Jump to content

டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - மலையாளம்


Recommended Posts

டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - மலையாளம்

 

 

2016-ன் க்ளைமாக்ஸில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் `விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்' என கமல் ஓடிவந்து வாழ்த்து சொல்வார். நாமும் பார்ட்டி, சபதம் என கொண்டாட்டமாக வரவேற்போம். அதெல்லாம் இருக்கட்டும். இன்னும் இந்த வருஷம் செய்ய வேண்டியவையே நிறைய பாக்கி இருக்கிறது. அதில் ஒன்று சினிமா. இந்த ஆண்டு வெளியான படங்களில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள் பற்றிய லிஸ்ட்டை ரகம் வாரியாக பிரித்துக் கொடுத்திருக்கிறோம். மறக்காம பார்த்துடுங்க மக்களே!
இது மலையாளப் படங்களுக்கான லிஸ்ட். கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்!

78p1.jpg

மகேஷின்டே பிரதிகாரம்

மலையாள உலகின் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசிலின் யதார்த்த நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம். பசுமை போர்த்திய இடுக்கியின் ஒரு மூலையில் வாழ்ந்துவருகிறார் ஃபஹத். தன் நண்பனுக்காக ஒரு சண்டையை தடுக்கப்போய் அடி வாங்குகிறார். அதற்குப் பழி வாங்கும்வரை செருப்பு அணிவதில்லை என்ற வீராப்போடு திரியும் அவர், பழி வாங்கினாரா இல்லையா என்பதை காமெடியாய் சொல்லும் படம் இது. ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை என டெக்னிக்கலாகவும் பாராட்டு மழையில் நனைந்த படம் இது!

78p2.jpg

ஆக்‌ஷன் ஹீரோ பிஜு

`பிரேமம்' என்ற பம்பர் ஹிட் படத்திற்குப் பின் நிவின் பாலி நடிப்பில் வெளியான படம். ஒரு சப் இன்ஸ்பெக்டர், அவரின் ஸ்டேஷன், அதற்கு வரும் பலதரப்பட்ட ஆட்கள்... இவ்வளவே கதை. போலீஸின் கொடூர முகத்தைக் காட்டும் `விசாரணை' இங்கே ஹிட்டான அதே சமயம், அக்கட தேசத்தில் காக்கிச்சட்டையின் காமெடி பக்கங்களைக் காட்டும் இந்தப் படத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள் ரசிகர்கள். `பிரேமம்' கொடுத்த ஹிட் இமேஜை இந்தப் படத்திலும் தக்கவைத்துக்கொண்டார் நிவின்.

78p3.jpg

பாவாட

2016-ல் மல்லுவுட்டின் ஹிட் கணக்கைத் தொடங்கிவைத்த படம் இது. பிருத்விராஜுக்கு மற்றுமொரு ஹிட் சினிமா. குடிநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார் ஹீரோ. அங்கே பாவாட என்பவரை அவர் சந்திக்க, இருவரும் தங்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க முடிவு செய்கிறார்கள். இதை காமெடி, சென்டிமென்ட் என கலந்துகட்டி கொடுக்க, படம் சூப்பர் ஹிட். நெடுமுடி வேணு, அனுப் மேனன், ஆஷா சரத், மியா ஜார்ஜ், மஞ்சு வாரியர், சித்திக் என எக்கச்சக்க நட்சத்திரப் பட்டாளம் நடித்திருந்த படம் இது.

78p4.jpg

கம்மட்டிப்பாடம்

மலையாள உலகின் `மெட்ராஸ்'. தலித்களின் வாழ்வியலை முகத்தில் அறையும் நிஜத்தோடு பேசும் க்ளாஸிக். `கம்மாட்டிப்பாடம்' என்ற குடிசைப் பகுதி எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு பளபளக்கும் `மெட்ரோ' கொச்சி உருவாகிறது என்பதே கதை. இதை அங்கே வாழும் இளைஞர்களின் வாழ்க்கை வழியாக உணர்த்தியிருப்பார்கள். `நான் சாக்லேட் பாய் மட்டுமில்லை' என இந்தப் படத்தில் அழுத்தமாய் நிரூபித்தார் துல்கர் சல்மான். `கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' படத்தில் ரத்தத்தையும் புழுதியையும் தத்ரூபமாய்க் காட்டிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவிதான் இந்தப் படத்தின் இயக்குநர்.

