Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-26 at 9:45 PM, Ahasthiyan said:

 

பார்த்தவன் எடுக்கவில்லை, பார்க்காதவன் எடுத்தான், எடுத்தவன் தின்னவில்லை, எடுக்காதவன் தின்றான், அவை என்ன?

சரியான பதில்: கண், கை, வாய் 

 

 

ஊருக்கு நாட்டாமைக்காரன், ஆனால் தான் சாப்பிட்ட இலையை எடுக்க மாட்டான், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றியுள்ள நாய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Ahasthiyan said:

ஊருக்கு நாட்டாமைக்காரன், ஆனால் தான் சாப்பிட்ட இலையை எடுக்க மாட்டான், அவன் யார்?

Bildergebnis für தெரு நாய்.

நாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:நாய்.
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

வண்ண வண்ண உடம்புக்காரன், வகையான ஆட்டக்காரன், இடி மழைக்கு சாட்சிக்காரன், ஒரு நாட்டின் ஆட்சிக்காரன், அவன் யார்? அவன் ஆளும் நாடு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

வானவில் ..... !

ஆகாயம் .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Ahasthiyan said:

வண்ண வண்ண உடம்புக்காரன், வகையான ஆட்டக்காரன், இடி மழைக்கு சாட்சிக்காரன், ஒரு நாட்டின் ஆட்சிக்காரன், அவன் யார்? அவன் ஆளும் நாடு எது?

வானவில்.  வானம்.

Bildergebnis für regenbogen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் இதுவல்ல, விடுகதையை வடிவாக வாசிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Ahasthiyan said:

சரியான பதில்:நாய்.
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

வண்ண வண்ண உடம்புக்காரன், வகையான ஆட்டக்காரன், இடி மழைக்கு சாட்சிக்காரன், ஒரு நாட்டின் ஆட்சிக்காரன், அவன் யார்? அவன் ஆளும் நாடு எது?

அவன் யார்?             ஆண் மயில் 

 

அவன் ஆளும் நாடு எது?    காடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎/‎05‎/‎2017 at 2:12 PM, Ahasthiyan said:

சரியான பதில்:நாய்.
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

வண்ண வண்ண உடம்புக்காரன், வகையான ஆட்டக்காரன், இடி மழைக்கு சாட்சிக்காரன், ஒரு நாட்டின் ஆட்சிக்காரன், அவன் யார்? அவன் ஆளும் நாடு எது?

 

இடி அமீன் உகாண்டா:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29.5.2017 at 3:12 PM, Ahasthiyan said:

 

 

 

வண்ண வண்ண உடம்புக்காரன், வகையான ஆட்டக்காரன், இடி மழைக்கு சாட்சிக்காரன், ஒரு நாட்டின் ஆட்சிக்காரன், அவன் யார்? அவன் ஆளும் நாடு எது?

  ஆண்மயில்
இந்தியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:ஆண்மயில், இந்தியா
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

பால் இல்லாமல் பருக்கிறது, நோய் இல்லாமல் இளைக்கிறது, அவன் யார்?

3 hours ago, ரதி said:

 

இடி அமீன் உகாண்டா:rolleyes:

ரதி நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் 

 

9 hours ago, நிலாமதி said:

அவன் யார்?             ஆண் மயில் 

 

அவன் ஆளும் நாடு எது?    காடு 

நிலாமதி அக்கா, அரைவாசி பதில் சரி 

18 hours ago, தமிழ் சிறி said:

வானவில்.  வானம்.

Bildergebnis für regenbogen

தமிழ் சிறி, இந்த புகைப்படம் எடுத்தவரை பாராட்டாமல் இருக்க முடியாது, இணைப்புக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Ahasthiyan said:

 

 

பால் இல்லாமல் பருக்கிறது, நோய் இல்லாமல் இளைக்கிறது, அவன் யார்?

 

 

 

 அவன் என்பதால் சந்திரன்
அவள் என்றால் மதி அல்லது நிலா  
அது என்றால் திங்கள்  tw_blush:tw_blush::107_hand_splayed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் வாத்தியார் 
தமிழ் எங்கெல்லாம் விளையாடுகிறது பாருங்கள் 

நிலவை பற்றி எத்தனை பாடல்கள் உள்ளன 
" நிலவே என்னிடம் நெருங்காதே, நீ இருக்கும் இடத்தில நானில்லை"
" நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா"

இப்படி பல ...

 

பட்ட மரம் ரெண்டு, பால் மரம் நான்கு, வீசும் கயிறு ஒன்று, அவைகள் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசு.....! tw_blush:

Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 இரண்டு கொம்பு  

பால் மடி

 வீசும் வால் உள்ள

 பெண் விலங்கு   ஆடு மாடு  மான் மரை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: பசு கொம்புகள், மடி, வால்
இருவரின் பதில்களையும் ஏற்றுக் கொள்கின்றேன் 
 வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளறினால் சோறுதரும், நீர் ஊற்றினால் சேறு வரும் – அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நெல் வயல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்:நிலம்
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

இந்த திரி தொடங்கி கிட்ட தட்ட ஐந்து  மாதங்கள் முடிவடைந்து விட்டது.  பலர் பங்குபற்றுவது எனக்கு ஊக்கம் அளிக்கிறது. கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு- நன்றிகள் 

இதுவரை 155 விடுகதைகள் கேட்கப் பட்டன. 13இக்கு மட்டும் ஒருவரும் பதில் அளிக்க வில்லை . ஒன்றுக்கு இருவர் ஒரே நேரத்தில் முதலில் பதில் அளித்துள்ளனர். இது போட்டி அரங்கம் அல்ல. இதுவரை வந்த விடுகதைகளும் பதில்களும், முதல் பதில் அளித்தவர்களும்  என்னிடம் Excel கோப்பில் பதிவில்  உள்ளது. அதன்படி,

 

1 வாத்தியார்    39
2 மீரா      28
3 நிலாமதி     25
4 தமிழ் சிறி   14
5 பதில் இல்லை 13
6 நவீனன்     7
6 சுவி       7
7 ஜீவன் சிவா    6
7 கறுப்பி     6
8 வாசி      4
9 நுணாவிலான்   3
9 தமிழினி     3
10 குமாரசாமி   1
           
  மொத்தம்    156
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெட்டை அக்கா தாக்குகிறாள், குட்டை அக்கா தாங்குகிறாள், அவர்கள் யார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.