Jump to content

இலங்கை, தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர் செய்திகள்


Recommended Posts

19 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு குமாரா 6 விக்.: தென் ஆப்பிரிக்கா 392 ரன்கள்

 
லாஹிரு குமாராவை பாராட்டும் இலங்கை வீரர்கள். | படம்.| ஏ.எப்.பி.
லாஹிரு குமாராவை பாராட்டும் இலங்கை வீரர்கள். | படம்.| ஏ.எப்.பி.
 
 

கேப்டவுனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 392 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

குவிண்டன் டி காக் அதிரடி முறையில் சதம் எடுத்தார், இலங்கையின் 19-வயது லாஹிரு குமாரா 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

விட்டுக் கொடுக்காத போர்க்குணம் மிக்க ஒரு வேகப்பந்து வீச்சாளரை லாஹிரு குமாரா மூலம் இலங்கை அடையாளம் கண்டுள்ளது. அதுவும் ஆம்லாவின் சுவர் போன்ற தடுப்பாட்டத்தை முறியடித்து அவரை பவுல்டு செய்தது அதே ஓவரில் டுமினியையும் வீழ்த்தியது என்று லாஹிரு அசத்தினார், இன்று சத நாயகன் குவிண்டன் டி காக் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்.

குவிண்டன் டி காக் 124 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து சந்திமாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற பிலாண்டர், ரபாடா ஆகியோரையும் குமாரா வீழ்த்தினார். 19 வயது குமாரா தனது 3-வது டெஸ்ட் போட்டியிலேயே அயல் மண்ணில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கையின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது பவுலரான ஹெராத் 2 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் சற்று முன் 392 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

தற்போது கருண ரத்ன, சில்வா ஆடத் தொடங்கி இலங்கை விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/19-வயது-இளம்-வேகப்பந்து-வீச்சாளர்-லாஹிரு-குமாரா-6-விக்-தென்-ஆப்பிரிக்கா-392-ரன்கள்/article9457182.ece

South Africa 392 & 34/0 (10.1 ov)
Sri Lanka 110
Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட்: ரபாடா, பிளாண்டர் வேகத்தில் 110 ரன்னில் சுருண்டது இலங்கை

2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணியின் ரபாடா, பிளாண்டர் ஆகியோரின் வேகத்தில் இலங்கை அணி 110 ரன்னில் சுருண்டது.

 
2-வது டெஸ்ட்: ரபாடா, பிளாண்டர் வேகத்தில் 110 ரன்னில் சுருண்டது இலங்கை
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி டீன் எல்கர் (129), டி காக் (101) ஆகியோரின் அபார சதத்தால் 392 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் குமாரா 6 விக்கெட்டுக்கள் குவித்தார்.

அதன்பின் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு, இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினார்கள்.

8EF378A8-CA3C-4809-9358-179203DD5A67_L_s
விக்கெட் வீழ்த்திய சந்தோஷத்தில் ரபாடா

இதனால் இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கருணாரத்னே 24 ரன்னும், 7-வது வீரராக களம் இறங்கிய உபுல் தரங்கா அவுட்டாகாமல் 26 ரன்னும் எடுத்தனர். மற்றவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இலங்கை அணி 110 ரன்னில் சுருண்டது.

பிளாண்டர், ரபாடா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இலங்கை அணி 282 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணி பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/03213206/1059933/2nd-Test-Sri-Lanka-110-all-out.vpf

Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட்: இலங்கை அணிக்கு 507 ரன்கள் இலக்கு வைத்தது தென் ஆப்பிரிக்கா

கேப்டவுனில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இலங்கை அணியின் வெற்றிக்கு 507 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 
 
2-வது டெஸ்ட்: இலங்கை அணிக்கு 507 ரன்கள் இலக்கு வைத்தது தென் ஆப்பிரிக்கா
 
கேப்டவுன்:

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 392 ரன்கள் குவித்தது. டீன் எல்கர் 129 ரன்களும், டி காக் 101 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி சார்பில் குமாரா 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 110 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக உபுல் தரங்கா 26 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். துவக்க வீரர் கருணாரத்னே 24 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிளாண்டர், ரபாடா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இலங்கை அணி 282 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. ஆனால் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் சேர்த்திருந்தது.

இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக எல்கர் 55 ரன்களும், கேப்டன் டுபிளசிஸ் 41 ரன்களும் சேர்த்தனர். இதனால், இலங்கை அணியின் வெற்றிக்கு 507 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்குடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்சைப் போன்றே வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 25 ரன்கள் எடுப்பற்குள் 2 விக்கெட்டுகளை (கருணாரத்னே-6, மென்டிஸ்-4) இழந்தது. அதன்பின்னர் குஷால் சில்வா 29 ரன்களிலும், டிசில்வா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மேத்யூஸ், சண்டிமால் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமிருந்தாலும், விக்கெட்டை காப்பாற்றி இலக்கை எட்டுவது மிகவும் கடினமானது என்பதால் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/04214940/1060159/south-africa-set-target-507-runs-to-sri-lanka.vpf

Link to comment
Share on other sites

இலங்கை படுதோல்வி : தொடரை வென்றது தென்னாபிரிக்கா

 

இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 282 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.SOUTH-AFRICA-V-SRI-LANKA-00221.jpg

507 என்ற என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 224 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையூம் இழந்து தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் ரபாடா 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தென்னாபிரிக்கா 2-0 என கைப்பற்றியுள்ளது.

http://www.virakesari.lk/article/15123

Link to comment
Share on other sites

டெஸ்ட் தொடர் தோல்விக்கு காரணம் சொல்கிறார் மெத்தியூஸ்

02-8b51728eb34fb53baa50ecd44da8e6187f06c9d8.jpg

 

துடுப்­பாட்ட வீரர்­களின் செயற்­பாடு துல்­லி­ய­மாக இல்­லா­ததே தென்­னா­பி­ரிக்க அணி­யு­ட­னான டெஸ்ட் தோல்­விக்கு முக்­கிய காரணம் என்று இலங்கை அணித்­த­லைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் கூறி­யுள்ளார்.

அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­மை­யி­லான இலங்கை அணி தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யாடி வரு­கி­றது.

இதில் எலி­செ­பத்தில் நடை­பெற்ற முதல் டெஸ்ட் போட்­டியில் 206 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் தோற்ற இலங்கை, கேப் ­ட­வுனில் நடை­பெற்ற 2ஆவது டெஸ்ட் போட்­டியில் 282 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் படு­தோல்­வி­ய­டைந்­தது.

இதன் மூலம் 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரை தென்­னா­பி­ரிக்கா 2–-0 என்ற கணக்கில் கைப்­பற்­றி­யது. இந்த தோல்வி குறித்து இலங்கை அணித்­த­லைவர் அஞ்­சலோ மெத்­தி­யூ­ஸ் கருத்து தெரி­விக்­கையில்,  

நாணயச் சுழற்­சியில் வென்றும், இலங்கை அணிக்கு சாத­க­மான நிலை இருந்தும், தோல்­வி­ய­டைந்­தி­ருப்­பது ஏமாற்றம் அளிக்­கி­றது. மீண்டும் ஒரு முறை எங்கள் துடுப்­பாட்ட வீரர்கள் அணியை மோச­மான நிலைக்கு கொண்டு சென்­று­விட்­டனர். 

பந்து வீச்­சா­ளர்கள் சிறப்­பாக செயற்­பட்­டாலும், துடுப்­பாட்ட வீரர் கள் வெற்­றிக்கு இட்டுச் செல்லும் பாதையை சரி­யாக அமைத்துக் கொடுக்­க­வில்லை.  துடுப்­பாட்­டத்தில் வீரர்கள் அக்­கறை காட்ட வேண்­டி­யது மிக மிக அவ­சி­ய­மா­னது. 