78p5.jpg

ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம்

மல்லுவுட்டின் சென்ஷேசன் வினீத் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம். துபாயில் அன்பாய் வாழ்ந்துவரும் ஒரு குடும்பம் எதிர்பாராத சுழலில் சிக்கி சீரழிகிறது. அதிலிருந்து நம்பிக்கையோடு எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் கதை. நிவின், லஷ்மி ராமகிருஷ்ணன், ரெஞ்சி பணிக்கர், ஸ்ரீநாத் பாசி என ஒவ்வொருவரும் திறமை காட்டி நடித்தார்கள். ஜேக்கப் என்ற தொழிலதிபரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். 

78p6.jpg

கிஸ்மத்

இதுவும் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான். கேரளாவின் பொன்னானியில் ஒரு தலித் பெண்ணும், முஸ்லிம் இளைஞனும் காதலில் விழுகிறார்கள். இது ஊருக்குத் தெரியவர, அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். அந்த ஜோடியின் பரிதாபக் கதையை அப்படியே திரையில் கொண்டு வந்திருந்தார் அறிமுக இயக்குநரான பாவக்குட்டி. ஹீரோ - ஹீரோயினான ஷேன் நிகத்தையும் ஸ்ருதி மேனனையும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது மீடியா. செலி பிரிட்டிகளும் தங்கள் பங்குக்கு பாராட்டித் தள்ளினார்கள்.

78p7.jpg

ஒழிவுதிவசத்தே களி

மலையாள எழுத்தாளர் உன்னியின் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நியூ ஏஜ் சினிமா. தேர்தல் விடுமுறையில் சந்தித்துக்கொள்ளும் ஐந்து நண்பர்கள் பார்ட்டி பண்ணுகிறார்கள். போதையில் ஒரு விளையாட்டைத் தொடங்க அது வினையாகிறது. அடுத்து என்ன என்பதுதான் கதை. இந்தப் படத்தின் இரண்டாவது பாதி முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதை பாராட்டிக் கொண்டாடினார்கள் விமர்சகர்கள். வசூலிலும் குறை வைக்கவில்லை. இந்த ஆண்டின் பெஸ்ட் படம் என கேரள அரசு தேர்ந்தெடுத்தது இந்தப் படத்தைத்தான்.

78p8.jpg

ஹேப்பி வெட்டிங்

மலையாள உலகில் திடீர் திடீரென சில சர்ப்ரைஸ்கள் நடக்கும். இந்த ஆண்டின் ஸ்வீட் சர்ப்ரைஸ் `ஹேப்பி வெட்டிங்'. இன்ஜினீயரிங் பட்டதாரியான  ஹீரோவுக்கு கல்யாணமாவதுதான் கதை. 35 தியேட்டர்களில் ரிலீஸாகி `படம் நல்லாருக்கே' எனப் பாராட்டு குவிந்தவுடன், நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் ரிலீஸான படம். படம் வசூலித்ததோ கிட்டதட்ட பத்து மடங்கு லாபம். ஒரு ஃபீல் குட் படம் பார்க்க நினைப்பவர்கள் யோசிக்காமல் பார்க்கவும்!

78p9.jpg

ஒப்பம்

சூப்பர் சீனியர் மோகன்லால் இறங்கி சிக்ஸ் அடித்த படம். த்ரில்லர் படமான இதில் மாற்றுத் திறனாளியாக நடித்திருந்தார் லாலேட்டன். வில்லனாக மிரட்டியது நம் ஊர் சமுத்திரகனி. டைட்டான திரைக் கதை என்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. விளைவு, படம் வசூலை வாரிக் குவித்தது. `நான் இன்னும் புல் ஃபார்ம்லதான் இருக்கேன்' என ஜுனியர் நடிகர்களுக்கு அலெர்ட் மெசேஜ் கொடுத்தார் லாலேட்டன்.

78p10.jpg

புலிமுருகன்

இந்தப் படத்தில் செஞ்சுரியே அடித்தார் மோகன்லால். புலியூர் என்ற கிராமத்தில் புலிகளின் அட்டகாசம் அதிகமாகிறது. அப்படி ஆட்டம் போடும் ஆட்கொல்லிப் புலிகளைக் கொல்லும் ஹீரோவைப் பற்றிய கதை இது. 2013-ல் தொடங்கி பல காரணங்களால் தடைபட்டு இப்போது ரிலீஸாகியிருந்தாலும் வசூலில் ரெக்கார்ட் பிரேக்கிங் சினிமா இது. மலையாளத்தின் முதல் நூறு கோடி சினிமா, மோகன்லாலின் கேரியரில் உச்ச பட்ச ஹிட் என எக்கச்சக்க சாதனைகளை அசால்ட்டாக செய்திருக்கிறது இந்தப் படம். மிஸ் பண்ணிடாதீங்க... அப்புறம் வருத்தப் படுவீங்க!

- நித்திஷ்

http://www.vikatan.com/timepassvikatan/2016-dec-17/cinema/126487-malayalam-hits-movies-2016.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.