Jump to content

சுலாப் இன்டர்நேஷனல் - சிறுகதை


Recommended Posts

சுலாப் இன்டர்நேஷனல் -

 

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: செந்தில்

 

சின்னாரு, தன் அடிவயிறு கனத்திருந்ததை உணர்ந்தாலும், தூக்கத்தில் இருந்து விடுபட்டு எழுந்திருக்க மனம் இல்லாமல் புரண்டு படுத்தான். ஆனாலும், அடிவயிற்றின் அலப்பறை தூக்கத்தைக் கலைத்துப்போட்டது. இனியும் தாமதித்தால், டவுசரிலேயே பேர்வாதி முடிந்துவிடும் அபாயத்தை உணர்ந்தவனாக ஓட்டம் பிடித்தான். விவரம் தெரிந்ததில் இருந்து சின்னாருக்கு எப்போது எல்லாம் அடிவயிறு கனத்துவிடுகிறதோ, அப்போது எல்லாம் இப்படித்தான் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கும் சுலாப் இன்டர்நேஷனலுக்கும் டவுசரைப் பிடித்தபடி ஓடுவான்.

இப்போதும் அப்படித்தான். வீட்டில் இருந்து இருநூறு அடி தூரத்தில் பொதுக் கழிப்பிடம் இருக்கிறது. தன் ஜோட்டுக்காரன்களின் வீட்டில் எல்லோரும், தனி கக்கூஸ் கட்டிவிட்டதால், இவனோடு போன வாரம் வரை டவுசரைப் பிடித்துக்கொண்டு ஓடிவந்த ஆறுமுகமும் இல்லாமல், தன்னந்தனியாக விடப்பட்டதில் சின்னாருக்கு ஏக வருத்தம்தான். இதன் நிமித்தமாக அம்மாவோடு நிறையச் சண்டைகள் போட்டுப்பார்த்தான். சில வேளை சாப்பிடாமலும் அடம்பிடித்தான்.

70p3.jpg

“சின்னாரு, கொஞ்சம் பொறுத்துக்கடா. இன்னும் மூணு சீட்டுத்தான். உனக்குப் புடிச்ச டிசைன்ல கக்கூஸ் கட்டிடலாம்டா” என அவனுக்கு ஒரு கவளத்தை ஊட்டினாள் அம்மா. இனியும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்ற காரணத்தால், வேண்டாவெறுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு அம்மாவின் கைப்பிடிச் சோற்றை வாயில் போட்டுக்கொண்டான்.

அம்மாவும் அக்காவும் மம்மது மாமா வீட்டில் கடன்களை முடிக்க அனுமதி உண்டு. சின்னாருக்கும் மாமா வீட்டில் உரிமை இருக்கிறதுதான். ஆனால், அவன் போக மாட்டான். யார் வீட்டிலும் கடன்களை முடிப்பது இல்லை என்ற தீர்மானத்தில் இருந்தான். கக்கூஸ் போனால் அது தனது சொந்த வீட்டு கக்கூஸாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதுவரை சுலாப் இன்டர்நேஷனலே போதும் என்பது அவனது எண்ணம்.

டல் சிலிர்த்து, மயிர்கள் கூச்செரிந்து, சின்னாரு சுலாப்பை நெருங்கியபோது பென்சிலையா மாவாவை வாயில் போட்டபடி அவனிடம், “உள்ள வெயிட்டிங் பத்து பேரு… நூவு பதகொண்டு” எனச் சிரித்தார்.
சின்னாருக்கு வந்த கோபத்தில் ஓர் எத்து விடலாம் என்றால், கால் வழியாக ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்ற பயம். பென்சிலையாவை முறைத்தபடியே கழிவறைக்குள் நுழைந்தான். குமார் அண்ணாச்சி, கையில் சொக்கலால் பீடியை வைத்துக்கொண்டு பற்றவைக்காமல், ஏதோ போருக்குப் போவதைப்போல மூடியிருந்த கதவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