மேலும், லஹிரு குமா­ர­வுக்கு 19 வயது தான் ஆகின்­றது. ஆனால் அவர் பந்­து­வீச்சில் அசத்­தி­விட்டார். தென்­னா­பி­ரிக்க அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் ரபாடா சிறப்­பாக செயற்­பட்டார். அவர் 2ஆவது இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார் என்றும் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரின் கடைசி போட்டி ஜோகன்னஸ்பேக்கில் எதிர்வரும் 12ஆம் திகதி தொடங்குகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-07#page-8

Link to comment
Share on other sites

மூன்­றா­வது டெஸ்ட் இன்று ஆரம்பம்: தென் ஆபிரிக்காவினால் வெள்ளையடிக்கப்படுவதைத் தவிர்க்க இலங்கையின் துடுப்பாட்டம் பிரகாசித்தே ஆகவேண்டும்
2017-01-12 11:31:57

தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக வொண்­டரர்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணி துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்க வேண்­டிய கட்­டாய நிலையில் இருக்­கின்­றது.

 

முதல் இரண்டு டெஸ்ட் போட்­டி­களில் தென் ஆபி­ரிக்க துடுப்­பாட்ட வீரர்கள் மூவர் சதங்­க­ளையும் ஐவர் அரைச் சதங்­க­ளையும் பெற்­றுள்­ள ­போ­திலும் இலங்கை சார்­பாக இருவர் மாத்­தி­ரமே அரைச் சதங்­களைப் பெற்­றுள்­ளனர்.

 

மேலும் துடுப்­பாட்­டத்தில் அதிக ஓட்­டங்­களைப் பெற்­றுள்ள தென் ஆபி­ரிக்­கர்­களின் நால்வர் 50 க்கும் மேற்­பட்ட சரா­ச­ரியைக் கொண்­டுள்­ளனர். இலங்­கை­யர்­களின் துடுப்­பாட்ட சரா­சரி 38க்குக் கீழேயே இருக்­கின்­றது.

 

இலங்கை பந்­து­வீச்­சா­ளர்கள் தென் ஆபி­ரிக்­கர்­க­ளுக்கு ஈடு­கொ­டுத்து பந்­து ­வீ­சு­கின்­ற­போ­திலும் துடுப்­பாட்ட வீரர்கள் இப் போட்­டி­யிலும் சோபிக்கத் தவ­றினால் வெள்­ளை­ய­டிப்­புக்கு உள்­ளா­வதைத் தவிர்க்க முடி­யாமல் போகும்.

 

217561447802791218.jpg

 

எவ்­வா­றா­யினும் இன்­றைய போட்­டிக்­கான இலங்கை அணியில் பாரிய மாற்­றங்கள் இடம்­பெறும் என்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை. எனி னும் துடுப்­பாட்ட வரி­சையில் ஒரே ஒரு மாற்றம் இடம்­பெ­று­வ­தற்கு வாய்ப்­புள்­ளது.

 

திமுத் கரு­ணா­ரட்ன, கௌஷல்ய ஆகிய இரு­வரும் வழ­மைபோல் ஆரம்­பத்­ து­டுப்­பாட்ட வீரர்­க­ளாக களம் இறங்­கு­வது உறுதி. 3ஆம் இலக்­கத்தில் குசல் மெண்டிஸ் துடுப்­பெ­டுத்­தா­டு­வ­துடன் 4ஆம் இலக்­கத்தில் தனஞ்­செய டி சில்வா, தினேஷ் சந்­திமால், உப்புல் சந்­தன ஆகிய மூவரில் ஒருவர் விளை­யா­டுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஏஞ்­சலோ மெத்­யூஸின் 5ஆம் இல­கத்தை நிலை­யாக்கிக் கொண்­டுள்ளார்.

