Jump to content

ஒரு யாத்திரை


Recommended Posts

12 minutes ago, முனிவர் ஜீ said:

அடுத்த தங்குமிடம் வியால என்று சொல்கின்ற யால காட்டுப்பகுதியை நோக்கி தொடரும்    

முனி - இப்படியா மற்றவர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறது?
தீயணைப்பு படை வந்தாலும் எனது வயித்தெரிச்சலை அணைக்கேலாது.

என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே.

நல்லவொரு சந்தர்ப்பம் - தவற விட்டுவிட்டேன் 

தொடருங்கள் - உங்கள் எழுத்திலும், படங்களிலுமாவது மனது குளிரட்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு வெட்ட வெளி

DSCN0916.jpg

3 minutes ago, ஜீவன் சிவா said:

முனி - இப்படியா மற்றவர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறது?
தீயணைப்பு படை வந்தாலும் எனது வயித்தெரிச்சலை அணைக்கேலாது.

என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே.

நல்லவொரு சந்தர்ப்பம் - தவற விட்டுவிட்டேன் 

தொடருங்கள் - உங்கள் எழுத்திலும், படங்களிலுமாவது மனது குளிரட்டும்.

அண்னே அந்த நேரம் நாம் தொடர்பு கொள்ள வில்லை  கதிர்காமம் யாத்திரை யாத்திரையென்று கதைத்தோம் ஆனால் நீங்கள் வருவீர்களோ என்ற எண்ணம் இருக்க வில்லை எங்களுடன் உங்கலையும் இணைத்து இருப்பேன் ஏனேன்றால் அத்தனை பேரும் இளைஞர்கள்  நன்றாக இருந்திருக்கும்  அடுத்த வருடம் இணையலாம்  கவலை வேண்டாம்  tw_blush:

தூரத்தில் மேயும்காட்டு மாடுகள்

DSCN0915.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவு கிட்ட போய் மரத்துக்கு கீழே நின்று சுட்டது 

DSCN0961.jpg

Link to comment
Share on other sites

37 minutes ago, முனிவர் ஜீ said:

அண்னே அந்த நேரம் நாம் தொடர்பு கொள்ள வில்லை  கதிர்காமம் யாத்திரை யாத்திரையென்று கதைத்தோம் ஆனால் நீங்கள் வருவீர்களோ என்ற எண்ணம் இருக்க வில்லை எங்களுடன் உங்கலையும் இணைத்து இருப்பேன் ஏனேன்றால் அத்தனை பேரும் இளைஞர்கள்  நன்றாக இருந்திருக்கும்  அடுத்த வருடம் இணையலாம்  கவலை வேண்டாம்  tw_blush:

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை - ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை பாழடிக்க மாட்டேன். இயற்கையை ரசிக்க ரொம்ப பிடிக்கும். அதுவும் இப்படி 12000 பேருடன் ஒரு சுற்றுலா. இது உங்களுக்கு யாத்திரை எனக்கு சுற்றுலா. நினைக்கவே புல்லரிக்குது - கொடுத்து வைத்தவர் நீங்கள். தொடருங்கள் 

நானும் கொஞ்சம் நடை பழகி உங்களுடன் அடுத்த வருடம் இணைகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை - ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை பாழடிக்க மாட்டேன். இயற்கையை ரசிக்க ரொம்ப பிடிக்கும். அதுவும் இப்படி 12000 பேருடன் ஒரு சுற்றுலா. இது உங்களுக்கு யாத்திரை எனக்கு சுற்றுலா. நினைக்கவே புல்லரிக்குது - கொடுத்து வைத்தவர் நீங்கள். தொடருங்கள் 

நானும் கொஞ்சம் நடை பழகி உங்களுடன் அடுத்த வருடம் இணைகின்றேன்.

முதல்ல பொல்லை பிடிச்சு நடைபழகுங்க:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

அன்பு நண்பன் ஜீவனுக்கு, எதோ எங்கள் கம்பெனியால் முடிந்தது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை பயணக் கட்டுரை மிக சுவாரசியமாக இருக்கிறது. படங்கள் மிக அருமை, முனி.

