Jump to content

2016-ல் தப்பிப் பிழைத்த 10 தமிழ்ப்படங்கள் #2016Rewind


Recommended Posts

2016-ல் தப்பிப் பிழைத்த 10 தமிழ்ப்படங்கள் #2016Rewind

 

எதிர்பார்க்க வைத்து மொக்கை வாங்கிய படங்கள், ரிலிஸுக்கு முன் ஓவர் பில்ட் அப் கொடுத்தாலும் வெளியான பின்னும் சொல்லி வைத்ததுபோல் செம ஹிட் அடித்த தமிழ்ப்படங்கள் என பல டாப் 10 லிஸ்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் யாரும் பெரிய அளவில் எதிர்பாராமல் அதே வேளை மரியாதையான வெற்றி பெற்ற படங்களின் டாப் 10 லிஸ்ட் இது.   

டாப் 10


இறுதிச்சுற்று - குத்துச்சண்டையில் விழும் குத்துகளில் பிரபலமானது அப்பர் கட் மற்றும் ஹூக் பஞ்ச். ஆனால் இவற்றுக்கு எல்லாம் பெரியது எதிரியை நிலைகுலையச்செய்ய குத்து என்பது ஜேப் என்கிற டைனமைட் பஞ்ச். இறுதிச்சுற்று அப்படி ஒரு 'டைனமைட் பஞ்ச்' வீசி எதிர்பாராத வெற்றியை அடைந்தது. 'மஸ்தி' மாதவன் 'டூமிங் குப்பம்' ரித்திகா என நம்பிக்கையான படம். 

டாப் 10

பிச்சைக்காரன் - தொடர்ந்து தனது படத்தின் தலைப்புகளை வித்தியாசமாக வைத்து வெற்றிக்கோட்டை எட்டி தொடுவதை வழக்கமாக்கி வந்தார் விஜய் ஆண்டனி. இதற்கு முந்தைய படமான இந்தியா-பாகிஸ்தான் ஆவரேஜ் ரிசல்ட் கொடுத்திருந்த நிலையில் இந்தப் பிச்சைக்காரனின் 'அம்மா' என்கிற சத்தம் தமிழ்சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது என்றே சொல்லலாம். ஆனால் அது இவ்வளவு கலெக்‌ஷன் ஆகும் என விஜய் ஆண்டனியே எதிர்பார்த்து இருக்கமாட்டார். 

டாப் 10

தோழா - வழக்கமாக சில தமிழ் இயக்குநர்கள் வெளிநாட்டுப்படங்களில் 'இன்ஸ்பயர்' ஆகி அதே மாதிரி எடுத்து பின்னர் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னப்படுவார்கள். ஆனால் 'தோழா' பிரெஞ்ச்ப்படத்தின் உரிமையை வாங்கி எடுக்கப்பட்ட 'ஒரிஜினல்' படம். மெட்ராஸ்,கொம்பன் என வெரைட்டி ஹிட் அடித்து அந்த ஹேங் ஓவரில் இருந்த கார்த்தி இந்த படத்துக்கு செட் ஆவாரா என ஒரு டாக் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானவுடனே ஒரிஜினல் வெர்சனை டோரன்டில் டவுன்லோடி,உதட்டை பிதுக்கிக்கொண்டிருந்தனர் தமிழ் சினிமாவின் ஆன்லைன் ஆர்வலர்கள். அவர்களின் எண்ணத்தை பொய்யாக்கும் வகையில் தமிழ்-தெலுங்கு என இரண்டிலும் ஓடியது படம். 

டாப் 10

ஒரு நாள் கூத்து - படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லைதான். ஆனால் அன்மைக்காலமாகவே தமிழ் சினிமாவில் காணாமல் போன சமூக சிந்தனை,நடைமுறை யதார்த்தம் குறித்து பேசியது இந்தபடம். 30 வயதுக்கு மேல் திருமணம் ஆகாதவர்கள் அதிகமுள்ள சமூகமாக தமிழ்ச்சமூகம் மாறிவருவது குறித்து பேசியது இந்தப்படம். பிரசன்டேஷன் வகையில் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் கதைக்களத்துகாக 'அட'  போடலாம். 

