Jump to content

இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து


Recommended Posts

இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து

newsziland-1.jpg

நியூசிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  இவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

11 வயதுடைய மகள், 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனினும் 47 வயதுடைய கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக போராடுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளது என கைலேசின் குடும்ப நண்பர் சிவராம் ஆனந்தசிவம் தெரிவித்துள்ளார்.

தற்போது நியூசிலாந்தின் அகதிகள் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றும் கைலேஸ் தனபாலச்ங்கம், நியூசிலாந்தில் குடியேறும் மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்குபவர். அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த அபத்தம் இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் இனக்குழுமங்களுக்கு பேரதிர்ச்சி எனவும் கைலேசின் குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/11181

Link to comment
Share on other sites

நியூஸிலாந்தில் தீவிபத்து இலங்கையைச் சேர்ந்த குடும்பம் உயிரிழப்பு
 
 
நியூஸிலாந்தில் தீவிபத்து இலங்கையைச் சேர்ந்த குடும்பம்  உயிரிழப்பு
நியூஸிலாந்தில் இடம்பெற்ற தீ விபத்தால் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன.தென் ஒக்லாந்து பகுதியில் இன்று இடம்பெற்ற பாரிய தீ விபத்திலேயே ஒரு  குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை நியூ ஸிலாந்து அகதி வழக்கறிஞர் இழந்துள்ளதாக நியூஸிலாந்து ஊடகம்  ஒன்று தெரிவித்துள்ளது.
 
குறித்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த கைலாஷ் தனபாலசிங்கம் என்பவரின் ஐந்து வயது மகன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைலாஷை காப்பாற்ற வைத்தியர்கள் போராடி வருகி ன்றனர்.
 
இந்த சம்பவத்தில் மூன்று தலைமுறையினர் உயிரிழந்துள்ளதாக கைலாஷின் குடும்ப நண்பர் சிவராம் ஆனந்தசிவம் தெரிவித்து ள்ளார்.
 
தனபாலசிங்கம் தற்போது நியூஸிலாந்து அகதிகள் சபையின்  நிர்வாக அதிகாரியாக செயற்படுகின்றார். அவர் அந்த நாட்டில் மிக வும் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கு உதவி செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.
 
இதேவேளை  பாடசாலை மாணவரும் 39 மற்றும் 66 வயதுடைய இரண்டு பெண்களும் Flat Bush பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
உயிரிழந்த குறித்த பாடசாலை மாணவனின் சகோதரியும் 69 வயதுடைய தாத்தாவும் சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான நிலை யில் வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.
 

http://www.onlineuthayan.com/news/21707

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைலேஷன் யாழ் இந்தக் கல்லூரியின் 88 (உயர்தரம்) பயின்றவர். என்னுடைய நண்பன்.
கனடாவை விட்டு போகும் போது எங்கள் வீட்டில் தான் கடைசியாக ஒரு பார்ட்டிக்கு வந்து இருந்தான்.
அன்பான, அழகான மனைவி, இரண்டு குழந்தை செல்வங்கள் .... இந்த புதிய வீட்டை 6 மாதங்களுக்கு முன்னர் தான் மனைவியின் விருப்பப்படி வாங்கி குடி புகுந்து இருந்தான்.
மனைவி (பாமினி)யின் அப்பா, அம்மா 8 நாட்களுக்கு முன்னர் தான் கனடாவில் இருந்து பேரக் குழந்தைகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார்கள் ....