ஈழத்தின் வடக்கு செம்மண்ணாலும், கிழக்கு கரிசலாகவும் இருக்கும் போல தெரிகிறது.

எனது கல்லூரித் தோழர்கள் குழாம் சென்றவாரம் கண்டி, நுவரெலியா,கதிர்காமம், கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். எனக்கும் அவர்களோடு செல்ல வாய்ப்பிருந்தது.. ஆனால் ஈழத்தை தவிர்த்து இலங்கையின் தென்மேற்கு பகுதிகளுக்கு செல்ல விருப்பமில்லையாதலால் தவிர்த்துவிட்டேன்.

கட்டுரைக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை - ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை பாழடிக்க மாட்டேன். இயற்கையை ரசிக்க ரொம்ப பிடிக்கும். அதுவும் இப்படி 12000 பேருடன் ஒரு சுற்றுலா. இது உங்களுக்கு யாத்திரை எனக்கு சுற்றுலா. நினைக்கவே புல்லரிக்குது - கொடுத்து வைத்தவர் நீங்கள். தொடருங்கள் 

நானும் கொஞ்சம் நடை பழகி உங்களுடன் அடுத்த வருடம் இணைகின்றேன்.

அப்போ இந்த வருடத்தில் இருந்தே நடக்க ஆரம்பியுங்கள் அண்ணை அப்ப தான் வந்து சேருவியள் நான் நடக்க ஆரம்பித்தால் யாரையும் திரும்பி கூட பார்க்க மாட்டேன் வருகிறாரா அல்லது இருக்குறாரா என்று அதனால நல்ல பயிற்ச்சி எடுக்கவும் . பேந்து நடுக்காட்டில் நாசமா போனவன் விட்டுட்டு போய்டானே என்று திட்ட கூடாது  tw_blush:

4 hours ago, நந்தன் said:

முதல்ல பொல்லை பிடிச்சு நடைபழகுங்க:grin:

வயது போனாலும் சிங்கன் மாதிரியொல்லோ ஆழு நடப்பார் சும்மா அந்த மாதிரி

2 hours ago, suvy said:

Afficher l'image d'origine

அன்பு நண்பன் ஜீவனுக்கு, எதோ எங்கள் கம்பெனியால் முடிந்தது.....!  tw_blush:

சுவி அண்ணே  பாத யாத்திரைக்கு நடக்க இந்த வாகனமா இதுல நடந்தால் பக்கத்து இருக்குற ரூமுக்கு செல்ல 10 நாட் கள் எடுக்குமேtw_blush:tw_blush:

2 hours ago, ராசவன்னியன் said:

யாத்திரை பயணக் கட்டுரை மிக சுவாரசியமாக இருக்கிறது. படங்கள் மிக அருமை, முனி.

ஈழத்தின் வடக்கு செம்மண்ணாலும், கிழக்கு கரிசலாகவும் இருக்கும் போல தெரிகிறது.

எனது கல்லூரித் தோழர்கள் குழாம் சென்றவாரம் கண்டி, நுவரெலியா,கதிர்காமம், கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். எனக்கும் அவர்களோடு செல்ல வாய்ப்பிருந்தது.. ஆனால் ஈழத்தை தவிர்த்து இலங்கையின் தென்மேற்கு பகுதிகளுக்கு செல்ல விருப்பமில்லையாதலால் தவிர்த்துவிட்டேன்.

கட்டுரைக்கு நன்றி!

நன்றி சேகர் அண்ணே ( ராஜவன்னியன்)   ஓம் வன்னி மண்ணுக்கும் கிழக்கு மண்ணூக்கும் நிறைய வித்தியாசம்  ஏன் பேச்சு தமிழ் கூட வித்தியாசம்  அ ட மிஸ் பண்ணிட்டீங்களே நீங்கள் வருவதாக எங்களுக்கு அறிவித்தல் கொடுத்திருந்தால்  கிழக்கில் நான் இருக்கிறேன் சுற்றிக்காட்ட பாடசாலை விடுமுறையென்பதால் எனக்கும் விடுமுறை ஒரு மாதம் , வடக்கில் ஜீவன் இருக்கிறார் சுற்றி க்காட்டி கொழும்பு வரைக்கும் கொண்டு சென்று விட்டிருப்போம் நீங்கள் போகும் திகதிக்கு :unsure:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

யாத்திரை பயணக் கட்டுரை மிக சுவாரசியமாக இருக்கிறது. படங்கள் மிக அருமை, முனி.

