Jump to content

வறுமை எனக் கூறிக்கொண்டு சோம்பேறிகளாக வாழ்வது மூடத்தனமாகும் - அச்சாறு வியாபாரி மொஹமட் சாஜகான்


Recommended Posts

168DSCF3997.jpg

பய­னற்ற காரி­யங்­களில் நாம் தடம் பதிக்­கின்ற நாட்­டத்­திற்­குத் தான் ஆசை என்று பெயர். பய­னுள்ள செயல்­களில் நாம் கொள்­கின்ற நாட்­டத்­திற்குக் குறிக்கோள் என்று பெயர்.
 
இவ்­வா­றான ஒரு குறிக்­கோ­ளுடன் வாழும் ஒரு­வ­ரையே இன்று நாம் சந்­திக்­கிறோம். “மாங்காய், அன்­னாசி, அம்­ப­ரெல்லா, கொய்­யாக்காய் ஆகிய அச்­சாறு வகை­க­ளுக்கு என்றும் நல்ல கிராக்கி உள்­ளது.
 
இதன் விசேடம், என்­ன­வெனில் அச்­சாறு வகை­களை சின்­னஞ்­சிறு வாண்­டு­களில் இருந்து முதியோர் வரை வயது வித்­தி­யா­ச­மின்றி விருப்­பத்­துடன் வாங்கி சாப்­பி­டு­வார்கள்.
 
வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து எமது நாட்­டுக்கு வரும் உல்­லாசப் பய­ணி­களும் விரும்பி சாப்­பி­டு­வார்கள். குறிப்­பாக வெள்­ளைக்­கார பெண்­களே எமது நாட்டு இவ் அச்­சாறு வகை­களை சிற்­றுண்டி வகை­களில் ஒன்று என நினைத்து பெரிதும் மன நிறை­வுடன் சாப்­பி­டு­வார்கள்.
 
அது… அந்த சந்­தோஷம் தான் எனது சந்­தோ­சமும்” என்­கிறார் அச்­சாறு வியா­பாரி மொஹமட் ஷாஜகான், வெற்றிப் புன்­ன­கை­யுடன்.
 
அன்­னாசிக் காயையும் அம்­ப­ரெல்லா காய்­க­ளையும் பட­ப­ட­வென இயந்­தி­ரத்தில் வெட்­டு­வது போல் இக் காய்­களின் மேல் தோலை­சீவி, துண்டு துண்­டு­க­ளாக வெட்டும் ஷாஜ­கானின் வித்­தையைக் கண்டு நாமும் வியந்து போனோம்.
 
இயந்­தி­ர­மாக இயங்கிக் கொண்டு இருந்­தவர் மீது “கேள்வி அரி­வாளை” போட்டோம். அவர் கொஞ்சம் மௌனம் காத்தார். அந்த மௌனம் ஏன் என இறுதி வரை எங்­களால் அடை­யாளம் கண்­டு­கொள்ள இய­லாமல் தோல்வியடைந்தோம். 
 
பின்னர் அவர் பேசத் தொடங்­கினார். “எனது சொந்த ஊர் களுத்­துறை. பல வரு­டங்­க­ளாக கொலன்­னாவ மீதொட்ட முல்­லையில் குடும்­பத்­தி­ன­ருடன் வசித்து வரு­கின்றேன். நான் பெரி­தாக கல்வி கற்­க­வில்லை.
 
ஐந்தாம் ஆண்­டு­வ­ரையே கல்வி கற்க என்னால் முடிந்­தது. வறுமை என்­பது மிகவும் கொடு­மை­யா­னது. அதன் வலியை வாழ்க்­கையில் அனு­ப­வித்­த­வர்­க­ளுக்­குத்தான் தெரியும்.
 
வறு­மையில் வாழும்போது அதை சவா­லாக ஏற்­றுக்­கொள்ள வேண்டும். வறுமை, வறுமை என சொல்லிக் கொண்டு சோம்­பே­றி­க­ளாக தொழில்­பு­ரி­யாமல் அடுத்­த­வரை நம்பி வாழ்­வது மூடத்­த­ன­மாகும்.
 
தாழ்வு மனப்­பான்­மையை தூக்கி வீச வேண்டும். இந்த தாழ்வு மனப்­பான்­மைதான் ஒரு­வரின் பல­வீ­ன­மாகும். இப்­ ப­ல­வீ­னமே பலரை ஏமாற்றி பிழைக்க வைக்­கின்­றது என போடு போட்டார் ஷாஜகான்.
 
