Jump to content

மண்ணும், மரமும், மனிதனும்


Recommended Posts

மண்ணும், மரமும், மனிதனும்

athamaram.jpg
ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
bharathiraja.jpg

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கிழக்குச் சீமையிலே' எனும் பெயரில் திரைப்படமொன்று வெளியாகியது. அது ஒரு கிராமியக் கதையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படமாக இருந்த போதிலும், தமிழ் ரசிகர்கள் அதற்குப் பேராதரவு நல்கி அதனை வெற்றிப்படமாக்கியிருந்தனர்.
அந்தத் திரைப்படத்தில் பாடல் காட்சியொன்றில், படத்தின் துணைக் கதாநாயகன்(விக்னேஷ்), பல வருடக் கல்லூரி, நகர வாழ்க்கையை முடித்துக்கொண்டு தனது சொந்தக் கிராமத்திற்கு வருவான். அவன் கிராமத்திற்குள் நுழையும்போது ஆற்றங்கரையிலுள்ள மரத்தைப் பார்த்து, நம் ஊரில் அனைவரும் நலமாக உள்ளார்களா? என்று கேட்பதுபோல் அமைந்த:

                     "ஆத்தங்கரை மரமே, அரசமர இலையே!
                      ஆலமரக் கிளையே, அதிலுறங்கும் கிளியே"

என்று தொடங்கும் பாடலில் வரும், பின்வரும் வரிகள், கதாநாயகனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழ்க் குடிமகனுக்கும்/மகளுக்கும் இயற்கையோடு உள்ள அழகான, ஆழமான உறவை வெளிக்காட்டுவதாக அமைந்தன. இதோ அந்த வியத்தகு வரிகள்:

                    "தொட்டபூ இங்கே சுகம்தானா?
                     தொடாத பூவே சுகம்தானா?
                     தோப்புல(தோப்பிலே) ஜோடி(சோடி) மரங்கள் சுகம்தானா?
                     அத்தையும் மாமனும் சுகம்தானா?
                     ஆத்தில மீனும் சுகம்தானா?
                     அன்னமே உன்னையும் என்னையும், சேர்த்து வளர்த்த
                     திண்ணையும் சுகம்தானா?"

என்று கேட்டுக் கதாநாயகன், கதாநாயகியை மட்டும் சுகம் கேட்பதோடு நின்று விடாமல், ஊரிலுள்ள மரங்களையும், இயற்கையையும் சுகம் விசாரிக்க வைத்த, கவிஞர்.வைரமுத்துவின் முத்தான வரிகளுக்கு, மேற்குறிப்பிட்ட வரிகள் சிறிய உதாரணங்கள் மட்டுமே.

பாடலைப் பார்த்து ரசிக்க இங்கே அழுத்தவும்

மேற்படி திரைப்படத்தில் வரும் கதாநாயகனையும், பாடலை எழுதிய கவிஞனையும் போலவே, நாமும் நமது புலம்பெயர் வாழ்வில், எமது மண்ணையும், பசுமை நினைவுகளையும், மறக்க முடியாதவர்களாகவும், ஆனால் புலம்பெயர் நாட்டின் சமூக, பொருளாதார, கலாச்சாரச் சூழலுக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாகவும், வேதனையிலும், விரக்தியிலும், திண்டாடியே வாழ்கிறோம் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அந்தத் திரைப்படத்தில், இன்னுமோர் பாடல் காட்சியில், படத்தின் பிரதான கதாநாயகி(ராதிகா) திருமணமாகிப் புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது

 

 
killakku1.jpg
ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
'கிழக்குச் சீமையிலே' என்ற அந்த அற்புதமான திரைக் காவியத்தில், மற்றுமொரு பாடல் காட்சியில், படத்தின் பிரதான கதாநாயகி 'ராதிகா' திருமணமாகிப் புகுந்தவீடு செல்லும் காட்சியில் அவள்(கதாநாயகி) அனைவருக்கும் 'சென்றுவருகிறேன்' என்று பதில் சொல்லிப் போவதாக அமைந்த பாடலாகிய "வண்டிமாடு எட்டுவச்சு முன்னே போகுதம்மா' என்ற பாடலில் வரும் வரிகள் கேட்போரை மட்டுமல்ல, தங்கைகளோடு கூடப்பிறந்த அண்ணன்கள் அனைவரையுமே கண்கலங்க வைத்தன. இதோ கதாநாயகி அனைவரிடமும் விடைபெறும் பாடல் காட்சி உங்களுக்காக:

பாடலைப் பார்த்தும், கேட்டும் நெகிழ இங்கே அழுத்தவும்.

அந்தப் பாடலில், நமது மண்ணும் மரமும், மனிதனும் என்ற தலைப்போடு தொடர்புபட்ட பின்வரும் வரிகளைப் பார்ப்போம்.
 

kilakku2.jpgஅவள் கூறுகிறாள்:
"அண்ணே போய்வரவா, அழகு போய்வரவா,
மண்ணே போய்வரவா, மாமரமே போய்வரவா,
அணில்வால் மீசவச்ச அண்ணே உன்னைவிட்டு,
புலிவால் மீசவச்ச புருசனோட போய்வரவா"
என்ற வரிகள் கேட்போர் உள்ளங்களை எல்லாம் கொடிய வாள்கொண்டு அறுத்தன. இதில் அவள் கேட்போரை நெகிழவைக்கும் விதமாக அப்படி என்னதான் கூறுகிறாள்?
சிறுவயது முதலே தாய்,தந்தையில்லாமல் வளர்ந்த அவளைக் 'கண்ணை இமைகாப்பதுபோலக் காத்த' அண்ணனுக்கு விடை கூறுகிறாள், "அண்ணே போய்வரவா"
அதற்கடுத்ததாக அவளது வரிசைக்கிரமத்தில் இடம்பிடித்திருப்பது அவளது நெடுநாள் சிநேகிதியாகிய 'அழகு' என்பவள். அறிவு தெரிந்த காலத்திலிருந்தே அவளோடு ஒட்டி உறவாடிய, 'கெந்தியடித்தல்' முதல் 'பல்லாங்குளியாடுதல்'  வரை அவளுடனேயே வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த 'அழகு' என்ற சிநேகிதியைப் பார்த்துக் கூறுகிறாள் "அழகு போய்வரவா" என்று. அதற்கடுத்தாற்போல் தான் பிறந்தது முதல் இன்றுவரை 'ஆடி,ஓடி, விளையாடிப் புரண்ட, தனக்குச் சோறளித்த, வாழ்வளித்த தன் மண்ணுக்குக் கூறுகிறாள் "என் மண்ணே போய்வரவா" என்று. உடன்பிறந்தவனையும், உயிர் நண்பியையும், தன் மண்ணையும் மட்டும் அவள் நேசித்தவளா? இல்லவே இல்லை, மனிதர்கள் எல்லாம் அடுத்த மனிதர்களை 'உணர்ச்சியிலாதவர்' என்று இழித்துரைப்பதற்கு பயன்படுத்தும் சொல் 'மரம்' என்பதுதான். அந்த மரத்திலே, மனித வாழ்க்கையின் பல அத்தியாயங்களோடு தொடர்புடைய மாமரத்தின் மீதுகூட அவள் உணர்ச்சிபூர்வமான உள்ளன்பு வைத்திருந்தாள் அதனால்தான் அவள் தன் முற்றத்து மாமரத்தையும் மறக்காமல் கூறுகிறாள் 'மாமரமே போய்வரவா'

 

 
childmango.jpgஎமது கிழக்குச் சீமையின் நாயகி தன் அண்ணனுக்கும், மண்ணுக்கும், மாமரத்துக்கும் விடைகூறி 'வாழ்க்கைப்பட்டு' புகுந்த வீட்டிற்குச் சென்ற நெகிழ்வான காட்சியைக் கடந்த வாரம் பார்த்தோம். அதில் மண்ணுக்கு அடுத்த படியாக அவள் 'மாமரத்திற்கு' விடையளித்தமைக்கான காரணங்களையும் சிறிது ஆய்வு செய்வோம். முக்கனிகளில் ஒன்று 'மாம்பழம்', தமிழ் மக்களின் வீடுகளுக்கருகில் அல்லது காணிகளில் மண் வளமுள்ள பெரும்பாலான நிலங்களில் இந்த மாமரம், பரிவோடு வளர்க்கப்படுகிறது.(தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த சில மரங்களைப் பற்றி எதிர் வரும் அத்தியாயங்களில் பார்க்கவுள்ளோம்) இம்முக்கனிகளில் வாழையானது, கிணற்றுக்கு அருகில் அல்லது தோட்டங்களில் வளர்க்கப் படுவது. பலாமரமானது தமிழ் மக்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் வளருகின்ற ஒரு மரமல்ல. ஆகவே மாமரம் மட்டுமே எந்த மண்ணாக இருப்பினும், எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரும் ஒரு கனிதரும் மரமாகும். 
mangos.jpg
இம்மாமரத்தைத் தமிழ் மக்கள், தாம் குடியிருக்கும் வீட்டிற்கு மிக அருகிலேயே தமது செல்லப் பிராணிகளுக்கு இணையாகப் பாசத்தோடு வளர்ப்பர்(இதில் நான் குறிப்பிடுவது புலம்பெயர்ந்த தமிழ் மக்களையல்ல என்பதை அறிவீர்கள்) இவ்வாறு மாமரம் வீட்டிற்கு அருகில் வளருகின்ற சூழலில், வளருகின்ற குழந்தையானது, தான் வளர்கின்ற காலப்பகுதியில் அம்மரத்தோடு ஒரு பாச உணர்ச்சியை வளர்த்துக் கொள்கின்றது, மாமரத்தின் ஒவ்வொரு பருவகாலமும் அக்குழந்தையானது ஆண்குழந்தையாக இருப்பினும், பெண்குழந்தையாக இருப்பினும் ரசிக்கின்ற அல்லது மகிழ்கின்ற பருவமாக அமைகிறது. சாதாரண நாட்களில் குழந்தையானது 'ஊஞ்சல்' கட்டி ஆட உகந்த மரமாக' இம்மாமரமே விளங்குகிறது. அதே மாமரம் பூக்கின்ற காலத்தில் சிறந்த நறுமணத்தினால் அயலிலுள்ள அத்தனை பேருக்கும் அறிவித்தல் விடுக்கிறது, "இன்னும் சில நாட்களில் உங்களுக்கு நான் என் 'கைமாறாகக்' காய்கள் தரவுள்ளேன்". என்கிறது.
 
mango2.jpg

மாம்பூவின் மணத்தில், மயங்கிநிற்கும் பிள்ளைக்குப் பெற்றோர்கள் கூறுகின்றனர் "மாமரம் காய்க்கப் போகிறது, மாமரத்தில் ஏறி விளையாடுவதைக் குறைத்துக்கொள், மாம்பிஞ்சுகளைப் பறிக்கக் கூடாது, அது மாமரத்திற்கு வலிக்கும்" என்றெல்லாம் கூறி மாமரத்தை ஒரு உயிருள்ள, உணர்வுள்ள பிராணி என்பது போன்றதொரு பிம்பத்தைக் குழந்தையின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றனர். மாமரத்திற்கு வலிக்கும் என்பதை உணர்கின்ற அதே குழந்தை, மாம்பிஞ்சுகளைப் பறித்தல் கூடாது என்கிற கட்டளையை உதாசீனம் செய்து விடுகிறது.