 

4 இலக்­கத்­திற்கு குறிப்­பி­ட­பட்ட மூவரில் ஒருவர் அந்த இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தா­டினால் மற்­றைய இருவர் 6ஆம், 7ஆம் இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தா­டு­வது நிச்­சயம். 

 

இவர்­களைத் தொடர்ந்து ரங்­கன ஹேரத், சுரங்க லக்மால், லஹிரு குமார, நுவன் ப்ரதீப் அல்­லது துஷ்­மன்த சமீர ஆகியோர் துடுப்­பாட்ட வரி­சையில் இடம்­பெ­றுவர் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் பொறுமை, நிதானம், சிறந்த நுட்­பத்­திறன், துணிச்சல் ஆகி­ய­வற்றை ஒருங்கே பிர­யோ­கிப்­ப­துடன் அடி தெரி­வு­களை மிக நேர்த்­தி­யாகக் கையாள்­வது மிக­மிக அவ­சி­ய­மாகும்.

 

அப்­போ­து தான் இலங்கை அணி­யினால் கணி­ச­மான மொத்த ஓட்ட ங்களைப் பெறக்கூடியதாக இருக்கும். இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிப்பார்களா அல்லது முதலிரண்டு போட்டிகளில் போன்று தடுமாறுவார்களா என்பதற்கு இன்று ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பதில் தரும்.

 

அம்­லாவின் 100ஆவது டெஸ்ட் 

இலங்­கைக்கு எதி­ராக ஜொஹா­னெஸ்­பேர்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள டெஸ்ட் போட்­டி­யா­னது தென் ஆபி­ரிக்­காவின் துடுப்­பாட்ட வீரர் ஹஷிம் அம்­லாவின் 100ஆவது டெஸ்ட் போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது.

 

2004 இலி­ருந்து இது­வரை 99 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள அம்லா 25 சதங்கள், 31 அரைச் சதங்­க­ளுடன் 7665  ஓட்­டங்­களை மொத் தமாக பெற்றுள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21756#sthash.TTI6KmRq.dpuf
Link to comment
Share on other sites

‘துடுப்­பாட்ட வீரர்­கள் தான் அணியைக் கைவிட்­டனர்’ - சனத் ஜய­சூ­ரிய
2017-01-12 11:35:44

தென் ஆபி­ரிக்­கா­வுக்­கான கிரிக்கெட் விஜ­யத்தில் இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் பிர­கா­சிக்கத் தவ­றி­யமை குறித்து கடும் அதி­ருப்­தியை தலைமை தெரி­வாளர் சனத் ஜய­சூ­ரிய வெளி­யிட்­டுள்ளார்.

 

ஜொஹா­னெஸ்­பேர்கில் நடை­பெ­ற­வுள்ள மூன்­றா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் முன்­வ­ரிசை துடுப்­பாட்ட வீரர்கள் போட்­டியின் தன்­மையை நன்கு அவ­தா­னித்து அதற்­கேற்ப திற­மையை வெளிப்
­ப­டுத்த வேண்டும் என சனத் ஜய­சூ­ரிய கேட்­டுக்­கொண்­டுள்ளார். 

 

21757sanath1.jpgதென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான முத­லி­ரண்டு டெஸ்ட் போட்­டி­களில் ஓர் இன்­னிங்­ஸி­லேனும் இலங்­கை­யினால் 300 ஓட்­டங்­களைப் பெற முடி­யாமல் போனது.

 

தென் ஆபி­ரிக்க துடுப்­பாட்­டத்தை இலங்கை பந்­து­வீச்­சா­ளர்கள் சுமா­ராகக் கட்­டுப்­ப­டுத்­தி­யபோ­திலும் மோச­மான துடுப்­பாட்­டமே இலங்­கை யின் தோல்­வி­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­தது. ‘‘இள­மையும் அனு­ப­வமும் கலந்த அணி­யையே நாங்கள் தெரிவு செய்தோம்’’ என சனத் ஜய­சூ­ரிய குறிப்­பிட்டார்.

