Jump to content

குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார்


Recommended Posts

குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார்

888-5fe554db45a4469adc380bcee188002bb29d942d.jpg

 

யாழ்ப்­பாண மறை­மா­வட்­டத்தின் மூத்த குருக்­களில் ஒரு­வரும், யாழ். மறை­மா­வட்­டத்தின் முன்னாள் குரு­மு­தல்­வரும், யாழ். புனித சவேரியார் உயர் குருத்­துவக் கல்­லூ­ரியின் முன்னாள் அதி­பரும், உலகத் தமிழர் பேர­வையின் தலை­வ­ரு­மான அருட்­தந்தை எஸ்.ஜே. இம்­மா­னுவேல் அடி­களார் தனது குருத்­துவ வாழ்வில் 50 வரு­டங்­களை (1966 –2016) நிறை­வு­செய்து இவ்­வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி பொன்­விழாக் காண்­கிறார்.

 தற்­போது ஜேர்மன் நாட்டில் இருந்­து­கொண்டு இறைபணி­யையும் தமிழ் மக்­களின் உரி­மைக்­கான பணி­யையும் அடி­களார் முன்­னெ­டுத்து வரு­கின்றார். சர்­வ­தேச அரங்கில் ஈழத்­த­மி­ழர்­களின் உரி­மை­க­ளுக்­காக உரத்துக் குரல் கொடுத்து ஓயாது இயங்­கி­வரும் அருட்­திரு. எஸ்.ஜே. இம்­மா­னுவேல் அடி­க­ளாரை வாழ்த்­துவோம். அவ­ரு­டைய நற்­ப­ணி­க­ளுக்­காக அவ­ருக்கும் இறை­வ­னுக்கும் நன்றி கூறுவோம்.

இன்று இலங்­கையில் குறிப்­பாக, தமிழ் மறை­மா­வட்­டங்­களில் பணி­யாற்றும் பெரும்­பா­லான குருக்கள் இவ­ரிடம் இறை­யியல் கற்றும், இவ­ரு­டைய உரு­வாக்­கத்தில் பயிற்சி பெற்றும் வெளிவந்­த­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. சிறந்த இறை­யியல் அறி­ஞ­ராகத் திகழும் அடி­களார் ஆசிய இறை­யி­ய­லா­ளர்­களில் ஒரு­வ­ராகக் கணிக்­கப்­ப­டு­கின்றார்.

1934ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் பிறந்த இவர் யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியில் பாட­சாலைக் கல்­வியைக் கற்றார். பின்னர் 1958இல் கொழும்­பி­லுள்ள இலங்கைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்று விஞ்­ஞானப் பட்­ட­தா­ரி­யாக வெளியே­றினார். தனது பட்­டப்­ப­டிப்­புக்குப் பின்னர் குருத்­துவ வாழ்வைத் தேர்வுசெய்யும் முன் சில காலம் ஆசி­ரி­ய­ரா­கவும், ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் பணி­யாற்­றினார். பின்னர் உரோ­மையில் உள்ள ஊர்­பா­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் மெய்­யியல் மற்றும் இறை­யியல் கல்­வியைக் கற்று 1966ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி உரோ­மில் உள்ள புனித பேதுரு பேரா­ல­யத்தில் குரு­வாகத் திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.

குரு­வாகி நாடுதிரும்­பிய அவர் சில ஆண்­டுகள் யாழ். மறை­மா­வட்­டத்தில் பணி­யாற்­றினார். பின்னர் 1976ஆம் ஆண்டு மீண்டும் உரோம் சென்று தனது உயர் கல்­வியைக் கற்று இறை­யி­யலில் கலா­நிதிப் பட்­டத்தைப் பெற்­றுக்­கொண்டார். நாடுதிரும்­பிய அவர் கண்டி தேசிய குருத்­துவக் கல்­லூ­ரியில் 1976 1986 வரை இறை­யியல் விரி­வு­ரை­யா­ள­ரா­கவும் இறை­யியல் பீடத் தலை­வ­ரா­கவும் பணி­யாற்­றினார். பின்னர் யாழ்ப்­பாணம் திரும்­பிய அவர் 10 வரு­டங்­க­ளாக யாழ். கொழும்­புத்­து­றையில் அமைந்­துள்ள புனித சவேரியார் உயர் குருத்­துவக் கல்­லூ­ரியின் அதி­ப­ராகப் பணி­யாற்­றினார். 1997 வரை அவர் யாழ். மறை­மா­வட்­டத்தின் குரு­மு­தல்­வ­ரா­கவும் பணி­யாற்­றினார்.

1995இல் யாழ். குடா­நாட்டை விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து திரும்பக் கைப்­பற்றும் இலங்கை அரச படை­களின் படை­ந­கர்வு நட­வ­டிக்கை கார­ண­மாக யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வெளியே­றிய ஐந்து இலட்சம் மக்­க­ளோடு இவரும் வெளியேறி வன்­னியில் மக்­க­ளோடு மக்­க­ளாக வாழ்ந்தார். 1997இல் அவர் தமிழர் தாய­கத்­தி­லி­ருந்து வெளியேற வேண்­டிய சூழ்­நி­லைக்கு உள்­ளாக்­கப்­பட்ட நிலையில் வெளிநாட்டில் புக­லிடம் தேடினார். இங்­கி­லாந்தில் ஒரு வருடம் பணி­யாற்­றிய பின் ஜேர்மன் நாட்­டிற்குச் சென்றார். முன்ஸ்ரர் மறை­மா­வட்­டத்தில் சமயப் பணி­யாற்­றிக்­கொண்டு ஈழத்­த­மி­ழரின் உரி­மை­க­ளுக்­கான பணி­யையும் சர்­வ­தேச அரங்கில் முன்­னெ­டுத்தார்.