சின்னாருவைப் பார்த்ததும், “ஏல சின்னாரு… உங்க அம்மா அரிசி பாக்கி 25 ரூபாய் குடுக்கணும். வீட்டுக்குப் போனதும் ஞாபகப்படுத்துவியா?’’ எனக் கேட்க, சின்னாருக்குக் கோபம் கோபமாக வந்தது. அவன் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு என்ன சொல்வது எனத் தெரியாமல், அண்ணாச்சியை மலங்க மலங்கப் பார்த்தான். விடாமல் அண்ணாச்சி, “ஏல... நா சொல்றது விளங்குதா?” என முறைத்தார். பக்கத்தில் நின்ற ஒருவன் டமார் என டவுசர் கிழிந்து பட்டாசு கிளப்ப, சின்னாரு, அண்ணாச்சியைப் பார்த்துச் சிரித்துவிட்டான்.

அண்ணாச்சிக்கான கதவு திறக்கப்பட்டது. உள்ளிருந்து ஒருவன் அவ்வளவு புத்துணர்ச்சியாக இந்த உலகத்துக்குள் வந்தான். அண்ணாச்சி உள்ளே போனதும் அவர்  இடத்தை  சின்னாரு கைப்பற்றிவிட்டான். அண்ணாச்சியின் அலப்பறை, கதவின் இடுக்கில் வெளியேறி பென்சிலையா வரை போய்விட்டதுபோல.

“ஏய் கொடுக்குகளா… நீலு பொய்யண்டிரா. கப்பு தாங்கல” எனக் குரல்கொடுத்தார். சின்னாருக்கு உடம்பு சிலிர்த்து, கண்களில் இருந்து நீர் கசிய ஆரம்பித்தது. அவனது சிந்தனையில் இந்த உலகமே ஒரு பெரிய கழிவறையாக மாறிவிட்டதாகவும், அதில் எப்போது வேண்டுமானாலும் மிகவும் சுதந்திரமாக, கதவு தட்டல்கள் எதுவும் இல்லாமல், நிம்மதியாக இந்தச் சரீரத்தின் ஆதாரக் கடன்களை முடிப்பதாக ஒரு நினைப்பு வந்துபோனது. அண்ணாச்சி, ஜலக்கிரீடைக்கு வந்திருப்பது உள்ளிருந்து வந்த சத்தத்தில் உறுதியானது.

70p1.jpg

சின்னாருக்கான கதவு திறந்தது. இப்போது அண்ணாச்சி, அவன் கண்களுக்கு கடவுளாகக் காட்சி தந்தார். அண்ணாச்சி, புத்துணர்வு பெற்றவராக சின்னாருவைப் பார்த்து, “ஏல... அந்தப் பாக்கி. மறந்துடாதல!” என டவுசர் தெரியும்படி போனார். இப்போது அவரைப் பார்த்த சின்னாருக்கு, கோபம் வரவில்லை. கதவைத் திறந்த கடவுள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதாகச் சிரித்துக்கொண்டே உள்நுழைந்து தாழிட்டுக்கொண்டான்.

உட்காரும் இடத்தைத் தவிர, நைந்துபோன பெயின்ட் டப்பா வைக்கும் அளவுக்கான ஒரு சிறிய இடம். ஒருதடவை பென்சிலையாவிடம் இதுபற்றி கேட்டபோது, ``உள்ள போயி குடும்பமா நடத்தப்போற? `அது’க்கு அவ்ளோ இடம் போதும்டா!'’ என அவன் வாயை அடைத்துவிட்டார்.