 

‘‘அண்­மைக் ­கா­லங்­களில் இளம் வீரர்கள் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். பல வீரர்கள் தென் ஆபி­ரிக்­காவில் முதல் தட­வை­யாக விளை­யா­டி­யதால் அவர்­களால் பிர­கா­சிக்க முடி­யாமல் போன­தென்­பதை ஒப்­புக்­கொள்­ளலாம். ஆனால் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யிலும் அதே­போன்று ஏன் சோடை போனார்கள் என்­பது எனக்குப் புரி­ய­வில்லை’’ என அவர் கூறினார்.

 

‘‘நிலை­மைக்­கேற்ப ஒரு துடுப்­பாட்ட வீர­ரா­வது நிதா­ன­மா­கவும் திற­மை­யா­கவும் துடுப்­பெ­டுத்­தாடி விக்கெட்டை தக்­க­ வைத்­துக் ­கொண்­டி­ருக்­க­ வேண்டும். ஆனால் அவ்­வாறு நிறை­வே­றா­தது கவலை தரு­கின்­றது‘‘ என்றார் சனத் ஜய­சூ­ரிய.

 

போர்ட் எலி­ஸபெத் டெஸ்ட் போட்­டியில் முன்­வ­ரிசை வீரர்கள் பிர­கா­சிக்­காதநிலையில் நான்கு துடுப்­பாட்ட வீரர்கள் திற­மையை வெளிப்­ப­டுத்­திய போதிலும் அவர்­களால் நீண்ட நேரம் தாக்­குப்­பி­டிக்க முடி­யாமல் போனது.

 

கடைசி டெஸ்ட் போட்­டியில் துடுப்­பாட்ட வீரர்கள் திருப்­தி­க­ர­மான ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­த­வேண்டும்’’ என சனத் ஜய­சூ­ரிய மேலும் தெரி­வித்தார். பந்­து ­வீச்­சா­ளர்கள் குறித்து எவ்­வித குறையும் காண முடி­யாது என அவர் தெரிவித்தார்.

 

‘‘இலங்கை பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்து வீசியதுடன் இலங்கையினால் எட்ட முடியாத மொத்த எண்ணிக்கைகளை அவர்கள் கொடுக்கவில்லை. துடுப்பாட்ட வீரர்கள் தான் அணியை கைவிட்டனர்’’ என அவர் கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21757#sthash.P8Nk24Nv.dpuf
Link to comment
Share on other sites

100 ஆவது டெஸ்ட்டில் சதம் குவித்தார் ஹஷிம் அம்லா
2017-01-12 21:18:03

இலங்கை அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று தென் ஆபிரிக்க வீரர்களான ஹஷிம் அம்லா, ஜீன் போல் டுமினி ஆகியோர் சதம் குவித்தனர்.

 

21764hasim-amla.jpg


ஹஷிம் அம்லா, தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் 100 ஓட்டங்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜொஹானெஸ்பேர்க், தி வொண்டரர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்ஆபிரிக்க அணித்தலைவர் பவ் டூ பிளேசிஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.


ஸ்டீபன் குக் 10 ஓட்டங்களுடனும் எல்கர் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அவர்களையடுத்து களமிறங்கிய, ஜீன் போல் டுமினியும் ஹஷிம் அம்லாவும் சதங்களைக் குவித்ததுடன் 3 ஆவது விக்கெட்டுக்காக 292 ஓட்டங்களை பகிர்ந்தனர்.


டுமினி 155 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரின் 6 ஆவது டெஸ்ட் சதமாகும். ஹஷிம் அம்லா ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இது அம்லாவின் 26 ஆவது டெஸ்ட் சதமாகும்.