.

 

 

 

http://anthimaalai.blogspot.com.au/search/label/மண்ணும் மரமும் மனிதனும்

mango3.jpg
 
.
                                    
"மாமரத்திற்கு வலிக்கும்" என்று பெற்றோர்கள் கூறுகின்ற கருத்தைக் கவனத்தில் கொள்கின்ற சிறுவனோ, சிறுமியோ "மாம்பிஞ்சுகளைப் பறித்தல் கூடாது" என்கின்ற பெற்றோர்களின் கருத்தை நினைவில் கொள்வதில்லை. அத்தகு 'தடை செய்யப்பட்ட' செயலைச் செய்துபார்க்கவே ஒவ்வொரு குழந்தையும் விரும்புகிறது. ஏனெனில் ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு தடுக்கப்படும்போது, அச்செயலைச் செய்ய தூண்டப்படுவது மனித இயல்பாகிறது. இதற்கு மனித வரலாற்றைக் குறித்துவைத்துள்ளதாகக் கூறப்படும், 'புனித விவிலியத்தில்' வரும் ஆதிப் பெற்றோர்களான 'ஆதாமும், ஏவாளும்' கூட விதிவிலக்கு அல்ல.
 
இதனாலேயே குழந்தைகள் மாம்பிஞ்சுகளைப் பெற்றோருக்குத் தெரியாமல் பிடுங்கி உண்கின்றனர். புளிப்பும், கசப்பும் கலந்த அந்தப் பிஞ்சு மாங்காய்களின் சுவையானது அவர்களுக்குப் பிடித்தமான ஒரு 'தெவிட்டாத' சுவையாகி விடுகிறது. இதற்கு மருத்துவ ரீதியான ஒரு காரணமும் உள்ளது. அதாவது எந்தக் குழந்தை மாங்காயையோ, புளியங்காயையோ, புளியம்பழத்தையோ திருட்டுத் தனமாக, விரும்பி உண்கிறதோ அந்தக் குழந்தையின் உடலில் விட்டமின் C குறைவாகக் காணப்படுகிறது என்று அர்த்தம். இவ்வாறான தருணங்களில் பெற்றோர், குழந்தைக்குப் போதுமான விட்டமின் C சத்துள்ள   பழங்களையோ(புளிப்புச் சுவையுடைய பழங்கள்) அல்லது விட்டமின் C மாத்திரைகளையோ கொடுத்தல் அவசியம். இதேபோல் சில குழந்தைகள், ரகசியமாகச் சாம்பலையோ,(அடுப்பிலிருந்து கிடைக்கும் சாம்பல்) அல்லது களிமண், புழுதிமண் போன்றவற்றையோ உண்ணுதல் கூடும். இவ்வாறு உண்ணுகிற குழந்தைகளைப் பெற்றோர் "அவ்வாறு செய்யக் கூடாது" என்று அதட்டி, அடிப்பதை நான் பலதடவைகள் கண்டிருக்கிறேன். இவ்வாறு குழந்தைகள் செய்வதற்கும் 'அறிவியல் ரீதியான' காரணம் இருக்கிறது. அதாவது அவ்வாறு செய்கின்ற குழந்தையின் உடலில் ஏதோவொரு தாதுப்பொருள் (உதாரணமாக கல்சியம், பொஸ்பரஸ், சோடியம்) குறைவடைகிறது என்று அர்த்தம். மேற்படி குழந்தையின் உடலில் குறிப்பிட்ட ஒரு தாதுப்பொருள் குறைவடைகின்றமையை, இயற்கையானது நமக்குத் தெரிவிக்கும் ஒரு செயற்பாடே குழந்தை 'களிமண்ணை' உண்ணுதலாகும். ஆதலால் மேற்படி குழந்தையைத் தாயோ, தந்தையோ அடிக்காமல், உரிய மருத்துவரிடம், ஆலோசனை பெற்றுக் குழந்தைக்குத் தேவைப்படுகின்ற 'சத்து' எது என்பதைக் கண்டறிந்து, அச்சத்து குழந்தைக்குக் கிடைக்க ஆவன செய்தலே பொருத்தமான தீர்வாக அமையும்.
 
சரி, சிறு வயதில் மாங்காயின், அல்லது மாம்பழத்தின் சுவைக்கு அடிமையாகும் குழந்தை, அவன்/அவள் பதின்ம வயதை அடையும்போதும் அவர்கள் மனமானது, மாங்காய்க்காகவும், மாமரத்திற்காகவும் ஏங்குகிறது. பாடசாலைப் பருவத்திலுள்ள நமது நாட்டுச் சிறுவர்கள் அவர்களது வளவில் மாமரங்கள் இல்லாதுபோகும் பட்சத்தில், மாற்றாரின் காணிகளில் உள்ள மாமரங்களிலிருந்து, மாங்காய்களைத் திருடுகின்ற சம்பவங்கள், சாதாரணமாக நிகழ்வதை அறியாத தமிழர்களே இருக்கமுடியாது எனலாம். "திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம்" என்ற பழமொழியைத் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
mango4.jpgஇவ்வாறு சிறுவர் முதல், பதின்ம வயதினர் வரை அனைவரும், 'மாங்காய்' தருகின்ற மரம் என்ற காரணத்திற்காக நேசிக்கின்ற ஒரு மரமாக 'மாமரம்' விளங்குகிறது. இதுபோன்ற இன்னோரன்ன காரணங்களாலேயே 'கிழக்குச் சீமையின்' நாயகியானவள் "மண்ணே போய்வரவா, மாமரமே போய்வரவா"   என்று பாட்டிசைத்தாள்.
இந்த மனிதர்கள், குறிப்பாகத் தமிழர்கள், தங்கள் மண்ணோடுசேர்த்து மரம், செடி, கொடிகளையும் நேசிக்கின்ற பாங்கு என்னை வியப்படைய வைத்தது. இது எதனால், எவ்வாறு, எங்கு ஆரம்பிக்கிறது என்று ஆராயப் புறப்பட்ட எனக்குக் கிடைத்த விடைகள் என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.
 
mullai.jpg
முல்லை 

இவ்வாறு தமிழ் மக்கள் தமது மண்ணோடு, மரங்களையும் செடி கொடிகளையும் நேசிக்கின்ற பாங்கு என்னை வியப்படைய வைத்தது. இது எங்கே எவ்வாறு ஆரம்பிக்கிறது? என்று ஆராய முற்பட்டபோது எனக்குக் கிடைத்த விடைகள் மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக அமைந்தன.
முதலாவதாக எமது தமிழ் இலக்கிய நூல்களில் விடை தேடியபோது கிடைத்தது ஒரு அதிசயமான செய்தி அது "முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி" என்று நம்மை வியப்படையச் செய்கிறது. அதாவது சங்க காலத்தில் வாழ்ந்த அல்லது ஆட்சிபுரிந்த கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய 'பாரி மன்னன்' காட்டிற்கு வேட்டையின் நிமித்தம் சென்றபோது காட்டில் அவனது தேர் சென்ற பாதையில் கவனிப்பாரின்றி படர்ந்து கிடந்த ஒரு முல்லைக் கொடியானது, பற்றிப் படர்வதற்கு ஒரு கொழுகொம்பு(பற்றிப் பிடித்துப் படர்வதற்கு ஏற்ற மரம்போன்ற ஒரு துணை)இல்லாததால் காற்றில் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப் பட்டுக் கிடப்பதைக் கண்டான், அதன் நிலை கண்டு இரங்கிய அம்மன்னன் தனது தேரிலிருந்து இறங்கி,

 

Krishna_and_Arjun.gifஅத்தேரில் அம்முல்லைக் கொடியைப் படரவைத்துவிட்டுக் கானகத்திலிருந்து நடந்தே அரண்மனைக்கு சென்றான் என்று சாட்சி கூறுகிறது எமது சங்க இலக்கியம். கொடைக்குப் பெயர்போனவன் பாரி மன்னன் என்பது நம்மில் பலர் அறிந்த விடயமாகும், இருப்பினும் ஒரு முல்லைக் கொடிக்காக தனது தேரையே தானமாக வழங்கிய அவனது பெருந்தன்மை யாருக்கு வரும்? அதனால் தான் இன்று வரை எம்மவர் நாவுகளில் 'வள்ளல்' என்ற அடைமொழிக்கு அர்த்தமாக பாரிமன்னன் நிலைத்து நிற்கிறான். எனது நண்பரொருவர் இந்தப் பாரி மன்னனின் செயலைப் பற்றிக் கிண்டலாக ஒரு கருத்துக் கூறினார், அது சரியா தவறா என்ற முடிவை வாசகர் பக்கமே விட்டு விடுகிறேன் அவர் கூறியது இதுதான்: "இக்காலத்தில் பெராரி(Ferrari) அல்லது

72.png
பெராரி (Ferrari)

ரோல்ஸ்ரோய்ஸ்(Rolls-Royce) கார்கள் போல அக்காலத்தில் மன்னர்களின் தேர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை, அவ்வாறு இருக்கையில் ஒரு பெறுமதியான தேரை, மன்னன் முல்லைக் கொடிக்காக இழந்தது எவ்வகையில் விவேகமானது? இதற்குப் பதிலாக தனது படை, பரிவாரங்களிடம் சொல்லி முல்லைக் கொடிக்கு ஒரு பந்தல் அமைத்துக் கொடுத்திருக்கலாமே? என்று என்னிடம் கேட்டார். அவருக்குக் கூறுவதற்கு என்னிடம் ஏற்புடைய பதில் இல்லாவிட்டாலும், அவரிடம் நான் பின்வருமாறு கூறி அவ்விவாதத்தில் இருந்து விடுபட்டேன் "அம்முல்லைக் கொடியின் அவலம் தீரவேண்டும் என்று எண்ணிய மன்னனுக்கு, இரக்கம் என்ற உணர்ச்சி மட்டுமே மேலோங்கி நின்றது, அவ்விரக்க உணர்ச்சிக்கு முன்னால் தேரின் பெறுமதி ஒரு பொருட்டாக அவனுக்குப் படவில்லை. அதனால்தான் தமிழ்ச் சரித்திரத்தில் இன்றுவரை அழியாமல் வாழ்கிறான் பாரி மன்னன்"

