Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மழை போன பின்பு மாட சாமி குடை பிடித்தான், அது என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Ahasthiyan said:

மழை போன பின்பு மாட சாமி குடை பிடித்தான், அது என்ன?

காளான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

லேட்டாயிட்டுது , சமைத்தே எடுத்து வந்திட்டேன்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/02/2017 at 9:35 PM, Ahasthiyan said:

மழை போன பின்பு மாட சாமி குடை பிடித்தான், அது என்ன?

சரியான பதில்: காளான் 
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

 

நீளப் பாத்தியிலே நீர் ஊற்றி விதையின்றி விளையுது வெள்ளை பூ , அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Ahasthiyan said:

 

 

 

நீளப் பாத்தியிலே நீர் ஊற்றி விதையின்றி விளையுது வெள்ளை பூ , அது என்ன?

உப்பு

Link to comment
Share on other sites

On 2/3/2017 at 4:45 AM, Ahasthiyan said:

நிறைந்த வாழ்வு கிடைக்குமா?

Image result for கிராமத்தின் அழகு


 ஒய்வு பெற்ற பின்னால் ஈழத்தில்  எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஒரு  வீடு! வாசலில் திண்ணை ! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்! கிணறு அவசியம்!! அதனருகில் துவைக்கும் கல், பத்தல், தொட்டி. ஏழெட்டு தென்னை, செவ்வரத்தை பூ மரங்கள் சில ,  மாமரம், பலா மரம், வாழை மரம், கொஞ்சம் வெங்காயம் , மிளகாய், கத்தரி, தக்காளி,கீரைகள் இப்படி சில மரக் கறிகள். ஓரிரு பசு மாடு, ரெண்டு ஆடுகள் 
குக்கிராமத்துக்கு அருகில் ஒரு நாலு ஐந்து  கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு நகரம்  இருக்க வேண்டும் ! வாரம் ஒரு முறை  சைக்கிளில் டவுனுக்கு போய் ஏதேனும் அவசியத் தேவை இருந்தால் வாங்கலாம் !!
காலை எழுந்து வேப்பங் குச்சியால்  பல்விளக்கியதும் நல்ல இலைத் தேயிலையில்  தேநீர்.  அதன் பின்னால் செய்தித்தாள் !! அதை ஒரு பத்தி விடாமல் படித்து முடிக்க வேண்டும்!  காலை உணவு , தோட்டத்தில்  கொஞ்சம் நேரம் வேலை !!
அதன் பின்னால் குளியல்!  ஊரிலுள்ள முருகன் கோவிலுக்கோ  அல்லது பிள்ளையார்  கோவிலுக்கோ நடந்து செல்லுதல், வழிபாடு முடித்து விட்டு வந்தால், மத்தியான சாப்பாடு.  
மதியம் இரண்டு மணி நேரம் வேப்ப மரத்தின் நிழலில் கயிற்றுக் கட்டிலில் ரேடியோ கேட்டுக் கொண்டே தூக்கம்! மாலை ஒரு தேத்தண்ணி  ! கொஞ்சம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் வேலை! ஆடு மாடுகளுக்கு தீனி போடுதல், அப்புறம் கோவிலுக்கு ஆறு மணி போல  ! அங்கு தரிசனத்துக்கு பின்னால் ஒரு ஏழெட்டு பேர்  உட்கார்ந்து பல விஷயங்கள் பற்றி அலசல் ஒரு எட்டு மணி வரை !!
பின் வீடு திரும்பி எளிய சாப்பாடு  ! கொஞ்சம் பால் ! ராத்திரி திண்ணையில்பாய் விரித்துக் கொண்டு அக்கம் பக்கம் வயதானவர்களுடன் இருட்டில் பேசிக் கொண்டே படுக்கை ! தூக்கம் வரும் போது தூங்கிப் போகுதல் !! முதியோர் இல்லம் தேவை இல்லை.
கைத்தொலை பேசி  இல்லை, கணினி இல்லை, டிவி இல்லை, பேஸ்புக் இல்லை, வாட்ஸ்அப் இல்லை எதுவுமே இல்லை ! உடலில் நோயுமில்லை மனதில் கவலையுமில்லை !! வாய்க்குமா? குறைந்த காலம் வாழ்ந்தாலும் நிறைந்த வாழ்வு?

