Jump to content

திருமணத்திற்கு முன் ''கல்யாண யோகா''


Recommended Posts

திருமணத்திற்கு முன் ''கல்யாண யோகா''

 

  •  

பல இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடல் எடையைக் குறைக்கவும், தங்களது மனம் மற்றும் உடலைச் சரிசெய்து கொள்ள செல்லும் இடமாக தமிழக அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாறியுள்ளது.

 
சென்னை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள இள வயதினர்

உடல் எடையைக் குறைக்க பல விதமான மருந்துகள், ஜிம் போன்ற பயிற்சிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாத நிலையில் அவர்களின் இறுதி வாய்ப்பாக இந்த இடம் இருப்பதாக அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இளம் வயதினருக்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகளையும், திருமணத்திற்கு முன்பு உடல் எடையைக் குறைக்க சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்காக பிரத்தியேகமாக 'கல்யாண யோகா' என்ற பெயரில் இயற்கை உணவு மற்றும் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது என இங்குள்ள மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

யோகா மற்றும் இயற்கை உணவை எடுத்துக்கொணடதால் உடல் எடையை 62 ல் இருந்து 55 கிலோவாக குறைக்க முடிந்தது காயத்ரி, சிகிச்சை எடுத்துக்கொண்டவர்

காலை 8 மணிக்கு தொடங்கும் பயிற்சி வகுப்பில் சிகிச்சை மேற்கொள்ள வந்திருந்த இளம் பெண்களில் ஒருவர் காயத்ரி(25). தனது திருமணத்திற்காக, 15 நாட்கள் அரசு யோகா மருத்துவமனையின் சிகிச்சை பிரிவில் தங்கி தனது உடல் எடையைக் குறைத்ததாக கூறுகிறார்.

''எனது கை மற்றும் கால் பகுதிகளில் அதிக சதை இருப்பதையும், எனக்கு பிடித்தமான வகையில் உடை உடுத்திக் கொள்வதில் பிரச்சனை இருப்பதை உணர்ந்தேன். திருமணத்திற்குத் தயாராகும் வேளையில், உடல் எடையை கட்டாயம் குறைக்க வேண்டும் என எண்ணினேன். சிகிச்சையின் போது, தனுர் ஆசனம் மற்றும் சக்தி பந்தாசனம் என்ற ஆசனங்களில் அதிக கவனம் செலுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்,''என்றார் .

சக்தி பந்தாசனம் என்பது மரம் வெட்டுவது, கல்லில் மாவு அரைப்பது மற்றும் கப்பல் ஓட்டுவது போன்ற அசைவுகளைக் கொண்டது என்ற காயத்ரி,'' எனது எடை 62 ல் இருந்து 55 கிலோவாக எடையைக் குறைக்க முடிந்தது. சிகிச்சை முடிந்த பின்னும் நான் வீட்டிலும் பயிற்சியை தொடருவேன், ''என்றார்.

அதிக உடல் எடையால் தடைபட்ட திருமணம்

உடல் எடை அதிகமாக இருந்த காரணத்தால் இரண்டு முறை தனது திருமணத்திற்குத் தடை ஏற்பட்டதை அடுத்து கோமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மன உளைச்சலுடன் இருந்தார். ''65 கிலோ எடையுடன் இருந்த எனக்கு என்னை கண்ணாடியில் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. 15 நாட்கள் இங்கு பயிற்சி, சிகிச்சையை தொடர்ந்து, வீட்டிலும் பயிற்சி என ஒரு மாதம்,15 நாட்களில் 10 கிலோ வரை குறைத்தேன். தற்போது எனது எடை 54, '' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அவர்.

உடல் எடையைக் குறைக்க ஆசனங்கள் மட்டுமின்றி உணவு எடுத்துக் கொள்ளும் விதமும் மிக முக்கியம் என்கிறார் அரசு யோகா மருத்துவர் தீபா சரவணன். ''இங்கு 15 நாட்கள் தங்கும் போது, அவர்களின் உணவு பழக்கத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை உணர்த்துகிறோம். சுவையான, சமைக்காத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறோம்,''' என்றார்.

