Jump to content

பொருந்துமா பொருத்து வீடுகள்?


Recommended Posts

பொருந்துமா பொருத்து வீடுகள்? நிலாந்தன்

joint-house.jpgபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கி விட்டது. வரும் ஏழாம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்ப்பத்திரிகைகளில் இது தொடர்பாக ஒரு முழுப்பக்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பொருத்து வீடுகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடமாகாண சபை இது தொடர்பாக ஏற்கனவே தனது எதிர்ப்பை வெளிக்காட்டி விட்டது. முதலமைச்சர் இது தொடர்பாக மிக விரிவான விளக்கத்தைக் கொடுத்து விட்டார். அரசாங்கத்தோடு அதிகம் இணங்கிப்போகும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்று விமர்சிக்கப்படும் சுமந்திரனுக்கும் இதில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குமிடையில் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் ஒன்று நடந்திருக்கிறது.தமிழ் சிவில் சமூகப்பிரதிநிதிகளும் துறைசார் நிபுணர்களும், ஊடகவியலாளர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து விட்டார்கள். அரசாங்கத்துடன் நிற்கும்; லிபரல் ஜனநாயக வாதிகளில் முக்கியமானவர் பாக்கியசோதி சரவணமுத்து. இவருடைய மாற்றுக் கொள்கைக்கான மையத்தின் ஆங்கில இணையத் தளமாகிய கிரவுண்ட் வியூஸ்இல் இது தொடர்பாக வரிவான ஒரு கட்டுரை சில மாதங்களுக்கு முன்னரே பிரசுரமாகியிருந்தது.  இத்தனை வாதப்பிரதிவாதங்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஜனவரி 7ஆந் திகதி தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பல்வேறு தரப்புக்களும் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றன. இந்திய அரசு, கத்தோலிக்கத் திருச்சபையின் தொண்டு நிறுவனங்களாகிய கியூடெக், ஹரிடாஸ், சுவிற்சலாந்தின் நிதி உதவியுடன் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ் டயஸ்பொறாவைச் சேர்ந்த சில தொண்டு நிறுவனங்கள் எனப் பல தரப்புக்களும் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றன.

அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களில் பொருத்து வீட்டுத்திட்டம் ஆகப்பிந்தியது ஆகும். ஏற்கனவே அரசாங்கம் ஒரு தொகுதி பணத்தை பயனாளிகளுக்கு வழங்கி பயனாளிகளின் பங்களிப்போடு வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றது. தவிர படைத்தரப்பும் நல்லிணக்கபுரம் என்ற பெயரில் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றது. அரசாங்கத்தின் பண உதவியோடு முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே பல முறைப்பாடுகள் உண்டு.
நிலைமாறு கால கட்ட நிதிச் செய்முறைகள் தொடர்பான சந்திப்புக்களின் போது தமிழ்ச் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இது தொடர்பாக தமது குற்றச் சாட்டுக்களை முன் வைப்பதுண்டு. இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் தொடர்பாக தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பயனாளிகளும், ஊடகவியலாளர்களும் தெரிவித்து வரும் கருத்துக்களைத் தொகுத்து பின் வருமாறு கூறலாம்.

வீட்டுத்திட்டம் எனப்படுவது வீடற்றவர்களுக்கே. இதில் வீடுள்ளவர்களும் பயன் பெறுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. பயனாளிகளைத் தெரியும் பொழுது நடைமுறைப்படுத்தப்படும் முறைமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உண்டு. உதாரணமாக,வடமராட்சி கிழக்கில் இவ்வாறு கட்டப்பட்ட பத்துக்கும் குறையாத வீடுகளில் யாரும் தங்குவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

வீடற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு கட்டத் தேவையான பணம் இல்லாதவர்களே. இவ்வாறு வீடு கட்டப் போதுமான காசு இல்லாதவர்களுக்கு அரசாங்கம் நிதி உதவி செய்து அந்தப் பயனாளிகளின் பங்களிப்போடு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் நிதி உதவி தரப்படுவதற்கு முன்னரே அவர்களை முதற்கட்ட கட்டுமான வேலைகளை தொடங்குமாறு கேட்கப்படுகிறது.