நாமும் பதற்றமடைந்து விட்டோம். அவரின் தத்­துவம் உண்­மையில் பல­ருக்கு பெரும் அறி­வாகும். வாழ்க்­கையில் எவ­ருக்குப் பிரச்­சினை இல்லை?.
 
ஏதோ ஒரு வடி­வத்தில் அனை­வரும் பிரச்­சி­னை­களை தினம் தினம் தொடு­கிறோம்” என்­ற­வரின் முகத்தில் பளிச்­சென சிரிப்பு தோன்­றி­யது.
 
அவர் வியா­பாரம் செய்து கொண்டு இருக்­கை­யி­லேயே நாமும் தொண தொண­வென, கேள்­வி­களை கேட்டு நச்­ச­ரிக்க அவரும் முகம் சுளிக்­காது அம்­பு­களை போரில் எறி­வது போன்று பதில்­களை எம்­மீது எய்தார்.
 
“எனது விரல் சூப்பும் வய­தி­லி­ருந்து பல்­வேறு தொழில்­களை செய்­தவன். இதற்கு வெட்­கப்­படத் தேவை­யில்லை. கூலி வேலை முதல் அனைத்து வேலை­க­ளிலும் தொழி­லா­ளி­யாக பல வரு­டங்கள் நின்­றதால் நல்ல தொழில் பயிற்­சி­க­ளையும் அனு­ப­வத்­தையும் பெற்­றவன்.
 
எங்­களைப் போன்­ற­வர்­களின் வாழ்­வியல் போராட்­டத்தை பல முத­லா­ளிகள் தங்­க­ளுக்கு வாய்ப்­பாக பயன்­ப­டுத்திக் கொள்­வார்கள். அன்று எனது சிறு வயதில் முழு நாளும் உழைப்பை பெற்­ற­வர்கள் மாதக்­க­டை­சியில் சொற்ப சம்­ப­ள­மாக வழங்­கி­யதை என்னால் மறக்க இய­லாது” என ஷாஜகான் எமக்கு தெரி­விக்­கையில் அவரின் அனு­பவ நினைவு வலி எமக்­குள்ளும் வலியை கொப்­ப­ளிக்க வைத்­தது. 
 

 
மீண்டும் ஆர்­வத்­துடன் தொடர்ந்தார் ஷாஜகான். “எனது இரு­பத்­தைந்­தா­வது வயதில் ஒரு­வ­ரிடம் அன்­னாசி முத்­திய காய்­களை துண்டு துண்­டு­க­ளாக வெட்டி உப்பு, மிளகாய்த் தூள், தேவை­யெனில் மிளகுத் தூள் தெளித்து விற்கும் தொழிலில் இணைந்தேன்.
 
அதன் தொழில் இர­க­சி­யத்தை வேக­மாக கற்றுக் கொண்டேன்” என்றார்.
 இத் தொழிலில் பல்­வேறு சிக்கல் உள்­ளது என ஷாஜகான் கூறி­யதும் நாங்­களும் வியப்­ப­டைந்தோம். 
 
“பலர் நினைப்­பது போல் இத்­தொழில் இல்லை. இத் தொழில் சமூக அக்­க­றை­யோடு இணைந்த தொழில். சுத்தம் பிர­தா­ன­மா­னது. காய்­களை கொள்­வ­னவு செய்­கையில் காய்­களின் தரம் பார்த்தே வாங்க செய்ய வேண்டும். 
 
அன்­னா­சி­யா­னது பழ­மாக மாறக்­கூ­டிய நிலையை கொண்ட காயா­கவும், மாங்­கா­யா­னது முக்கால் பகுதி பழ­மாக மாறக்­கூ­டிய நிலையைக் கொண்ட கெட்டி காயா­கவும் இருக்க வேண்டும்.
 
கொய்­யாக்­காயும் அரை பழ நிலையை கொண்­ட­தா­கவும் அம்­ப­ரெல்லா மிகவும் முத்­தி­ய­தா­கவும் இருக்க வேண்டும்” என தக­வலை அவர் தெரி­வித்தார்.
 