 

mullai.jpgநான் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது போலவே, எமது கொடை வள்ளல்களில் ஒருவனான பாரி மன்னன் முல்லைக் கொடிக்காகத் தனது தேரைக் கொடுத்த செயலுக்கு எமது வாசகர் பக்கமிருந்து எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியிருந்தன. அதில் ஒரு வாசகர் பின்வருமாறு தனது கருத்தைத் தெரிவித்திருந்தார், "மன்னன் தானமாகவும், தர்மமாகவும் அள்ளி வழங்கியதெல்லாம், பொதுமக்கள் சொத்துதானே? இதில் அவனது தர்மத்தை மெச்சுவதற்கு ஏதுமில்லை, அதைத்தானே இன்றைய அரசியல் வாதிகள் செய்கிறார்கள், ஒரேயொரு வேறுபாடு அரசியல்வாதிகள் தாம் அபகரித்த பொதுமக்கள் சொத்தை அள்ளி வழங்காமல், தமது சொத்தாக்குகிறார்கள்" என்று காரசாரமாகவே கருத்துரை வழங்கியிருந்தார். அவரது கருத்துக்கும் மதிப்பளிக்கின்ற அதேவேளை, மேற்படி விவாதத்திற்குள் நுழையும் எண்ணம் அடியேனுக்குச் சிறிதளவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

marakodi.jpgநான் இக்கட்டுரையை எழுதப் புகுந்ததன் நோக்கமே எமது மக்களில் பல்வேறு பிரிவினரும் மரம், செடி, கொடிகளை எவ்வாறு நேசித்தார்கள், இதற்குக் காரணம் தான் என்ன? என்று முடிந்தளவு ஆராய்வதேயாகும். எமது பாரிமன்னனுக்கு அடுத்தபடியாக செடி, கொடிகளையும் நேசித்த புகழ் வாய்ந்த மனிதர் யார்? என்ற கேள்விக்கு நூல்களில் விடை தேடினேன், அடுத்ததாக எனது பார்வையில் பட்ட பெயர் ஒரு இந்து மதத் துறவியின் பெயராகும். அவர் வேறு யாருமல்ல கடந்த 18 ஆம் நூற்றாண்டில் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்த 'வடலூர்

ramalingam.jpg
இராமலிங்க வள்ளலார்

இராமலிங்க வள்ளலார்' ஆவார். இன்று தமிழ்நாட்டில் 'வடலூர்' என்ற நகரத்தின் பெயரை எவர் உச்சரித்தாலும் உடனடியாக, அவர்தம் நினைவில் வருவது 'ராமலிங்க வள்ளலாரின்' பெயரும், அவரது பெருமையுமே. இந்து மக்களின் மனங்களில் நிறைந்து நிற்கின்ற இந்தத் துறவி, அனைத்து உயிர்களையும், நேசிக்கக் கற்றுக் கொடுத்ததோடல்லாமல், மரம், செடி, கொடிகளையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்தார்.
அவர் வாழ்ந்து மறைந்தது 18 ஆம் நூற்றாண்டாக இருப்பினும் அவர் உதிர்த்த வாசகமாகிய "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வாசகம் உலகப் புகழ் வாய்ந்தது. இவர் மரம், செடி, கொடிகளையும் நேசிக்கும்படி மக்களுக்குக் கற்றுக் கொடுத்தது இக்காலத்தவர்களுக்கு வேண்டுமானால், வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அவரது அர்த்தம் பொதிந்த சொற்களுக்கு அந்நாளில் மிகவும் மதிப்பு இருந்தது.
 

ashokan.jpg
அசோகச் சக்கரவர்த்தி

இந்தத் துறவியைப் போல் என் நினைவுக்கு வரும் இன்னொருவர் இந்தியாவின் புகழை உலகம் அறியச் செய்த அசோகச் சக்கரவர்த்தியாவார். அவர் உதிர்த்த வாசகம் இதுதான் "நீங்கள் இந்த நாட்டிற்குச் செய்யும் கைமாறு, உங்களால் முடிந்த அளவு மரங்களை நடுவதுதான்" இதை அவர் மன்னன் என்ற ஸ்தானத்தில் இருந்து கூறியதால், கோடிக்கணக்கான மக்கள் அவரது வார்த்தையைப் பின்பற்றினார்கள். இதேபோல் இலங்கையிலும் ஒரு மன்னன் வரலாற்றுப் புகழ்மிக்க வாசகத்தை உதிர்த்தான்.

 
 
 

 

 
parakramabahu.jpg
 
இதேபோல் இலங்கையிலும் ஒரு மன்னன் வரலாற்றுப் புகழ்மிக்க வாசகத்தை உதிர்த்தான். அம்மன்னனின் பெயர் 'மகா பராக்கிரம பாகு' என்பதாகும். அவன் உதிர்த்த வாசகம்தான் என்ன? "எமது இலங்கை மண்ணில் வீழ்கின்ற ஒவ்வொரு மழைத்துளியும் பெறுமதியானது, அவை அத்தனையும் பயிர்ச் செய்கைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், இம்மண்ணின் நீரானது ஒரு துளிகூட வீணாகக் கடலில் கலக்கக் கூடாது, இந்நாட்டில் குடியிருப்பு நிலம் தவிர்ந்த ஏனைய நிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக மாற்றப்படல் வேண்டும்" என்று அறைகூவல்
5rupees1.jpg
விடுத்தான். அவனது கூற்றை மக்கள் செவி மடுத்தனர். அவனது ஆட்சிக்காலத்திலேயே இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் புதிய குளங்கள் வெட்டப்பட்டன. மலையிலிருந்து சம தரையை நோக்கி ஓடிவரும் தண்ணீரைச் சேமித்து வைக்கும் நீர்த்தேக்கங்கள் உருவாகின. இலங்கையில் இருக்கும் மிகப்பெரிய நீர்த்தேக்கம் ஒன்றுக்கு இலங்கை அரசு 'பராக்கிரம சமுத்திரம்' என்று பெயர் சூட்டுகின்ற அளவுக்கு அவனது புகழ் நிலைத்து நிற்கிறது. அவனது காலத்திலேயே இலங்கையின் புகழ் உலகெங்கும் பரவியது. நான் கூறும் தகவல்கள் வாசகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கலாம். இவனது ஆட்சிக்காலத்திலேயே இலங்கையிலிருந்து அரிசியானது பாரசீகம்முதல்(இன்றைய ஈரான்) சாவகம் வரை(இன்றைய இந்தோனேசியா) ஏற்றுமதி செய்யப்பட்டது.
 
5rupees2.jpg
அவனது காலத்தின் பின்னர் எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்து இலங்கை சுதந்திரமடைந்த காலத்தின் பின்னரும்கூட இலங்கையால் 'அரிசியை' ஏற்றுமதி செய்கின்ற அளவுக்குத் 'தன்னிறைவு' அடைய முடியவில்லை. இப்போதும் சீனாவிலிருந்தும்,பர்மாவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இலங்கை அரிசியை இறக்குமதி செய்த வண்ணமே உள்ளது. 1984 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் இலங்கையின் அமோக நெல் விளைச்சலைக் கருத்தில் கொண்டு "இவ்வாண்டு முதல்(1984) இலங்கையிலிருந்து அரிசி வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்" என்று கூறினார். ஆனால் இயற்கை செய்த சதியால் 'இலங்கை முழுவதுமே' வெள்ளத்தில் மூழ்கியதால் லட்சக் கணக்கான விவசாயிகளின் விளைச்சல்கள் நீரில் மூழ்கின. விவசாயிகள் அனைவருமே ஏழைகளாயினர். அந்த இழப்பிலிருந்து மீள்வதற்கு இலங்கை விவசாயிகளுக்குப் பல வருடங்கள் பிடித்தன.

இலங்கையின் வரலாற்றிலேயே 'மகா பராக்கிரமபாகுவின்' ஆட்சிக் காலமே 'பொற்காலம்' எனலாம். ஏனெனில் இவனது ஆட்சியிலேயே மக்கள் தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்தனர். என்னைப் பொறுத்தவரையில் இவன் ஒரு சிறந்த மன்னன் என்பதைவிட ஒரு சிறந்த 'தேசபக்தன்'. இவனது ஆட்சியிலேயே இலங்கை ஒரு பலமான, செல்வச் செழிப்புமிக்க நாடாகியது, அது மட்டுமன்றி ஏனைய நாடுகளின்மீது படையெடுக்கும் அளவுக்குப் பலம்பொருந்திய நாடாகவும் விளங்கியது. இம்மன்னனின் புகழை உலகமே போற்றியது. உதாரணத்திற்குச் சில: தன்னை அவமதித்த குற்றத்திற்காக இலங்கையைவிடப் பத்து மடங்கு பெரிய நாடாகிய பர்மாவின்மீது படையெடுத்த மகா பராக்கிரமபாகு அந்நாட்டு மன்னனைப் பணிய வைத்ததோடு, பல வருடங்களுக்கு பர்மிய மன்னன் இலங்கைக்குத் 'திறை' செலுத்தவேண்டும் என்றும் கட்டளையிட்டான். தமிழ்நாட்டில் சோழர்களால் ஆபத்து நேரும்போதெல்லாம் 'பாண்டிய மன்னர்கள்' பராக்கிரம பாகுவின் உதவியையே நாடினர். பாண்டியர்களுக்கு உதவும் முகமாக 'பராக்கிரம பாகுவின்' படைகள் தமிழ்நாட்டில், இராமநாதபுரத்தில் 30 வருடங்கள் நிலைகொண்டிருந்தன.
இத்தகைய பராக்கிரமம் நிறைந்த இம்மன்னனின் காலத்திலேயே இலங்கை இன்னொரு நாட்டைக் கைப்பற்றி ஆண்டது, அந்நாட்டில் இன்றளவும் சிங்களத்தின் கிளை மொழியே பேசப் படுகிறது அது எந்த நாடு? சிந்தியுங்கள்.

