Jump to content

பெங்களூர் நாட்கள் முதல் தோழா வரை... 2016 ரீமேக்குகளின் ஹிட் அண்ட் மிஸ் கணக்கு! #2016RemakeMovies #2016Rewind


Recommended Posts

பெங்களூர் நாட்கள் முதல் தோழா வரை... 2016 ரீமேக்குகளின் ஹிட் அண்ட் மிஸ் கணக்கு! #2016RemakeMovies #2016Rewind

இந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் ரீமேக்களும் பல உண்டு. எந்தெந்த மொழிகளிலிருந்து என்னென்ன படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன, அதன் ரிசல்ட் என்ன தெரியுமா? 

பெங்களூர் நாட்கள்:

ரீமேக்

2014ல் மலையாளத்தின் செம ஹிட் படம் 'பெங்களூர் டேஸ்'. அஞ்சலி மேனன் இயக்கத்தில் நிவின் பாலி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில், நஸ்ரியா நசிம், பார்வதி, இஷா தல்வார் என மல்டி ஸ்டார் காஸ்ட், மிக அழகான கதை என அத்தனை பேரையும் ஈர்த்தது. கேரளம் தாண்டியும் நல்ல வரவேற்பு கிடைத்தது. உடனே படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை தில்ராஜுவும், பரம் வி.பொட்லுரியும் வாங்கினார்கள். இயக்குநராக பொம்மரில்லு பாஸ்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். துல்கரின் கதாப்பாத்திரத்தில் ஆர்யா என முடிவான பின் மற்ற ரோல்களுக்கு நாக சைத்தன்யா, சமந்தா ஆகியோரை யோசித்தார்கள். சித்தார்த், பிரசன்னா, பரத், நானி, சர்வானந்த் எனப் பலரும் யோசிக்கப்பட்ட நிலையில் இறுதியானது பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா தான். கடைசி வரை நஸ்ரியா ரோலில் நஸ்ரியாவையே நடிக்க வைக்க முயற்சி நடந்தும் திருமணமானதால் நடிக்க மறுத்துவிட்டார் நஸ்ரியா. நஸ்ரியா நடித்த கடைசி படம் அது தான். கேரளா அளவுக்கு இல்லையென்றாலும் தமிழிலும் படம் ஓடியது.

 

சாஹசம்:

collageSaha_09106.jpg

2012ல் த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், இலியானா நடித்து வெளியான படம் ஜுலாயி. இதன் தமிழ் ரீமேக் தான் சாஹசம். பிரசாந்த் நடிப்பில் அதற்கு முன் வெளியான புலன் விசாரணை 2 எதிர்பார்த்த வெற்றி அடையாததால், கம்பேக் படமாக இருக்கும் என ஜுலாயி ரீமேக்கில் நடித்தார். ஹீரோயின் அமன்டா ஷர்மா ரோலில் நடிக்க முதலில் பேசப்பட்டது தமன்னாவிடம். ஒரிஜினலுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு என ஆலோசிக்கப்பட்டு பின்னர் தமன் இசை, ஷாஜி குமார், சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு என ஒப்பந்தமானது. படத்தின் தலைப்பு முடிவாகும் முன் அஸ்திரம், மோதிப்பார் என்கிற பெயர்களுடன் ஃபேஸ்புக் போலிங் வைத்தது படக் குழு. ஆனால், படம் எதிர்ப்பார்த்த கம்பேக்கை பிரசாந்திற்கு அளிக்கவில்லை. சோ சேட்.

ஆறாது சினம்:

collageMemo_09273.jpg

2013ல் த்ரிஷ்யம் படத்திற்கு முன் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் மெமரீஸ். ப்ரித்விராஜ், விஜயராகவன், மியா ஜார்ஜ், மேக்னா ராஜ் நடித்திருந்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய தயாரானார் இயக்குநர் அறிவழகன். அருள்நிதி, ராதா ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத் நடித்த இந்த த்ரில்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால், மலையாள வெர்ஷன் தான் பக்கா என்றனர் விமர்சகர்கள்.

காதலும் கடந்து போகும்:

collagekakapo_09529.jpg

2010ல் கிம் க்வாங் சிக் இயக்கத்தில் வெளியான 'மை டியர் டெஸ்ப்ராடோ' என்கிற கொரியன் படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்று நலன் குமரசாமி இயக்கிய படம் காதலும் கடந்து போகும். சீனுக்கு சீன் அப்படியே எடுக்காமல் தன் ஸ்டைலில் கலகல வசனங்கள், ட்ரீட்மென்ட் மூலம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருந்தார் நலன். விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிக்க படம் ஓரளவுக்கு நல்ல வசூல் பெற்றது.

தோழா:

collage_09263.jpg

2011ல் ஃப்ரென்ச்சில் வெளியான 'த அன்டச்சபுள்ஸ்' படம் தோழா, ஊப்பிரி என தமிழ் மற்றும் தெலுங்கில் பைலிங்குவலாக ரீமேக்கானது. வம்சி இயக்கிய இப்படத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா, பிரகாஷ்ராஜ் என தமிழ், தெலுங்கு இரண்டுக்கும் வசதியாக இருக்குமாறு நடிகர்கள் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இரண்டு மொழிகளிலும் ஹிட்டும் ஆனது!

மனிதன்:

collagellb_09451.jpg

2013ல் இந்தியில் சுபாஷ் கபூர் இயக்கத்தில் வெளியான படம் ஜாலி எல்.எல்.பி. இதன் தமிழ் ரீமேக் தான் மனிதன். காமெடி படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த உதயநிதி கொஞ்சம் சீரியஸான படத்தைத் தேர்ந்தெடுத்ததற்காகவே படம் வரவேற்கப்பட்டது. இப்போது அக்‌ஷய் குமார் நடிப்பில் ஜாலி எல்.எல்.பி 2 உருவாகிவருகிறது.

மீண்டும் ஒரு காதல் கதை:

collageMOK_09040.jpg

2012ல் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, இஷா தல்வார் நடித்து மலையாளத்தில் வெளியான படம் 'தட்டத்தின் மறயத்து'. இதன் தமிழ் ரீமேக் 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கினார். வால்டர் பிலிப்ஸ் நிவின் ரோலிலும், ஒரிஜினலில் நடித்த இஷா தல்வாரே அதே பாத்திரத்திலும் நடித்திருந்தனர். மலையாளத்தில் அது கிளாஸிக். தமிழில் கொஞ்சம் சிக். 

அம்மா கணக்கு:

collageAmma_09199.jpg

அஸ்வினி திவாரி இயக்கத்தில் இந்தியில் வெளியான படம் ’நில் பாட்டே சன்னாட்டா'. ஸ்வரா பாஸ்கர், ரியா சுக்லா நடித்திருந்த இந்தப் படத்தை தயாரித்திருந்தார் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். படத்தின் டிரெய்லரை ஆனந்த், தனுஷிடம் காண்பிக்க, இதை தமிழில் ரீமேக் செய்யுமாறு இயக்குநர் அஸ்வினி திவாரியை அணுகினார் தனுஷ். உடனடியாக அமலா பால், யுவலக்‌ஷ்மி நடிப்பில் தமிழில் 'அம்மா கணக்கு' என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் வெளியாவதாக இருந்த படம் சில காரணங்களால் ஒரு மாத இடைவெளிக்குப் பின் வெளியானது.

 

http://www.vikatan.com/news/cinema/74967-remake-films-of-this-year-2016-in-tamil.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.