உட்கார்ந்தவன் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். மனிதர்களின் பாலியல் வறுமைக்கோட்டுச் சித்திரங்கள் அவனை உற்றுப்பார்த்தன. பார்க்காததுபோல தலையைக் கவிழ்த்துக்கொண்டான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உட்கார்ந்து சரியாக மூச்சுகூட விடவில்லை, அதற்குள் கதவைத் தட்டினால் சின்னாரு என்னதான் செய்வான். தலையில் சம்மட்டியால் ஓங்கி அடிப்பதுபோல அவனுக்குக் கேட்டது. ஆனாலும் இன்னொரு வனுக்குக் கதவைத் திறந்து, தான் கடவுள் ஆகும் சமயம் வந்துவிட்டது என அமைதிகொண்டான்.

வெளியே வந்த சின்னாரு, பென்சிலையாவைப் பார்த்தான். அவர் இரண்டு லோட்டாக்களில் தேநீரை ஊற்றிக்கொண்டிருந்தார்.

“ஏய் கொடுக்கு... டீ தீஸ்கோரா!” என ஒரு மடக்கு குடித்துக்கொண்டார்.

சின்னாரு, தேநீரை எடுத்துக்கொண்டு ஒரு மடக்கு குடித்தான்.

“உன் தோஸ்த் ஆறுமுகம் எக்கட்ரா? ஆளையே காணோம்!” என்றார் பென்சிலையா.

சின்னாரு சோகமாக, “அவன் இனிமே வர மாட்டான் பென்சிலு” என்று தேநீரைக் குடித்தான்.

“ஏன்டா, ஒல்லுக்கு கில்லுக்கு ஏதாவது நோவா?” - முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல பென்சிலு. அவங்க சொந்தமா ஒரு கக்கூஸ் கட்டிட்டாங்க. அதான்…” என்றான்.

“ஓ… அதி சங்கதியா? அவங்கோ அம்மா வெவரங்கொடுக்குடா சின்னாரு. ஆமா... நீங்கோ எப்போ கக்கூஸ் கட்டப்போறீங்கோ?” - இப்படி பென்சிலையா கேட்டதும், சின்னாருவுக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல், தேநீர் லோட்டாவை அப்படியே வைத்துவிட்டுக் கிளம்பினான். பென்சிலையாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏய் சின்னாரு… சின்னாரு… ஆகுரா…” எனக் கத்திப்பார்த்தார். சின்னாரு, திரும்பாமல் விர்ரென நடந்து சென்றுவிட்டான்.

பென்சிலையா கேட்டது, சின்னாருக்குள் திரும்பத் திரும்ப ஒலித்தது. இனி `சுலாப்’ என்ற பட்டப்பெயர் தனக்கு மட்டும்தான் என நினைத்தபோதே, அவனுக்குக் கொலைவெறி வந்தது.

குழாயடியில் இவன் ஜோட்டுப்பயல்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டான். ஆறுமுகம் நின்றிருந்தான். இப்போது எல்லாம் ஆறுமுகத்தின் முகத்தில் ஏதோ ஒரு கௌரவம் ஒட்டிக்கொண்டிருப்பது சின்னாருக்குப் பிடிக்கவில்லை. கண்டுகொள்ளாமல் அவர்களைக் கடந்தான்.

“இன்னா சுலாபு… காத்தாலயே பொங்கல் வெச்சுட்டு வர்றபோலகுது...” எனக் கலாய்த்தான் மாறன்.

எல்லோரும் சிரித்தார்கள். ஆறுமுகமும் சிரித்தான். இப்படி எப்போதும் அவர்கள் கிண்டலடித்துக்கொள்வது வழக்கம்தான். ஆனால், இப்போது இவர்கள் இப்படிச் சொல்லிச் சிரித்தது, தன்னை முற்றிலும் நிர்வாணப்படுத்தி நடுரோட்டில் நிற்கவைப்பதுபோல் உணர்ந்தான் சின்னாரு. அதுவும் ஆறுமுகம் சிரித்ததை, அவனால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. நேராகச் சென்று ஆறுமுகத்தின் தாவாவில் ஒரு குத்து விட்டான். இதைச் சற்றும் எதிர்பாராத மாறனும் நேருவும் நிலைகுலைந்து நின்றார்கள். குத்து வாங்கி விழுந்த ஆறுமுகம், வீறுகொண்டு எழுந்து சின்னாருவை ஓர் எத்து விட்டான். மாறனும் நேருவும் இருவரையும் மடக்க முயற்சித்தார்கள். பேட்டையில் சில பெருசுகள் வந்து, மடக்கி அனுப்பும் அளவுக்கு சண்டை நிற்கவில்லை. ஆறுமுகத்தை மாறனும் நேருவும் கூட்டிச்சென்றார்கள். சின்னாரு, ஆறுமுகத்தை முறைத்தபடியே திரும்பி நடந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும், சின்னாரு கலைந்த கேசத்தைச் சரிசெய்துகொண்டான். அம்மா, சங்கரா மீனை ஆய்ந்துகொண்டிருந்தாள்.