சென்னை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரப்படும் உணவுசென்னை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரப்படும் உணவு

இரண்டு வாரங்களில் திடீரென உடை எடை ஏழு கிலோ வரை குறைவது உடலைப் பாதிக்காதா என்று கேட்டபோது, ''உடல் நலம் குன்றிய ஒருவரின் உடல் எடை குறையும் போது தான் பிரச்சனை. அல்லது எந்த விதமான உடற்பயிற்சியும் மேற்கொள்ளாத ஒருவரின் உடல் எடை திடீரென குறைந்தால் அது நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால், இயற்கை உணவு, தேவையான ஆசனங்கள் கண்டிப்பாக உடல் எடையைக் குறைக்கவும், அதனால் பாதிப்பு ஏற்படலாமல் இருக்கவும் உதவும்,'' என்றார்.

மருத்துவரின் உதவியுடன் யோகா பயிற்சி மேற்கொள்ளும் ஜோய்சிமருத்துவரின் உதவியுடன் யோகா பயிற்சி மேற்கொள்ளும் ஜோய்சி

60 கிலோ எடையுடன் இருந்த ஜோய்சி தனது நிச்சயதார்த்தம் முடிந்த பின், ஜிம் பயிற்சிகளை மேற்கொண்டார். '' எனக்கு ஜிம் பயிற்சிகளை செய்த போது, அதிக உடல் வலி ஏற்பட்டது. இயற்கை யோகா மருத்துவமனை சிகிச்சையை கடைசி முயற்சியாகத்தான் செய்தேன். ஆனால் பத்து நாட்களில் ஐந்து கிலோ எடை குறைந்த போது, எனக்கு நம்பிக்கை வந்தது. எனது திருமணத்திற்கு எனக்கு விருப்பமான உடைகளை நான் அணிவேன் என்ற மகிழ்ச்சியை நான் அடைந்தேன்,'' என்றார்.

உணவே மருந்து

சிகிச்சைக்காக வருபவர்களுக்கு மாத்திரைகளுக்குப் பதிலாக, பழங்கள் எடுத்துக்கொள்ளவும், நடைப் பயிற்சி செய்யவும், உடலில் பிரச்சனை உள்ள பகுதியை அறிந்து கொள்ள அக்குபங்சர் நடைபாதையில் நடக்குமாறு மருத்துவர்கள் குறிப்பு சீட்டில் எழுதுகின்றனர்.

ஒரு நாளில் இந்த மருத்துவமனைக்கு வரும் 250 நபர்களில் குறைந்த பட்சம் 80 நபர்கள் வரை அதிக எடை மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளவர்களுக்கு, பழங்கள், காய்கறிகள் சாலட், ஜூஸ் போன்றவற்றைத் தயாரிக்கும் வேலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

மணவாளன், அரசு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர்

 

 ’’மாத்திரைகளுக்கு பதிலாக மனதை வலுப்படுத்தும் பயிற்சிகள்’’ - மணவாளன்

''மற்ற அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சேவை போலவே எங்களது மருத்துவமனையிலும் உணவு இலவசமாக அளிக்கப்படுகிறது. மாத்திரைகளுக்குப் பதிலாக, மனதை வலுப்படுத்தும் பயிற்சியை நாங்கள் வழங்குகிறோம். மருத்துவத்திற்குச் செலவு செய்யாமல், மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல், தங்களது உடலைச் சீரமைக்க மக்களுக்கு உதவும் மருத்துவ முறையைத் தான் இங்கு வழங்குகிறோம்,'' என்றார் அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் மணவாளன்.

