Jump to content

சமூக வலைதளங்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? #BeGoodDoGood


Recommended Posts

சமூக வலைதளங்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? #BeGoodDoGood

 

idlenomoresocial_12357.png

நீங்கள் மாநகர பூங்காக்களை கவனித்தது உண்டா?

ஒரு மரத்தின் கீழ் வயது முதிர்ந்த நண்பர்கள் சிலர் வாக்கிங் வந்ததாகச் சொல்லி கதை பேசிக்கொண்டிருப்பார்கள். இன்னொருபுறம், 40 வயதை கடந்த பெண்கள் சிலர் சிமென்ட் பென்ச்சில் லேடீஸ் கிளப் நடத்திக் கொண்டிருப்பார்கள். புதர்களுக்கு நடுவேயும், மெர்க்குரி விளக்கின் வெளிச்சம் அதிகம் பரவிடாத இடங்களிலும் காதல் ஜோடிகள் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருப்பார்கள். உடலில் பலம் இருப்பவர்கள், காதில் ஹெட்ஃபோனோடு ஓடிக்கொண்டிருப்பார்கள். சிலர் ஆங்காங்கே தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். நாய்கள் சில எதையோ தேடிக்கொண்டிருக்கும். சிறுவர்கள் கூட்டம் கிரிக்கெட்டோ, ஃபுட்பாலோ விளையாடிக்கொண்டிருக்கும். ஒரு பெரிய இளைஞர் கூட்டம் சத்தமாக பேசிக்கொண்டிருக்கும். அந்த கூட்டம் மட்டும்தான் அதிக நேரம் பூங்காவிலே இருக்கும். தாத்தாக்களையும், பாட்டிகளையும், காதல் ஜோடிகளையும், ஏன் நாய்களையும் கூட கலாய்த்துக் கொண்டிருக்கும். சிறுவர்களின் பந்து அவர்களிடத்தில் வந்தால் பாகிஸ்தான் எல்லைக்கு அது தூக்கிப் போடப்படும்.

அந்தப் பூங்காதான் சோஷியல் மீடியா. மேலே சொன்ன அத்தனை கதாபாத்திரங்களும் முக்கிய சோஷியல் மீடியாக்களான ஃபேஸ்புக், ட்விட்டரில் உண்டு. ஆனால், நம் கண்களில் அதிகம் படுவது எது? கலாய்க்கும் இளைஞர்கள் கூட்டம்தான். ஆனாலும், பூங்கா அழகானதுதானே?

இதுதான் உண்மையில் சோஷியல் மீடியாவின் நிலை. வாக்கிங்குக்கோ, பேசுவதற்கோ, இளைப்பாறுவதற்கோ பூங்காவுக்கு வரும் கூட்டம் சிறிது நேரத்தில் திரும்பிவிடும். அவர்களின் நிஜ வாழ்வு என்பது பூங்காவுக்கு வெளியில் இருக்கிறது. ஆனால், வெளியே எந்த ஆக்கப்பூர்வமான கடமைகளோ பொறுப்புகளோ இல்லாத கூட்டம் மட்டுமே பூங்காவில் பொழுதைக் கழிக்கும். பூங்காவில் ஆக்கபூர்வமாக பொழுதைக் கழிப்பவர்களை கிண்டலடிக்கும்... எள்ளி நகையாடும். ஏனெனில், அது அவர்கள் பேட்டை என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் உருவாகியிருக்கும். கிட்டத்தட்ட இதே மனநிலைதான் சமூக வலைதளங்களிலும் நடைமுறையில் இருக்கிறது எனக் கொள்ளலாம். 

”அப்படியென்றால் சோஷியல் மீடியாவில் நல்லதே நடக்கவில்லை என சொல்கிறீர்களா?” என்ற கேள்வி எழலாம். அது நியாயமானதுதான்.

Social-Media_12176.jpg

ஆனால், இதே சமூக ஊடகங்கள்தான், மிக முக்கியமான சம்பவங்களின்போது உச்சபட்ச அக்கறையுடனும் செயல்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மரணித்தபோது நாட்டில் சிறு அசம்பாவிதம்கூட நடக்காததற்கு சமூக ஊடகங்களுக்கு மிகமுக்கியப்பங்கு உள்ளது. முதல்வர் ஜெயலலிதா கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்ததும், தங்கள் கருத்துகளை, சந்தேகங்களை நியாயமான முறையில், நாகரிக தொனியில் எழுதிக் கொண்டே இருந்தது. அது சரியான கருத்து விவாதத்துக்கு வழிநடத்திச் சென்றது. எல்லாவற்றிலும் ஒரு சிறு பங்கு விதிவிலக்குகள் இருப்பதைப் போல, இங்கும் உண்டு என்றாலும் அதையும் மீறி பொதுவெளிகளில் மக்கள் மனது ஒரு பெரும் அதிர்ச்சிக்கு எந்நேரமும் தயாராக இருந்ததற்குக் காரணம் சமூக ஊடக விவாதங்கள்! 