தமிழ் மக்­களின் நியா­ய­மான உரி­மைகள் குறித்து சர்­வ­தே­சத்தின் மனச்­சாட்­சியை உலுக்­கி­ய­வ­ராக பேசியும் எழு­தியும் வந்த அடி­களார் 2010ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேர­வையின் தலை­வ­ராகத் தெரிவு­செய்­யப்­பட்டார். இன்று 82 வய­திலும் அவர் துடிப்­புள்ள ஒரு குரு­வாக இன்றும் மக்கள் பணி­யாற்றிக்கொண்­டி­ருக்­கிறார்.

இவர் எழு­திய பல ஆங்­கில மற்றும் தமிழ் நூல்­களில் தனது சிந்­த­னை­களை தெளிவாக முன்­வைத்­துள்ளார். தமிழ் மக்­களின் போராட்­டத்­திற்­கான நியா­யங்கள், திருச்­ச­பையின் பங்­க­ளிப்பு, இலங்கை அர­சாங்­கத்தின் கடி­னப்­போக்கு போன்ற விட­யங்­களை விரி­வாக ஆராய்ந்­துள்ளார்.

மனச்­சாட்­சிக்கு ஏற்ப உண்­மை­களை உரக்கச் சொல்லும் அவர் ஒரு காலத்தில் விடு­த­லைப்­புலி­களின் ஆத­ர­வாளர் எனவும், இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­னவர் என்றும் முத்­திரை குத்­தப்­பட்டார். அவர் என்­றுமே யாருக்­குமே ஆத­ர­வா­ள­ரா­கவோ, எதி­ரா­ன­வ­ரா­கவோ இருந்­த­தில்லை. உண்­மைக்கும் நீதிக்கும் ஏற்­பவே அவர் பேசினார்; எழு­தினார்; செய­லாற்­றினார். அது அவரை சில­ருக்கு ஆத­ர­வா­ன­வ­ரா­கவும் சில­ருக்கு எதி­ரா­ன­வ­ரா­கவும் இனங்­காட்­டி­யது.

தனிப்­பட்ட முறையில் அவர் ஏழைப் பிள்­ளை­களின் கல்­விக்­காக குறிப்­பாக மலை­யகப் பிள்­ளை­களின் கல்வி வளர்ச்­சிக்­காக பல ஆண்­டு­க­ளாக யாருக்கும் தெரியாமல் உதவி வரு­கின்றார். இவ­ரு­டைய உத­வி­யினால் பல மலை­யகப் பிள்­ளைகள் கல்வி கற்று இன்று வள­மான வாழ்க்­கையை அமைத்­துள்­ளனர்.

அண்மைக்காலங்­களில் அவர் வழங்­கிய செய்­தி­களில், நேர்காணல்­களில் இன்­றைய சம­காலச் சூழ்­நி­லையில் தனது நிலைப்­பாட்­டையும் உல­கத்­த­மிழர் பேர­வையின் நிலைப்­பாட்­டையும் தெளிவாக்­கி­யுள்ளார். போருக்குப் பின்­ன­ரான இன்­றைய யதார்த்­தத்தைப் புரிந்­து­கொண்டு தேர்ந்தெடுக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் தலை­வர்­க­ளோடு இணைந்து செய­லாற்ற வேண்டும் எனக் கூறும் இவர், இன்­றைய இலங்­கையின் அர­சாங்­க­த­்துக்கு விமர்­சன ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தா­கவும் குறிப்­பி­டு­கின்றார். தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­காகச் செய­லாற்றும் அமைப்­பு­க­்களி­டையே ஒற்­றுமை நிலவ வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் வலி­யு­றுத்­து­கின்றார்.

இவ்­வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி தனது குருத்­துவப் பொன்­விழா நாளில் இவர் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் அவர்­க­ளுடன் இணைந்து திருப்­பலி ஒப்­புக்­கொ­டுக்­கின்றார்.

ஒரு பிர­மா­ணிக்­க­முள்ள கத்­தோ­லிக்கக் குரு­வாக, இனப்­பற்று மிக்க ஈழத்­தமிழ்க் குடி­ம­க­னாக, மனச்­சாட்­சி­யுள்ள ஓர் உலகக் குடி­ம­க­னாக நின்­று­கொண்டே அவர் தனது கருத்­து­களைத் தெரிவிக்­கின்றார்; பணி­களை முன்­னெ­டுக்­கின்றார். இயேசு கிறிஸ்துவில் அவர் கொண்ட ஆழமான விசுவாசமே அவரை இப்பணிகளில் உந்தித்தள்ளுகிறது.

முதிர்ந்த வயதிலும், நோயின் பிடியிலும் உள்ளத்து உறுதி தளராது, எம் மக்களின் உரிமைக்காகக் கண்டங்கள் கடந்து பயணம் செய்தும், ஓயாது பேசியும் எழுதியும் வரும் அடிகளாரை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம். சிறப்பாக அவரிடம் இறையியல் கல்வி பயின்றும், குருத்துவ உருவாக்கம் பெற்றும் குருக்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் கத்தோலிக்கக் குருக்கள் சார்பாகவும் அடிகளாரை வாழ்த்துகின்றோம்.

ஈழத்தமிழர் உரிமை வரலாற்றில் அடிக­ளாரின் பணி என்றென்றும் நினைவு கூரப்படும்.

அருட்­திரு. தமிழ்நேசன் அடி­களார்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-16#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.