“ஏய் சின்னாரு… அக்கா கக்கூஸ் போவுணுமா. தண்ணி வாளியை எடுத்துக்கினு போயி மாமா வீட்டுல வையி…” எனச் சொன்ன அம்மா, சின்னாருவுக்கு மீனின் சினை பிடிக்கும் என தனியாக ஒரு சட்டியில் போட்டுவைத்தாள்.

“அதெல்லாம் எடுத்து வைக்க முடியாது. அதுக்கு கை இல்ல? எடுத்துக்கினு போ சொல்லு. இல்ல நீ எடுத்துக்கினு போ. என்னாண்டலாம் சொல்லாத!” என்றவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

மீன் ஆய்வதை நிறுத்திவிட்டுக் கோபம் வந்தவளாக, “பெரிய கலெக்டரு. தண்ணி எடுத்துக்கினு போய் வைக்க மாட்டாரு… பொட்டப்புள்ள தண்ணி வாளியை வெளிய  எடுத்துக்கினு போனா கூச்சமா இருக்காது? ஒழுங்கு மரியாதையா எடுத்துக்கினு போயி வை. இல்ல... மத்தியானம் சோத்துக்கு வீட்டுப் பக்கம் வந்துராத” எனச் சொன்ன அம்மா, முதல் அலசலில் இருந்த மீனை இரண்டாவது அலசலுக்கு மாற்றினாள்.

“ஏன்... எனக்குக்கூடத்தான் டவுசரைப் புடிச்சிக்கினு, காலங்காத்தால ஓடுறது கூச்சமா இருக்கு” - முகத்தில் ஆறுமுகம் கொடுத்த நகக் கீறலுக்கு, தேங்காய் எண்ணெய்யைத் தொட்டு வைத்துக்கொண்டான்.

“அடி செருப்பால, இம்புட்டுக்கானும் இருந்துகினு, கூச்சம் வந்துடுச்சோ! எங்கே இருந்து கத்துக்கினு வர்ற? ஆங்…” - கையில் கிடைத்த ஈயச் சட்டியைத் தூக்கி அடித்தாள் அம்மா.

70p2.jpg

அக்காவின் முகத்தில் சிலிர்த்த ரேகைகள் படரத் தொடங்கின. தண்ணீர் வாளியைத் தூக்கிக்கொண்டு மம்மது மாமா வீட்டுக்குப் போவது என முடிவு எடுத்தாள்.

“அம்மா... சும்மா கத்திக்கினு இருக்காத. நானே தூக்கினு போறேன்” என, தண்ணீர் வாளியைத் தூக்கினாள்.

சின்னாருவுக்கு என்னவோ மனசு கேட்கவில்லை. விருட்டென வந்தவன், தண்ணீர் வாளியைப் பிடுங்கினான்.

அக்காவைப் பார்த்து, “வாளியை வெச்சுட்டு வந்து சொல்றேன். அப்புறமா போ” என, தண்ணீர் வாளியைத் தூக்கிக்கொண்டு போனான்.

அம்மா, சின்னதாகச் சிரித்தபடி சின்னாருக்குப் பிடிக்கும் என மீனின் தலையை, மீன் சினை வைத்த சட்டியில் வைத்தாள்.