ஈழத்தின் வடக்கு செம்மண்ணாலும், கிழக்கு கரிசலாகவும் இருக்கும் போல தெரிகிறது.

எனது கல்லூரித் தோழர்கள் குழாம் சென்றவாரம் கண்டி, நுவரெலியா,கதிர்காமம், கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். எனக்கும் அவர்களோடு செல்ல வாய்ப்பிருந்தது.. ஆனால் ஈழத்தை தவிர்த்து இலங்கையின் தென்மேற்கு பகுதிகளுக்கு செல்ல விருப்பமில்லையாதலால் தவிர்த்துவிட்டேன்.

கட்டுரைக்கு நன்றி!

இப்படியான சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள். ஒரு முறை சென்று வந்தீர்களேயானால் அடுத்த தடவை உங்களுக்கு இலகுவாக இருக்கும்.

கதிர்காமம் முனிவருக்கு பக்கத்தில் தான் உடனேயே ஓடி வந்திருப்பார் (?)

Link to comment
Share on other sites

2 hours ago, ராசவன்னியன் said:

எனது கல்லூரித் தோழர்கள் குழாம் சென்றவாரம் கண்டி, நுவரெலியா,கதிர்காமம், கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். எனக்கும் அவர்களோடு செல்ல வாய்ப்பிருந்தது.. ஆனால் ஈழத்தை தவிர்த்து இலங்கையின் தென்மேற்கு பகுதிகளுக்கு செல்ல விருப்பமில்லையாதலால் தவிர்த்துவிட்டேன்.

 

33 minutes ago, முனிவர் ஜீ said:

நன்றி சேகர் அண்ணே ( ராஜவன்னியன்)   ஓம் வன்னி மண்ணுக்கும் கிழக்கு மண்ணூக்கும் நிறைய வித்தியாசம்  ஏன் பேச்சு தமிழ் கூட வித்தியாசம்  அ ட மிஸ் பண்ணிட்டீங்களே நீங்கள் வருவதாக எங்களுக்கு அறிவித்தல் கொடுத்திருந்தால்  கிழக்கில் நான் இருக்கிறேன் சுற்றிக்காட்ட பாடசாலை விடுமுறையென்பதால் எனக்கும் விடுமுறை ஒரு மாதம் , வடக்கில் ஜீவன் இருக்கிறார் சுற்றி க்காட்டி கொழும்பு வரைக்கும் கொண்டு சென்று விட்டிருப்போம் நீங்கள் போகும் திகதிக்கு :unsure:tw_blush:

உண்மைதான் வன்னியர்.

நீங்கள் வந்து வடக்கு கிழக்கை நேரடியாக பார்த்திருக்கலாம். கருத்து சண்டை வேறு, உறவு வேறு. அடுத்தமுறை இப்படியான சந்தர்ப்பம் அமைந்தால் கூறவும், சகல உதவிகளும் செய்து தரப்படும்.

நல்லதொரு சந்தர்ப்பத்தை தவற விட்டு  விட்டீர்கள்.

டிஸ்கி : முனிவர் வீட்டை மட்டும் அவதானமாக இருக்கவும் - முக்கியமா சாப்பிடும்போது. இல்லை தட்டை விட்டிட்டு எங்காவது பாத்தீங்களோ, திரும்ப தட்டை பாக்கும் போது ஆளாளுக்கு எதையாவது போட்டு மறுபடியும் தட்டை நிரப்பி வைத்திருப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

இப்படியான சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள். ஒரு முறை சென்று வந்தீர்களேயானால் அடுத்த தடவை உங்களுக்கு இலகுவாக இருக்கும்.

கதிர்காமம் முனிவருக்கு பக்கத்தில் தான் உடனேயே ஓடி வந்திருப்பார் (?)

அதே  ஆனால் 250 கிலோமீற்றராக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை செய்பவர்கள் யாரும் பாதணிகள் அணிவார்களா?

