Jump to content

ட்ரக்கியோஸ்டோமி ஏன்? எப்படி? யாருக்கு? ஓர் அலசல்! #Tracheostomy


Recommended Posts

ட்ரக்கியோஸ்டோமி ஏன்? எப்படி? யாருக்கு? ஓர் அலசல்! #Tracheostomy

 

ட்ரக்கியோஸ்டோமி

கடந்த சில நாட்களாக 'ட்ரக்கியோஸ்டோமி' என்ற சொல் பரவலாக அடிபடுகிறது. ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் கவனம் பெறத்தொடங்கியது இந்த சொல். தற்போது, கருணாநிதிக்கும் இதே சிகிச்சை செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். உண்மையில் எம்.ஜி.ஆரோடு சேர்த்து இதுவரை மூன்று முதல்வர்களுக்கும், பல சினிமா பிரபலங்களுக்கும் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ட்ரக்கியோஸ்டோமி என்றால் என்ன? எதற்காக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது? யாருக்கு இந்த சிகிச்சை தேவைப்படும் என்று பார்ப்போம். 

Murugan_16526.jpg

ட்ரக்கியோஸ்டோமி (Tracheostomy) என்பது ஒரு அறுவைசிகிச்சை முறையாகும். மூச்சுக்குழலில், நுரையீரலில் தொற்று ஏற்படும்போது, சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், தொண்டைக்குக் கீழ்புறக்  கழுத்துப் பகுதியில் துளையிட்டு ஒரு செயற்கைக் குழாய் மூலம் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் உள் செலுத்தப்படும். இதையே ட்ரக்கியோஸ்டோமி என்கிறோம். 

ட்ரக்கியோஸ்டோமி

இந்த சிகிச்சைமுறையில் கழுத்து வழியாக உள் செலுத்தப்படும் குழாயானது நுரையீரல் பைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி, நுரையீரலுக்குள் சுவாசம் சீராகச் செல்ல உதவுகிறது. இந்த முறையில் தொண்டையின் கீழ்புறம் துளையிட்டு, அந்தத் துளையின் வழியாக, மூச்சுக்குழலுடன் செயற்கைக் குழாய் இணைக்கப்படுகிறது. இந்த டியூப் உள் மற்றும் வெளிப் புறமும் இருக்கும். முற்றிலுமாகக் குணமடைந்த பிறகே உள்ளே செலுத்தப்படும் குழாய் வெளியே எடுக்கப்படும்.  இந்த சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் குழாய்க்கு 'ட்ரக் டியூப்' அல்லது 'ட்ரக்கியோஸ்டோமி டியூஃப்' (Trach Tube or Tracheostomy Tube ) என்று பெயர். 

இது போன்ற சுவாசக்கோளாறு பிரச்னை, ஒவ்வாமையின் காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக, ஒவ்வாமையானது தோல் மற்றும் நுரையீரலைப் பாதிக்கும். சிலருக்கு, அலர்ஜி, வீக்கம்,  ஒவ்வாமை போன்றவற்றுக்கான இம்யூனோமாடுலேட்டர் மருந்துகளை எடுத்துக்கொள்வதாலும் சுவாசக்கோளாறு ஏற்படும். டாக்டர் பரிந்துரைக்காமல் சுயமாக, அதிக அளவில் எடுத்துகொள்ள கூடாது.

இம்யூனோமாடுலேட்டர் (Immunomodulator) 

நம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதற்காக இம்யூனோமாடுலேட்டர் மருந்து தரப்படுகிறது. கால்சி நியூரின் (Calcineurin), ஆன்டிமெட்டாபாலிட்ஸ்(Antimetabolites) ஆல்கைலேடிங்(Alkylating), ஸ்டெராய்டுகள் (Steroids), அனபோலிக் ஸ்டெராய்டுகள் (Anabolic Steroids), மெத்தோட்ரெக்ஸேட் (Methotrexate), இம்யூனோக்ளோபுலின் ஏ (Immunoglobulin A) , இம்யூனோக்ளோபுலின் ஜி (Immunoglobulin G) போன்றவற்றை இம்யூனோமாடுலேட்டர் என்கிறோம்.

 இம்யூனோமாடுலேட்டர்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீர்படுத்த உதவுகின்றன. மேலும், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. இந்த மருந்துகள், நம்மை மிகவும் சுறுசுறுப்பாகவும், முதுமையின்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. மேலும், புற்றுநோய் சிகிச்சைகளில் உடலுக்குப் புத்துணர்வு அளிப்பதற்காகவும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போரிடுவதற்காகவும் இம்யூனோமாடுலேட்டர் மருந்துகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால், மருத்துவர் பரிந்துரையின்படி அளவுடன் எடுப்பது அவசியம்.

இது போன்ற இம்யூனோமாடுலேட்டர் மருந்துகளைப் பெரும் பதவியில் இருப்பவர்கள், திரைத்துறையினர், விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் அதிகப் புத்துணர்வு பெறுவதற்காக எடுத்துக்கொள்கின்றனர். இவற்றின் விலை சற்று அதிகம். இப்படி எடுத்துக்கொள்வதாலும் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இந்த இம்யூனோமாடுலேட்டர் மருந்துகள், உடலில் உள்ள துணை செல்களை அதிக உணர்திறன் (Hypersensitivity) மிக்கவைகளாக மாற்றுகின்றன. மேலும், சிலருக்கு இண்டர்லியூக்கின்களில் (Interleukins) பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  

shutterstock_199149272_15300.jpg

இண்டர்லியூக்கின்கள் (Interleukins)

 உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் இண்டர்லியூக்கின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இண்டர்லியூக்கின்கள், நோய் எதிர்ப்பு செல்களுக்குத் தேவையான புரதம் மற்றும் திசுக்களின் மூலக்கூறுகளை கொண்டுள்ளது. மேலும், இவை செல்களின் வளர்ச்சி, வகைப்படுத்துதல் மற்றும் இயக்கத்துக்கு உதவுகின்றன. குறிப்பாக, உடலில் வீக்கங்கள் ஏற்படும்போது, நோய் எதிர்ப்பு செல்களைத் தூண்டுகின்றன. இம்யூனோமாடுலேட்டர்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது இந்த இண்டர்லியூக்கின்கள் பாதிப்படைகின்றன. இதனால் கீழ்கண்ட பக்கவிளைவுகள் ஏற்படும்.

பக்க விளைவுகள்:

சுவாசப்பையைப் பாதிக்கும்.

உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்.

எளிதில் நோய்த் தொற்றை உண்டாக்கும். 

ஒவ்வாமையை அதிகரிக்கும்.

கடுமையான காய்ச்சலை உருவாக்கும்.

http://www.vikatan.com/news/health/75208-reasons-for-a-tracheostomy-procedure.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.