ன்று வெள்ளிக்கிழமை என்பதால், `ஒலியும் ஒளியும்’ பார்ப்பதற்காக அக்கா பிரத்யேகமாகத் தயாராகிக்கொண்டிருந்தாள். மம்மது மாமா வீட்டில் நாலணா கொடுத்துப் பார்க்க அனுமதி உண்டு. ஆனால், சின்னாருக்குக் கட்டணம் கிடையாது. அவன் மாமாவின் செல்லப்பிள்ளை. இரவு 8 மணி ஆனதும் ஒரு ஜமாவாக எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். மாமா நடுநாயகமாக உட்கார்ந்திருந்தார்.

‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...’ எனத் தலைவர் பாட ஆரம்பித்தார். அதற்கு அந்தக் கதாநாயகி ‘சந்தித்தால்’ எனக் கொஞ்சலாக உருகினார். அக்காவும் ‘சந்தித்தால்’ எனப் பாவனைகொண்டதை சின்னாரு பார்த்தான். தண்ணீர் வாளிக்காக அக்காவை மிகவும் புண்படுத்தியதாக நினைத்துக்கொண்டான். ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...’ நடிகர் திலகம் பாட ஆரம்பித்ததும்,  மாமா உற்சாகம் கொண்டார். அந்தப் பாடல் முடியும் வரை அவர் ஒரு டி.எம்.எஸ்-ஸாகவே மாறியிருந்தார்.

விடிந்தது. சின்னாரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பேட்டையே பரபரப்பானது. `மம்மது மாமா இறந்துவிட்டார்!' என்ற செய்தியை சின்னாருவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மாமா கிடத்தப் பட்டிருந்தார். சில பெரியவர்கள் பக்கத்தில் அமர்ந்தபடி குர்ஆன் ஓதினார்கள். அமைதியாகப் படுத்திருக்கும் மாமாவைப் பார்த்தவன், வீட்டுக்கு வந்தான். மாமா இறந்துபோனதைவிட வேறு ஒரு சிந்தனை அவனை வெகுவாக ஆட்கொண்டுவிட்டது. `இனி அம்மாவும் அக்காவும் எங்கே கக்கூஸ் போவார்கள்?’ எனத் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினான்.

அவன் நினைத்ததுபோலவே சில நாட்களில் பீவி மாமியும், தனது சொந்த ஊருக்குப் போவதாகச் சொல்லி அம்மாவிடம் விடைபெற்றார். அம்மாவும் மாமியும் கட்டிப்பிடித்து அழுதார்கள்.

சின்னாரு, புத்தகப் பையை ஆணியில் மாட்டிவிட்டு, அடுக்களையில் இருக்கும் சோற்றுப்பானையில் இருந்த சோற்றைப் போட்டு, மீன் குழம்பை ஊற்றிக்கொண்டான். ஒரு கவளத்தை வாயில் போட்டவன் அம்மாவின் ஞாபகம் வர, “அம்மா எங்கே போயிருக்குது?” என அக்காவிடம் கேட்டான்.

“பக்கத்துலதான் போயிருக்குது. இப்ப வந்துரும்” - அக்கா எழுதுவதில் மூழ்கினாள்.

அம்மா வந்தாள், கூடவே இரண்டு நபர்கள் சில பொருட்களைச் சுமந்துகொண்டு வந்தார்கள். ஒரு மீன்பாடி வண்டியில் செங்கற்களும் சிமென்ட் மூட்டைகளும் வந்து இறங்கின. சின்னாருக்கு ஒன்றுமே புரியவில்லை. அம்மாவிடம் கேட்டபோது, “நம்ம வீட்டுல கக்கூஸ் கட்டப்போறோம்டா” எனச் சொல்லி விட்டு மேஸ்திரியிடம் ஏதோ பேசினார். சின்னாருவுக்கு தலைகால் புரியவில்லை.