உங்கள் பெயருக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரியே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஜீவன் சிவா said:

 

உண்மைதான் வன்னியர்.

நீங்கள் வந்து வடக்கு கிழக்கை நேரடியாக பார்த்திருக்கலாம். கருத்து சண்டை வேறு, உறவு வேறு. அடுத்தமுறை இப்படியான சந்தர்ப்பம் அமைந்தால் கூறவும், சகல உதவிகளும் செய்து தரப்படும்.

நல்லதொரு சந்தர்ப்பத்தை தவற விட்டு  விட்டீர்கள்.

டிஸ்கி : முனிவர் வீட்டை மட்டும் அவதானமாக இருக்கவும் - முக்கியமா சாப்பிடும்போது. இல்லை தட்டை விட்டிட்டு எங்காவது பாத்தீங்களோ, திரும்ப தட்டை பாக்கும் போது ஆளாளுக்கு எதையாவது போட்டு மறுபடியும் தட்டை நிரப்பி வைத்திருப்பார்கள்.

 

யோவ் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை  கவனிப்பது கிழக்கு மக்கள் கொஞ்சம் வித்தியாசம் அதாவது வயிறார வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பது பண்பாடு மரபும் கூட tw_blush:tw_blush:

14 minutes ago, ஈழப்பிரியன் said:

யாத்திரை செய்பவர்கள் யாரும் பாதணிகள் அணிவார்களா?

உங்கள் பெயருக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரியே உள்ளது.

சிலர் அணிவார்கள் அண்ணே சிலபேர் அணிய மாட்டார்கள்  ஒருவருக்கு ஒரு முள் குத்தி அதாவது கீழ் பகுதியில் குற்றி மேல் பக்கத்துக்கு மேலாக வந்து விட்டது அவரை காவிக்கொண்டே சென்றார்கள் அதனால் சில பேர் அணிவார்கள் சிலர் அணிய மாட்டார்கள்.

பெயருக்கும் செயலுக்கும் என்ன அண்ண வச்ச புனைப்பெயரே  சரியாக அமைந்து விட்டது போல் ஓடுகிறது   மத்திய கிழக்கில்  இருக்கும் போது நண்பர் ஒருவருக்கு வைத்த பட்டம் அது  முனி என்று  யாழில் இணையும் போது புனை பெயர் கேட் க அதை வைத்தேன்  அவ்வளவுதான் ஆனால் ஒரு  முருக பக்தன் அவ்வளவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலடியில் பல வருடங்களாக மரத்தின் கீழ் ஊண்டப்பட்டிருக்கும் வேல் ஒன்று 

15782046_1159577350757861_1366862528_n.j

ஒரு வெட்டையில் இளைப்பாறும் ம‌க்க‌ள் கூட்டம்

15782789_1159577324091197_1254080506_n.j

அதிகாலை நேரத்துடனான நடை

15782533_1159577327424530_893748453_n.jp

Link to comment
Share on other sites

முருக பக்தர் முனிவரின் படங்கள் அருமை!
எம்மையும் யாத்திரை போகத் தூண்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2017 at 0:48 PM, Rajesh said:

முருக பக்தர் முனிவரின் படங்கள் அருமை!
எம்மையும் யாத்திரை போகத் தூண்டுகிறது.

நன்றி அதுக்கென்ன வாங்கோ கொடியேற்றத்துக்கு நடக்கலாம் 

நாவலடியிலிருந்து பயணம் ஆரம்பமாக முன்  சொன்னார்கள் அங்கே பெரிய ஆறு இருப்பதாகவும் அந்த இடத்தில் 3 நாட்கள் நாம் தங்க வேண்டும் என்றும் களைப்பாற நல்ல இடம் எனவும் கொண்டு போன சாப்பாட்டு பொருட்களை அங்கேயே முடித்து விட்டு சமையல் செய்யும் சட்டிகள் பானைகளை மட்டும் கொண்டு சென்றால் போதும் கதிர்காமம் சென்றவுடன் தேவையான பொருட்களை அங்கே வாங்கலாம் என்றும் சொன்னார்கள் அவர்கள் சொன்னது என் காதில் கேட்க வில்லை ஆற்றில் நிம்மதியாக நீராட வேண்டும் அதற்கு வேகமாக நடந்து  ஆற்றை அடைய வேண்டும் என்றும்  அதில் நன்றாக குளிக்க வேண்டும் ஆசை எனக்கு   ஆவலில் பெரியவர்களுடன் முன்னே நடந்தேன்.