வசதியில்லை என்பதால் வீடுகட்ட முடியாதிருக்கும் ஒருவரை நாங்கள் உதவி செய்கிறோம். அதற்கு முன் நீங்களும் ஒரு தொகையை கையில் வைத்திருப்பது நல்லது என்று கேட்கப்படுவதால் பயனாளிகள் கடன் வாங்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாற்று உண்டு. வடமராட்சி கிழக்கில் தாலியை அடகு வைத்து வீட்டைக் கட்டத் தொடங்கியவர்களும் உண்டு.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச அலுவலர்கள் வேறொரு விளக்கத்தைத் தருகிறார்கள். வீட்டுத்திட்டம் அமுலுக்கு வந்த தொடக்கத்தில் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ஒரு தொகுதி பணம் வழங்கப்பட்டது. அப்பணத்திற்குரிய கட்டுமானத்தை அவர்கள் முடித்துக் காட்டியபின் அடுத்தடுத்த கட்ட பணம் வழங்கப்படும். ஆனால் இவ்வாறு வழங்கப்பட்ட முதற்கட்ட பணத்தை ஒரு பகுதி பயனாளிகள் ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு அரச அலுவலகர்கள் வந்து கேட்கும் பொழுது முதற் கட்ட கட்டுமானங்களை காட்ட முடியாதிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இது காரணமாக பயனாளிகள் வீட்டைக் கட்டுவதில் மெய்யாகவே ஈடுபாட்டோடு இருக்கிறார்கள் என்பதை எண்பிக்கும் விதத்தில் அவர்களாக வீட்டைக் கட்டும் பணிகளை முதலில் தொடங்கும் விதத்தில் நடைமுறைகள் இறுக்கப்பட்டுள்ளன என்று மேற்படி அலுவலர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறு வழங்கப்படும் நிதி கட்டங்கட்டமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டமும் பூர்த்தி செய்யப்படுவதை சம்பந்தப்பட்ட அரச அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக தொழில்நுட்ப அலுவலர் ஒருவர் அதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால் பயனாளிகள் தொழில் நுட்ப அலுவலரின் இரக்கத்தில் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலமை உருவாகிவிட்டதாக ஒரு முறைப்பாடு உண்டு.

இது சில தொழில்நுட்ப அலுவலர்கள் பயனாளிகளை அவமதிக்கும் ஒரு வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதாகவும், சில தொழில் நுட்ப அலுவலர்கள் இந்த முறைமையைப் பயன்படுத்தி பயனாளிகளைச் சுரண்டுவதாகவும், லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு.வன்னியில் ஒரு மாவட்டத்தில் தொழில் நுட்ப அலுவலர் சிலர் பயனாளிகளிடம் குறிப்பாக குடும்பத்தலைவரை இழந்த இளம் விதவைகளாக உள்ள பயனாளிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.
வடமராட்சிப் பகுதியில் ஒரு பயனாளி வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கும் போது அவருடைய தாயார் இறந்து விட்டார். எனவே வீட்டுக்கதவுக்கு நிலை வைக்கும் நற்காரியத்தை அவர் சிறிது காலம் ஒத்தி வைத்திருக்கிறார். ஆனால் வீட்டுத்திட்டத்தை மேற்பார்வை செய்யும் தொழில் நுட்ப அலுவலர் மேற்படி தாமதத்தில் இருக்கும் மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அந்தப் பயனாளியிடம் விட்டுக்கொடுப்பின்றி நடந்து கொண்டதாக ஒரு முறைப்பாடு உண்டு.
மற்றொரு சம்பவத்தில் யாழ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத்திட்டத்தில் ஒரு தொழில் நுட்ப அலுவலரை சம்பந்தப்பட்டவர்கள் தலைக்கவசத்தால் தாக்கிக் காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர ஒவ்வொரு கட்டமாக பணத்தைக் கொடுக்கும் நடைமுறை காரணமாக மேசன்களின் பேரம் அதிகரித்திருப்பதாகவும் ஒரு முறைப்பாடு உண்டு. குறிப்பிட்ட கட்டத்தை குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடித்துக் காட்ட வேண்டும். எனவே கால எல்லை காரணமாக பயனாளிகள் மேசன்மாரில் தங்கியிருக்க வேண்டி இருக்கிறது. இதனால் மேசன்மார் சில சமயங்களில் முன்பு ஒப்புக் கொண்டதை விட கூடுதலாக கூலியைக் கேட்கும் நிலமைகளும் தோன்றுகின்றன. குறிப்பிட்ட கால எல்லைக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் பயனாளிகளும் மேசன்மார் கேட்கும் கூலியை கொடுக்க நிர்ப்பந்திக்க படுகிறார்கள்.
பயனாளிகள் ஒவ்வொரு கட்டத்தையும் உரிய கால கட்டத்துக்குள் முடிக்காவிட்டால் அதற்காகக் கடுமையாக நடந்து கொள்ளும் அரச அலுவலர்கள் குறிப்பிட்ட கட்டங்களைப் பூர்த்தி செய்த பின் தரப்பட வேண்டிய கொடுப்பனவு தாமதமாகும் போது அது பற்றி அலட்டிக் கொள்வதேயில்லையாம். அதாவது கொடுப்பது தானம் என்ற ஓர் உணர்வு அரச ஊழியர்களிடம் காணப்படுவதாக பயனாளிகள் முறைப்பாடு செய்கிறார்கள். தானத்தைப் பெறுபவர் அதற்குரிய பணிவோடு இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? என்று பயனாளிகள் கேள்வி கேட்கிறார்கள்.