“எதற்­காக இவ்­வாறு தரம் பிரித்து கொள்­முதல் செய்­வீர்கள்” எனக் கேட்டோம். “அன்­னாசி அரை பழ­மாக இருந்­தால்தான் சுவை. கல­வை­க­ளுடன் நாங்கள் வழங்­கு­கையில் வாயில் வைத்து பற்­களால் கடிக்கும் போது ஒரு வித­மான சுவையை வழங்கும்.
 
அச்­சு­வை­யா­னது உண்­ணு­வோரின் அடி வயி­று­வரை படார் என ஊர்ந்து செல்லும். கொய்யா வேறு ஒரு சுவையை அது கொடுக்கும். மாங்காய் மற்­று­மொரு சுவையை தரும்.
 
அம்­ப­ரெல்லா காய்க்கு மற்­று­மொரு விசேட சுவையை வித்­தி­யா­ச­மாக வழங்­கு­கின்­றது. இதன் சுவை இரு­வ­கையை கொண்­டது. இனிப்­பையும் புளிப்­பையும் கொண்ட கலவை கூட்டு சுவையை தரும் திற­மையைக் கொண்­டது அம்­ப­ரெல்லர்.

168DSCF4002.jpg
 
இவ்­வா­றான காய்­களை சாப்­பி­டு­வோ­ருக்கு மேலும் சுவையை அதி­க­ரித்­து­தரும் மிளகாய் தூள், உப்புத் தூள், இணைந்த கலவை. சாப்­பி­டு­ப­வரை சொக்க வைத்­து­விடும். இந்த ருசியே பலரை இரண்டு, மூன்று தட­வைகள் என்­னிடம் அச்­சாறு காய்­களை வாங்க வைக்கும். 
 
இவற்­றை­விட மேலாக பல­ரையும் கொள்ளை கொள்ளும் வகையில் காய்­களை வெட்டி பர­வ­லாக அழ­காக அடுக்கி வைக்க வேண்டும். குறிப்­பாக சிறு­வர்கள், கர்ப்­பிணித் தாய்­மார்கள் விரும்பி சாப்­பி­டு­வதால் சுத்­த­மாகத் தயா­ரிக்­கின்றேன். 
 
நான் பல வரு­டங்­க­ளாக கொழும்பு கோட்டை சதாம் வீதியில் எனது நடை வியா­பா­ரத்தை நடத்தி வரு­கின்றேன். இப்­ பி­ர­தே­சத்தில் பெரும் அரச, தனியார் நிறு­வ­னங்கள் உள்­ளன.
 
அதனால் எனக்கு பல வாடிக்­கை­யா­ளர்கள் உள்­ளனர். மாலை மூன்று மணி­வரை இங்கு வியா­பாரம் செய்வேன். இதன் பின்னர் புறக்­கோட்டை பியூப்பல்ஸ் பார்க் கட்­டடத் தொகு­தியில் வியா­பாரம் செய்வேன். இங்கும் எனக்கு வாடிக்­கை­யா­ளர்கள் உள்­ளனர்.
 
இதனால் நேர்­மை­யோடு எனது வியா­பா­ரத்தை தொட­ரு­கின்றேன்.” என் றார் ஷாஜகான். 
 
இத் தொழிலில் உள்ள கஷ்டம் என்ன? எனக் கேட்­டோம்

“காய்­களை பொறுக்கி தரம் பார்த்து எடுக்­கையில் மொத்த வியா­பா­ரிகள் தெரிவிக்கும் வசனங்களும் கதைகளும் எம்மை பயமுறுத்தும். மழை காலங்களில் காய்களை பெறுவதும் விற்பதும் எமக்கு பெரும் சவாலாகும்.
 
சில நாட்களில் திடீரென மழை பெய்துவிட்டால் விற்பனை செய்வது மிக மிகப் பெரும் கஷ்ட மான காரியமாகும். இவ்வாறு நிலைமை ஏற்படுகை யில் பணம் பெறாமலேயே தெரிந்தவர்களுக்கு இவற்றை  வழங்கி விடுவேன். குப்பைகளில் வீசுவதில்லை.
 
அது மாபெரும் பாவச் செயலாகும் என்றார் ஷாஜகான். அவரது வியாபார த்தை வீணாக்காது நாமும் அவரிடம் இருந்து விடை பெற்றோம் வியப்புடன். 

http://metronews.lk/feature.php?feature=168&display=0

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.