இன்றைய ஆட்டமுடிவின்போது தென் ஆபிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் லஹிரு குமார 79 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21764#sthash.UTwIYHQB.dpuf
Link to comment
Share on other sites

அம்லாதான் 100-வது டெஸ்டில் விளையாடும் கடைசி வீரராக இருப்பார்: டு பிளிசிஸ் சொல்கிறார்

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் 100-வது டெஸ்டில் விளையாடும் கடைசி வீரராக அம்லா இருப்பார் என்று அந்த அணியின் கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

 
அம்லாதான் 100-வது டெஸ்டில் விளையாடும் கடைசி வீரராக இருப்பார்: டு பிளிசிஸ் சொல்கிறார்
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது. இந்த போட்டி அம்லாவிற்கு 100-வது போட்டியாகும்.

அம்லா 100-வது போட்டியில் விளையாடுவது குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் 100 டெஸ்டில் விளையாடி பெருமை சேர்த்த கடைசி வீரராக அம்லாதான் இருப்பார். ஏனென்றால், தற்போ கிரிக்கெட் மாறி கொண்டு வருகிறது. டி காக் மற்றும் ரபாடா ஆகியோர் 100 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் வருங்காளத்தில் நீண்ட தீரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் சராசரி வயது 27.85 ஆகும். இதில் ஆடும் லெவனில் இடம்பெறாத 24 வயதுடைய இரு வீரர்களும் அடங்குவார்கள். நான், அம்லா, ஸ்டீபன் குக், டுமினி மற்றும் வெர்னோன் பிளாண்டர் ஆகியோரின் வயது சராசரி 30 ஆகிவிட்டது.

தற்போதைய நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு பரிணாமங்கள் நடைபெற்றுள்ளன. ஹசிம் அம்லா, டி வில்லியர்ஸ் மற்றும் கால்லிஸ் ஆகியோர் விளையாடிய காலத்தில் ஏராளமான டெஸ்ட் போடிகள் நடத்தப்பட்டன. தற்போது டி20 ஆட்டங்கள் அதிகரித்து விட்டன. ஆகவே, இந்த ஆட்டத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் மற்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருப்பதால், நீண்ட நாட்களாக விளையாடுவது கடினம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/12180858/1061819/Amla-could-be-last-South-African-to-100-Tests-du-Plessis.vpf

Link to comment
Share on other sites

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 426 ரன்கள் குவிப்பு

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 426 ரன்கள் குவித்துள்ளது.

 
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 426 ரன்கள் குவிப்பு
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் ஸ்டீபன் குக், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குக் 10 ரன்கள் எடுத்த நிலையிலும், எல்கர் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

C350BF2E-5729-4C4C-9848-3FB134B03E5D_L_s
சதம் அடித்த மகிழ்ச்சியில் அம்லா

தென்ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3-வது விக்கெட்டுக்கு அம்லாவுடன் டுமினி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.

E53BEFFC-ACC1-4F13-9F72-814E125934A2_L_s
சதம் அடித்த மகிழ்ச்சியில் டுமினி

அம்லாவிற்கு இது 100-வது போட்டியாகும். 100-வது போட்டியில் களம் இறங்கிய அவர் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த டுமினி 155 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருவரின் சதங்களால் தென்ஆப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்திருந்தது. அம்லா 125 ரன்னுடனும், ஆலிவியர் ரன் எதுவும் இன்றியும் களத்தில் இருந்தனர்.

19481664-3480-44CD-A1A9-096318CC6B1D_L_s
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆலிவியர் 3 ரன்னிலும், அம்லா 134 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த டி காக் 34 ரன்னுகளும், பர்னெல் 23 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னி்ங்சில் 426 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் பிரதீப், லஹிரு குமாரா தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

3F79F921-36EA-414F-8CBC-4D3ED613D60B_L_s
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டி காக்

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது. பிளாண்டர் வீசிய 4-வது பந்தில் கருணாரத்னே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். இலங்கை அணி 10 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/13190037/1062070/3rd-test-south-africa-426-runs-against-srilanka.vpf

Link to comment
Share on other sites

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை 131 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது

 

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 131 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

 
 