ஜெயலலிதா மரணத்துக்குப் பின், அவர் மீதான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு, அதிகபட்ச மரியாதையோடு அவரைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்தார்கள். ‘நீங்கள் ஆளக்கூடாது என்றுதான் நினைத்தோம். வாழக்கூடாது என்று நினைக்கவில்லை’ என்று எதிர்கட்சிக்காரர் எழுதிய வரிகள் சமூக வலைதளங்களின் உணர்ச்சிபூர்வமான பகிர்தலுக்கு ஒட்டுமொத்த சாட்சியாக அமைந்தது.

500/1000 ரூபாய் நோட்டுகள் தடைவிஷயங்களில் கட்சி ரீதியான மோதல்கள் இருந்தாலும், பல ஆரோக்கியமான விவாதங்களைக் காணமுடிந்தது. எந்த ஏ.டி.எம்-மில் பணம் கிடைக்கிறது என்ற உருப்படியான தகவல்கள் பகிரப்படுவதை கவனிக்க முடிந்தது. 

 சமீப வர்தா புயல் சமயமும் பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறாவண்ணம் பலரது கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன. எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து தடைபட்டிருக்கிறது, எந்தப் பகுதிகளில் காற்று பலமாக இருக்கிறது என்பதை உடனுக்குடன் பகிர்ந்து உதவினார்கள் பலர். சென்னை தாண்டி பல ஊர்களில் சமூக ஊடகத்தில் இல்லாத பலருக்கு நேற்றைய தினத்தின் சென்னை நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில் இருப்பவர்கள்தான் கொண்டுசென்றிருக்கக்கூடும்.

Chennai Flood

இந்த சமூகவலைதளங்கள்தான் சாதனையாளர்கள் செய்ய யோசிக்காதவற்றையெல்லாம் சாதாரணர்கள் சர்வ சாதாரணமாகச் செய்வார்கள் என்று நிரூபித்துக் காட்டியது. இந்த சமூக வலைதளங்கள்தான் தொலைந்த மகனை, மகளை தன் சொந்தமாய் நினைத்து தேட உதவியது. இவைதான், ரத்தம் வேண்டுமென்றாலும் பரப்பியது. ஊர் சுத்தம் ஆகவேண்டுமென்றாலும் உதவியது. அது சென்னை மழையோ, கடலூர் புயலோ தமிழகம் முழுக்கவிருந்து இளைஞர் சக்தியை ஒன்று திரட்டியது.

இது போன்ற உதவிகள் நிஜ உலகில் இன்னும் அதிகமாக நடந்தன. டெக்னாலஜி, இந்த உதவிகளை தொகுத்து, அதன் ஆக்க சக்தியை அதிகப்படுத்தின என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ‘ஏதோ ஓர் ஊரில் என்னவோ நடக்கிறது எனக்கென்ன?’ என்றில்லாமல் உணர்வுபூர்வமாக பலரை ஒருங்கிணைக்கும் செயலை இன்றைக்குச் சமூக ஊடகங்கள் செய்து கொண்டிருக்கிறது. ஒரு இக்கட்டான சூழலில் இறங்கி சேவை செய்யும் ஒருவரை பலருக்கு அடையாளம் காட்டியதன் மூலம், அவரைப் போல ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூட வாய்ப்பை உருவாக்கித்தந்தது சமூக ஊடகங்கள்தான்.  

