Jump to content

பாரீஸ் நகரில் கத்திக்குத்து.. நண்பர் வீடு வரை ஓடி உயிரிழந்த தமிழக பொறியியலார்


Recommended Posts

பாரீஸ் நகரில் கத்திக்குத்து.. நண்பர் வீடு வரை ஓடி உயிரிழந்த தமிழக பொறியியலார்


பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பொறியியலாராக பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் இனம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிமாறன் என்ற 26 வயது இளைஞர் பாரீஸில் பொறியியலாராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பரை காண மெட்ரோ ரயிலில் பாரீஸின் வாகிரார்ட் புகையிரத நிலையத்தில் இறங்கியுள்ளார்.

மெட்ரோ புகையிரத நிலையத்துக்கு வெளியே சென்ற அவரை இம்தெரியாதவர்கள், கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் ரத்தம் வெளியேறிய நிலையிலும் நண்பரின் வீட்டுக்கு ஓடியுள்ளார்.

நண்பரின் வீட்டு அழைப்பு மணியை அழுத்திய அவர் அங்கே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். கதவை திறந்த நண்பர், ரத்த வெள்ளத்தில் மணிமாறன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை முயற்சியில் மணிமாறன் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் அந்நாட்டு போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/11595

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.