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை 131 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 426 ரன்கள் குவித்தது. அம்லா 134 ரன்களும், டுமினி 155 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி சார்பில் பிரதீப் மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 11 ரன்னுடனும், சண்டிமல் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

0A243ED1-AB1B-4FC5-A50C-D841431F53A7_L_s
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பிளாண்டர்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் மேலும் 8 ரன்கள் எடுத்து 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். சண்டிமல் 5 ரன்னோடு வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 45.4 ஓவர்களை மட்டுமே சந்தித்து 131 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிளாண்டர், ரபாடா ஆகுயோர் தலா நாக்கு விக்கெட்டுக்களும், பர்னெல் மற்றும் ஆலிவியர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

தென்ஆப்பிரிக்காவை விட இலங்கை அணி முதல் இன்னிங்சில் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதால் பாலோ-ஆன் ஆகியுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பாலோ-ஆன் கொடுத்தார்.

இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/14151618/1062138/south-africa-srilanka-3rd-test-srilanka-follow-on.vpf

Link to comment
Share on other sites

3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி: இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
 
3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி: இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது
 
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 426 ரன்கள் குவித்தது. அம்லா 134 ரன்களும், டுமினி 155 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பிரதீப் மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 11 ரன்னுடனும், சண்டிமல் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் மேலும் 8 ரன்கள் எடுத்து 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். சண்டிமல் 5 ரன்னோடு வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 45.4 ஓவர்களை மட்டுமே சந்தித்து 131 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிளாண்டர், ரபாடா ஆகுயோர் தலா நாக்கு விக்கெட்டுக்களும், பர்னெல் மற்றும் ஆலிவியர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

4A519077-5B0B-4E3E-8D74-2B3CF773B183_L_s

தென்ஆப்பிரிக்காவை விட இலங்கை அணி முதல் இன்னிங்சில் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், பாலோ-ஆன் ஆனது. இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தென்ஆப்பிரிக்காவின் அதிவேக பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் 42.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 177 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பர்னெல் 4 விக்கெட்டும், ஆலிவர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

E8DB179B-A094-4C9E-B20A-42AE6F0C47B1_L_s

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனக்கைப்பற்றி இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது. முதல் இன்னிங்சில் 155 ரன்கள் குவித்த டுமினி ஆட்ட நாயகன் விருதையும், அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/14201658/1062157/south-africa-beats-srilanka-by-innings-won-and-whitewash.vpf

Link to comment
Share on other sites

கேப்டனாக எனது மோசமான தோல்வி: இலங்கை கேப்டன் மேத்யூஸ் சொல்கிறார்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது எனது கேப்டன் தலைமையில் மிகவும் மோசமானது என்கிறார் மேத்யூஸ்.

 
 
கேப்டனாக எனது மோசமான தோல்வி: இலங்கை கேப்டன் மேத்யூஸ் சொல்கிறார்
 
மேத்யூஸ் தலைமையிலான இளைஞர்களை கொண்ட இலங்கை அணி தென்ஆப்பி்ரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்து 0-3 என ஒயிட்வாஷ் ஆனது.

நேற்றுடன் முடிந்த கடைசி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த டெஸ்ட் மூன்று நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.

இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறுகையில் ‘‘இலங்கை அணி தோல்வியுற்ற பல தொடர்களில் நான் இடம்பிடித்துள்ளேன். ஆனால், கேப்டனாக இந்த தோல்வி மிகவும் மோசமானது. நாங்கள் எந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறமோ அதைவிட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனது. பேட்ஸ்மேன்கள் மிகவும் ஏமாற்றம் அளித்தனர். என்னையும் சேர்த்து அனைத்து பேட்ஸ்மேன்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் நல்ல நிலையில்தான் ஆட்டத்தை தொடர்ந்தோம். ஆனால் அவற்றை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது. பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அதிக ரன்கள் குவிப்பது தேவையானது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/15162449/1062219/My-worst-defeat-as-captain-Mathews.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.