 

 
maldiver1.jpg 
 
தமிழ்நாட்டில் சோழர்களால் ஆபத்து நேரும்போதெல்லாம் 'பாண்டிய மன்னர்கள்' பராக்கிரம பாகுவின் உதவியையே நாடினர். பாண்டியர்களுக்கு உதவும் முகமாக 'பராக்கிரம பாகுவின்' படைகள் தமிழ்நாட்டில், இராமநாதபுரத்தில் 30 வருடங்கள் நிலைகொண்டிருந்தன.
இத்தகைய பராக்கிரமம் நிறைந்த இம்மன்னனின் காலத்திலேயே இலங்கை இன்னொரு நாட்டைக் கைப்பற்றி ஆண்டது, அந்நாட்டில் இன்றளவும் சிங்களத்தின் கிளை மொழியே பேசப் படுகிறது அது எந்த நாடு? சிந்தியுங்கள். என்ற கேள்வியுடன் கடந்த வாரத் தொடரை நிறைவு செய்திருந்தேன்.
sembaruthi.jpg
வாசகர்களில் ஒருசிலரேனும் விடை கண்டுபிடித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். இருப்பினும் விடையைக் கண்டுபிடிக்காத வாசகர்களுக்காக இதோ விடை: மகா பராக்கிரம பாகுவின் படைகளால் கைப்பற்றப் பட்டு, இலங்கையால் ஆளப்பட்ட நாடு 'மாலை தீவுகள்' ஆகும். அங்கு பேசப்படும் மொழியின் பெயர் திவேகி(Dhivehi) என்பதாகும். அம்மொழியானது சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தாலும் 'சிங்களத்தின் கிளைமொழி'(Cognate dialect) என்றே அழைக்கப் படுகிறது. உதாரணமாக எமது திராவிட மொழிகளாக தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகள் திகழ்ந்தாலும் 'மலையாளம்' மட்டுமே தமிழின் கிளைமொழி என்று அழைக்கப் படுகிறது. காரணம் யாதெனில் தமிழிலிருந்து மலையாளமொழி பிரிந்து சென்று(திரிபடைந்து) ஏறத்தாழ அறுநூறு வருடங்களே ஆகின்றன. மலையாளத்தில் பேசினால் தமிழர்கள் சுலபமாக புரிந்து கொள்வர். தமிழில் பேசினால் மலையாளிகள் சுலபமாகப் புரிந்து கொள்வர் என்பதற்கான விளக்கம் இதுதான். இதேபோல் சத்யன்(சத்தியநேசன்) கதாநாயகனாக நடித்த 'செம்மீன்' என்ற மலையாளத் திரைப்படம் யாழ்ப்பணத்தில் வெற்றி பெற்றதையும், தமிழில் பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்த 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் கதாநாயகன் முழுக்க முழுக்க மலையாளத்தைப் பேசியிருந்த போதிலும் அது தமிழில் வெற்றிப் படமாகியது போன்ற உதாரணங்களையும் கூறலாம். 'செம்மீன்' படத்தில் வரும் "கடலின் அக்கர போனோரே" பாடலை மறந்த வயோதிபர்களோ, அல்லது 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் வரும் 'கவிதை அரங்கேறும் நேரம்' பாடலை மறந்த நாற்பதைத் தாண்டியவர்களும் எம்மத்தியில் இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. ஆனால் மலையாளிகள் தமிழைப் பேசினாலும், அவர்களது எழுத்து வடிவம் சமஸ்கிருதத்தை ஒத்ததாக இருக்கும். ஏனெனில் அவர்கள் பேச்சுவடிவத்தைத் தமிழிலிருந்தும், எழுத்துவடிவத்தை ஆரியர்களிடமிருந்தும் பெற்றுக் கொண்டனர். இதே போல நிகழ்வுதான் 'மாலை தீவிலும்' நிகழ்ந்துள்ளது. மாலைதீவு மக்கள் பேச்சு மொழியை சிங்களத்திடமிருந்தும் தமது எழுத்துவடிவத்தை தம்மை பல நூற்றாண்டுகளாக ஆண்ட 'அராபியர்களிடமிருந்தும்' பெற்றுக் கொண்டனர். இது நமக்கெல்லாம் வியப்பைத் தருகிறதல்லவா?
கேரளத்து மக்கள் பேசுவது 'தமிழ்' (முழுக்க முழுக்க தமிழ் வாடை கலந்த மலையாள வார்த்தைகள்) எழுதுவது தமிழ் அல்ல. அதேபோல் மாலைதீவு மக்கள் பேசுவது 'சிங்களம்'(முழுக்க முழுக்க சிங்கள வாடை கலந்த திவேகி வார்த்தைகள்) ஆனால் எழுதுவது சிங்களம் அல்ல 'அரபு எழுத்து' இது வினோதம் அல்லவா?
images?q=tbn:ANd9GcScJO2ItBQgRKuoPmsdN1rzCWK8Bl3sMN7dBp5UzTzPhAIw5iSCசரி நம் பராக்கிரம பாகுவின் புகழைப் பற்றியும், அவனது நாட்டுப் பற்று பற்றியும் கூறப் புகுந்த நான் மாலைதீவு மொழி, மலையாள மொழி பற்றிய ஆராய்ச்சிக்குள் தெரிந்தோ, தெரியாமலோ இறங்கி விட்டேன். சரி போகட்டும். தன் மண்ணையும், மக்களையும் நேசித்த, நாட்டிற்குப் புகழ் தேடித் தந்த மன்னன் என்ற காரணத்தால் 'மகா பராக்கிரம பாகு' இந்தக் கட்டுரையில் ஒரு இடம் பிடித்துக் கொண்டார். இனி தமிழ் மக்கள் தாம் மண்ணையும், மரம், செடி கொடிகளையும், உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிப்பதைத் தமது மொழியில் எவ்வாறு அழகாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும்

என் செல்லக் கண்மணி 
இனி தமிழ் மக்கள் தாம் மண்ணையும், மரம், செடி கொடிகளையும், உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிப்பதைத் தமது மொழியில் எவ்வாறு அழகாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

christmastree3.jpgஅதற்கு முன்பாகக் காலத்தின் தேவை கருதி மேற்கத்தைய நாட்டவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் நேசிக்கும் ஒரு மரத்தைப்பற்றி உங்களிடம் கூறியே ஆகவேண்டும். அந்த மரத்தைத் தமது பிள்ளைகளுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள். எவ்வாறு தமது பிள்ளைகளை இனிய வார்த்தைகளால் அழைக்கிறார்களோ, அதே போலவே அம்மரத்தையும் " அன்பே, செல்லமே, இனிப்பே, கண்மணி, கண்ணே "   என்றெல்லாம் அழைக்கிறார்கள். அது என்ன மரம் என்ற கேள்வி மூளையைக் குடைகிறதா? சரி விடயத்திற்கு வருகிறேன். கிறிஸ்துமஸ்(நத்தார்) பண்டிகையை நேற்றைய தினம் கொண்டாடிய கோடிக்கணக்கான மேற்கத்திய நாட்டு மக்களின் வீடுகளில் காணப்படும் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்துக்குத்தான்(Evergreen Coniferous Tree) அத்தனை மதிப்பும், அன்பும், பாசமும் கிடைக்கிறது.


இவ்வாறு கிறீஸ்தவர்களின் தலைசிறந்த பண்டிகையாகிய நத்தாரில் இம்மரம் முக்கியத்துவம் பெறக் காரணம் என்ன? இந்த வழமை எப்போது, எங்கே ஆரம்பித்தது? போன்ற கேள்விகளுக்கு விடை தேடியபோது கிடைத்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
christmastree4.jpgஇம்மரத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையில் அலங்கரித்து மகிழும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான 'லித்துவேனியாவிலும்', ஜேர்மனியிலும் ஆரம்பித்தது என்று நம்பப்படுகிறது. தற்காலத்தில் இம்மரமானது மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது. இம்மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது... 

கிறிஸ்துமஸ் மரம் 

 


christmastree4.jpg

ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 

இம்மரத்தை (Evergreen Coniferous Tree) கிறிஸ்துமஸ் பண்டிகையில் அலங்கரித்து மகிழும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான 'லித்துவேனியாவிலும்', ஜேர்மனியிலும் ஆரம்பித்தது என்று நம்பப்படுகிறது. தற்காலத்தில் இம்மரமானது மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது. இம்மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தை அல்லது தேவதைகளை(இலங்கைத் தமிழில் 'சம்மனசுகள்') நினைவூட்டுவதற்கான சின்னமாகும்.



images?q=tbn:ANd9GcQYLJ_1pFvLKqog8aS8K7IWFPlpdrUlSJAT5Esiq8EXwbYJgocfஇம்மரத்தை ஆரம்ப காலங்களில் படைவீரர்கள் அல்லது தேவாலயங்களில் கீதம் பாடுவோர் (இவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் 'சாரணர்கள்' போல் இயங்கி வந்தனர்) போன்ற பிரிவினர் அலங்கரித்து, மரத்தைச் சுற்றி ஆடுதல், பாடுதல் போன்ற களிப்பூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பர், அதன் பின்னர் இது மெல்ல, மெல்ல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும், அதன்பின் மரபு ரீதியாக கிறீஸ்தவ மக்களின் வீடுகளில் 'பாலன் பிறப்பு' அலங்காரங்களோடு சேர்த்து இடம்பிடித்திருக்கும், பல நூற்றாண்டுகள் கழிந்த நிலையில் 'கத்தோலிக்கர்' தவிர்ந்த ஏனைய கிறீஸ்தவர்கள் மத்தியில் 'பாலன் பிறப்பு' அலங்காரம் விடைபெற்று கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தல், அதன் கீழ் கிறிஸ்துமஸ் பரிசுகளை வைத்தல், மரத்தைச் சுற்றி ஆடிப் பாடுதல் போன்ற நடைமுறைகள் இடம்பிடித்திருக்கலாம் (அறிமுகமாகியிருக்கலாம்) என்கிறார் ஐரோப்பாவின் மூத்த சமூகவியல் ஆய்வாளரான ஜெர்மனியைச் சேர்ந்த திருமதி.இங்கபோ வெபர் கெல்லமான் (Ingeborg Weber Kellermann).