unnamed_18217.jpg

இன்னொரு உண்மையையும் பார்க்கவேண்டும். நிஜ உலகுக்கும், வர்ச்சுவல் உலகுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சமூக வலைதளங்கள் “மொக்கை”, “பழசு” என ஒதுக்கிய மஞ்சப்பை என்ற படம் நிஜத்தில் வசூலை வாரிகுவித்தது. “இதுதான் உலக சினிமா” என ட்விட்டர் கொண்டாடிய படம் முதல் காட்சியில் இருந்தே காலியாக இருந்தது. மைதானத்தில் எப்போதும் இருக்கும் கூட்டம் போடும் சத்தம் மட்டுமே அதிகம் கேட்பதால் அதுதான் உண்மை என நம்ப வேண்டியிருக்கிறது. சமூக ஊடகங்களில் கேட்கும் சசிகலா எதிர்ப்புக் குரல்களில் 10 சதவிகிதம் கூட போயஸ் கார்டனின் முன் கேட்கவில்லை. தெருக்களில் கேட்கவில்லை. மக்கள் கூடும் மார்க்கெட் பகுதிகளில் கேட்கவில்லை. ‘என்னது வெறும் 2000தான் எடுக்க முடியுமா?’ என்று கடும்கோபத்துடன் கேட்ட பலரும், சேகர் ரெட்டி வீட்டில் கோடிகளில் 2000 ரூபாய்த்தாள்கள் எடுக்கப்பட்டது தெரிந்தும் பெரிதாக ரியாக்‌ஷன் செய்யாமல் ‘இவனுகளை திருத்த முடியாது’ என்று சும்மா இருந்துவிட்டது. 

சமூக வலைதளங்களில் இருக்கும் சில கூட்டம் மீம்ஸ் போடும். கிண்டலாக ஸ்டேட்டஸ் போடும். நக்கலாக ட்வீட் போடும். அப்படி கிண்டல் அடிப்பதற்காக நாட்டில் ஏதேனும் நிகழக் காத்திருப்பார்கள். நல்லதோ கெட்டதோ, பிறப்போ இறப்போ, மக்களைப் பாதிக்குமோ இல்லையோ... அவர்களுக்கு தேவை ஒரு சம்பவம். அல்லது ஒரு வாசகம். அதை வைத்து அன்றைய பொழுது ஆயிரமாயிரம் லைக்ஸும், சில நூறு ரீட்வீட்களும், ஷேர்களும் வாங்கி விடுவார்கள். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை ஒரு லைக்குக்கு மட்டுமே ஏற்ற விஷயமாக மாற்றிக்கொண்டிருப்பதை இவர்கள் அறிவதில்லை. நடுநடுவே அப்துல் கலாமுக்கும், அறிவியல் உண்மைகளுக்கும் ஒரு மீம்ஸ் போட்டுவிட்டால் சமூக அக்கறை இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

எலி ஒன்றை கூண்டில் அடைத்து, அதற்கு முன்னால் On-OFF சுவிட்ச் ஒன்று வைக்கப்பட்டது. எலி அந்த சுவிட்சைத் தொட்டு ஆன் பண்ணினால், அதன் மூளையில் டோபோமைன் என்ற வேதிப்பொருள் தூண்டப்படும். சுவிட்சைப் போடும்போது எல்லாம் அதற்கு டோபோமைன் உதவியால் உள்ளுக்குள் பேரானந்தம் உண்டாகும். ஒருகட்டத்தில் ஒவ்வொரு நாளும் விடாமல் அந்த டோபோமைன் பட்டனைத் தட்ட ஆரம்பித்துவிட்டது. விடாமல்... மணிக்கணக்கில், சோறு, தண்ணீர் இல்லாமல் எந்நேரமும் அது டொக்கு டொக்கு எனத் தட்டிக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் முழுமையாக அந்த பட்டனுக்கே அடிமையாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் வழி நடப்பது இது மாதிரியான ஒரு மாற்றம்தான்.

கிட்டத்தட்ட இந்த எலி போலதான் ஆகிறார்கள் நெட்டிசன்ஸ். அவர்களுக்கு உணர்வு மங்குகிறது. எதிர்ப்போ, ஆதரவோ..இரண்டிலுமே அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்திருக்கிறது என்பதையும், கோடி ரூபாய் ஷேர் மார்க்கெட்டில் போனது என்பதையும் ஒரே மாதிரி பார்க்கத் தொடங்குவார்கள். அதுதான் நிஜத்திலும் நடக்கிறது. இந்த மாற்றத்தை மக்களிடம் வேகமாக கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது சோஷியல் மீடியா.