http://www.bbc.com/tamil/india-38274722

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 SLAPPING இந்த,  டாக்குத்தருக்கு.... நாலு சாத்து, சாத்த வேணும் போலை கிடக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் இப்படியான தலைப்புகளில் தடுக்கி விழுவதால் பார்டரிலேயே நின்று கொள்கின்றேன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம்...நான் முதல் ஆளாய் வந்து பாத்திட்டு பேசாமல் கொள்ளாமல் போனது ஒருத்தருக்கும் தெரியாது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஏமாளிகளுக்கு கவர்ச்சிகரமான  தலையங்கம் :grin:

Link to comment
Share on other sites

இதை நீங்கள் எல்லோரும் BBC இடம்தான் கேட்கவேணும்...:grin:

இந்த பதிவை  போடும்போதே தெரியும் இப்படி பலர் அலைகழியபோகிறார்கள் என்று.

Link to comment
Share on other sites

கல்யாண யோகா
மணமேடையில் மிளிர கல்யாண யோகா (காணொளி)

பல இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடல் எடையைக் குறைக்கவும், தங்களது மனம் மற்றும் உடலைச் சரிசெய்து கொள்ள செல்லும் இடமாக சென்னையில் உள்ள தமிழக அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாறியுள்ளது.

உடல் எடையைக் குறைக்க பல விதமான மருந்துகள், ஜிம் போன்ற பயிற்சிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாத நிலையில் அவர்களின் இறுதி வாய்ப்பாக இந்த இடம் இருப்பதாக அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதிர் காலத்தில் தேவைப்படும் என்று ஓடியாந்து பார்த்தால்  ம்கும்  :unsure:

On 12/15/2016 at 0:41 AM, குமாரசாமி said:

நல்லகாலம்...நான் முதல் ஆளாய் வந்து பாத்திட்டு பேசாமல் கொள்ளாமல் போனது ஒருத்தருக்கும் தெரியாது.....

கள்ள பூனைக்கு தான் தெரியுமாம்  முதல் வழி :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

நானும் எதிர் காலத்தில் தேவைப்படும் என்று ஓடியாந்து பார்த்தால்  ம்கும்  :unsure:

கள்ள பூனைக்கு தான் தெரியுமாம்  முதல் வழி :104_point_left:

அப்படிப் போடுங்க... அருவாளை,  முனிவர் ஜீ. :)
"அமுசடக்கு... கள்ளர் தான், ஆபத்தானவர்கள்"  என்று,  எங்கள் ஊரில்  சொல்வார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

நானும் எதிர் காலத்தில் தேவைப்படும் என்று ஓடியாந்து பார்த்தால்  ம்கும்  :unsure:

கள்ள பூனைக்கு தான் தெரியுமாம்  முதல் வழி :104_point_left:

எதிர்காலம் நிகழ்காலம் எண்டு சும்மா பினாத்துறதை விட்டுட்டு....வயது வட்டுக்கை போகக்கு  முதல் ஏதாவது பண்ணித்தொலையுங்கப்பா.....விட்டால் பிறகு பிடிக்கேலாது..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் வந்து பார்த்தமில்ல.. ஏதாவது விடுபட்ட யோகா செய்யக் கிடக்கோன்னு. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்தியாவில இருந்து உது தானே வரும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அப்படிப் போடுங்க... அருவாளை,  முனிவர் ஜீ. :)
"அமுசடக்கு... கள்ளர் தான், ஆபத்தானவர்கள்"  என்று,  எங்கள் ஊரில்  சொல்வார்கள். :grin:

உன்மையாவா பார்த்தீர்களா  அமசடக்கு ஆட் களை ஊரில் நம்பகூடாது என்பார்கள் tw_blush:

2 hours ago, குமாரசாமி said:

எதிர்காலம் நிகழ்காலம் எண்டு சும்மா பினாத்துறதை விட்டுட்டு....வயது வட்டுக்கை போகக்கு  முதல் ஏதாவது பண்ணித்தொலையுங்கப்பா.....விட்டால் பிறகு பிடிக்கேலாது..:grin:

இதை சொல்லி சொல்லி வாயை அடைத்து போடுங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.