மேலும் சமயத் தலைவர்களின் கருத்துப்படி ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் மரம் அறிமுகப்படுத்தப் படுவதற்கு கிறீஸ்தவ மதத் துறவியாகிய புனித.பொனிபாஸ் (St.Boniface) என்பவர் காரணமாக இருந்துள்ளார். இம்மரம் அறிமுகப் படுத்தப்பட்ட காலத்தில் தற்போதுள்ளதைப் போல் செயற்கை அலங்காரப் பொருட்கள் தொங்கவிடப் படவில்லை என்பதுடன், அவைகளுக்குப் பதிலாக அப்பிள் பழங்கள், கடலைகள், பேரீச்சம் பழங்கள், போன்ற உண்ணத்தக்க பழவகைகளும், கடதாசிப் பூக்களும் தொங்கவிடப்பட்டன. கொண்டாட்ட முடிவில் இப்பழங்களை உண்ணுவதும் வழக்கமாக இருந்தது.


ஐரோப்பாவின் பல நாடுகள் கிறிஸ்துமஸ் மரத்தை 15 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்த ஆரம்பித்தபோதும், டென்மார்க்கில் முதல் முதலாக 1808 ஆம் ஆண்டிலேயே டேனிஷ் மக்கள் இம்மரத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உபயோகிக்க ஆரம்பித்தனர்.

ஐரோப்பாவின் பல நாடுகள் கிறிஸ்துமஸ் மரத்தை 15 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்த ஆரம்பித்தபோதும், டென்மார்க்கில் முதல் முதலாக 1808 ஆம் ஆண்டிலேயே டேனிஷ் மக்கள் இம்மரத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உபயோகிக்க ஆரம்பித்தனர்.


இலங்கையில், மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்திற்குப் பதிலாக 'சவுக்கு மரம்' என அழைக்கப்படும்'கஷோரினா' (Casuarina) மரத்தை உபயோகிக்கும் வழக்கம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இவ்வாறு நம்பப் படுவதற்கும் காரணங்கள் அல்லது பின்னணிகள் உள்ளன. உதாரணமாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய மூன்று வெவ்வேறு நாட்டவர்கள் ஆசிய நாடுகளை நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக ஆண்டுவந்த போதிலும், யாருடைய ஆட்சிக் காலத்தில் எமது நாடுகள் ஓரளவேனும் வளர்ச்சி கண்டன என நம் நாட்டிலுள்ள வயதான தலைமுறையினரைக் கேட்டால், 'ஆங்கிலேயர்' ஆட்சிக் காலமே ஒரு பொற்காலம் என்று கூறுவார்கள். ஏன்? எனக் காரணம் கேட்டால், "போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் இலங்கையை ஆண்ட காலத்தில் மக்களின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை, அவர்கள் எங்கள் நாட்டை முடிந்தளவு கொள்ளையடித்து 'தங்கள்' நாடுகளுக்குச் செல்வங்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் இவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இருந்தனர். அதாவது அவர்கள் ஆசிய  நாடுகளையும், அந்நாட்டு மக்களையும் கொள்ளையடிப்பதுடன் நின்றுவிடாமல், அந்நாடுகளை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளிலும் இறங்கினர்.

 

 இவற்றில் குறிப்பாகச் சொல்வதானால் இன்றுவரை இலங்கை நாட்டின் 'முதுகெலும்பாக' விளங்கும், இலங்கைக்கு 80% இற்கு மேல் அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் தேயிலை, இறப்பர்த் தோட்டங்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப் பட்டன. இந்தத் தோட்டங்களை உருவாக்குவதற்காக தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலேயர்களினால் 'அடிமைகளாக' அழைத்துவரப்பட்ட  தமிழ்நாட்டுத் தமிழர்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் சகிக்கமுடியாத கடின வேலைகளாலும், பசியினாலும், நோய்களாலும், பாம்புக்கடியினாலும், அட்டைக்கடியினாலும் இறந்துபோயினர் என்பதும் வரலாற்றில் ஒரு 'கறுப்புப் பதிவாக' இருப்பினும் ஆங்கிலேயர்கள் இலங்கை நாட்டை ஓரளவு முன்னேற்றினர் என்றே கூறலாம் காரணம் இவர்களது காலத்திலேயே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் 'கல்வியறிவுள்ள' ஒரு சமுதாயம் உருவாகியது. அதற்கு முற்பட்ட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் மக்களைக் 'கல்வியறிவுள்ளவர்கள்' ஆக்கும் எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை. இதுதவிரவும் ஆங்கிலேயர்களின் ஆட்சியிலேயே உணவு, உடை, உறையுள் போன்ற விடயங்களில் ஓரளவு மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் உடை பற்றி முக்கியமாக கூறவேண்டும். காரணம் இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய காலப் பகுதியில் இலங்கை மக்களில் 50% இற்கு மேற்பட்டோர் 'அரை நிர்வாணமாகவோ' அல்லது 'முழு நிர்வாணமாகவோ' காட்சியளித்தனர். ஆனால் இலங்கை மற்றும் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டு ஒரு சில தசாப்த காலங்களுக்குள் அம்மக்கள் தொகையினரில் 90% மானோர் 'ஆடை அணிந்த' மனிதர்களாகக் காட்சி தந்தனர்.
toplessness2.jpgஇதேபோல் போக்குவரத்து வசதிகளும், வீதிகள் அமைக்கப்பட்டமையும் ஆங்கிலேய ஆட்சியினால் விளைந்த நன்மைகள் என்று கூறலாம். இலங்கையில் மிகவும் நீளமான வீதியாகிய A-9 நெடுஞ்சாலை என அழைக்கப்படும் கண்டி-யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே உருவாகியது. 

 
 
கடந்த சில வாரங்களாக இத்தொடரில் 'கிறிஸ்துமஸ்' மரத்தைப் பற்றியும், இலங்கை 'மண்ணில்' ஆங்கிலேய ஆட்சியில் விளைந்த சில அனுகூலங்களையும் பார்த்தோம். அனுகூலங்களில் ஒன்றிரண்டைப் பட்டியலிட்டபோதும், பிரதிகூலங்களை(Disadvantages) பட்டியலிடாமல் தவிர்த்தமைக்கான காரணத்தை கூறவேண்டிய கடப்பாடு அடியேனுக்குள்ளது. அதாவது ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்ட தீமைகளை பட்டியலிட்டால் கட்டுரையின் திசை மாறிவிடும். அதேபோல் போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிகளைவிட இலங்கை மண்ணிலும், மனிதர்கள் மத்தியிலும் நன்மைகளை ஓரளவுக்கேனும் தந்த ஆட்சி என்றால் அது 'ஆங்கிலேய' ஆட்சி என்பதே எனது கடந்த வார அத்தியாயத்தின் கருப் பொருளாக இருந்தது.
 
 
 
பிள்ளையோ பிள்ளை
 
 
எமது மக்கள் மண்ணை மட்டும் நேசிக்கவில்லை, மரங்களையும் நேசிக்கிறார்கள், பறவைகள், மிருகங்கள், பிராணிகள் என அத்தனையையும் நேசிக்கிறார்கள் என்பது நீங்களும் நானும் அறிந்த ஒரு விடயமே, ஆனால் சிறு வயது முதலே என்னை ஆச்சரியப் படவைத்த தமிழ் மக்களின் 'சொல்வழக்கு' பற்றி இந்த வாரம் சிறிது ஆராய இருக்கிறேன். முதலாவதாக எமது கற்பக தருவாம் பனை மரத்தை எடுத்துக் கொண்டால், அது பாண்டியர்களின் கொடியிலும், கம்போடியாவின் தேசியச் சின்னமாகவும், அதேவேளை  உலகின் மிகப்பெரிய சிவன் கோவிலாகவும் விளங்கிய(தற்போது அது பௌத்த கோவிலாக மாற்றப்பட்டு விட்டது) கம்போடியாவின்  'அங்கோர் கோயில்'(ankor  wat) அருகில் நின்று கொண்டிருப்பதால் உலகின் கண்களிலும், புகைப்படக் கருவிகளிலும்(Camera) நின்று 'தமிழர் ஆட்சியை' உலகிற்கு எடுத்தியம்பிக்  கொண்டிருக்கிறது. கம்போடியாவைத் தமிழர்கள்(சோழர்கள்) ஆண்டார்கள் என்ற வரலாற்று நிகழ்வை இத்தொடரின் பிறிதொரு அத்தியாயத்தில் ஆராய இருக்கிறேன்.
 
சரி பனை மரத்திற்கும், இத்தொடருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?காரணம் இருக்கிறது. பனையில் இளமையானதைத் தமிழ் மக்கள் 'வடலி' என்று அழைப்பது/கூறுவது வழக்கம். ஆனால் தென்னையில் இளமையானதைத் 'தென்னங்கன்று' என்று கூறுவார்கள். இது என்னை ஆச்சரியப் படுத்தவில்லை, ஆனால் தமிழ் மக்களில் பெரும்பாலானோர்(விசேடமாக இலங்கைத் தமிழர்) தென்னை மரத்தைத் 'தென்னம்பிள்ளை' என்றல்லவா கூறுகிறார்கள். இது ஆச்சரியமான ஒரு விடயமல்லவா? பனையானது தமிழ் மக்களுக்கு கேட்பதை எல்லாம் தருவதால், தென்னை மரத்தை விடப் பனையின் பயன்கள் அதிகம் என்பதால் அது தமிழில் 'கற்பகதரு' எனப் பெயர் பெற்றது நியாயமானதே. ஆனால் பனையைத் தென்னையை விட அதிகம் நேசிக்கும் தமிழ் மக்கள் பனையை ஒருபோதும் 'பனைப்பிள்ளை' என்று கூறுவதில்லையே. இங்குதான் நம் 'தமிழன்னை' சற்றுத் தடுமாறுகிறாள். இதைப் போலவே 'பாக்கு மரத்தையும்' யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் 'கமுகம்பிள்ளை' என்று கூறுகின்ற வழக்கம் உள்ளது. குறிப்பாக வலிகாமம் கிழக்கு, வடக்கு பகுதி மக்கள் பாக்கு மரத்தை  'கமுகம்பிள்ளை' என்றே கூறுவார்கள். இதற்கான காரணம் யாது? என்று அப்பகுதி மக்களில் எவரேனும், அல்லது தமிழ்ப்புலமை மிக்கோர் விளக்கினால் நன்று.