இவை நிர்வாக நடைமுறையில் உள்ள பிரச்சினைகள். அதே சமயம் மற்றொரு முக்கிய குறைபாடு இந்த வீட்டுத்திட்டங்களில் உண்டு என்று அவற்றை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு வீட்டைக் கட்டத் தொடங்கும் போது கட்டுமானப் பொருட்களின் விலை எதுவாக இருந்ததோ அதே விலை வீட்டைக் கட்டி முடிக்கும் தறுவாயிலும் இருப்பதில்லையாம். இதனால் ஒரு வீட்டைக் கட்டத் தொடங்கும் போது செய்யப்பட்ட விலைமதிப்பீடுகள் கட்டி முடிக்கப்படும் போது ஏறிவிடுகின்றன. அரசாங்கம் இந்த அதிகரிப்பைக் கவனத்தில் எடுப்பதில்லையாம்.

இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் தொடர்பில் கடுமையாக விமர்சிப்பவர்கள்வீட்டுத்திட்டங்களில் பயனாளிகளைப் பங்காளிகளாக்குவது என்பது நடைமுறையில் பயனாளிகளைக் கடனாளிகளாக்குவதிலேயே முடிகிறது என்று கூறுகிறார்கள். காசில்லாத படியால் வீடு கட்ட முடியாதிருந்த ஒரு குடும்பத்துக்கு வீடுகட்ட காசு தருகிறேன் என்று கூறி முடிவில் அந்தக்குடும்பம் தனது சக்திக்கு மீறிக் கடன்படும் நிலைமையே உருவாகியிருப்பதாக பயனாளிகள் விமர்சிக்கிறார்கள்.
பயனாளிகளைப் பங்காளிகளாக்குவது என்பது குறிப்பாக வீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை ஒரு நல்ல முயற்சிதான். ஏனெனில் தனது சொந்த வீட்டை வேறு யாரோ கட்டித் தருவதை விடவும் தானே ஒவ்வொரு கல்லாகப் பார்த்துக் கட்டுவதில் ஒரு திருப்தியும் நிறைவும் உண்டு. தனது வீட்டுக்குரிய பொருட்களைத் தானே தேடித்தேடி தெரிவு செய்து தனது வீட்டைத் தானே ஓரளவுக்கு தனது விருப்பப்படி கட்டுவதில் ஒரு திருப்தியும் சந்தோசமும் உண்டு. ஆனால் இவ்வாறு பயனாளிகளைப் பங்காளிகளாக்கும் திட்டம் முடிவில் பயனாளிகளை தமது சக்திக்கு மீறிக் கடன்படுவதில் கொண்டுபோய் விடுகிறது என்று பயனாளிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் குறைப்படுகிறார்கள்.

இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் தொடர்பில் விமர்சனங்களை முன் வைக்கும் சிவில் அமைப்புக்கள் பயனாளிகளை பங்காளிகளாக்குவதை விடவும் சில அமைப்புக்கள் கட்டித்தரும் வீடுகள் பரவாயில்லை என்று கருத்துத் தெரிவிக்கின்றன. குறிப்பாக கியூடெக், ஹரிடாஸ் போன்ற நிறுவனங்கள் வீடுகளைக் கட்டி முடித்துவிட்டு பயனாளிகளிடம் சாவியைத் தருகின்றன.படையினரால் உருவாக்கப்பட்டுவரும் நல்லிணக்க புரங்களிலும் இப்படித்தான். இந்த ஏற்பாடு தம்மைக் கடனாளியாக்குவதில்லை என்று ஒரு தொகுதி பயனாளிகள் கூறுகிறார்கள்.

இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் தொடர்பில் விமர்சிக்கும் பயனாளிகள் அரசு சாரா நிறுவனங்கள் கட்டித்தருவதைப் போல அரசாங்கமும் வீடுகளைக் கட்டித்தந்தால் நல்லது என்று ஒரு கருத்தை முன்வைத்து வரும்; ஒரு பின்னணியில்தான் பொருத்து வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த விழைகிறது.

வீடற்ற தமிழ் மக்களின் ஒருபகுதியினர் குறிப்பாக இப்பொழுதும் தற்காலிக தகர வீடுகளிலும், தொத்துப்பறி வீடுகளிலும் வசிப்பவர்கள் பொருத்து வீடோ, பொருந்தா வீடோ எதுவானாலும் கிடைத்தால் சரி என்ற ஒரு மனோ நிலையோடு காணப்படுவதை சில ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பசித்திருப்பதை விட கஞ்சி மேலானது என்று கருதும் ஒரு தொகுதி தமிழ் மக்கள் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆதரிக்கிறார்கள். இது தொடர்பில் புத்திபூர்வமான விளக்கங்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. பொருத்து வீட்டை விஞ்ஞான பூர்வமாக விமர்சிக்கும் பலரும் ஏற்கனவே நன்கு செற்றில்ட் ஆகிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே என்றும் இவர்கள் பாதுகாப்பான கல் வீடுகளில் வாழ்ந்தபடி பொருத்து வீடு வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றும் மேற்சொன்ன பயனாளிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். பொருத்து வீடு வேண்டும் என்று தமது பெயர்களைப் பதிந்த ஒரு பகுதியினர் இப்பொழுதும் தற்காலிக வீடுகளிலேயே வசித்து வருகிறார்கள் என்று மேற்சொன்ன ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இதனிடையே கடந்த கிழமை கிளிநொச்சியில் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சிக் கச்சேரிக்கு முன்பு சுலோக அட்டைகளைத் தாங்கியபடி ஒரு பகுதி மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். இவ்வாறான ஓர் அரசியல் சூழலில் குறிப்பாக தமிழ் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சரவை பொருத்து வீட்டிற்கு அனுமதியை வழங்கியிருக்கிறது. இதன்படி வரும் 7ஆம் திகதி பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் அமுலுக்கு வர வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் வரும் 9ஆம் 10ஆம் திகதிகளில் முன் வைக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு காலச்சூழலில் பொருத்து வீட்டுத்திட்டம் அமுல் செய்யப்படுமாகவிருந்தால் அது இரண்டு விடயங்களை எண்பிப்பதாக அமைந்து விடும்.

முதலாவது அந்த வீடுகளைக் கட்டித்தரப் போகும் கோப்பரேற் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள நலன்சார் உறவு எவ்வளவு வலிமையானது என்பது.பயனாளிகளைப் பங்காளிகளாக்கும் திட்டம் பயனாளிகளைக் கடனாளிகளாக்கியிருக்கிறது அதேசமயம் பொருத்து வீட்டுத்திட்டமோ அரசாங்கத்தில் உள்ள சிலரைக் பெரும்கோடீஸ்வரர்களாக்கப் போகிறதா? என்று ஒரு பயனாளி கேட்டார்.
இரண்டாவது ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேரம் எங்கே நிற்கிறது என்பது. அதாவது தமிழ்த்தரப்புப் பேரம் தாழ்ந்து செல்கிறதா இல்லையா என்பதை நிரூபிக்கப்போகும் ஒரு சந்தர்ப்பம் அது.

http://globaltamilnews.net/archives/11503

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.