இதே சமூகவலைதளத்தில்தானே உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பகிரப்பட்டு பலரையும் பீதியடைய வைக்கிறது?

netizens_12076.jpgஇப்பொழுதும் ஈழத்தமிழருக்கு வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது; மதுரை மீனாட்சி அம்மன், மோடி, ஜனகனமண, வந்தே மாதரம், புதிய 2000 ரூபாய் நோட்டு என்று எதையவது உலகத்திலேயே சிறந்ததாக ஐ.நா. தேர்ந்தெடுத்ததாக பல வதந்திகள் உலவிக் கொண்டேதான் இருக்கிறது. 2012 என்று குறிப்பிட்டே ‘அவசரம் உடனே ரத்தம் தேவை’ என்று வருகிறது; ஒரு ஷேர் செய்வதன் மூலம் நாம் உண்மையான மனிதனாக, இந்தியனாக, தமிழனாக, ஆணாக, பெண்ணாக எல்லாம் நிரூபித்துத் தொலைய வேண்டியதாக இருக்கிறது; ஐந்து நொடியில் ஷேர் செய்பவர்களுக்கு கடவுள் என்னென்னமோ தருகிறார்; ஒரு பள்ளிப் பேருந்து விபத்தில் சிக்கியதாக அந்தப் பள்ளியின் அருகில் இருப்பவரே ’செய்தி உண்மைதானா?’ என்று விசாரிக்காமல் பகிர்கிறார்; யாரோ ஓர் ஏழைச்சிறுமிக்கு நெட்வொர்க்காரர்கள் பத்து காசு கொடுப்பார்கள் என்று நம்பும் ஒரு பெருங்கூட்டம் இருந்து கொண்டுதானிருக்கிறது; அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் கேன்சருக்கான இலவச மருந்து வைத்திருக்கிறார்கள்; ஏடிஎம் நம்பர் 2442 என்றிருந்தாலும் ரிவர்ஸில் அடித்தால் திருடர்களிடமிருந்து தப்பிக்கலாம்; இப்படி இன்னும்.. இன்னும்...

எதையும் பகிர்வதற்கு முன் ஒரு அலைபேசி அழைப்பின்மூலம் அதை உறுதி செய்து கொள்ளலாம். இதை யாரோ சொன்னதுக்கு ‘Not verified’, ‘Just Forwarded' என்றெல்லாம் போட்டு அதே வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் சிலர்.

unnamed_%281%29_18401.jpg

எவை நல்லவை:

  • ஒவ்வொரு துறையிலும் அரசியல் உண்டு. தடைகள் உண்டு. திறமைகளை மறைத்து வைக்க ‘பங்கர்’கள் உண்டு. இவை அனைத்தையும் உடைத்து எரிகிறது சோஷியல் மீடியா. திறமை இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. ஒருவருக்கு கூட அறிமுகம் ஆகாத பலர், அவர்களது திறமையால் மட்டுமே பல்லாயிரக்கணக்கானோருக்கு அறிமுகம் ஆனது, அவர்கள் தொட நினைத்த உச்சத்தை தொடுவதற்கான நம்பிக்கை தந்தது என பல நல்ல வெற்றிக்கதைகளும் இங்கே உண்டு.
  • கம்யூனிட்டியை வளர்க்க சோஷியல் மீடியா ஒரு சரியான இடம். உங்களுக்கு ஒரு சினிமாவோ, ஒரு பாடலோ, ஒரு கேட்ஜெட்டோ, ஒரு வீடியோகேமோ பிடிக்கிறது என்றால், அதே ரசனை கொண்டு பலரை அடையாளம் கான சோஷியல் மீடியா உதவும். “அட்ஜஸ்ட்” செய்ய வேண்டிய பல இடங்களில் அப்படி இல்லாமல், பிடித்தபடி இருக்க இங்கே வாய்ப்புகள் ஏராளம். 
  • தொலைந்த உறவுகளையும், மறந்த பால்ய சிநேகிதங்களையும் பளிச் என காட்டும் மாய வெற்றிலைதான் சோஷியல் மீடியா. அவர்களது பெயரோ, ஃபோட்டோவோ மட்டும் தெரிந்தால் போதும். கொஞ்சம் பொறுமையாக தேடி அவர்களை கண்டறியும் வாய்ப்புகள் அதிகம். அவர்கள் எங்கிருந்தாலும் அந்த நட்பை மீண்டும் வளர்த்தெடுக்கலாம்.
  • செய்திகளை தேடித்தேடி அலைய வேண்டியதில்லை. ஹேஷ்டேக் கான்செப்ட் மூலம் நாம் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயத்தை பற்றி ஒரே ஒரு க்ளிக்கில் தெரிந்து கொள்ளலாம். புதிதாக ஒரு பைக் வந்திருக்கிறதென்றால், அந்த பைக் பற்றிய ஹேஷ்டேகில் அந்த பைக் நிறுவனத்தின் ஓனர் முதல், மிக சமீபமாக அந்த பைக் வாங்கியவரின் கருத்து வரை அனைத்தையும் அதே ஹேஷ்டேகில் படிக்கலாம்.
  • நம்மை நாமே இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம். அழகிய சட்டை அணிவது முதல், முடியை வித்தியாசமாக கலர் செய்வது வரை எல்லாமே ஒருவரது கவனம் பெறத்தானே? அது சோஷியல் மீடியாவில் இன்னும் எளிது.