இதைப் போலவே 'பாக்கு மரத்தையும்' யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் 'கமுகம்பிள்ளை' என்று கூறுகின்ற வழக்கம் உள்ளது. குறிப்பாக வலிகாமம் கிழக்கு, வடக்கு பகுதி மக்கள் பாக்கு மரத்தை  'கமுகம்பிள்ளை' என்றே கூறுவார்கள். இதற்கான காரணம் யாது? என்று அப்பகுதி மக்களில் எவரேனும், அல்லது தமிழ்ப்புலமை மிக்கோர் விளக்கினால் நன்று.


பெயர் சூட்டலில் வஞ்சகம் ஏன்?
சரி தென்னை, பனையை விட்டுவிடுவோம், முக்கனிகளில் நமது பெயர் சூட்டல் எவ்வாறு முரண்படுகிறது என்று பார்ப்போம். மா,பலா போன்ற கனி தரும் மரங்களின் இளையதை 'கன்று' எனக் கூறும் நமது தமிழ் மக்கள் வாழையின் இளையதை 'குட்டி' என்றல்லவா கூறுகிறார்கள், தமிழில் எந்த 'உருபு', அல்லது எந்த 'ஆகுபெயர்' இதற்கு இடமளித்தது என்பதுதான் என் மனதைக் குடையும் 'மில்லியன் டொலர் கேள்வி'. இலங்கையின் தமிழ் மக்கள் 'வாழைக்குட்டி' என்றே அழைக்கின்றனர், ஆனால் தமிழ் நாட்டில் 'வாழைக் கன்று' என அழைக்கும் மக்கள் எங்கேனும் இருப்பார்கள் என்பதே எனது ஊகம். காரணம், கவியரசு கண்ணதாசன் அவர்கள் 'ஆலயமணி' திரைப்படத்தில் எழுதிய "பொன்னை விரும்பும் பூமியிலே" என்று தொடங்கும் பாடலில் ஓரிடத்தில்:
" வாழைக்கன்று அன்னையின் நிழலில் 
வாழ்வதுபோல வாழவைத்தாயே"   என்று தன்னைப் பராமரிக்கும் பெண்ணின் பாசத்தில் உருகும் 'கதாநாயகனின்' உள்ளத்தை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார். அந்த வகையில் 'வாழைக் கன்று' எனும் சொற்பதம் தமிழ் நாட்டில் உபயோகத்தில் இருக்கலாம் என்பது எனது நம்பிக்கை.
எல்லாமே போகட்டும், நாம் சிறுவயதில் பள்ளியில் 'மயிலிறகு' ஒன்றை எடுத்து நம் தலையில் தேய்த்திருக்கும் 'நல்லெண்ணையில்' சிறிதளவு தடவி 'அம்மயிலிறகை' பாடப் புத்தகங்களுக்குள் வைப்போம், சில நாடகளில் அம்மயிலிறகு 'குட்டி' போடும் என்று குருட்டுத் தனமாக நம்பினோம். இங்கும் எமது நம்பிக்கையை விடவும், எமது 'சொல்லடை' அல்லவா முரண்பட்டு நிற்கிறது. காரணம் மயலின் இளையது 'மயில் குஞ்சு' அதை நாம் கண்ணால் காண்பதே அபூர்வம் என்ற விபரம் ஒருபுறமிருக்கட்டும், மயில் குஞ்சை நாம் ஒருபோதும் 'மயில் குட்டி' என்று கூறியதில்லையே? அவ்வாறிருக்கையில் 'மயிலிறகு' மட்டும் எவ்வாறு 'குட்டி' போடும்? நாம் அவ்வாறு கூறியதை தமிழாய்ந்த/தமிழறிந்த யாருமே, அவ்வாறு கூறுவதில் 'இலக்கணப் பிழை' உள்ளது என்று கூறவுமில்லை, திருத்தவுமில்லையே.
சரி மரங்கள், தாவரங்கள் போன்றவற்றுக்குப் பெயர் வைத்ததில்தான் இவ்வாறு குளறுபடிகள் நடந்தது எனக் கொள்ள முடியாது. பிராணிகளுக்கு பெயர் சூட்டுவதில் எத்தனை வஞ்சகம் நிகழ்ந்திருகிறது. எலியின் 'இளையதை' 'எலிக்குஞ்சு' என அழைக்கும் எம் தமிழ் சமூகம் 'கீரியின்' இளையதை 'கீரிப்பிள்ளை' என்றல்லவா அழைக்கிறது. இது மிகவும் முரண்பாடாகவல்லவா உள்ளது. 'கீரிக்குஞ்சு' என அழைத்த/எழுதிய யாரையும் நான் இதுவரை கண்டதில்லை. இதேபோல்தான் அணிலின் இளையது இலங்கையில் அணிற்குஞ்சு' எனவும் தமிழ்நாட்டில் அணிற்பிள்ளை'(அணிப்பிள்ளை) எனவும் அழைக்கப் படுகிறது. இதுவும் தமிழிலுள்ள முரண்பாடுகளில் ஒன்றாக எனக்குப் படுகிறது.


 இறுதியாக ஒரு வினோதமான உதாரணத்தை உங்கள்முன் வைக்கிறேன். கிளி ஒரு பறவை அதன் இளையது எப்போதுமே 'கிளிக்குஞ்சு' என்றுதானே இருக்க வேண்டும். பேச்சு வழக்கிலும், ஏன் இலக்கியங்களிலும் கூட 'கிளிப்பிள்ளை' என்றல்லவா இருக்கிறது. சரி விவாதத்திற்காக கிளி 'பேசும்' என்பதற்காக அதைக் 'கிளிப்பிள்ளை' என்கிறோம் என வைத்துக் கொண்டால் 'மைனாவும்' பேசும் வல்லமை கொண்டதல்லவா? நாம் ஒருபோதும் 'மைனாப்பிள்ளை' என்று கூறுவதில்லையே அது ஏன்?

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 

Cartoon Parrotகிளி ஒரு பறவை அதன் இளையது எப்போதுமே 'கிளிக்குஞ்சு' என்றுதானே இருக்க வேண்டும். பேச்சு வழக்கிலும், ஏன் இலக்கியங்களிலும் கூட 'கிளிப்பிள்ளை' என்றல்லவா இருக்கிறது. சரி விவாதத்திற்காக கிளி 'பேசும்' என்பதற்காக அதைக் 'கிளிப்பிள்ளை' என்கிறோம் என வைத்துக் கொண்டால் 'மைனாவும்' பேசும் வல்லமை கொண்டதல்லவா? நாம் ஒருபோதும் 'மைனாப்பிள்ளை' என்று கூறுவதில்லையே அது ஏன்?


சரி இவையெல்லாமே ஒரு புறமிருக்கட்டும் எம்மவர் எதற்கெடுத்தாலும் மரத்தை ஒரு இழிவான பொருளாக, அல்லது உணர்வில்லாத ஒரு 'படைப்பு' (Creation) என்ற கருத்தில் சொல்லாடல் செய்வதற்கு என்றுமே தயங்கியதில்லை, உதாரணமாக தமிழ் மக்களால் இன்றும் போற்றித் shim.gifதுதிக்கப்படும், வான்புகழ் வள்ளுவர் என்ன கூறுகிறார்?
im_tree.jpg"அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் 
மக்கட் பண்பில்லாதவர்"
என்றல்லாவா கூறுகிறார். அதாவது 'அரம்' போலக் கூர்மையான அறிவு படைத்தவராக இருந்தாலும், அம்மனிதனிடத்தில் 'பண்பு' என்ற ஒன்று இல்லாவிட்டால் அம்மனிதன் 'மரத்திற்குச்' சமமானவன் என்கிறார் வள்ளுவர் பெருமான்.
 இதே கருத்தை நான் சிறுவனாக இருந்த காலத்தில் எனது பேத்தியார், வேறு ஒரு பழமொழியின்மூலம் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன் (அது ஒரு பழமொழி என்பதே இன்றுவரை எனது நம்பிக்கையாகும்) அப்பழமொழி இதுதான்:
"நின்றான், குறிப்பறியான் மாட்டாதவனே மரம்"
மேற்படி பழமொழியை இலகு தமிழுக்கு மொழி பெயர்த்தால் நமக்குக் கிடைக்கும் விடை இதுதான். "எந்த ஒரு விடயத்தையும், குறிப்பாக உணர்த்தினால், அதைப் புரிந்து கொள்ள முடியாதவன், மரத்திற்குச் சமமானவன்".

சரி இவ்வாறு நம் முன்னோர்களின் கருத்துப்படி உணர்வு குறைந்தோர், முற்றாகப் பண்பை இழந்தோர் மரமாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால், மரத்திற்கு 'உயிர்' உள்ளது, அதற்கு  'உணர்வு' கிடையாது என்ற எம்மவர்களின் கருத்தைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. எம்மவர்கள் மரம், செடி, கொடிகளுக்கு உயிர் இருக்கிறது, ஆனால் அவற்றிற்கு 'உணர்வு' கிடையாது என்று கூறுகிறார்களே, இது உண்மையா?(சரியா?) என்ற கேள்விக்கு விடை தேடினேன். கிடைத்த விடையோ என்னை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
marakodi.jpg

சரி இவ்வாறு நம் முன்னோர்களின் கருத்துப்படி உணர்வு குறைந்தோர், முற்றாகப் பண்பை இழந்தோர் மரமாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால், மரத்திற்கு 'உயிர்' உள்ளது, அதற்கு  'உணர்வு' கிடையாது என்ற எம்மவர்களின் கருத்தைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. எம்மவர்கள் மரம், செடி, கொடிகளுக்கு உயிர் இருக்கிறது, ஆனால் அவற்றிற்கு 'உணர்வு' கிடையாது என்று கூறுகிறார்களே, இது உண்மையா?(சரியா?) என்ற கேள்விக்கு விடை தேடினேன். கிடைத்த விடையோ என்னை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

முதலில் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது, அது சுவாசிக்கிறது, கரியமில வாயுவை(carbon dioxide) உள்வாங்கிப் பிராண வாயுவை (oxygen) வெளியிடுகிறது, தனது இலைகளின் ஊடாக  ஒளிச்சேர்க்கையை(ஒளித்தொகுப்பு / Photosynthesis) நிகழ்த்தித் தனக்குத் தேவையான உணவைத் தயாரிக்கிறது. பெரும்பாலான தாவரங்களில் பூக்களின் ஊடாக மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது, அது தனக்கும், தன் சந்ததிக்கும் தயாரிக்கும் உணவில் ஒரு பகுதியை அல்லது பெரும்பகுதியை, மிருகங்களும், மனிதர்களும் பங்குபோட்டுக் கொள்கிறோம் என்பது போன்ற இன்னோரன்ன கருத்துக்கள் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி அத்தகைய ஆராய்ச்சிகளின் படிநிலை வளர்ச்சியில் அரும்பெரும் உண்மைகளையும் கண்டுபிடித்துள்ளார்கள் அதாவது மனிதர்களுக்கு இருப்பதுபோல் மரபணுக்கள்(genes) தாவரங்களுக்கும் உள்ளன. 
 