ஒட்டாவா பல்கலைகழகத்தில் கணனி துறையில் படித்தவன் ... அநேகருக்கு கனடாவில்  கைலேஷனை   தெரிந்திருக்கலாம்..
மனசே வெறுமையாக இருக்கிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் கவுன்சில்காரன்களுக்காக சிமக் அலாரம் பழுதுபார்க்கும் அல்லது பொருத்தும் நிலையில் தான் எம்மவர்கள் வீடுகள் உள்ளன. சொந்தப் பாதுகாப்பில் அக்கறை இல்லை என்பதை விட.. அலட்சியமும்.. ஒரு வித.. முட்டாள் தனமும் எம்மவர்களிடம் உள்ளது. இப்படியான விபத்துக்கள் சில சரியான வீட்டுப் பாதுகாப்பு முறைமைகள் இன்மையால் நிகழ்வது தான் அதிகம். அந்த அறிவு பெறக் கூடிய ஆர்வமும் பரப்பும் தன்மையும் அல்லது அறிய வைக்கும் தன்மையும் குறைவு.. எம்மவரிடம். எல்லாம் வந்த பின் தான். வரும்... முன் காக்க வேண்டும் என்பது வெறும் ஏட்டுச்சுரக்காய் தான்.

எம்மவர் பலரின் வீடுகள்.. தகுந்த தீ விபத்து சமய பாதுகாப்புக்களைக் கொண்டிருப்பதில்லை. அதில் அக்கறையும் செலுத்தப்படுவதில்லை. பல மின்னியல் உபகரணங்கள் சரியான வகையில் கையாளப்படுவதும் இல்லை. குறிப்பாக மின் குதைகள்.... சமயலறை எரிவாயு.. நீர் சூடாக்கி.. பாவனைகள்... உள்ளடங்க. 

ஆழ்ந்த அனுதாபங்கள். இது தொடராமல்.. அல்லது குறைக்கப்பட எமது சமூகம்  தீ.. மின் ஒழுக்கு... மின் கசிவு.. சமையல் எரிவாயுப் பாவனை.. நீர் சூடாக்கி.. குறித்த.. அறிவூட்டப்பட வேண்டும். பல வீடுகளில்..  ஆபத்தான மின் சுற்றுக்களை எம்மவர்களே மேலதிகமாக எந்த ஆலோசனைகளும்.. இன்றிச் செய்திருப்பதை கண்டிருக்கிறேன். ஊரில செய்வது போல.  மின் உபகரணங்களை சேவைச் சோதனை செய்வதில்லை.

எல்லாம் காசு... மிச்சம் பிடிக்கிறம் என்ற தோறணையின் விளைவு. அடிப்படையில் காசு தான்.. எம்மவருக்கு எமன். அது போராட்டமாக இருந்தாலும் சரி... சாதாரண வாழ்க்கையான இருந்தாலும் சரி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

117311.jpg

திருமதி உமாதேவி தெய்வேந்திரன்

117312.jpg

திருமதி பாமினி கைலேசன்

117313.jpg

செல்வன் பரத் கைலேசன்

 

 

http://www.kallarai.com/ta/obituary-20161224214544.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

பலரும் தமது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்தாதிருப்பதன் விளைவு இது.

இவர்களது இழப்பு

எமக்காவது பாடமாக அமையட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்....!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கைலேசும் இன்று இறந்து விட்டதாக அறிய முடிந்தது. tw_cold_sweat:

உண்மை தான் நிழலி, காலையில் கூட அவன்  நலம் வேண்டி நண்பர்கள் மத்தியில் பிரார்த்தனை செய்திகள் வந்து கொண்டு இருந்தது, கைலேஷனின் உள் உறுப்புக்கள் (சுவாசப்பை)  கொஞ்சம் கொஞ்சமாக செயல் பட மறுத்துவிட்டதாக அறிகின்றேன். தீயால் வந்த புண்ணை விட அவன் மனதில் ஏற்றப்பட்ட காயம் தான் அவனை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கும்... கண்முன்னே அன்பு மனைவி, குழந்தைகளை இழப்பதென்பது நினைத்துமே பார்க்க இயலாத விடயம்.. 

நண்பர்கள் நாங்கள் அடுத்த மாதமளவில் அவனிடம் போவதாக தயார் படுத்திக்கொண்டு இருக்கும் போது இந்த செய்தி... நண்பா....உன் ஆத்மா சாந்தியடையட்டும், என்றென்றும் நீங்கா நினைவுகளோடு ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகால மரணமடைந்த இரத்த உறவுகளுக்கு என் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றேன்
மற்றும் உற்றார் உறவினர்களின் துயரில் நானும் பங்கெடுக்கின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.