன?

Link to comment
Share on other sites

34 minutes ago, Ahasthiyan said:

 

கடிக்க தெரியாதவனுக்கு பற்கள் பல, அது என்ன?

சீப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

கடிக்க தெரியாதவனுக்கு பற்கள் பல, அது என்ன?

Bildergebnis für à®à¯à®ªà¯à®ªà¯

சீப்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சீப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில்: சீப்பு 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

மரம் மேல் கிளை, கிளை மேல் மரம், அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

மரம் மேல் கிளை, கிளை மேல் மரம், அது என்ன?

Ãhnliches Foto Ãhnliches Foto

குருவிச்சை மரம். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாசி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில்அன்னாசி

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

இங்கே ஆளாளுக்கு வெட்டுவார்கள் ஆனாலும் உற்சாகம் குறையாது, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அதிஷ்ட சீட்டு (லொட்டோ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Ahasthiyan said:

இங்கே ஆளாளுக்கு வெட்டுவார்கள் ஆனாலும் உற்சாகம் குறையாது, அது என்ன?

Ãhnliches Foto

சிகை அலங்கார நிலையம். (சலூன்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில்: தாயம் 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம், எவராலும் பார்க்க இயலாத கடிகாரம், அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மனதை உலுக்கிய சம்பவம்...

நான் எப்போதும் சாதாரண மக்களுடன் இயல்பாக பழகும் குணம் உடையவன்

தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பெரியவர் வெய்யிலிலும் மழையிலும் பொம்மைகள் விற்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்...

நேன்று மாலை 
குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கலாம் என்று அவரிடம் ஒரு வெள்ளை நிற பூனை பொம்மை குடுங்கய்யா என்றேன்

அவர் 80 ருபாய் என்றார் பணக்கார கடைகளில் பேரம் பேசாமல் ஏழைகளிடம் தானே நாம் பேரம் பேசுவோம் அதுதானே சராசரி மனிதர்களின் இயல்பு...

அதனால் நான் என்னங்கைய்யா ஒரு குழந்தை பொம்மை 80 ரூபாயா 70 ரூபாய்க்கு குடுங்க என்றேன் அவர் என் கண்களை உற்றுப் பார்த்து இதை குழந்தைகளுக்கா வாங்கறீங்க என்றார்

நான் ஆமாம் என்றேன்.. அவர் கொஞ்சம் மெதுவான குரலில் சரி குடுங்க என்றார்

அவர் கண்களில் லேசாக கலங்கியதை நான் கவனித்தேன்.. அது மனதை என்னவோ செய்ய.... ஏன் அய்யா என்னாச்சு ஏன் அழறீங்க ன்னு கேட்டேன் ஒன்னும் இல்ல சார் என்றார் நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்கவும் அவர் மெதுவாக சொல்ல ஆரம்பித்தார்

ஆவுடையப்பன் (77) பார்வதி (73 )
தம்பதிகளுக்கு 6 குழந்தைகள்
மிகவும்ஏழ்மையான குடும்பம்

ஆவுடையப்பன் சொல்கிறார் மிகவும்
கஷ்டமான நிலையில்பிள்ளைகளை
வளர்தேன் பலநாட்கள்
நானும் மனைவியும் சாப்பிடுவது கூட 
இல்லை இருப்பதை பிள்ளைகளுக்கு
கொடுத்துவிடுவோம்

பலநாள் இரவுபட்டினி இருந்திருக்கிறோம்
ஒருநாள்கூட மனைவி இதற்காக
என்னோடுசண்டை போட்டதில்லை
பிள்ளைகள் எல்லாம் திருமணம்
முடித்து சென்றுவிட்டனர் 
தடுமாறும் வயது ஆதலால் பெற்ற மக்களின்
வீட்டில் போய்இருக்கலாம் என்ற
எண்ணத்தில் மூத்த மகனிடம்
சொன்னேன்

அதற்குஅவன் இருவரையும் கூட்டிக் கொண்டு போய் வைத்து பராமரிக்க முடியாது யாரவது ஒருவர்
வரலாம் ..அப்படி நான் மூத்த மகன்
வீட்டிற்கும் மனைவி வேறுஒருமகன்
வீட்டிற்கும் சென்றோம்

47 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவியை பிரிந்து தனிமையில்
....பலநாட்கள் அழுதுஇருக்கிறேன்

மனைவியின் நினைவுகள் இரண்டு வார்த்தை கூட பேச முடியாமல் அழுதிருக்கிறேன் இறுதியில் என்மனைவி இருக்கும் ஊருக்கு
சென்றேன்

என்மனைவியேடு சொன்னேன்...
நாம் வேறு எங்காவது போய் விடலாமா என்றேன் .மனைவியும் அழுது கொண்டே சம்மதித்தாள் வெளியே வந்து ஒருவருடமாகிறது

நான் குழந்தைகளின் பொம்மைகள்
நடந்து விற்கிறேன் தினமும் 80 ரூபாய் முதல் 100 வரைகிடைக்கும் வயது77 ஆகிறது எப்போதுவேண்டுமானாலும் நான் இறந்து போகலாம் ஏன்
நான் நடந்துகொண்டிருக்கும் போதே கூட மரணம் வரலாம்

அதனால்
அந்த 100ரூபாயில் கொஞ்சம் மிச்சம்
பிடித்து சேமிக்கிறேன் அது எங்கள் மரணசெலவிற்கு.என் பிள்ளைகளுக்கு அந்த செலவு கூட வேண்டாம் அதை மனைவியிடம் கொடுத்து வைக்கிறேன்

ஒருநாள் இந்தபணம் எதற்கு சேமிக்கிறீர்கள் என்று என்மனைவி
கேட்டாள் .......நம் மரணசெலவிற்கு
என்றேன் சத்தமாக கத்தி அழுது விட்டாள்

இப்போது என்மனைவியின் பிரார்த்தனை ......என்கணவர் மரணிக்கும் அதே நேரத்தில்
எனக்கும் மரணத்தை கொடு ...சாமி என்று அடிக்கடி சொல்கிறாள்

என் பிரார்த்தனையும் அதுவே தான் என்று அவர் சொல்லவும்

இதை கேட்டுக்கொண்டிருந்த நான் மனதால் நொறுங்கிப் போனேன்

நீங்கள் இங்கே இருப்பது உங்கள் பிள்ளைகளுக்கு தெரியுமா என்றேன்......

அவர் தெரியாது என்றார் ... எனக்கு மனம் கனத்துப் போனது...

நாம் நாகரிகமான உலகில் தான் வாழ்கிறோமா

சாதாரண மக்களிடம் தான் எத்தனை எத்தனை வலிகள் புதைந்திருக்கின்றன....

ப பி .

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் மூலம்  நமது  நிழல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில்: இதயம் 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for à®à®²à¯ à®à®³à®¿

 

ஒரு வித்தியாசமான கேள்வி இன்றைக்கு:

கல்லுக்குள் சிற்பம் உறங்கும்  அதை சின்ன உள்ளி தட்டி தட்டி எழுப்பும், அது கல்லின் தோல்வியா? அல்லது உளியின் வெற்றியா? 

தெரிந்தவர்கள் விளக்கத்துடன் பதில் எழுதவும், உவமானங்கள் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணைக் காது தாண்டி ஆயிரம் தோசை தின்றாலும் பச்சிலை பசியடங்காது, அது என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.