watermelon-3.jpgதாவரங்களின் மரபணுக்களை மாற்றியமைத்தால் நமக்கு நல்ல விளைச்சலைத் தரக்கூடிய  புதிய ஒரு சந்ததி(Kind) அல்லது இனம்(race) கிடைக்கும் என்ற உண்மைகளையும் அவர்கள் கண்டுபிடித்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதை செயற்படுத்தியும் விட்டார்கள். நான் ஆசிய நாடுகளில் அல்லது இலங்கையில் ஒரு போதுமே பார்த்திராத மிகப்பெரிய பூசணிக்காய், மிகப்பெரிய கோவா(முட்டைக்கோஸ்), மிகப்பெரிய அவரைக்காய், வெள்ளரிக்காய், வத்தகைப் பழம் (watermelon/ தண்ணிப் பழம்) போன்றவற்றை ஐரோப்பியச் சந்தைகளில் பார்த்து வியந்திருக்கிறேன். எவ்வாறு இத்தகைய பெரிய காய்கறிகளை உருவாக்குகிறார்கள்? என்று சிந்தித்தபோதுதான் இந்த விஞ்ஞானிகளின் 'மரபணுக்களை மாற்றுதல்' என்ற சூத்திரம் (theory) தெரிய வந்தது. உண்மையில் நம் இலங்கையிலும், இந்தியாவிலும் இந்த 'மரபணுக்களை மாற்றுகின்ற' செயல்முறை அல்லது நுட்பம்(technique) ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே தோன்றி விட்டது என்ற உண்மை எனக்கு அண்மையில்தான்   தெரிய வந்தது, மட்டுமல்லாமல், வியப்பையும் தந்தது. நம்மூரில் செயற்படுத்தப்படும் 'ஒட்டு மாங்கன்று' செயற்திட்டம் முழுக்க முழுக்க
 
squarewatermelon.jpg
மரபணுக்களை மாற்றும் ஒரு செயல்முறைதானே?புளி மாமரத்தின் ஒரு கிளையையும், இனிப்பு மாமரத்தின் ஒரு கிளையையும்  ஒட்டி ஒரு புதிய மாங்கன்று அல்லது மாமர இனம் உருவாக்கப் படுகிறதல்லவா? இதுவும் மரபணுக்களை மாற்றும் ஒரு திட்டம்தானே?  இவ்வாறு இயற்கைக்கே சவால் விடுமளவிற்கு பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலே கூறவில்லையே அது ஏன்? எவராவது ஒரு விஞ்ஞானி தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா என்று கண்டுபிடித்தாரா? ஆம் ஒரு விஞ்ஞானி கடந்த நூற்றாண்டில் எம் மத்தியில் வாழ்ந்தார், அவர் இக்கேள்விகளுக்கு விடை கண்டு பிடித்தார்.

 

 
 
mangotree.jpg
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
புளி மாமரத்தின் ஒரு கிளையையும், இனிப்பு மாமரத்தின் ஒரு கிளையையும்  ஒட்டி ஒரு புதிய மாங்கன்று அல்லது மாமர இனம் உருவாக்கப் படுகிறதல்லவா? இதுவும் மரபணுக்களை மாற்றும் ஒரு திட்டம்தானே?  இவ்வாறு இயற்கைக்கே சவால் விடுமளவிற்கு பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலே கூறவில்லையே அது ஏன்? எவராவது ஒரு விஞ்ஞானி தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா என்று கண்டுபிடித்தாரா? ஆம் ஒரு விஞ்ஞானி கடந்த நூற்றாண்டில் எம் மத்தியில் வாழ்ந்தார், அவர் இக்கேள்விகளுக்கு விடை கண்டு பிடித்தார்.
 
சேர்.ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937)
இந்த மாபெரும் மனிதனை / விஞ்ஞானியை எமது நவீன உலகம் அடியோடு மறந்தே போய்விட்டது எனலாம். நான் இவ்வாறு கூறுவதற்கும் காரணம் இருக்கிறது. ஏனெனில் ஒரு சாதாரண இயற்பியல்(Physics) விதியையோ, அல்லது கணிதச் சூத்திரத்தையோ(theory /formula) கண்டுபிடித்த விஞ்ஞானிகளை  இச் சமுதாயம் மறக்கவில்லை, சமுதாயத்திற்கு மிகவும் உதவக்கூடிய ஒரு இலத்திரனியல் சாதனத்தையோ(electrical equipment), இயந்திர சாதனத்தையோ கண்டு பிடித்த விஞ்ஞானிகளை இச் சமுதாயம் இன்று வரை மறக்காமல், அவர்களது பிறந்த தினம், பெற்றோர், வாழ்ந்த நாடு, மறைந்த தினம் போன்ற இன்னோரன்ன விடயங்களையும் குறித்து வைத்துள்ளது. அவை வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ளதோடு, பாடப்புத்தகங்களிலும் பதிவாகியுள்ளது. இவ்வாறிருக்கையில் இந்த 'விஞ்ஞானி' மட்டும் வரலாற்றின் பக்கங்களிலிருந்தும், மனிதர்களின் உதடுகளில் இருந்தும் ஏறக்குறைய மறக்கப் பட்டதற்கான காரணம் யாது? என வினவினால் கிடைக்கும் விடை ஒன்றுதான். அதாவது முதலில் இவர் ஒரு 'இந்தியர்' என்பதும், ஆசிய நாட்டவர் என்பதுமே அதற்கான காரணமாகும். இவர் பிறந்து, கல்வி கற்று, ஆராய்ச்சிகள் செய்து வெளிப்படுத்திய, அல்லது  கண்டுபிடிப்புகளை வெளியிட்ட காலப்பகுதியில் 'இந்தியா' என்ற மிகப்பெரிய நாடு பிரித்தானிய சாம்ராச்சியத்திற்குள் அடிமைப் பட்டுக் கிடந்தது. அது மட்டுமல்லாமல் இரண்டு உலகப் போர்களும் இவர் வாழ்ந்த காலப் பகுதிக்குள்ளேயே நிகழ்ந்தன. அதேபோல், பிரித்தானியப் பேரரசுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் அதிக 'விரிசலை' ஏற்படுத்திய இந்திய சுதந்திரப் போரும் இவர் வாழ்ந்த காலப் பகுதியிலேயே நிகழ்ந்தது எனலாம்.
மகாத்மா காந்தி தொடக்கம், பல இந்தியத் தலைவர்களும் இங்கிலாந்துக்குச் சென்று கல்விகற்றுப் பட்டம் பெற்றதுபோல் போஸ் அவர்களும் இங்கிலாந்தில் உள்ள 'கேம்பிரிட்ஜ்' போன்ற பிரபலமான பல்கலைக் கழகங்களில் கல்வி கற்றார். சாதாரணமாக ஒரு விஞ்ஞானி ஒரு துறையில் மட்டும் பட்டம் பெறுவது வழக்கம். ஆனால் திரு.போஸ் அவர்கள் உயிரியல், தாவரவியல், இயற்பியல்(பௌதீகவியல்) வரலாற்றியல் போன்ற பல துறைகளிலும் பட்டம் பெற்றிருந்தார். சாதாரண ஒரு இந்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதனால் அக்காலத்திலிருந்த சூழ் நிலையில் ஒரு பட்டப் படிப்பையே இங்கிலாந்தில் படித்து முடிப்பதற்குப் பல போராட்டங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருந்த நிலையில், போஸ் அவர்களால் பல பட்டப் படிப்புகளை இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களில் படித்து முடித்தல் எவ்வாறு சாத்தியமானது? "அறிவிற்கு இவ்வுலகம் அடிமையானது", "இவ்வுலகை அறிவுதான் ஆளுகிறது" ("knowledge is wealth", "Knowledge is power") எனும் ஆங்கிலப் பழமொழிகள்  இங்குதான் நினைவு கூரப் படுகிறது.
சேர்.ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937)
 
chandrabose.jpg
சாதாரண ஒரு இந்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதனால் அக்காலத்திலிருந்த சூழ் நிலையில் ஒரு பட்டப் படிப்பையே இங்கிலாந்தில் படித்து முடிப்பதற்குப் பல போராட்டங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருந்த நிலையில், போஸ் அவர்களால் பல பட்டப் படிப்புகளை இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களில் படித்து முடித்தல் எவ்வாறு சாத்தியமானது? "அறிவிற்கு இவ்வுலகம் அடிமையானது", "இவ்வுலகை அறிவுதான் ஆளுகிறது" ("knowledge is wealth", "Knowledge is power") எனும் ஆங்கிலப் பழமொழிகள்  இங்குதான் நினைவு கூரப் படுகிறது.
ஆம் நான் மேலே குறிப்பிட்டபடி ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த 'போஸ்' அவர்கள் இங்கிலாந்தில் பல பட்டப் படிப்புகளைப் படித்து முடிப்பதற்கு எங்கிருந்து 'பணம்' கிடைத்தது? அக்காலத்தில் ஒரு மனிதன் கல்வியைச் சுலபமாகக் கற்று முடிப்பதற்கு உதவுகின்ற எந்தவகையான 'வாய்ப்புகளும்' காணப்படவில்லை.பள்ளிகளோ, கல்லூரிகளோ,பல்கலைக் கழகங்களோ இலவசக் கல்வியை வழங்குவதில்லை. சமூக நல உதவித் திட்டங்களும் 'பிரித்தானிய ஆட்சிக் காலத்தில்'கிடையாது, 'புலமைப் பரிசில்'(Scholarship)திட்டம் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. இவ்வாறிருக்கையில் திரு.போஸ் அவர்கள் நான்கு வெவ்வேறு துறைகளில் படித்து, அதுவும் இங்கிலாந்துப் பல்கலைக் கழங்களில் படித்து பட்டம் பெறுவதற்கு எவ்வாறு உதவி கிடைத்தது?
இங்குதான் 'அறிவின் முன்னால்' ஆட்சியதிகாரம் கூட தலை வணங்குவதைக் காண முடிகிறது.இவரது அறிவாற்றலைக் கேள்வியுற்ற அக்காலத்து 'பிரித்தானிய ஆட்சியாளர்கள்' போஸ் அவர்களின் கல்விக்கு தேவையான உதவிகளைத் தாமாகவே முன்வந்து வழங்கினர். இவர் கல்விகற்ற புனித சவேரியார் கல்லூரியின் அதிபர்கள்,ஆசிரியர்கள் அனைவருமே ஆங்கிலேயர்களாகவும், ஆங்கிலேயப் பாதிரியார்களாகவும் இருந்தனர். இவர்கள் திரு.போஸ் அவர்களிடம் உலகெங்கிலும் காண முடியாத ஒரு 'ஒப்பற்ற அறிவாற்றல்' காணப் படுவதைக் கண்டு கொண்டனர். இவர் மேற் கல்வியைக் கற்றால் அது பாரத நாட்டிற்கு மட்டுமன்றி பிரித்தானியாவிற்கும், ஏன் முழு உலகிற்குமே மதிப்பிடமுடியாத அரிய செல்வமாக மாறும் என உறுதிபட நம்பினர். இதனாலேயே 'திரு.போஸ்.அவர்களின் கல்விக்கு பேராதரவு நல்கி, அளப்பரிய உதவிகளும் புரிந்தனர்.
 