“அம்மா நெசமாவா சொல்ற?” எனக் கேட்டான்.

“உன் மேல சத்தியமா!” என்று அம்மா சின்னாருவின் தலையில் கை வைத்தாள்.

அவனுக்குச் சந்தோஷம் தாங்க வில்லை. நேராக பென்சிலையாவிடம் ஓடினான். பென்சிலையா, உள்ளே இருந்து வருபவரிடம் காசு வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டிருந்தார்.

“ஏமிரா கொடுக்கு... வயிறு கலக்கிருச்சா, உள்ள போ… ஃப்ரீயாத்தான் இருக்குது” என்றார்.

சின்னாரு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து “பென்சிலே... எங்க வீட்டுல கக்கூஸ் கட்டுறாங்கோ. அதான் உன்னாண்ட சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்” என்றவனுக்கு, சந்தோஷத்தில் முகம் பூரித்தது.

“ம்… ஆறுமுகம் மாதிரி இனிமே நீயும் இக்கட வர மாட்டல சின்னாரு?”

“ஆமாமாம்... இனிமே வர மாட்டேன். ஆனா, உன்னைப் பார்க்க வருவேன். வரட்டா பென்சிலு.”

பென்சிலையா சிரித்துக்கொண்டார்.

வீட்டுக்கு நடந்தவன், வழியில் மாறனைப் பார்த்தான்.

“டேய் மாறா… இனிமே நானும் சொந்த வீட்டு கக்கூஸ்காரன்தான். யாராவது சுலாபு கிலாபுனு கூப்பிட்டிங்கோ... மவனே பேஜாராய்டுவீங்கோ!” எனக் கித்தாப்புடன் மாறனைக் கடந்து சென்றான்.

வெள்ளை நிற கக்கூஸ் பேசனையும் கால் வைக்கும் பீங்கானையும், பதிப்பதற்காக மேஸ்திரி வெளியே எடுத்துவைத்தார். சின்னாரு அந்தப் பீங்கானை மிகுந்த வாஞ்சையோடு தடவிப்பார்த்தான். அவனுக்குக் கண்ணீர் வந்தது.

இரவு படுக்கும் முன் அம்மா சொன்னாள், “இனிமே என் புள்ளீங்க எங்கேயும் வவுத்தைப் புடிச்சிக்கினு நிக்க வேணாம். சின்னாரு... காத்தால நீதான் பஸ்ட் போகணும்... சரியா?” என்றபோது சின்னாருவின் அப்பா பெருமையாகப் பீடியை இழுத்துக்கொண்டார்.

எப்படிப் புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை சின்னாருவுக்கு. கண்களை விழித்துப் பார்த்தான். தான் அசந்து தூங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தான். அம்மா கக்கூஸின் வாயிலில் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் காட்டி சின்னாருவைப் பார்த்து, “ஏய் சின்னாரு... தண்ணி எடுத்து வெச்சுட்டேன் போ” என நகர்ந்தாள்.

சின்னாரு, தனது சொந்த வீட்டு கக்கூஸில் நுழைந்தான். கதவைத் தாழிட்டான். விசாலமாக இருந்தது. சிமென்ட் ஜன்னல் வைத்து காற்றோட்டமாகக் கட்டப்பட்டிருந்தது. அம்மா ஏற்றிவைத்த ஊதுபத்தியின் புகை கதவு இடுக்கில் சன்னமாக நுழைந்து, வாசனை மிகுந்த கழிவறையாக மாறியது. வாழ்வில் முதல்முறையாக தனது சொந்த கக்கூஸில் சின்னாரு உட்கார்ந்தான். எந்தக் கதவுத் தட்டல்களும் இல்லை. சுவர் சித்திரங்களின் வன்மம் இல்லை. பீடி புகையோ, நாராசங்களோ இல்லாத அவனுக்கான கழிவறையில் நெடுநேரம் உட்கார்ந்தும், எதுவும் நடக்காததுதான் ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை!

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.