அது  ஒற்றையடிப்பாதை அது அதில்  வேற வழி  பிரிகிறதென்றால்  அந்த இடத்தில் குறுக்காக தடி அல்லது கட்டைகளை போட்டு  வழியை மறித்து இருப்பார்கள் பெரிய காடு அது. தொலையா பொல என்ற காடு தொலைந்து போக கூடிய காடு என்றும் சொன்னார்கள்  . நானும் முதலில் காவிகட்டிய பெரியவர்களின்  உதவியுடன் டோச் லைட்டின் உதவியுன் நடக்க ஒரு சில மணித்தியாலங்கள் நடந்த பின் கண்ணுக்கு தெரியாத இருட்டு  வழி மாறி நடந்து கொண்டு இருப்பது தெரிந்தது அதாவது முட்கள் நிறைந்த காடாகவும் ஒருவர் கூட நடக்க முடியாமல் சிரமப்பட்டோம் தலையில் வைத்திருந்த பைகளை சூர முள் விடாமல் கொழுவி  கொழுவி பிடித்து இழுத்து கொண்டே வந்தது  ஒரு சிலருக்கு முட்கள் கிழித்து உடம்பிலிருந்து இரத்தம் வரவும் போன வழி நடுக்காட்டில் முடிவடைந்து இருந்தது மேலும் நடக்கமுடியாமல் போனது முன்னுக்கு சென்றவர்கள் வழி மாறி வந்து விட்டோம் என்று சொல்ல பின்னுக்கு வந்த மக்கள் முன்னுக்கு போன சாமிமார் என்னத்தை பார்த்து நடந்த நீங்கள் கண்ணை என்ன பிடயிலோ வைத்து நடந்தியள் என்று ஏச்சு கொடுத்தாலும் திரும்பி போக வேண்டும் ஆனால் திரும்பி போனாலும் அதே பாதையில் போய் சேர்வோமா என்ற சந்தேகம் வேற சனங்கள் சரியான கஸ்ரப்படுவதைப்பார்த்த அந்த சாமியார்கள் பொறுங்கோ கொஞ்சம் விடியட்டும் விடிஞ்ச பிறகு பாதை தேடி நடக்கலாம் என்று சொன்னார்.

சனங்கள்  அந்த இடத்தில் அமர முடியாது முட் காடுகள் ஒரு சிலர் இருக்கவும் ஒரு சிலர் நிற்கவும் நான் முன்னே நின்றேன் வழி மாறியதை நினைத்து  முழுசிக்கொண்டிருந்தேன் என்னுடன் வந்தவர்களை எப்படி கண்டு பிடிப்பது அவர்களுடன் எப்படி சேர்வது பற்றிய சிந்தனை ஓடிக்கிட்டே இருந்தது இனி அழுவதை தவிர வேற ஒன்றும்  இல்லை நினைக்கும் போது கொஞ்சம் வெளிச்சம் வந்து ஆட்கள் யார் யார் என கண்ணூக்கு தெரியும் படியாக இருந்தது

 