விஞ்ஞானி திரு.போஸ் அவர்களின் கண்டுபிடிப்புகள்
images?q=tbn:ANd9GcRjTTMdsKxvdhoudiQjogUcE-jckALGMUrVC4VqNed9qiuwA3wQநான் ஏற்கனவே இத்தொடரின் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல் உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் பலர் மனித இனத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் கண்டு பிடித்த வானொலி,தொலைக்காட்சி,தொலைக்காட்சிக்குத் தேவையான அலைவாங்கி(Antenna), தொலைபேசி, கம்பியில்லாமல் தந்தி அனுப்பும் முறை, விமான நிலையக் கட்டுப்பாடு அறையில் செயற்படுத்தப்படும் 'ராடார்' தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்திற்கும் தேவையான அடிப்படை மின்னோட்ட, 'மின்னியல்'கண்டுபிடிப்புகளை திரு.போஸ் அவர்களே கண்டு பிடித்தார்.ஆனால் அந்தோ பரிதாபம், இவர் தனது கண்டுபிடிப்புகளை 'ஏனைய விஞ்ஞானிகள்' போல் இரகசியமாக வைத்துக் கொள்ளாமல், இங்கிலாந்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் தன்னோடு உடன்படித்த மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிட்டார்.இவரது கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானி 'மார்க்கோனி' அவர்களால் 'வானொலிப் பெட்டியையும்', கிரஹாம் பெல் அவர்களால் தொலைபேசியையும் கண்டுபிடிக்க முடிந்தது. 
சாதாரணமாக எமது வீடுகளில் ஒலிக்கும் 'அழைப்பு மணி'கூட(Calling bell) யாரால் கண்டு பிடிக்கப் பட்டது? என்று வரலாற்றின் பக்கங்களில் தேடினால் 'ஜோசப் ஹென்றி' என்ற பெயரே நமக்கு விடையாகக் கிடைக்கும் அவர்தான் இதைக் கண்டு பிடித்தார் என்பது உண்மையே, ஆனால் மிகவும் கடினமான செயற்பாடுகளின் மூலம் இயக்கக் கூடிய அந்தத் தொழில் நுட்பத்தை இலகுபடுத்திய/நவீனப் படுத்திய பெருமை திரு.போஸ் அவர்களையே சாரும்.
4d2d535eb43b6.jpgஅது மட்டுமல்லாமல் அக்காலத்தில் ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது கண்டுபிடிப்புகளை ஏனையோர் தயாரிக்க முடியாத வகையில் அக்கண்டுபிடிப்புக்கு(பொருளுக்கு) காப்புரிமை(Patent right) பெறுவது வழக்கம். ஆனால் திரு போஸ் அவர்கள் தனது கண்டு பிடிப்புகள் எவற்றிற்குமே காப்புரிமை வாங்காமல் இருந்துவிட்டார். இது வரலாற்றில் அவர் விட்ட மாபெரும் தவறு என்று பல அறிவியல் நிபுணர்களாலும் கருதப் படுகிறது. இத்தகைய விமர்சனங்களுக்கு திரு.போஸ் அவர்களின் பதில்தான் என்ன? "நான் எனது கண்டுபிடிப்புகளை மனித இனத்திற்கு நன்மை பயப்பதற்காகவே கண்டுபிடித்தேன், இதன்மூலம் 'கோடி ரூபாய்கள்' கிடைக்கும் என எதிர்பார்த்து நான் ஆராய்ச்சிகளில் இறங்கியதில்லை.இந்த மனித இனத்திற்கு எனது கண்டுபிடிப்புகளால் நன்மை கிடைக்குமானால் அதுவே நான் இம்மண்ணில் பிறப்பெடுத்தமைக்கான பயனாகும்" எனக் கூறியவர்   
தனது கண்டுபிடிப்புகள் எதற்குமே காப்புரிமை வாங்காமலே இருந்துவிட்டார்.இத்தகைய ஒரு விஞ்ஞானியை இக்காலத்தில் இம்மண்ணில் காண முடியுமா? இத்தகைய ஒரு மனிதன் இக்காலத்தில் நம் மத்தியில் வாழ்ந்தால் "பொழைக்கத் தெரியாத புள்ள" எனப் பெயர் வாங்கியிருப்பார் அல்லவா? சரி இவர் மட்டும்தான் தனது கண்டுபிடிப்புகளுக்கு 'காப்புரிமை' வாங்காது விட்ட விஞ்ஞானியா? என வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பார்த்தபோது, இன்னும் இரண்டு விஞ்ஞானிகளின் பெயர்களை மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் காண முடிந்தது.
விஞ்ஞானி திரு ஜகதீஷ் சந்திர போஸ் அவர்கள் தனது கண்டுபிடிப்புகள் எதற்குமே காப்புரிமை வாங்காமலே இருந்துவிட்டார்.இத்தகைய ஒரு விஞ்ஞானியை இக்காலத்தில் இம்மண்ணில் காண முடியுமா? இத்தகைய ஒரு மனிதன் இக்காலத்தில் நம் மத்தியில் வாழ்ந்தால் "பொழைக்கத் தெரியாத புள்ள" எனப் பெயர் வாங்கியிருப்பார் அல்லவா? சரி இவர் மட்டும்தான் தனது கண்டுபிடிப்புகளுக்கு 'காப்புரிமை' வாங்காது விட்ட விஞ்ஞானியா? என வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பார்த்தபோது, இன்னும் இரண்டு விஞ்ஞானிகளின் பெயர்களை மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் காண முடிந்தது.
அதாவது X-ray கருவியைக் கண்டுபிடித்த ஜேர்மனிய விஞ்ஞானியாகிய ரொன் ஜன்(Wilhelm Conrad Röntgen) மற்றும் காந்தப் புல அதிர்வுகளுக்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியாகிய பியரி கியூரி(Pierre Curie) ஆகியோரே அந்த இரு விஞ்ஞானிகள் ஆவர். இந்த இரு விஞ்ஞானிகள் சம்பந்தமாக சில தகவல்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இவர்களில் நான் முதலில் குறிப்பிட்ட ரொன் ஜன் என்ற ஜேர்மனிய விஞ்ஞானி தனது கண்டுபிடிப்பாகிய 'எங்கள் உடலைப் படமெடுக்கும்' X-ray கருவிக்குக் காப்புரிமை வாங்காது விட்டு விட்டார். "மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கவே இதனைக் கண்டுபிடித்தேன். ஆகவே இதிலிருந்து கிடைக்கும் வருமானமோ, லாபமோ எனக்கு வேண்டாம்" என்று கூறி விட்டார். உலகின் பெரும்பாலான நாடுகளில் நமது உடலின் உட்பகுதியை(உள்ளுறுப்புகளை) படம் எடுக்கும் முறையை X-ray என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் டேனிஷ் மக்கள்(டென்மார்க் மக்கள்) தமது மொழியில் மேற்படி விஞ்ஞானியைக் கௌரவிக்கு முகமாக X-ray படத்தை 'ரொன் ஜன் படம்'(Røntgenbillede) என்றே அழைக்கின்றனர். டேனிஷ் மக்கள் தமது மொழியால் ஒரு விஞ்ஞானியைக் கௌரவிக்கும் விதம் என்னை நெகிழச் செய்கிறது. இவ்வாறு ஏனைய நாட்டு மக்களும் தமது மொழியில் விஞ்ஞானிக்கு 'கௌரவம்' வழங்கியுள்ளார்களா? என்பதை நானறியேன். அவ்வாறு தெரிந்தால் வாசகர்கள் எனக்கு எழுதலாம்.
Wilhelm+Konrad+Roentgen.jpg
அதேபோல் காந்தப் புல அதிர்வுகளையும், மக்னீசியம் என்ற 'இரசாயனத்தின்' பயன்பாட்டையும் பற்றிக் கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கிய பிரெஞ்சு விஞ்ஞானியாகிய 'பியரி' என்பவரும், வறுமையில் வாடியவர் என்பதுடன், நமக்கெல்லாம் சிறு வயதிலேயே பாடப் புத்தகங்களில் நன்கு அறிமுகமான 'ரேடியத்தைக்' கண்டுபிடித்த பெண் விஞ்ஞானியாகிய 'மேரி கியூரி அம்மையாரின்' கணவர் என்பதும், இந்தத் தம்பதிகள் தமது ஆராய்ச்சிக் காலங்களில் வீட்டு வாடகை செலுத்துவதற்குக் கூட பணம் கிடைக்காமலும், உணவு, வீட்டை வெப்பமாக வைத்திருப்பதற்கு தேவைப்படும் விறகு போன்றவற்றை வாங்குவதற்குக் கூட வழியில்லாது திண்டாடினர் என்பதை 'வரலாறு' நமக்குக் கூறுகிறது.
இந்த நிலையில் இந்திய விஞ்ஞானி திரு.போஸ் அவர்களைப் போல், தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை(Patent right) வாங்காது விட்ட பிரெஞ்சு விஞ்ஞானி 'பியரி' அவர்களுக்கு அறிவியல் உலகம் தலைவணங்கும் அதே வேளை மனித சமுதாயம் அவருக்கு 'பிழைக்கத் தெரியாத மனிதன்' என்று பட்டம் சூட்டியிருப்பது வேதனையைத் தருகிறது.

http://anthimaalai.blogspot.com.au/search/label/மண்ணும் மரமும் மனிதனும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.