இதைத்தான் நானும் தேடுகின்றேன் - இதுவரை கிடைக்கவில்லை
சொன்னால் நான் விசரணாம், கனவில் வாழுகின்றேனாம் என்கிறார்கள்.

பத்தாததுக்கு அது அந்த காலமாம் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வாத்தியார் said:

உப்பு

சரியான பதில் வாத்தியார், சுவி 
வாழ்த்துக்கள் 

 

 

நல்லவர்  கொள்ளும் தானம், நாலுபேருக்கு தராத தானம், அது என்ன தானம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Ahasthiyan said:

 

 

 

நல்லவர்  கொள்ளும் தானம், நாலுபேருக்கு தராத தானம், அது என்ன தானம்?

நிதானம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் தேடுகின்றேன் - இதுவரை கிடைக்கவில்லை
சொன்னால் நான் விசரணாம், கனவில் வாழுகின்றேனாம் என்கிறார்கள்.

பத்தாததுக்கு அது அந்த காலமாம் என்கிறார்கள்.

ஜீவன் சிவா, இயந்திர வாழ்வில் வாழும் நாம் இப்படியோர் வாழ்க்கையை வாழ முடியாதா என்று கேள்விக்குறியோடு இருக்கின்றோம் . நிச்சயம் ஒரு விடை உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:


 

 

 

நல்லவர்  கொள்ளும் தானம், நாலுபேருக்கு தராத தானம், அது என்ன தானம்?

எள்ளு ....!

பிதிர்கடனில் ஐயருக்கு கொடுப்பது , வேறு யாருக்கும் தானமாக கொடுப்பதில்லை.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதான‌ம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதானமாம் , சமாதானமாம்  ஹா...ஹா....ஹா....,தானத்துக்கு எதுகை மோனை கேட்டிருந்தால் நீங்கள் கூறுவது சரிதான்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நிதானமாம் , சமாதானமாம்  ஹா...ஹா....ஹா....,தானத்துக்கு எதுகை மோனை கேட்டிருந்தால் நீங்கள் கூறுவது சரிதான்...!  tw_blush:

வணக்கம் சமஸ்தானம் :100_pray::11_blush:

Link to comment
Share on other sites

13 hours ago, suvy said:

எள்ளு ....!

பிதிர்கடனில் ஐயருக்கு கொடுப்பது , வேறு யாருக்கும் தானமாக கொடுப்பதில்லை.....!

எள்ளும் இல்லை கொள்ளும் இல்லை 

நிதானமான பதில் லொள்ளு அவைப்புலவரே :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஜீவன் சிவா said:

எள்ளும் இல்லை கொள்ளும் இல்லை 

நிதானமான பதில் லொள்ளு அவைப்புலவரே :grin:

ஓகோ தாங்கள் கறுப்பியின் நிதானத்துக்கு கானம் பாடிவிட்டு இங்கு வந்துள்ளீர்களோ ....! உங்களுக்கு  தரவேண்டியது ஒன்று பாக்கி உள்ளது அது  இதுதான் Afficher l'image d'origine

Link to comment
Share on other sites

3 minutes ago, suvy said:

ஓகோ தாங்கள் கறுப்பியின் நிதானத்துக்கு கானம் பாடிவிட்டு இங்கு வந்துள்ளீர்களோ ....!

என்னை மறந்ததேன் என்று வாத்தியார் கோவிக்கப் போகிறார்.
நான் உங்கள் பதிலைப் பார்த்து சிரித்ததில் எனது பூனைக்குட்டி பயந்து ஓடியே போய்விட்டது.
பச்சைதான் இல்லை தலைவா!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: நிதானம் 
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

குயவன் செய்யாத பானை, மழை பெய்யாமல் தண்ணீர், வண்ணான்  வெளுக்காத வெள்ளை, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய்   ( இளநீர்  உள்ளுடன் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Ahasthiyan said:

குயவன் செய்யாத பானை, மழை பெய்யாமல் தண்ணீர், வண்ணான்  வெளுக்காத வெள்ளை, அது என்ன?

 

5 hours ago, நிலாமதி said:

தேங்காய்   ( இளநீர்  உள்ளுடன் )

Bildergebnis für இளநீர்    Bildergebnis für இளநீர்

தேங்காய்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.