 அப்போது அந்த இடத்தில் சருகு சத்தம் கேட்கிறது   ஒரு பெரிய பாம்பு வந்தது இதுவரை நான் அந்த பாம்பை வாழ்நாளில் பார்த்தது இல்லை நல்ல பாம்பு சுமார் 10 அடி இருக்கும் அந்த இடத்துக்கு வந்தது சனம் கொஞ்சம் பீதியடைந்தாலும் வந்த பாம்பு அந்த இடத்தில் அதன் நீளத்திற்கு ஏற்றால் போல படம் எடுத்தது எடுத்து  அந்த நிலத்தில் அடித்தது ஒரே அதிசயமாக இருந்தது   எங்களுக்கு அந்த இடத்தில் என்ன சொல்வது என்று சொல்ல தெரியவில்லை.
சனம் எல்லாம் அரோகரா சத்தம் கொடுக்க காடு அதிர்ந்தது முன்னே நின்ற அந்த வயது போன சாமிமார் கற்பூரத்தை எடுங்கோ என்று சொல்ல கற்பூரத்தை எடுத்து கொழுத்திவிட்டு அந்த பாம்பின் வழி தொடர்த்தோம்    ஒரு தொலை தூரத்தில் காவித்துண்டு மரத்தில் கட்டிய ஒரு  சான்று தூரத்தில் தெரிந்தது அப்போதுதான் வந்த மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.பாம்பை தேடினால் அது எங்கே போனது எப்படி போனது என்று யாருக்கும் தெரியவில்லை  அந்த அந்த பாம்பு ஏன் வரவேண்டும் அந்த இடத்துக்கு என்ற ஆயிரம் கேள்வி மனதில் எழுந்தாலும் அதன் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டது மனிதனை மிஞ்சிய சக்தி இருக்கிறது அதை இறைவன் கடவுள் என்றாலும் இப்படிசில சம்பவங்கள் இந்த பாதையில் நடக்கிறது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு விஞ்ஞான விளக்கம் கொடுக்க முடியாது 
.

இதனால் ஈர்க்கப்பட்ட நான் வருடா வருடம் நடந்து செல்கிறேன் இதுவரை பல சம்பவங்கள் நடந்து இருந்தாலும் நான் நடக்கும் போது என் கண்முன்னே நடந்தது மத்திய கிழக்கில் இருக்கும் போது 3 வருடங்கள் நடக்க முடியாமல் போனது மற்ற மூன்று வருடங்கள் கதிர்க்காமம் யாத்திரை  போகும் மாதத்தில் விடுமுறையில் வந்து நடந்து விட்டு மீண்டும் சென்று விடுவேன் ஏனோ என் வாழ்வில் அது பிடித்து விட்டது.இந்த பாத யாத்திரை அம்மா அப்பா அம்மம்மா ஆகியோர் ஆரம்பத்தில் நடக்கும் கொடியேற்றத்துக்காக நடக்கும் சாமியாருடன் வருடா வருடம் நடந்து போவது வழமையாகிவிட்டது 
 
போகும் வழியில் கள்ள வியால என்ற இடம் சிறிய ஓடை உப்புத்தண்ணிதான் நாங்கள் அந்தநாட்களில் போகும் போது அதை கடந்து தான் போக வேண்டும் முதலைக்கூட்டங்கள் படுத்திருக்கும் இதுவரை மனிதர்களை ஒன்றும் செய்தது இல்லை தற்போது அதை கடக்க சில மர‌ங்களை குறுக்காக போட்டுள்ளார்கள் வனத்துறையினர் தற்போது அந்த இடத்தில் நடந்து போகும்  யாத்திரிகளுக்கு சிங்கள் கோடீஸ்வரர்களால் மதிய உணவு சமைத்து கொடுக்கிறார்கள் , இளநீர் கூட கொடுக்கிறார்கள் .மூன்று நாட்கள் அங்கே நல்ல சாப்பாடு தண்ணீர் நல்ல தூக்கம் காட்டுக்குள் கொண்டு போன உணவான சிற்றுண்டி வீட்டில் செய்து கொடுத்த  அனைத்து பார உணவுகளுக்கும் அங்கே விடுதலை கொடுத்தோம்    கருவேப்பிலை மரங்கள் காடாகவும் மதுரை மரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் ஆற்றை வணங்கிய இடமும் போல் அழகிய இடம் மக்கள் கூட்டமும் வந்த களைப்பில் இளைப்பாறும் இடமாகவும் காணப்பட்டது வியால என்கிற யால இது மிருக சரணாலயம் கூட யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கும் தூரமாக மக்களின் சத்தத்துக்கு அருகில்    மிருகங்கள் வருவது குறைவு ஆனால் இரவில் காட்டில் முறிக்கும் மரங்களின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.    
கரடிகள் ஆதிகமாக காணப்படும் காடு  சிறுத்தைகள் மான்கள் மரைகள் ,இரு வருடங்களூக்கு முன் காட்டில் மாலை நேரம் மிருகம் கத்தும் சத்தம் கேட்டது போய் பார்த்தால் ஒரு மான்குட்டியை சிறுத்தை கிழித்து அப்போதுதான் போட்டிருந்தது அதன் படம் தொலைந்து விட்டது ,இன்னுமொரு சம்பவம் காட்டுக்குள் சென்ற ஒருவரை  காட்டு பன்றிகள் தன்னை பிடிக்க வருகிறார் என நினைத்து அவரின் கவட்டுக்குள் புகுந்து விட்டது வேறென்ன கவடு கிழிந்து காயம். ஆனால் இந்த காட்டில் ஒருவர் காணாமல் போயுள்ளார் அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரைக்கும் யாருக்கும்  தெரியாது.  இதே போல் இன்னும் கொஞ்சம் பேர் வழி மாறி  சென்ற போது காட்டு எருமைகள் வந்து கூட்டமாக  துரத்தி வருவது போல் வந்து வழி காட்டி சென்றதாகவும் சொல்வார்கள்.
  சில சம்பவங்கள் இப்படியும் நடக்கும் இப்படி மிகப்பயங்கரமாக இருக்கும் இந்த வியால என்ற காடு ராணுவத்தில் மிக முக்கியமான பயிற்ச்சி தளம் கூட இருக்கிறது அந்த நாட்களில் ராணுவத்தில்  மெடிக்கல் பிரிவினர் வந்து மக்களுக்கு காயம் ஏற்பட்டால் , மருந்து கட்டுவது , தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் சிலவேளைகளில் ரீ பணிஸ் தேநீர் தந்து விட்டு போவார்கள் அது வில்வம் பூவினால் செய்தது மிக நன்றாக இருக்கும் அதற்க்கு சீனி போடாமல் சக்கரைக்கட்டி அல்லது சீனியை நக்கி குடிக்க  தருவார்கள் சுவையானதும்  உடம்புக்கு மிக நல்லது கூட‌..... 
 

