Jump to content

அபார சுவை மட்டன் குருமா! #WeekEndRecipe


Recommended Posts

அபார சுவை மட்டன் குருமா! #WeekEndRecipe

 

மட்டன்

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் குருமா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:
மட்டன் - அரை கிலோ
நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம் 
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10 கிராம்
தேங்காய் விழுது - 25 கிராம் 
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - ஒரு சிறிய துண்டு
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புளிக்காத தயிர் - 50 கிராம்
எண்ணெய் - 30 மிலி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, அதனுடன் 50 கிராம் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். முந்திரிப் பருப்பு, கசகசாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்துப் பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். அதனுடன் தயிரில் ஊறவைத்த மட்டனைச் சேர்த்துக் கிளறி, உப்பு, தேவையான அளவு வெந்நீர் சேர்த்து வேகவிடவும். 

கலவை கொதித்ததும் அதில் தேங்காய் விழுது, முந்திரிப் பருப்பு - கசகசா விழுது சேர்த்து நன்கு கலந்து, மிதமான தீயில் வேகவைக்கவும். மட்டன் நன்கு வெந்து குருமா ஓரளவு கெட்டியானவுடன், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

* மட்டன் குருமாவை, சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்

http://www.vikatan.com/news/health/75724-how-to-cook-mutton-korma.art

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மட்டன் குருமா செய்ய வேண்டுமா...!

 

 

 
 
 
 
 

 

தேவையான பொருட்கள் :
 
 
 
மட்டன் - ½ கிலோ
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
சோம்பு தூள் - ½ டீஸ்பூன்
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - சிறிதளவு
தயிர் - 3 டீஸ்பூன்
முந்திரி - 150 கிராம் (விழுதாக அரைக்கவும்)
சீரகம் - ½ டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 5
ஏலக்காய், மிளகு - ½ டீஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
தேங்காய் விழுது - 3 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
 
1508235515-192.jpg
 
செய்முறை :
 
தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டனை நன்றாக கழுவி  வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது, பாதி அளவு தக்காளி, மஞ்சள் தூள், தயிர், மிளகாய்த் தூள்,  கொத்துமல்லி, கறிவேப்பிலை, முந்திரி விழுது, புதினா இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து, குளிர்சாதனப்  பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
 
குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சேர்த்து, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து வதக்கிய பின்னர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இஞ்சி விழுது மற்றும் கறிவேப்பிலை  சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் தக்காளி மற்றும் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்புத் தூள், உப்பு சேர்த்து  பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். அடுத்து அதில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள மட்டன் கலவையை சேர்த்து,  குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும். 
 
விசில் போனவுடன் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து, அத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான மட்டன் குருமா தயார்.

http://tamil.webdunia.com/article/non-veg-recipes/want-to-make-a-mutton-kurma-117101700029_1.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.