Jump to content

அதிகரிக்கும் ஆயுட் காலத்தால் வீதிக்கு துரத்தப்படும் முதியவர்கள்


Recommended Posts

அதிகரிக்கும் ஆயுட் காலத்தால் வீதிக்கு துரத்தப்படும் முதியவர்கள்
 
 
அதிகரிக்கும் ஆயுட் காலத்தால் வீதிக்கு துரத்தப்படும் முதியவர்கள்
அண்மையில் கொழும்பு வீதியொன்றை கிறிஸ்மஸ் வீதியாக சில நாட்களுக்கு முன்பு மாற்றியிருந்தார்கள். கொழும்பில் உள்ள வர்கள் நத்தார் கொண்டாட்டத்தில் முழுமையாகப் பங்குபற்றட்டும் என்ற உயர்ந்த நோக்ககோடு இவ்வாறு மாற்றப்பட்டது.
 
இது ஒரு செய்தியென்றால் இப்பொழுது சொல்லப்போகும் செய்தி  சொந்த வீடின்றி வீதிகளுக்கு விரட்டப்பட்டுள்ள ஒரு சாராருக்கு இந்தக் கிறிஸ்மஸ் மட்டுமல்ல எல்லாமே வீதியில்தான் என்ற அவலநிலை வந்து சேர்ந்திருக்கின்றது. 
 
இந்த நத்தார் மட்டுமல்ல வரப்போகும் பொங்கல், ஈஸ்டர், வெசாக், தீபாவளி என்று எல்லாப் பண்டிகைகளுமே இவர்களுக்குத் தெருவில்தான்...
1482822685_unnamed%20%283%29.jpg
நடுத்தெருவுக்கு வரும் வயதாளிகள் தொகையும் முதியோர் இல்லத்திற்குள் வந்துசேருவோர் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்கின்றன புள்ளி விபரங்கள்.
 
சண்டே லீடரின் செய்தியின்படி இவர்களது செய்தியாளர்கள் பல வயதாளிகளை-(அதிகமானவர்கள் ஆண்கள்) தெமட்டக்கொட, வத்தளை, ராகம ஆகிய இடங்களிலுள்ள பாலங்களின் கீழே படுத்துறங்குவதை நேரில் கண்டுள்ளார்கள். தெமட்டக்கொட பாலத்தின் கீழ் வந்து சேருவோர் தொகை கடந்த சில மாதங்களில் அதிகரித்திருப்பதாக இவர்கள் கூறுகின்றார்கள்.
 
இந்தப் பாலத்தையொட்டியுள்ள கடைகளின் சொந்தக்காரர்கள் இந்த அதிகரிப்பு அச்சமூட்டுவதாக உள்ளதென தெரிவித்துள்ளனர்.
 
இந்தப் பாலத்தடி அகதிகளில் ஒருவரான பந்துல சோமரட்ண என்பவர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் நான் தெருவுக்கு வந்ததே என் மருமகளால்தான் என்று தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
 
நான் ஓர் அரச நிறுவன ஊழியனாகப் பணியாற்றி வந்தேன்.  நான் உழைத்ததை எல்லாம் பிள்ளைகள் நலத்திற்காக கொடுத்து வந்தேன். எனது  பெண் பிள்ளைகள் வேறிடம் சென்று விட்டார்கள்.  கடந்த சில வருடங்களாக அவர்கள் என்னுடன் மிக அரிதாகவே பேசுவதுண்டு. என்னைக் கவனித்தது என்னுடைய மகன்தான். 2016 தொடக்கம் கதை மாறிவிட்டது. எனக்கு வாய்த்த மருமகள் என்னைக் கவனிப்பதில்லை. இதைக் கவனித்த மகன் மருமகளோடு தகராறு செய்ய குடும்பம் குலையக்கூடாது என்பதற்காக நானே வெளியில் வந்துவிட்டேன். எனக்குக் கிடைக்கும் சிறிய ஓய்வூதியப் பயணம் எனக்குப் போதுமானது' என்று தன் கதையைச் சொல்லி முடித்த அவர் ஓர் ஆதாரம் போல தன்னிடமிருந்த மக்கள் வங்கி சேமிப்புப் புத்தகத்தையும் காண்பித்தார்.
1482822699_unnamed%20%282%29.jpg
தன்னைப் போன்றவர்களைக் கவனிக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தங்க ஓர் இடத்தையாவது ஒதுக்கித்தர வேண்டும் என்பது இவர் மன்றாட்டமாக இருக்கின்றது.
 