நான் சொன்ன‌ க‌ள்ள‌ வி(யால‌)

 

15820069_1159577344091195_1078327253_n.j

 

15800979_1159577347424528_370320129_n_1.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை செய்யும் சாமிமார்க‌ளூக்கு சாப்பாடு கொடுக்கும் சிங்க‌ளதொழில‌திப‌ர்க‌ளால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கூடார‌ம் அந்த‌ ந‌டுக்காட்டில்

DSCN0919.jpg

சாப்பாடு வழங்கும் போது 

15782219_1159577334091196_761124791_n.jp

வியால ஆற்றின் பகுதி கையில் கறிவேப்பிலை கட்டுடன்

15822471_1159577440757852_20989404_n.jpg

 

ஆற்றின் நடுவே மக்கள் 15820440_1159577384091191_123505292_n.jp

அழகிய ஆற்று மணலில் இரவில் நித்திரை கொள்வது 

DSCN0922.jpg

இந்த வருட சமையல் வேலையில் நமது சாமிமார் இருவர் திட்டம் போடுகிறார்கள் என்ன சமைக்கிறதென்று tw_blush:

DSCN0924.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 நீரை எடுக்கும் காட்சி

15781997_1159577400757856_472141774_n.jp

போன வருடம் யாலயை சென்றவுடன்  பொருட் களை பிரித்து வைத்து தேநீர் வைப்பதற்காக நீரை எடுக்க சென்ற வேளை நமதுசங்கத்து உறுப்பினர்கள் ஆட்டையை போட்டுக்கொண்டு ஓடிவிட்டார்கள் மரக்கறிகளை அவைகளை சுட்ட படம் இது மரத்தின் கலரில் உருமறைப்பு செய்ததால் பக்கிகளை கண்டு பிடிக்க முடியல

DSCN0113.jpg

சொதி வைக்க வைத்திருந்த தக்காளியை சுவைக்கிறார்

DSCN0662.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை துரத்தி ஆறுவரைக்கும் கொண்டு விட்டது சரிதானே அதுன்ற இடத்துக்கு நாம போனால் விடாது  கூட்டத்தை கூட்டி வந்து என்னத்தை சொல்ல ஒரு காட்டு காட்டிச்சு

DSCN0668.jpg

என்னை ரவுண்டு கட்டியது .............................தொடரும் யாத்திரை

DSCN0667.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவில் தீ மூட்ட  விறகுகளை அடுக்கியது tw_blush:

இரண்டு பக்கமும் ஆறு ஓடிக்கொண்டே இருக்கும் நடுவில் இருக்கும் மணல் திட்டில் என்ன சொல்வது ...................................