எவை கெட்டவை:

  • பெர்சனல் விஷயங்களை தொலைப்பதில் சோஷியல் மீடியா எப்போதும் ஆபத்தான இடம்தான். நமக்கே தெரியாமல், அல்லது விபரீதம் புரியாமல் எங்கேயாவது நமது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து விடுவோம். அதுவே ஆபத்தில் முடியலாம். அது ஒரு ஃபோட்டோவோ, மொபைல் எண்ணோ, நாம் வெளியூர் போகிறோம் என்ற தகவலோ என எதுவாகவும் இருக்கலாம்.
  • உறுதிப்படுத்தப்படாத தகவலை உதாசீனப்படுத்தாமல், பகிர்வதன்மூலம் யாரோ ஒருவருக்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறோம். இது நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஒன்று. 
  • மனரீதியாக ஒருவரை நம்பி நட்பு பாராட்டுவதில், இன்னமும் சிக்கல் நீடிக்கத்தான் செய்கிறது. நட்போடு இருப்பின் நலமே. அதை மீறி வாழ்க்கைத்துணையாக, அல்லது காதலாக அது உருவெடுக்கும்போது அவர்களைப் பற்றி நாம் மனதில் சோஷியல் மீடியாக்களின் மூலம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிம்பத்துக்கும் நிஜத்துக்கும் இருக்கும் இடைவெளி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.

ஆரம்ப காலங்களில் பூங்காக்களுக்கு வரையறைகளும் விதிமுறைகளும் குறைவுதான். சுற்றுச்சுவர் கூட இருக்காது. யார், எவர் வேண்டுமானாலும் எப்போதும் அங்கு எதுவும் செய்யலாம் என்ற நிலையே நீடிக்கும். ஆனால், இன்றைக்கு எல்லாப் பூங்காக்களுக்கும் சுற்றுச் சுவர் உண்டு. காவலாளி நியமித்து பராமரிக்கச் செய்கிறார்கள். அடையாளம் தெரியாத முகங்களை உற்று கவனித்து கேள்வி கேட்கும் காவலாளிகளும் உண்டு. இப்போதும் வம்பு வளர்க்கும் கூட்டம் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அங்கு உண்டு. ஆனால், அவரவர் எல்லையும் பொறுப்பும் உணர்ந்து செயல்படுகிறார்கள். இதே நிலைமையை சமூக ஊடகங்களிலும் கவனிக்க முடிகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக வலைதள நடவடிக்கைகள் பக்குவமடைந்து கொண்டே வருகிறது. முன்னர் நிஜ உலகத்துக்கும், வெர்ச்சுவல் உலகத்துக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று அந்த இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. நாளடைவில் அது ஒரே புள்ளியில் சங்கமிக்கக் கூடும். அதற்கு முன்பாகவே இந்த வர்ச்சுவல் உலகை நாம் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். அது நம் எதிர்காலத்துக்கு மிக வளமானதாக நலமானதாக ஆக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை! 

கங்கை புண்ணியத்தையும், பாவத்தையும் ஒன்றாகவே சுமந்து செல்வதை போலதான் சமூக வலைதளங்களும் இருக்கின்றன. இதில் இருந்து இரண்டையும் பிரித்தறிய வேண்டிய கட்டாயம் இணையவாசிகளுக்கு இருக்கிறது. 

வாசகர்களே, சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்த நன்மை தீமைகளை, உங்கள் அனுபவங்களை, கருத்துகளை நீங்களும் கமெண்டில் பகிரலாமே!

http://www.vikatan.com/news/miscellaneous/74949-positive-and-negative-impacts-of-social-media.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.