குடும்பத் தகராறு காரணமாகத்தான் நான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று கூறும் 66 வயதான லீலாவதி இது பற்றிக் குறி ப்பிடுகையில் ' நான் எனது மகனை நினைத்து கவலைப்படுகிறேன். என் மகன் திருமணம் செய்த இருபதுகளில் உள்ளவள்  60 வயது க்காரியைப் போல நடந்து கொள்கிறாள். அவளுக்கு இதயமே இல்லையென்று நினைக்கின்றேன். பிள்ளைகள் என்னைக் கடந்து நட ந்து செல்லும்போது என் பேரப் பிள்ளைகளை இழந்துவிட்ட மனநிலையே என்னுள் தலைதூக்குகின்றது' என்று மனம் உடைந்த நிலையில் கூறி உளம் வெதும்புகிறார் லீலாவதி. தனது பிள்ளைகளுக்கு ஒரு தாயாக இருந்து போதிய கல்வியைக் கற்பித்து  நல்ல வாழ்விற்கு வழிகாட்டியிருப்பது மனதுக்கு மகிழ்வைத் தந்தாலும் தனது தாயின் நல்வாழ்வு கருதி ஒரு முடிவெடுக்க இவர்களிடம் மனத்திராணி இல்லையே என்று சொல்லி கவலைப்படுகிறார் இந்தத் தாய்.
 
வத்தளையை வதிவிடமாகக் கொண்ட பத்மாலோசினி எழுபதின் ஆரம்பத்தில் இருப்பவர். தன் நலனைக் கவனிக்கும் அக்கறை தன் பிள்ளைகளில் எவருக்குமே இல்லையென்று குமுறுகின்றார். 
 
'எங்கெங்கே வசதிப்படுகிறதோ அங்கங்கே தூங்கி வருகிறேன். அனேகமாக கோவில்களில்தான் தங்குகிறேன். எங்களைப் போன்ற வர்கள் நிம்மதியான சந்தோச வாழ்வைப் பெறவேண்டும் என்பதே என் தினசரிப் பிரார்த்தனையாக இருக்கின்றது. எமக்கெ ன்று எதையும் வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கு கொடுத்ததை நினைத்து நான் என்னைத்தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும் 'என்று சொல்லி பெருமூச்சு விடுகின்றார் இந்தத் தாய்.
 
ஒரு மகன் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறான் என்று சொல்லும் இவர் ஆனால் என்னுடன் பேசுவதில்லை என்கிறார் இந்த அபாக்கியவதி 'நான் வாடகை வீட்டில் இருந்தபோது வாடகை கொடுக்க வழியில்லாத நிலையில் பண உதவி செய்தால்தான் தொட ர்ந்து இந்த வீட்டில் இருக்க முடியுமென கூறியிருந்தேன். ஆனால் உதவி கிடைக்கவில்லை. கோவிலைத் தேடி வந்துவிட்டேன் .இது மகனுக்கும் தெரியும்' என்கிறார் இவர்.
1482822715_unnamed.jpg
வயது முதிர்ந்தவர்களுக்கு உதவுவது மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் பொறுப்பு என்பதை இலங்கையா்கள் நாம் நம்புகிறோம். ஆனால் செயற்பாட்டில் எத்தனை பேர் அதைச் செய்து வருகின்றோம்? 
 
அதே நேரத்தில் அரசு இது சம்பந்தமாக வயதாளிகளுக்கு உதவவேண்டுமென பொதுஜனம் விரும்புகின்றது. இதற்கென பல நிகழ்ச்சி நிரல்கள் வகுக்கப்பட்டு இருந்தபோதிலும் இவற்றை நடைமுறைப்படுத்தும் செயல்முறை அதிருப்தியைத் தருவதாகவே உள்ளதென கொழும்பு பல்கலைக்கழக மக்கள் தொகைப் பெருக்கத்திற்கான பேராசிரியர் டபிள்யு. இந்திரலால் டி சில்வா அபிப்பிராயப்ப ட்டுள்ளார்.
 
2012இல் இலங்கையில் வயதாளிகள் தொகை 2520573 ஆக இருந்தது. 2037இல் இத் தொகை 5118094ஆக அதிகரிக்கவுள்ளது. அதாவது 25 வருட காலத்தில் 103 வீத அதிகரிப்பை இலங்கை சந்திக்க இருக்கின்றது.
 
வயது முதிர்ந்தவர்கள் அதிகரிப்பது இலங்கைக்கு மட்டுமான ஒரு விடயமும் அல்ல.  அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வருகின்ற எல்லா உலக நாடுகளிலுமே இந்த பிரச்சினை இருக்கவே செய்கின்றது. இறப்பவர்கள் தொகை அருகுவதும் பிள்ளைகள் பிறப்பது குறைவதும் ஒருவர் ஆயுட் காலம் அதிகரிப்பதும் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தி இணைநது கொள்வதும்தான் இதற்கான காரணங்கள்.
 
