Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள், அது என்ன?

Bildergebnis für அம்மி.

அம்மி. 

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழரசு said:

ஆட்டுக்கல் , அம்மி, செக்கு.  

நீங்கள் ஒண்டுக்கு மூண்டு பதில் போட்டாலும் ஒரு பதிலுக்குத்தான் செக்கு அனுப்பி வைக்கப் படும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:  அம்மி,/ஆட்டுக்கல்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ , அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ , அது என்ன?

சிரிப்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறைப்பு .....!இது மட்டும்தான் வாய்க்குள் வந்து வாயே வெந்து வாய் நொந்து வாய் நீரில் மலர்ந்து  மறையும்  பூ.....!  tw_blush:

Image associée

 

கண்களாலும் சிரிக்க முடியும்....!  tw_blush:

Image associée

 

Link to comment
Share on other sites

குஸ்பூ இல்லையா.tw_blush:

5 minutes ago, suvy said:

உறைப்பு .....!இது மட்டும்தான் வாய்க்குள் வந்து வாயே வெந்து வாய் நொந்து வாய் நீரில் மலர்ந்து  மறையும்  பூ.....!  tw_blush:

Image associée

 

கண்களாலும் சிரிக்க முடியும்....!  tw_blush:

Image associée

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

வாலால் சிரிக்கும் பப்பி .....! tw_blush:

குஸ்பு ...தப்பு நவீனன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:  சிரிப்பு

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

பாதாளத்தில் பிறந்தவன், பம்பரத்தில் சுழன்றவன், இளம் வெயிலில் காய்ந்தவன், எரி நெருப்பில் வெந்தவன், எல்லோர் வீட்டிலும் இருப்பவன், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

 

 

பாதாளத்தில் பிறந்தவன், பம்பரத்தில் சுழன்றவன், இளம் வெயிலில் காய்ந்தவன், எரி நெருப்பில் வெந்தவன், எல்லோர் வீட்டிலும் இருப்பவன், அவன் யார்?

மண் சட்டி அல்லது மண்பானை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்பானை, மண் சட்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

பாதாளத்தில் பிறந்தவன், பம்பரத்தில் சுழன்றவன், இளம் வெயிலில் காய்ந்தவன், எரி நெருப்பில் வெந்தவன், எல்லோர் வீட்டிலும் இருப்பவன், அவன் யார்?

Ähnliches Foto

மண் சட்டி, பானை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

அகஸ்தியன்....  எங்கே....?  tw_glasses:
ஒரு போட்டி என்றால்.... தொய்வு இல்லாமல், தொடர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
அதுதான்...  போட்டியில், பங்கு பற்றும் ஆட்களுக்கு, "குளுக்கோஸ்" கொடுத்த  உற்சாகமாக இருக்கும்.
நீங்கள்...  கொஞ்சம், சோர்ந்து..போன மாதிரி, இருக்கு.
"வட்  இஸ்  த   பிராப்பிளம்?"  எங்களுக்கு சொல்லுங்கோ... தீர்த்து... வைக்கிறம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/09/2017 at 10:25 PM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

அகஸ்தியன்....  எங்கே....?  tw_glasses:
ஒரு போட்டி என்றால்.... தொய்வு இல்லாமல், தொடர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
அதுதான்...  போட்டியில், பங்கு பற்றும் ஆட்களுக்கு, "குளுக்கோஸ்" கொடுத்த  உற்சாகமாக இருக்கும்.
நீங்கள்...  கொஞ்சம், சோர்ந்து..போன மாதிரி, இருக்கு.
"வட்  இஸ்  த   பிராப்பிளம்?"  எங்களுக்கு சொல்லுங்கோ... தீர்த்து... வைக்கிறம். :grin:

மன்னிக்கவும் தமிழ் சிறி மற்றும் விடுகதையில் பங்குபற்றுபவர்கள்.
கடந்த சில நாட்களாக தினமும் யாழுக்கு வர முடியவில்லை, இனிமேல் தினமும் வர முயசிக்கின்றேன்.

உங்கள் அனைவரின் ஆர்வத்திற்கும் நன்றி, வாழ்த்துக்கள் 

 

சரியான பதில்:  மண் சட்டி அல்லது மண்பானை

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அட்டைக்கு ஆயிரம் கண், முட்டைக்கு மூன்று கண், நான் பெத்த ராசாவுக்கு ஒரே ஒரு கண், அவை என்ன? (மூன்று பதில்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Ahasthiyan said:

 

அட்டைக்கு ஆயிரம் கண், முட்டைக்கு மூன்று கண், நான் பெத்த ராசாவுக்கு ஒரே ஒரு கண், அவை என்ன? (மூன்று பதில்கள்)

அரிதட்டு, தேங்காய், தையல் ஊசி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

அரிதட்டு. 

 

Bildergebnis für தேங்காய்,

தேங்காய்.

Ähnliches Foto

தையல் ஊசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:  அரிதட்டு, தேங்காய், தையல் ஊசி. 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

சுவி வித்தியாசமான, சரியான பதில்கள் 

 

 

 

ஆள் இறங்காத ஆழத்தில் ஆடு இறங்கிக் கூத்தாடுது, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:  கிணற்று வாளி

வணக்கம் உறவுகளே , இந்த திரியில் தாராளமாக நீங்களும் உங்கள் விடுகதைகளை இணைக்கலாம், அது  பயனுள்ளதாகவும் இருக்கும் 

அன்புடன் 
அகஸ்தியன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பூ

 

 

நாட்டார் மகளை ஒட்டாமல் மூடியிருக்கிறது, அது என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.