15749869_1159577517424511_872855789_n.jp

 

Link to comment
Share on other sites

அருமை! அருமை! தொடரட்டும் பாத யாத்திரை .

On 1/6/2017 at 11:24 PM, முனிவர் ஜீ said:

 அப்போது அந்த இடத்தில் சருகு சத்தம் கேட்கிறது   ஒரு பெரிய பாம்பு வந்தது இதுவரை நான் அந்த பாம்பை வாழ்நாளில் பார்த்தது இல்லை நல்ல பாம்பு சுமார் 10 அடி இருக்கும் அந்த இடத்துக்கு வந்தது சனம் கொஞ்சம் பீதியடைந்தாலும் வந்த பாம்பு அந்த இடத்தில் அதன் நீளத்திற்கு ஏற்றால் போல படம் எடுத்தது எடுத்து  அந்த நிலத்தில் அடித்தது ஒரே அதிசயமாக இருந்தது   எங்களுக்கு அந்த இடத்தில் என்ன சொல்வது என்று சொல்ல தெரியவில்லை.
சனம் எல்லாம் அரோகரா சத்தம் கொடுக்க காடு அதிர்ந்தது முன்னே நின்ற அந்த வயது போன சாமிமார் கற்பூரத்தை எடுங்கோ என்று சொல்ல கற்பூரத்தை எடுத்து கொழுத்திவிட்டு அந்த பாம்பின் வழி தொடர்த்தோம்    ஒரு தொலை தூரத்தில் காவித்துண்டு மரத்தில் கட்டிய ஒரு  சான்று தூரத்தில் தெரிந்தது அப்போதுதான் வந்த மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.பாம்பை தேடினால் அது எங்கே போனது எப்படி போனது என்று யாருக்கும் தெரியவில்லை  அந்த அந்த பாம்பு ஏன் வரவேண்டும் அந்த இடத்துக்கு என்ற ஆயிரம் கேள்வி மனதில் எழுந்தாலும் அதன் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டது மனிதனை மிஞ்சிய சக்தி இருக்கிறது அதை இறைவன் கடவுள் என்றாலும் இப்படிசில சம்பவங்கள் இந்த பாதையில் நடக்கிறது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு விஞ்ஞான விளக்கம் கொடுக்க முடியாது 

இது போன்ற அற்புதங்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் முனிவர்ஜீ...தனியே படங்களை மட்டும் போடாமல் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

தொடருங்கள் முனிவர்ஜீ...தனியே படங்களை மட்டும் போடாமல் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் எழுதுங்கள்

பாவம் விட்டு விடுங்கள் சகோதரி.... இப்பதான் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

தொடருங்கள் முனிவர்ஜீ...தனியே படங்களை மட்டும் போடாமல் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் எழுதுங்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரதி ஒவ்வொரு வருடம் ஒரு சிலருக்கு மட்டுமே அனுபவிக்க கிடைக்கும்  சம்பவங்கள்   அது  கிடைப்பது  பாக்கியம் தான் 

 

13 hours ago, suvy said:

பாவம் விட்டு விடுங்கள் சகோதரி.... இப்பதான் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.....!  tw_blush:

 இந்த வருடம் போக முடியாமல் போய் விடுமோ என்ற  ஒரு தயக்கம் தான் பார்ர்போம் கட்டினால்  பொட்டி விடாது கட்டாமல் விட்டா வீடு விடாது  இரு பக்கமும் அடிபட வேண்டியதா கிடக்கண்ணை  

tw_blush:  

அப்பப்ப    ஞாபகப்படுத்துகிறீர்களே:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டும் பிரச்சினை இல்லை முனிவர்.... பொட்டியை  நேர்வழியில் அனுப்பிவிட்டு நீங்கள் வழக்கம்போல் குறுக்கு வழியில போகலாம்....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.