டாப் 10

ஜாக்சன் துரை - இந்த பேய் சீசனை மிஸ் பண்ணினால் இதே சான்ஸ் திரும்பக் கிடைக்காது என சிபிராஜ் அப்பாவை வற்புறுத்தி இருப்பார் போல, சொந்த வாழ்க்கையில் கடவுளைக்கூட நம்பாத சத்யராஜ் பேயாக நடித்த படம் இது.  மொட்டை ராஜேந்திரன்,யோகி பாபு, கருணாகரன் என ஆங்காங்கே கொஞ்சம் ஜவ்வு மிட்டாய் கொடுத்தாலும் ஓவரால் ரிசல்ட்டாக 'ஓகே' வாங்கிய படம்.   

டாப் 10

தில்லுக்கு துட்டு - "நான் இனி காமெடியன் மட்டும் கிடையாது... ஐ ஹேவ் அதர் ஐடியாஸ்..." என சந்தானம் ட்ராக் மாறிய பின் வந்த மூன்றாவது படம். முழுக்க முழுக்க ஹீரோ மெட்டிரியலாக அவர் மாறி இருந்ததை உணரமுடிந்தது. தனது குருநாதரின் இயக்கத்தில் சந்தானம் நடித்த இந்தப்படம் 'வதவத'  என வந்துக்கொண்டிருக்கும் பேய்ப் பட க்ரௌடிலும் தப்பியது. 

டாப் 10

தர்மதுரை - "நல்லப் படம்தான் ஆனா கொஞ்சம் இழுக்குது..." என சிட்டி ஏரியாக்களில் பேச்சு கிளம்பிய போது நின்று நிதானமாக பி மற்றும் சி சென்டர்களில் ஓடியது. ஏற்கெனவே தேசிய விருது வாங்கிய கூட்டணியான விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணைந்திருந்ததால் படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பாராட்டிய அளவிற்கு இயக்குநர் சொல்ல நினைத்த மெசேஜ் ரீச் ஆகியிருந்தது.  

டாப் 10

தேவி - பாட்டியைப் பார்க்க வந்த இடத்தில் கட்டாயமாக ஒரு பெண்ணை கட்டிவைக்க்கிறார்கள். அவரோடு ஒண்டு குடித்தனமாக போன வீட்டில் இருக்கும் பேய் மனைவியை பிடித்துக்கொள்ளும் கதை. ஒரே சமயத்தில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப் பட்ட படம். பிரபு தேவா- தமன்னா -சோனு சூட் என மூன்று பேரும் பெர்பெக்ட்டாகவே கொண்டு போய் தப்பித்தார்கள். ஏ.எல்.விஜய் இயக்கமும் படம் தப்பிக்க ஒரு காரணம். 

டாப் 10

அச்சம் என்பது மடமையடா - வழக்கமாக சிம்பு ஒரு படத்தில் நடிக்கும் போது எழும் எல்லாப்பிரச்சினைகளும் இந்தப்படத்திற்கும் எழுந்தது. இருந்தாலும் மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது இது கொஞ்சம் சீக்கிரமே வெளியான சிம்பு படம் என்றே சொல்லலாம். பாடல்களும் ஏற்கெனவே வெளியாகி ஹிட் அடித்திருந்ததால் பட ரிலீசுக்கு சாஃப்ட் லாஞ்ச் கிடைத்தது. இயக்குநர் கௌதம் மேனனின் பிபியும் படம் வெளியாகி ஓடியதால் நார்மலுக்கு வந்திருக்கும். 

டாப் 10


சென்னை 28  - 'பாய்ஸ் ஆர் பேக்' இரண்டாம் பாகம் எப்பவுமே முதல் பாகத்தை தூக்கி சாப்பிட்டு விடாது என்கிற தமிழ் சினிமா லாஜிக்கை மீறாத படம். படம் முழுக்க கவுண்டர் டயலாக்கிலும், மொக்கை பஞ்ச்சிலும் மிர்ச்சி சிவா பின்னி பெடலெடுக்க ஒரு வழியாக லாஸ்ட் பாலில் சிங்கிள் தட்டி வெற்றி பெற்றுள்ளார்கள். 

டாப் 10

-வரவனை செந்தில்  

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/75684-ten-above-average-tamil-movies-in-2016.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.