15 வயதுக்கு உட்பட்டவர்கள்  60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று பிரித்துப் பார்க்க முற்படும்போது கணிசமான அளவு வேறுபாடுகள் இரண்டு பகுதியினரிடையே இருப்பதைக் காணமுடிகின்றது. 
 
இந்தப் பேதமென்பது  ஒரு குறுகிய காலத்தில் மிக வேகமாக உருவாகும்போது (உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொள்ளலாம்) சமூக பொருளாதார நிறுவனங்களுக்கு ஏற்ப தம்மை சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்வது பெரும் சிரமமாகி விடுகி ன்றது. 
 
வயதாளிகள் விடயத்தில் அதிகரிப்பு என்பது  ஏனைய பிரிவுகளையும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி விடுகின்றது. சமுதாயத்தின் அரசியல், பொருளாதார சமூக கட்டுமானங்களையும் இந்த மாற்றம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி இருக்கின்றது. 
 
வேறுபட்ட வயதெல்லைக்குள் வருபவர்கள் தம்மைச் சார்ந்த சமூகத்தின் மீது கொடுக்கும் அரசியல் சமூக அழுத்தங்கள் மூலவள ங்களின் விநியோகத்தை  குலைப்பதோடு இவர்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்து விடுகின்றன. நீண்ட காலம் வாழமுடிவதும் பிள்ளைகள் பிறக்கும் விகிதாசாரம் குறைவதும் நாட்டை வெகுவேகமாக  கிழடு தட்டிப் போக வைத்து விடுகி ன்றன. 
1482822821_unnamed%20%284%29.jpg
இலங்கையை எடுத்துக் கொண்டால் 21ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வயதாளிகளைப் பராமரிக்க உள்ள இளம் பிராயத்தினர் தொகை வெகு குறைவாகவே இருக்கப்போகின்றது. இதையே இன்னொரு விதமாகச் சொல்வதானால் நாட்டுக்கு பொருளாதார ரீதியாக உற்பத்தியைத் தரக்கூடியவர்களைவிட நாட்டுக்கு சுமையாக இருக்கும் வயதாளிகள் தொகை அதிகமாக இருக்கப்போகி ன்றது.
 
இலங்கையின் சனத்தொகையின் அதிகமான பகுதியினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் அதில் பெரும்பான்மையினர் பெண்களாகவும் இருக்கும் ஒரு நிலையை இலங்கை விரைவில் எதிர்பார்க்கின்றது.  இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெ ன்றால் 2001-11 காலகட்டத்தில் 80க்கும் அதற்கு மேற்பட்ட வயதினருக்குமான வருடாந்த அதிகரிப்பு அறுபதுக்கு மேற்பட்டவர்கள் எழுபதுக்கு மேற்பட்டவர்கள் கண்ட அதிகரிப்பை விட அதிகமாக இருந்துள்ளது. 
 
வயதாளிகளாக இருக்கும்போது நல்ல ஆரோக்கியமான நிலையில் இலங்கை மக்கள் இப்பொழுது வாழ்ந்து வருவதையே இந்தப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மரண விகிதம் இலங்கையில் குறைந்துவிட்டது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. 
 
1920-22 காலகட்டத்தில் இலங்கையில் பிறந்த ஒரு ஆண்குழந்தை 30.7 ஆண்டு வரை வாழும் என்றும் பெண்குழந்தை 32.7 ஆண்டுவரை வாழும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் 2012இல் ஆணுக்கு இது 71.0 வயதாகவும் பெண்ணுக்கு 77.2ஆகவும் ஏற்றம் கண்டது. 2026இல் ஆண் 72.3 என்றும் பெண் 82.5 என்றும் மாற்றம் காணுமென  சொல்லப்படுகின்றது. 
 
சுருங்கச் சொல்வதானால் இலங்கை மக்களின் வாழ்வுக்காலம் நீடிக்கப்படுவதால் முதியவர்கள் தொகை கிடுகிடு வளர்ச்சியைக் காணும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.
 
வாழ்வில் எந்த பருவமும் தவிர்க்க முடியாத ஒன்று. மரணத்தால் மாத்திரம் ஒருவரது பருவத்தை இடையில் தட்டிப்பறிக்க முடியும். இந்த மரணத்தையும் கடந்து 80 வயதுவரை ஒரு இலங்கையரால் வாழமுடிகின்றது என்பது இன்றைய யதார்த்தமாகி வரும் நிலையில் மூப்பு என்பது ஆப்பு போலாகி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது திண்ணம். தேவையற்றவர்களாக பிள்ளைகளால் தெருவுக்கு துரத்தப்படும் அப்பா அம்மாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப் போவது திண்ணம் 
- ஏ.ஜே. ஞானேந்திரன்

http://www.onlineuthayan.com/article/265

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.